பசும்பொன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசும்பொன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 அக்டோபர் 2018

அகமுடையாருக்கு, பசும்பொன்னா? காளையார்கோவிலா?



அகமுடையார்களெல்லாம் பசும்பொன்னுக்கு செல்லுங்கள்; செல்லாமல் இருங்கள்; அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "திருப்பத்தூருக்கும் - காளையார் கோவிலுக்கும் ஸ்டாலின் வரவில்லை, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் வரவில்லை, திமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; முதல்வரோ, எதிர்க்கட்சித்தலைவரோ, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களோ, யாரும் வரவில்லை; ஆனால் பசும்பொன்னுக்கு மட்டும் இவர்கள் செல்கிறார்கள்; திட்டமிட்டே அகமுடையார்களை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்கின்றன." என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்படியான விமர்சனங்கள் தேவையே இல்லை. அப்படி விமர்சித்தே ஆக வேண்டுமென நீங்கள் விரும்பினால், அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூருக்கு வராத, அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலுக்கு வராத அகமுடையார்களை முதலில் விமர்சியுங்கள். குறிப்பாக திருப்பத்தூருக்கும், காளையார்கோவிலுக்கும் வராமல், அக்டோபர் 30ஆம் தேதி மட்டும் பசும்பொன் செல்லும் அகமுடையார்களை விமர்சியுங்கள். இந்த விசயத்தில் முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல் கட்சி தலைவர்களல்ல; அவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை. அவர்கள் ஓட்டுரசியல் செய்யும் தலைவர்கள். அவர்களின் பார்வையில், கள்ளர் - மறவர் - அகமுடையர் என்ற 'சோ கால்டு' முக்குலத்தோர் போற்றும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் சென்று வந்தால், நமக்கும் அவர்களது ஆதரவு கிடைக்கும்; ஓட்டுரசியலுக்கு இந்த வாக்கு வங்கி தேர்தல் நேரங்களில் தங்களுக்கு பயன்படுமென்ற நம்பிக்கையில் தான் வருகின்றனர். அப்படியான அரசியல் கணக்கீடுகளோடு பசும்பொன் வருபவர்களை விமர்சிப்பது வீண்.

போலியான முக்குலத்தோர் அரசியலை நம்பி விலாங்கு மீன் போல, 'அகமுடையார் ஒற்றுமை - முக்குலத்தோர் ஒற்றுமை' என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் அகமுடையார்களிடம் முதலில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்கள்தொகை எண்ணிக்கையிலும், விகிதிச்சார அடிப்படையிலும், அகமுடையாருக்கு கிடைத்திருக்க வேண்டிய அரசியல் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவே இல்லை என்பதை தெளிவு படுத்துங்கள். அகமுடையாருக்கான தொகுதிகளை, பதவிகளை, கள்ளரும் - மறவரும் 'சோ கால்டு' முக்குலத்தோர் என்ற முகமூடிகளால் ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துங்கள்.

அக்டோபர் 24ல் திருப்பத்தூருக்கோ, அக்டோபர் 27ல் காளையார் கோவிலுக்கோ, எத்தனை கள்ளர் / மறவர் வந்து போகிறார்கள்? வரவே இல்லையென்றும் சொல்ல முடியாது; ஆனால் பசும்பொன்னுக்கு செல்பவர்களில் எத்தனை சதவீதம் பேர் காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வந்தார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அமைப்பு சார்ந்தோ, தங்களது தலைவர்களுக்காகவோ ஒருவேளை அவர்கள் வந்திருக்கலாம். தனித்து, கள்ளரும் மறவரும் காளையார்கோவில் / திருப்பத்தூர் வந்திருப்பார்களா என்றால், மிக சொற்பமான எண்ணிக்கையில் வந்து இருக்கலாம். ஆனால் அகமுடையார்களின் நிலைப்பாடோ வேறொன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கோ, காளையார்கோவிலுக்கோ வருகிறார்களோ இல்லையோ, ஆனால் பசும்பொன்னுக்கு அகமுடையார்கள் செல்கின்றனர். இந்த விசயத்தில் மனமாற்றம் ஏற்படாத வரை, வெளியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட போவதே இல்லை.

அகமுடையார்கள் பசும்பொன்னுக்கு போவதோ, போகாமலிருப்பதோ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வரவே மாட்டேன்; ஆனால் பசும்பொன்னுக்கு கண்டிப்பாக செல்வேனென இப்படியான எண்ணவோட்டத்தில் இருக்கும் அகமுடையார்கள் மாறாதவரை, ஹிந்திய தேசிய / திராவிட / தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் பார்வையும் மாறாது. அவர்களை விமர்சிக்கும் முன், இதுமாதிரி நமக்குள்ளேயே உள்ள முரண்களை கலைந்து, குறைகளை சரிசெய்ய நாம்தான் முன்வர வேண்டும். அப்போது தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் முழுமையாக கிடைக்க வாய்ப்புகளும் உருவாகும்.

- இரா.ச. இமலாதித்தன்

09 அக்டோபர் 2014

அதிமுகவும் - தேவர் குருபூஜையும்!



சென்ற வருடம், தேவர் ஜெயந்திக்கு 144 தடை போட்டாங்க; தீடீரென்று ஒருநாள், "மண்-பெண்-பொன்" மீது பற்றற்ற பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் சாத்தினாங்க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறவும் - வெற்றி பெற்ற பின்னும், இசுலாமியரான திரு.அன்வர்ராஜா இருமுறை பசும்பொன்னுக்கு வந்து பிராத்தனையும் செய்து விட்டு போனார். இப்போது செல்வி ஜெயலலிதாவின் விடுதலைக்காக பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பாக சிறப்பு பூஜை கூட பண்றாங்க. ஆனால், போன வருடம் தடை போட்ட போது நடுத்தர மற்றும் வயது முதிர்ந்த பெண்களெல்லாம் அக்டோபர் 30ம் தேதியன்று பசும்பொன் சன்னதியில் ஒப்பாரி வைத்து "தேவர் கூலி கொடுப்பாரு!"ன்னு இது மாதிரி நிறையா சாபங்களை செல்வி ஜெயலலிதாவிற்குகொடுத்தார்கள். அது இப்போது இன்னமும் சப்தமாக என் காதில் ஒலித்து கொண்டு இருக்கின்றது. வினை விதைத்தால் வினையைத்தானே அறுக்க வேண்டும்? அதுதான் விதி!

- இரா.ச.இமலாதித்தன்

07 பிப்ரவரி 2014

தமிழ் தேசியத்தை மறக்க பசும்பொன் கவசம்!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருடா வருடம் அக்டோபர் மாதம் கடைசி வாரம் முழுமைக்கும் கோவில் திருவிழா போல நடைபெறும் ஓர் ஆன்மீக நிகழ்வை, ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் தலையீட்டால் கடமைக்கு பசும்பொன் வந்து தலை காட்டி செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். 

பெரும்பான்மை சமூகம் சார்ந்த விழா என்பதால், தமிழகத்தில் செயல்படும் லெட்டர்பேடு கட்சி முதற்கொண்டு மாநிலத்தை ஆளும் திராவிட கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசிய கட்சிகள் உள்பட அனைவரும் அக்டோபர் 30ம் தேதியென்று பசும்பொன்னை ஆக்கிரமித்து கொள்வது தான் கடந்தகால வரலாறு. அப்படிப்பட்ட ஆன்மீக விழாவான தேவர் ஜெயந்திக்கு தடை போட்ட ஜெயலலிதா, முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முக்குலத்து ஓட்டு வங்கியை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

 
அதன் முதல் முயற்சியாக, ஓட்டுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் போல, வருகின்ற பிப்ரவரி 09ம் தேதி பசும்பொன்னில் தங்க கவசம் அணிவிக்கிறேன் என்ற பெயரில், இழந்த தேவரின ஓட்டு வங்கியை கவர மலிவான அரசியல் யுக்தியை பயன்படுத்துகிறார். இதில் வெட்க கேடான விசயம் என்னவெனில், 32 1/2 கிராமங்களை சொந்தமாக கொண்டு பெரிய ஜமீன்தாராக வாழ்ந்திருக்க வேண்டிய பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர், தேசியவாதியாகவும் - துறவி போல பிரம்மச்சாரியத்தை கடைபிடித்தும், பொன், பெண், மண் ஆசையற்ற ஆன்மீகவாதியாகவும், இறுதிவரை எளியவராகவே வாழ்ந்த மாமனிதரான ஆன்மீக சித்தருக்கு, தங்க கவசம் சூட்டுவதென்பது கேடுக்கெட்ட திராவிட அரசியலின் சூழ்ச்சி என்பதை ஓட்டளிக்கும் எம் மக்கள் புரிந்து கொள்ளாதவரை, தமிழ்நாட்டை தமிழர் ஆள்வதற்கான 'தமிழ் தேசிய அரசியல்' என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

- இரா.ச.இமலாதித்தன்