தமிழார்வமிக்க வழக்குரைஞராக இருந்தும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு
கிடந்த தன் தாய்நாட்டுக்காக பலரிடம் பணம் திரட்டி சுதேசி கப்பலை ஓட்டி,
ஆங்கில வணிகத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்ததால் சிறை தண்டனை பெற்றும்
கூட, வாழ்நாளில் கடைசிகாலத்தில் வறுமையால் அவதிப்படும் போது, தோள்கொடுக்க
யாருமில்லை.
இப்போது கூட அவரது பேரன் குடும்பம் பொருளாதார ரீ்தியாக கஷ்டப்படும் கூட யாரும் உதவிட முன்வரவில்லை. சமீபத்தில் தான் அரசாங்கம் கூட பொருளாதார உதவியை செய்தது. ஆனால் வ.உ.சி என்ற பெயரை பயன்படுத்தி பேரவை, இயக்கம் என புற்றீசல் போல இன்று பல வெள்ளாளர் பிள்ளைமார் சாதி சங்கங்கள் உருவாகி விட்டன.
இப்போது கூட அவரது பேரன் குடும்பம் பொருளாதார ரீ்தியாக கஷ்டப்படும் கூட யாரும் உதவிட முன்வரவில்லை. சமீபத்தில் தான் அரசாங்கம் கூட பொருளாதார உதவியை செய்தது. ஆனால் வ.உ.சி என்ற பெயரை பயன்படுத்தி பேரவை, இயக்கம் என புற்றீசல் போல இன்று பல வெள்ளாளர் பிள்ளைமார் சாதி சங்கங்கள் உருவாகி விட்டன.
எங்க நாகப்பட்டினத்தில் கூட இன்று காலை 9 மணிக்கு பேருந்து நிலையம் அருகே
பெரிய பதாகையுடன் கூடிய வ.உ.சி படத்திற்கு, அனைத்து வெள்ளாளார் பிள்ளைமார்
சங்கத்தினர் மாலை அணிவித்தனர். தங்கத்தாலும் ஆகாது, இது போன்ற இலக்கில்லா
சங்கத்தாலும் ஒன்னும் ஆகாது என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. தேசிய
தலைவரையெல்லாம் சாதி தலைவராக்கி பதவி சுகம் அனுபவிக்கும் சுயநலவாதிகள்
நிறைந்த உலகில் வேற எதையும் எதிர்பார்க்க முடியாது!
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக