பிக் பாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிக் பாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஆகஸ்ட் 2017

சினேகனுக்கு வாழ்த்துகள்!


கட்டிப்பிடி வைத்தியம், டைனமிக் திருமணம் இந்த இரண்டிலுமே சினேகன் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்குண்டு. குறிப்பாக, மணப்பெண்ணை கண்டவனும் மணமகனுக்கு நேராகவே மேடையேறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நிகழ்வான டைனமிக் திருமண விசயத்தில் எரிச்சல் தான் அதிகம்; அதை தலைமை தாங்கி நடத்திய சினேகன் மீது வெறுப்பும் கோபமும் தான் மேலோங்கி இருந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் சினேகன் மட்டுமே எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலையிலும் கனகச்சிதமாய் அனுசரணையோடும் விவேகத்துடனும் செயல்படுகிறார் என்பதால் ஒருவகையில் ஆதரிக்கவும் வேண்டிருக்கிறது. இதன் நீட்சியாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்ற சினேகனிடமிருந்தும் ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

அது என்னவெனில், ஒரு விசயத்தை அணுகும் விதம், அதை மற்றவர்களோடு கலந்தாலோசிக்கும் தன்மை, சம்பந்தபட்டவர்களிடம் அவர்களது பிரச்சனைகளை விவரிக்கும் பேச்சுநடை என இவ்விசயத்தில் ஒட்டுமொத்த கலவையான செயல்பாடுகள் என்னை ஏதோவொரு விதத்தில் கவர்ந்திருக்கிறதாக உணர்கிறேன். ஒருவேளை, சினேகனுக்கு பிக்பாஸூல் பட்டம் கிடைத்து வெற்றிப்பெற்றால் ஓவியா ரசிகனாக வாழ்த்துகள்!


கொசுறுகள்:

தைப்புரட்சியால் 'மீசைய முறுக்கு' ஆதிக்கும், 'பிக்பாஸ்' ஜூலிக்கும், புகழ் வெளிச்சம் வெள்ளித்திரையில் அதிகமாக படர விடப்பட்டிருக்கிறது.


'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகன், 'மருத்துவ முத்த நிபுணர்' ஆரவ் என்ற இருவரிடமும் இனி சிக்கி தவிக்க போகிறார் ரைஸா.


ரைஸா பிக்பாஸ் வீட்டில் இவ்வாரத்திற்கான தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை கூட ஏற்க முடியாமல், ஏதேதோ புதுப்புது கதை சொல்லி கோபப்படும் காயத்ரி மாதிரியான சைக்கோக்கள் சூழ்ந்த உலகம் இது.


பாடப்புத்தகத்திலெல்லாம் 'மனோன்மணியம்' சுந்தரம் பிள்ளை என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என்பது நம்முள் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த விசயத்தில் கூட ஜூலியை காப்பியடித்து, அரிய உண்மையை உலகிற்கு சொன்ன கட்டிப்பிடி கவிஞர் சினேகனை நினைத்து பெருமை கொள்கிறோம்.


ஓட்டே போடாம காயத்ரியை வெளியேற்ற ஊரு உலகமே நினைக்கும் போது, இப்படி மயிரு மாதிரி ஒரு டாஸ்கை கொடுத்து உங்க எச்சை புத்தியை காட்டி, அந்த ஹேரை காப்பாத்தி இருக்கீங்களே ஏன் பாஸூ (Vijay Television) இந்த மானங்கெட்ட பொழப்பு?

இரா.ச. இமலாதித்தன்

05 ஆகஸ்ட் 2017

ஓவியா செய்த இரண்டே தவறுகள்!




01. பொம்பள ஆரவ்வான காயத்ரியை நம்பியது; காயத்ரியிடன் வாக்கு கொடுத்ததால், தன் இயல்பான அடிப்படை குணங்களில் ஒன்றான வெளிப்படையான கருத்தை சொல்லாமல் தன்னுள்ளேயே மறைத்து கொண்டது. அது ஓவியாவின் குணாதிசயம் இல்லை என்பதால் தான், ஓவியாற்குள் ஏற்பட்ட முதற்குழப்பம்.

02. ஆம்பள காயத்ரியான ஆரவ் மீது அளவுக்கதிகமான அன்பை வைத்தது; அன்புக்கு ஏங்கிய ஓர் அபலையின் ஆன்ம ஈடேற்றம் போல, மருத்தவரிடமும், பிக்பாஸுடமும், கமலுக்கு முன்பாகவும், வெளியேறிய மேடையான பொதுவெளியிலும் ஆரவ்வை காதலிக்கிறேனென வெளிப்படையாக சொன்னது. இதுதான் இரண்டாவதும் இறுதியானதுமான ஓவியாவிற்குள் ஏற்பட்ட குழப்பம்.


இந்த இரண்டிலும் தான், ஓவியா எனும் மனதிற்கு நெருக்கமானதொரு பெண்ணை உணர முடிந்தது. தனிப்பட்ட வாழ்வில் இதுவரை ஆட்டோகிராஃப் சேரன் போல ஒன்றுக்கும் மேற்பட்ட 'ஐ லவ் யூ!'க்களை நேரடியாக எனக்கு பிடித்த பெண்களிடம் உணர்வுப்பூர்வமாக சொல்லிருக்கிறேன்; கடைசியில் எல்லாமே ஆட்டோகிராப் க்ளைமேக்ஸ் போல தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. இம்முறை எவ்வித வெட்கமும் சலனமுமின்றி உணர்வுப்பூர்வமாக நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து ஓவியாவுக்காக பொதுவெளியில் சொல்லத்தோன்றியது.

ஐ லவ் யூ ஓவியா!

ஆரவ்வோ அல்லது அவரை விட மிகச்சிறந்த வேறு யாரோ ஓவியாவுக்கு பிடித்த மாதிரியான ஒருவர் வாழ்க்கைத்துணையாக வர இறைவனை பிராத்திக்கிறேன். இனிவரும் நாட்களெல்லாம் வாழ்வில் வெற்றியாக அமையவாழ்த்துகள் ஓவியா!

- இரா.ச. இமலாதித்தன்

#BiggBoss #Oviya #OviyaArmy

04 ஜூலை 2017

தமிழ்த்தாய் வாழ்த்தும் - பிக் பாஸ் ஷோவும்!


கேரள ஆலப்புழாவில் பிறப்பெடுத்த பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' என்ற கவிதை நாடக நூலில் வரும் ஒரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு அறிவித்தது. இந்நாடக நூல், லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி' என்ற நூலை தழுவி அமைந்தது என்பதும், எங்களது நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை என்பவரே, பெ. சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழாசிரியராக இருந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.

"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" என்ற உண்மையை உரக்கச்சொன்ன வரிகள் நீக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியது, (எங்க வேதாரண்யத்தை சேர்ந்தவரும் சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியருமான) தாயுமானவர் என தவறுதலாக #BiggBossடிராமாவில் ஜூலி சொல்லிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி முடிக்கிறார். அந்த நிகழ்வில் தமிழ் வாத்தியார் போல வீற்றிருந்த கவிஞர் சினேகன் வாய்மூடி மெளனியாய் வேடிக்கை பார்க்கிறார். என்ன இது, தமிழுக்கு வந்த சோதனை?

இத்தனை வருட வரலாற்றில் முதன்முறையாக விஜய் டிவியெல்லாம் தன் பெயரையே தமிழ் படுத்தி செம்மொழியை தூக்கி பிடிக்கிறதும், 'தமிழ்க்கடவுள் முருகன்' என்ற நாடகத்தை உருவாக்குவதும், அனைத்து பொருட்களின் பெயர்களையும் ஹிந்தியிலேயே அச்சடித்து பதஞ்சலி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பாபா ராம்தேவையும் தமிழ் பேச வைத்து யோகா சொல்ல வைக்கிறதுமென தமிழை மையப்படுத்தியே விஜய் டிவியில் அனைத்தும் நகர்கிறது. ஆனால் இவற்றிற்கு பின்புலமாக உள்ளவற்றை, எல்லாரோலும் புரிந்து கொள்வது தான் சிரமமாக இருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்