நாயக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாயக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜூன் 2021

சுப்பிரமணிய சுவாமியும், பழனிவேல் ராஜனும்!



நாயக்கர் ஆட்சியின் முதல் மன்னனான விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலமான 1529–1563 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் அரியநாத முதலி. இவரது வழித்தோன்றலே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

நாயக்கர் ஆட்சியின் குறிப்பிடத்தக்க மன்னரான திருமலை நாயக்கர் ஆட்சிக்காலமான 1623–1659 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் ராமப்ப ஐயர். இவரது வழித்தோன்றலே சுப்பிரமணிய சுவாமி.

பெரும்பான்மை தமிழர்களின் வீழ்ச்சி இக்காலக்கட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.




படம் 1: குடியரசு இதழில் பெரியார் ஈ.வெ.ராவின் இரங்கல் தலையங்கம்.





படம் 2: சுப்பிரமணிய சுவாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது ஒப்புதல் வாக்கு மூலம்.

- இரா.ச. இமலாதித்தன்

10 ஜனவரி 2016

பாண்டியர்கள் - வடுகர்கள்!

பாண்டியர்களின் ஆட்சி அழித்தொழிக்கப்பட்ட பிறகுதான், அந்நியரான வடுகர்களின் ஆட்சி தெற்கில் புதிதாய் உருவெடுத்தது. அதன் பின்னால் தான் பல பாளையங்களும், நிர்வாக கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு நாங்கள் தான் பாண்டியரென தெற்கில் உள்ள அனைத்து சாதிகளும் சொல்ல தொடங்கி, கல்வெட்டு ஆதாரங்களையும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்ட வடுக ஆட்சி அதிகாரத்தின் நீட்சியான, திருமலை நாயக்கருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசுவிழா என ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளதை எதிர்க்காதவன் தமிழனே இல்லை.
பெயருக்கு பின்னால் பாண்டியர் என போட்டுக்கொண்ட அனைவருமே பாண்டியராகி விட முடியாது என்பதை இதுபோன்ற நிகழ்வில் தெரிந்துவிடும். பார்க்கலாம், பாண்டியர் நாங்களென சொல்லிக்கொள்ளும் எத்தனை சாதிகள் இந்த தெலுங்கு நாயக்கருக்கான அரசு விழாவை எதிர்ப்பார்களென!

- இரா.ச.இமலாதித்தன்

16 நவம்பர் 2015

குறிஞ்சாக்குளத்து பிரச்சனை துணை நிற்குமா தேவரினம்?

குறிஞ்சாக்குளத்து கோவில் பிரச்சனைக்கு முக்குலத்தோர் அமைப்புகளும், மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும் துணை நிற்குமா?
கலிங்கப்பட்டியை தெரிந்து வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு அதன் அருகிலுள்ள குறிஞ்சாக்குளத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள குறிஞ்சாக்குளத்தில் 1992ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி அப்பகுதி வடுகர்களால், அதே பகுதியை சார்ந்த மண்ணின் மைந்தர்களான நான்கு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர் கண்டந்துண்டமாக ஏன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்கள்? என்பதை பற்றி கவலைப்படவோ, யோசிக்கவோ கூட நமக்கு நேரமில்லை. காரணம் கேட்டால், அது 'பறையர் - நாயக்கர்' சாதி பிரச்சனையென சொல்லி எளிதாக கடந்து, மறந்து விடுகிறோம்.

உண்மை என்னவெனில் அங்குள்ள தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதுதான் துயரமான செய்தி. அக்குள்ள பெரும்பாலான நிலப்பகுதி வடுகர்களிடம் இருந்ததால், தமிழனுக்கு கோவில் கட்ட இடம் கொடுக்க மனம் வரவில்லை; அதனால் தான் நால்வர் படுகொலை அரங்கேறியது.

இந்த கொலைக்கு, கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மாமா திரு. சங்குவெட்டி மோகன்தாசு நாயக்கர் தான் என திருவேங்கடம் காவல்துறை குற்றஞ்சாட்டியும் பலன் ஏதுமில்லை. காரணம் என்னவெனில் மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த தம்பிதான், இந்த கொலை வழக்கின் முதல் குற்றவாளியான ரவிச்சந்திரன்.

இதெல்லாம் கடந்த கால வரலாறு. இப்போதைய சூழல் மிக மோசமாக இருக்கிறது. குறிஞ்சாக்குளத்தில், கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட நால்வரின் கனவைவும், தமிழர்களின் உரிமையையும் நிறைவேற்றும் நோக்கத்தோடு தமிழின உணர்வாளர்களால் அங்கே, கந்தாரி அம்மனுக்கு கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மீண்டும் ஒரு யுத்தக்களம் வெடித்துள்ளது.

மதுரையில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுத்த முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் முக்குலத்தோர் அமைப்புகளும், கி.பி.1800 களிலேயே சாதி மத வேறுபாடின்றி 'வீரசங்கம்' என்ற அமைப்பின் மூலம் அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் ஒன்றிணைத்து காளையார்கோவில் கோபுரத்தை கட்டி காத்து, சிவகங்கையை கி.பி 1780 முதல் கி.பி 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் கொள்கைகளை பின்பற்றும் அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும், அகமுடையார் அமைப்புகளும், இந்த கோவில் கட்டும் பிரச்சனையை கையில் எடுத்து, சாதி என்ற வட்டம் தாண்டி சக தமிழர்களின் பிரச்சனைக்கும் தோள் கொடுப்பதுதான் காலத்தின் தேவை.

மண்ணின் மைந்தர்களான சக தமிழ் இனக்குழுக்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை, தன் மக்கள் பிரச்சனையென முடிவு செய்து, குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மனுக்கு கோவில் கட்ட தடையாய் இருக்கும் அனைத்து எதிர்ப்புகளையும் உடைத்து, தமிழர்களாக ஒன்றிணைந்து ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- இரா.ச.இமலாதித்தன்