04 ஜூலை 2017

தமிழ்த்தாய் வாழ்த்தும் - பிக் பாஸ் ஷோவும்!


கேரள ஆலப்புழாவில் பிறப்பெடுத்த பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' என்ற கவிதை நாடக நூலில் வரும் ஒரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு அறிவித்தது. இந்நாடக நூல், லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி' என்ற நூலை தழுவி அமைந்தது என்பதும், எங்களது நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை என்பவரே, பெ. சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழாசிரியராக இருந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.

"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" என்ற உண்மையை உரக்கச்சொன்ன வரிகள் நீக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியது, (எங்க வேதாரண்யத்தை சேர்ந்தவரும் சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியருமான) தாயுமானவர் என தவறுதலாக #BiggBossடிராமாவில் ஜூலி சொல்லிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி முடிக்கிறார். அந்த நிகழ்வில் தமிழ் வாத்தியார் போல வீற்றிருந்த கவிஞர் சினேகன் வாய்மூடி மெளனியாய் வேடிக்கை பார்க்கிறார். என்ன இது, தமிழுக்கு வந்த சோதனை?

இத்தனை வருட வரலாற்றில் முதன்முறையாக விஜய் டிவியெல்லாம் தன் பெயரையே தமிழ் படுத்தி செம்மொழியை தூக்கி பிடிக்கிறதும், 'தமிழ்க்கடவுள் முருகன்' என்ற நாடகத்தை உருவாக்குவதும், அனைத்து பொருட்களின் பெயர்களையும் ஹிந்தியிலேயே அச்சடித்து பதஞ்சலி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பாபா ராம்தேவையும் தமிழ் பேச வைத்து யோகா சொல்ல வைக்கிறதுமென தமிழை மையப்படுத்தியே விஜய் டிவியில் அனைத்தும் நகர்கிறது. ஆனால் இவற்றிற்கு பின்புலமாக உள்ளவற்றை, எல்லாரோலும் புரிந்து கொள்வது தான் சிரமமாக இருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக