சீமானின் செயல்பாடுகளோடு பலவற்றில் வேறுபட்டிருந்தாலும், வீரத்தமிழர்
முன்னணி என்ற அமைப்பை ஆதரிப்பது அவசியமாகிறது. நாடு முழுவதும் விநாயக
சதுர்த்தியன்று ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு விநாயகரை தலையில் வைத்து கொண்டாட
மட்டும் தானே நேரம் இருக்கு. ஆனால், முருகனுக்காக எந்த ஹிந்துத்துவா
அமைப்பும் நாடு முழுவதும் தைபூசத்தை கொண்டாவில்லையே. தைபூசத்தன்று முருகனை
கொண்டாடி வீரத்தமிழர் முன்னணியை தொடங்கி வைத்த கிருஸ்துவ மதத்தை சார்ந்த
சீமானை, சோ கால்டு ஹிந்து மதத்தை சார்ந்தவனாக மனதார பாராட்டுகிறேன்.
வீரத்தமிழர் முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரத்தமிழர் முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
25 பிப்ரவரி 2015
07 பிப்ரவரி 2015
தமிழர் முன்னணி!?
பா.ஜ.கவுக்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத இந்து முன்னணியோ,
தி.மு.க.விற்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத திராவிட கழகமோ, அதுபோல நாம்
தமிழர் கட்சியின் தோழமை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணியை சீமான் இன்று
தொடங்கி வைக்கிறார். நாம் தமிழர் கட்சியானது அரசியல் தளத்தில் தொடர்ந்து
செயல்படும். வீரத்தமிழர் முன்னணியானது இனிவரும் காலங்களில் அரசியல்
சார்பற்ற அமைப்பாக செயல்படும். அதுக்குள்ள பலபேரு பலவிதமா புரளியை கிளப்பி
விடுறாய்ங்க. ஒருத்தரை பிடிக்கவில்லை என்பது வேறு. அதற்காக வதந்திகளை சமூக
ஊடகங்களில் பரப்புவது சரியா? ஒரு விசயத்தை பற்றி ஆழமாக தெரியாவிட்டால் ஏன்
அவசரகுடுக்கை போல முந்திக்கொண்டு தவறான தகவலை பரப்ப வேண்டும்? பொய்யான
பரபரப்பால் சில லைக்குகள் அதிகம் கிடைக்குமே தவிர, மற்றபடி ஒன்றும் நடந்து
விடாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)