சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 மே 2019

’சுயமரியாதை சுடரொளி’ எஸ்.இராமச்சந்திரனார்!



வாங்காத விருதுக்கு 250 பக்கத்தில் ஒரு புத்தகம் ஒரு கேடா? ஒருபக்கம், ஈ.வெ.ரா. தான், சாதியை ஒழித்தாரென திராவிடவாதிகளெல்லாம் தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால், ஈ.வெ.ரா பற்றிய படத்திற்கு தலைப்பே நாயக்கர் என்ற அவரின் சாதிப்பெயரிலேயே வெளியிட்டனர். வைகோ கூட முன்பொருமுறை, ஈ.வெ.ரா.வின் நாயக்கர் என்ற அவரது சாதிப்பட்டத்தை சேர்த்தே கடிதம் எழுதி கேரள முதல்வருக்கு அனுப்பிருந்தார். இதுபோல பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

எதற்கெடுத்தாலும் ஈ.வெ.ரா. புராணம் பாடும், திராவிட வாதிகளுக்கு, தன் இறுதி மூச்சு வரை,தனிமனித ஒழுக்கம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, மதுஒழிப்பு, பெண்விடுதலை போன்ற தளங்களை தென்மாவட்டங்களில் உருவாக்கி, தன் வாரிசுகளும் அதைக்கடைப்பிடிக்கும் வகையில் செய்த எஸ்.இராமச்சந்திரனாரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1929ம் ஆண்டு பிப்ரவரி 17,18ம் தேதிகளில் செங்கற்பட்டில் நடைபெற்ற 'தமிழ் மாகாண சுயமரியாதை' மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னாலுள்ள “சேர்வை”எனும் அகமுடையாருக்கான சாதிப்பட்டத்தைத் துறந்த 'சுயமரியாதை சுடரொளி' வழக்குரைஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் போன்றோரின் புகழை மறைத்தது தான் திராவிடத்தின் வெற்றி.

யார் அந்த எஸ்.இராமச்சந்திரனார்?


1925ம் ஆண்டில் பனகல் அரசர் தலைமையில் அம்ரோட்டில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டில் பங்கேற்ற தமிழக பிரதிநிதி இவர்தான்.

1926ஆம் ஆண்டு முதல் அரசியல் அதிகாரப்பணியான ஜில்லா போர்டு தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்ட கல்விக்கழகம்,மதுவிலக்கு கமிட்டி,தேவஸ்தான கமிட்டிகளில் பொறுப்பு வகித்து,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிந்தார்.

1927ம் ஆண்டு சூலை 20,21ம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட மாநாடு, ஈரோட்டில் நடைபெற்ற மதுவிலக்கு மாநாடுகளில்.தலைமை தாங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களின் குறைகளை உடனுக்குடன் போக்கிட பாடுபட்டார்.

நீதிமன்றங்களில் தன் வாதத்திறமையால் சமஸ்தானத்துக்கும் தான் சார்ந்த இயக்கத்துக்கும் நற்பெயர் பெற்றுக்கொடுத்தார்.

சிவகங்கை நீதிமன்றத்தில் பிராமணர்களுக்கு தனியாக குடிநீர் பானை இருந்ததை நீதிபதி முன்பாக போட்டு உடைத்து சமூகநீதி பற்றி அவர் செய்த வாதம் இன்றும் அங்கு முத்தாய்ப்பாக பேசப்படுகிறது.

”இந்தக்கையால் எந்த பிராமணருக்கும் ஆதரவாக கையெழுத்திட மாட்டேன்”என்று சபதம் செய்தவர்.

நீதிகட்சி ஆட்சியில் சட்ட அமைச்சராக ஆகிட இவருக்கு வாய்ப்பு வந்தபோது, சமூகப்பணியாற்றிட அமைச்சர் பதவி தடையாக இருக்கும் என்பதால் அந்த வாய்ப்பை உதறியவர்.

இவர் போன்ற திறமை வாய்ந்த வழக்கறிஞர் காங்கிரசுக்கு வரவேண்டும் என மதுரை வைத்தியநாத ஐயர் இவரை அணுகிய போது,”மனிதரில் ஏற்ற தாழ்வைக்குறிக்கும் பூணூலை நீங்கள் கழற்றினால் அது பற்றி ஆலோசிக்கலாம்”என்று சொன்னவர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர் நடத்திய ஆதிதிராவிடர்கள் மாநாடு தான், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச்சென்ற நிகழ்வுக்கு முன்னோடி சம்பவமாகவும் அமைந்தது.

- இரா.ச. இமலாதித்தன்


(தகவல்: திரு.அரப்பா)

14 டிசம்பர் 2017

சாதி மறுப்பு திருமணத்தின் மறுபக்கம்!

இந்த அரச கொலைக்கு எதிராக பதிவிட அவர்கள் குடும்பம் சார்ந்த குறிப்பிட்ட சாதியான கள்ளர் என்பது காரணமில்லை. பக்கத்து வீடு தீப்பற்றி கொண்டால் நம் வீடும் நாளை பற்றிக்கொள்ளும் என்ற அடிப்படையில் தான் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இதில் அகமுடையார் மட்டுமல்ல; திருமணம் என்பதே குடும்ப கெளரவம் சார்ந்தது என்ற அடிப்படையில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். குடும்பமென்ற உயரிய அமைப்பின் கெளரவத்தை பாதிக்கும் பிரச்சனையாக பார்க்கும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாத சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைவருமே இந்த நீதிமன்ற கொலையை எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள். இதில் முக்குலமும் இல்லை; அதில் அகமுடையாரும் இல்லை.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்ற கணக்கீடெல்லாம் இதற்கு ஒத்து போகாது. அப்படி பார்த்தால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வன்னியரும், நாடாரும் கூட இருக்கின்றனர். அவர்களுக்கும் கள்ளருக்கும் என்ன சதை உறவு இருக்கிறது? இதை குறிப்பிட்ட சாதியின் பிரச்சனையாகவோ, சில சாதி கூட்டமைப்புகளின் பிரச்சனையாகவோ பார்க்க வேண்டியதில்லை.
எல்லா சாதிகளிலும் பெரும்பான்மையானோர் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய சாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்வதற்கே இங்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதில் சாதி மட்டும் பிரச்சனை இல்லை; சாதியோடு சேர்ந்த பொருளாதார நிலையும் தான் ஒவ்வொரு திருமணங்களையும் முடிவு செய்கின்றன. இந்த விசயத்தில் சாதிக்கும் சதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஏனெனில் ஒரே இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ள அதே சாதியில் காதலித்து திருமணம் செய்வதும் கூட இப்போதெல்லாம் எளிதல்ல.

12 டிசம்பர் 2017

கெளசல்யா!

தன்னை பின்னாலிருந்து இயக்குபவர்களை பற்றி தன் வாயாலேயே இதே ஊடகங்கள் முன்பாக பச்சை பச்சையாக கிழித்தெறியும் நாளும் தொலைவில் இல்லை. அப்போ வந்து, ”பார்த்தீங்களா வீரத்தை; இவள் எங்க குல நாச்சியார்டா!”ன்னு எவனும் கம்பு சுத்திடாதீங்க.

05 ஜூன் 2017

பெயருக்கு பின்னால் சாதி அவசியமா?

சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கரு.பழனியப்பன் அடிக்கடி கருத்து பழனியப்பனாக உருமாறி சொல்லும் எல்லாவற்றையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள்; ஏற்கவும் முடியாது. தொட்டதற்கெல்லாம் ஹிந்தியத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்கள் கூட சாதிப்பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான ஹிந்தியர்களை பற்றி பேசுவதே இல்லை.

இந்த விசயத்தில் ஹிந்தியவாதிகள் மட்டுமல்லாது, திராவிடத்தை தோள் மீது சுமக்கும் நபர்களும் கூட, திராவிட நாடுகளென அடையாளப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் தன் சாதிப்பெயரை போட்டு கொண்டு கெட்டா போய்விட்டார்கள்? என்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை. மேனன்களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும், கவுடாக்களும், நாயுடுக்களும் இதுபோன்ற திராவிட சாதிப்பெயர்கள் இன்றளவும் ஹிந்திய அரசியலோ, திராவிட அரசியலோ, கம்யூனிச அரசியலோ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

திராவிடவாதிகள் கொண்டாடும் ஈ.வெ.ரா.வை பற்றிய திரைப்படத்தை தமிழ்நாட்டில் 'பெரியார்' என்ற பெயரிலும், தமிழகம் தாண்டிய திரையரங்குளில் 'பெரியார் ராமசாமி நாயக்கர்' என்ற பெயரிலும் வெளியிட்டது ஏன்? இதைப்பற்றி விடுதலையே விளக்கமளித்திருந்தது. ஆந்திரா போன்ற பகுதிகளில் சாதிப்பெயரை போடாமல் ஒருவரது பெயரை தனித்து போடுவது மரியாதை குறைவான விசயமாக கருதப்படுவதால் நாயக்கர் பட்டதையும் சேர்த்து போடப்பட்டது. ஆனாலும் அந்த சாதிப் பெயரை மட்டும் குறுக்கே அடித்து காட்டப்பட்டதென முட்டுக்கொடுத்து விளக்கம் கூட தரப்பட்டிருந்தது. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக்கொண்டார்கள்? இந்த சாதிப்பெயரை பயன்படுத்துவதிலுள்ள எதார்த்தத்தை சொல்ல எவ்வளவோ செய்திகளும் விளக்கங்களும் இருக்கிறது.

'தன்னுடைய சாதிப்பெயரையே பொதுவெளியில் சொல்ல கூச்சப்படும் நபர்களுக்கு மத்தியில், இப்படி சாதிப்பெருமைக்காவும், சாதி திமிருக்காகவும் பட்டப்பெயர்களை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது சரியா?' என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். எது சிறுமை? எது அவமானம்? அப்படி நிர்ணயம் செய்தது யார்? இதுபோன்ற உளவியல் தாக்குதலை செலுத்தியவனின் ஆயுதத்தைதானே, தாக்கப்பட்டவனும் எடுக்க வேண்டும்? அந்த லாஜிக்கை விட்டுவிட்டு அவனை சாமி / ஐயா / ஆண்டை என சொல்லி, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் அந்த பொதுபுத்தியை விட்டுத்தானே முதலில் வெளிவர வேண்டும்?

கபாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், 'என்னை நீ கோட் சூட் போடக்கூடாதுன்னு சொன்னா அப்படித்தான் போடுவேன்; கெத்தா; ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா' என உணர்ச்சி பொங்க நாயகன் கூறும் கருத்தை கேட்டு மெய்சிலிர்த்தால் மட்டும் போதாது. அதை செயலில் காட்டவும் வேண்டும். இங்கே அடிக்கிற வெயிலுக்கு மார்க்கெடிங் எக்சிகியூட்டிவ் மாதிரி கோட்சூட் போட தேவையில்லை. ஆனால் வர்ணாசிரமத்தால் சமூக படிநிலையை திணித்து, குறிப்பிட்டவர்ளை மட்டும் கீழாக காட்டியவனின் முகத்தில் கரியை பூச, அந்த சாதியின் பெயரையே பெருமையாக போட்டுக்கொள்வது தான் மிகச்சரியான எதிர்வினையாக இருக்க கூடும். அதை மறந்து விட்டு, யாருமே சாதிப்பெயரை போட்டுக்கொள்ளாதே என அடாவடி அரசியல் செய்வதை சமத்துவ புரட்சியாக பார்க்க முடியாது.

இன்றளவும் இங்கே ஏகப்பட்ட பேர் கைவிடப்பட்டவர்களாகவும், அநாதைகளாகவும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையானோர் தாய் தந்தையோடு தான் வாழ்கின்றனர். எனவே, 'கைவிடப்பட்டவர்களுக்கு இனிசியல் தெரியவில்லை; அதனால் அவர்களுக்காக நாமும் நம் தந்தையின் பெயரான இனிசியலை மறைத்து நம் பெயரை மொட்டையாக எழுதுவோம்; ஏனெனில் அவர்களது தாழ்வு மனப்பான்மைக்கு நாம் காரணமாகி விடக்கூடாது' என யாராவது பேசினால், எப்படி சிரிப்பு வருமோ அப்படித்தான் சிரிப்பு வருகிறது, கருத்து பழனியப்பன்களின் இதுபோன்ற கருத்துகளை கேட்கும் போது!

எதார்த்தம் என்னவெனில், 'யார் தமிழன்?' என அடையாளம் காணவே இந்த பட்டப்பெயர் தான் உதவுகிறது. பல்வேறு மொழி பேசும் இனங்களும், பலதரப்பட்ட இனக்குழுக்களும் இம்மண்ணில் தங்களை போலியாக இம்மண்ணின் மைந்தர்கள் என வேசம் போட்டு அரசியல் செய்யும் அவலத்தை கலையக்கூட, தான் சார்ந்த இந்த சாதியின் பெயரும், பட்டப்பெயரும் தான் பேருதவி செய்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்.
(அகமுடையார் இனக்குழு, தமிழன்)


18 பிப்ரவரி 2017

நேற்று வரை தோழி, இனி சின்னம்மா!?

அ: சசிகலா தமிழச்சி; அதனால் ஆதரிக்க வேண்டும்;

இ: அப்போ பன்னீர்செல்வம் யார்? அவரும் தமிழன் தானே?

அ: இல்லை இல்லை; பார்பன பிடியில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

இ: சுப்ரமணிய சுவாமி என்ற பார்பனர், சசிகலாவை ஆதரித்து ஆளுநரிடமே பேசிக்கொண்டிருக்கிறாரே? அப்போது சசிகலா யார் பிடியில்?

அ: அதெல்லாம் விடுங்க; எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் சசிகலா பக்கம் தான்.

இ: ஆனால், சாமானிய தொண்டர்கள் 95% க்கு அதிகமானோர் ஓ.பி.எஸ்/தீபா பக்கம் தானே இருக்கின்றனர்?!

அ: அது பாஜக, திமுக கட்சிகளோட சதி.

இ: இந்த கன்றாவியையெல்லாம் பார்க்கணும்ங்கிறது எங்க விதி!


இப்படியாக கடந்து கொண்டிருக்கிறது சமகால அரசியல் நகர்வுகள்; டிசம்பர் 5ம் தேதி முதல்வராக இருந்த ஒரு நடிகை மறைந்தார். மிகச்சரியாக இரண்டே மாதங்களில், பிப்ரவரி 5ம் தேதி நடிகையின் தோழி ஒருவர் முதல்வராக உருவெடுக்க ஆயத்தமானார். அதற்குள்ளாக இத்தனை அரசியல் குழப்பங்கள் அரங்கேறி விட்டன.

சாதி அரசியல்:

இதற்கிடையில் இன்னமும் சாதி சாயத்தில் மூழ்கி கிடக்கும் கூட்டத்தினர், சசிகலாவை கள்ளராக முன்னிலைப்படுத்தி பெருமிதம் கொள்கின்றனர். ஆளும் தகுதியை கொடுத்த அதிமுகவின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு தமிழகத்தை நிர்வகிக்கும் தலைமை யாரென விமர்சிப்பதில் என்ன அவதூறு இருக்கிறதென தெரியவில்லை. இன்னுமா முக்குலத்தோர் என்று இல்லாத சாதியின் பெயரால் கண்டவர்களையெல்லாம் தூக்கி பிடிக்கிறீர்கள்?

தன்னுடைய சாதிக்காரன் எது செய்தாலும் சரியென நினைத்து, அதற்காக குருட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கும் மனப்போக்கை மாற்ற முயலுங்கள். (என்னுடைய சாதிய பார்வையே வேறு.) சாதியை வைத்து மட்டுமே சமகால அரசியலில் எதையும் சாதித்து விட முடியாது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி ஒரு தற்போதைய சான்று. ஒரு குறிப்பிட்ட சாதிகளின் விளையாட்டென அரசியல் செய்தவர்களின் சதியை முறியடித்தது நீங்கள் பெருமைப்படுகின்ற எந்தவொரு தனிப்பட்ட சாதியும் இல்லையென்ற எதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு திமுகவை விமர்சிப்பதில்லையென சிலர் அடிக்கடி குறை கூறுகிறார்கள்; ஆள்பவர்களை தான் விமர்சிக்க முடியும். அதனால் பாஜக, அதிமுக என அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறோம். சீமான், ஸ்டாலின், கருணாநிதி, தா.பாண்டியன், மோடி, ஜெயலலிதா என அனைவரையும் பாராட்டியும், கண்டித்தும் அந்தெந்த சூழலுக்கேற்ப விமர்சித்து இருக்கிறோம். இனியும் தொடரும்...

அப்பல்லோ - பத்திரிகையாளர் சந்திப்பு:

ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியதாக அவர்கள் ஒத்துக்கொண்டதே ஒருவகையில் உண்மையை அவசர அவசரமாக உளற தொடங்கிருக்கிறார்களோ என சிந்திக்க வைக்கிறது. ரிச்சர்ட் பீலே சொல்லிருக்கும் எல்லா விளக்கங்களும், ஏற்கனவே பலராலும் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திண்ணையில் எழுதிக்கொடுத்த கடிதம் போலவே தோன்றுகிறது. மேனாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, அவரது தோழி அதே முதல்வர் பதவியில் அமரும் வேளையில் அப்பல்லோ நிர்வாகம் திடீரென கோமா நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பிருக்கிறது; தவளையும் தன் வாயால் கெடும்! என்பது போல அப்பல்லோவும் அதனை பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் கும்பலும் கெடும்.

இந்த அப்பல்லோ பத்திரிகையாளர் சந்திப்பு கலந்துரையாடல்களை உற்று கவனிக்கும் போது, 'பாபநாசம்' படம் தான் நினைவுக்கு வருகிறது. மீண்டுமொருமுறை கமல்ஹாசன், முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வை படமாக்கி இருக்கிறாரோ என எண்ண வேண்டிருக்கிறது. 2000ம் ஆண்டு 'ஹேராம்' படத்தில் குஜராத் கலவரத்தை முன்னதாகவே காட்சிப்படுத்திருப்பார். 2003ல் 'அன்பே சிவம்' படத்திலேயே சுனாமி பற்றி பேசிருப்பார்; 'தசாவதாரம்' படத்தில் எபலோ வைரஸ் பற்றி முன்னதாகவே சொல்லிருப்பார். அந்த பட்டியலில் இப்போது பாபநாசமும் சேர்ந்திருக்கிறது.

எதிரணியில் ஓ.பி.எஸ்.:

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெ. அணி, ஜா. அணி என இரண்டாக பிளவுப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, சசி அணி, தீபா அணி, ஓ.பி.எஸ். அணி என மூன்றாக பிளவுபட்டு நிற்கிறது. போற போக்கை பார்த்தால், ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெ.தீபா தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போல; ஊரே அந்த கும்பலை நடிப்பதாக கழுவி ஊற்றுகிறது; ஆனால் அந்த கும்பலோ, ஓ.பி.எஸ் நடிப்பதாக சொல்கிறது, தங்கள் கட்சியின் தலைமையே நடிகர்கள் தான் என்பதை மறந்து! போயஸ் கார்டனை, 'அம்மாவின் இல்லம்' என இரண்டொருமுறை அழுத்தம் திருத்தமாக ஓ.பி.எஸ் சொன்னதில் கூட ஏதோவொரு செய்தியை அதன்பின்னால் மறைமுகமாக சொல்லிருக்கிறாரோ என தோன்ற வைக்கிறது.

”சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என உலகின் எல்லா பகுதியிலிருந்தும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தரச்சொல்லி தொடர்ச்சியாக என்னுடைய செல்போனுக்கு அதிக கால்கள் வருகிறது. அவர்கள் நிறைய செலவு செய்து, வாட்சப், பேஸ்புக் மூலமாக ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி பலரும், ஓ.பி.எஸை ஆதரிக்க சொல்கிறார்கள்.” என தந்தி தொலைக்காட்சியின் 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் இப்படி சொல்கிறார். அந்த பெரிய நெட்வொர்க், தானா சேர்ந்த கூட்டம். அதுவும் ஜியோவால் சேர்ந்த கூட்டம் என்பதை சசிகலா குடும்பத்தின் ஆதரவாளரான  அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை போல. :)

சசிகலாவின் அவசரம்:

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியதே நான் தான் என்று சசிகலா சொல்லிருக்கிறார். ஊட்டியது, அரசியல் ஆர்வத்தையா? இல்லை ஆகாரத்துல விசத்தையா?ன்னு மக்கள் கேட்கிறார்கள். நல்லவேளை இந்த கொடுமையையெல்லாம் கேட்க ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லை.

பொதுச்செயலாளர் பதவிக்கே தகுதி இல்லையென கட்சி விதிகள் சொல்கின்றன; அதற்குள்ளாக, அவைத்தலைவர், பொருளாளர் என சக பெருந்தலைமைகளில் உள்ளவர்களையே நீக்கினால் யாருக்கும் லாபம்? ஒட்டுமொத்த தொண்டர்களில் 99% பேர் தற்காலிக பொதுச்செயலாளருக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட முடியுமா? இன்னும் சொல்லப்போனால், கட்சி விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அவசர அவசரமாக, தவறான வழிகாட்டுதலால், மிகத்தவறான முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆத்திக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது போல, தான்தோன்றித்தனமாக அந்த கூடாரத்திலுள்ள பலரும் பலதரப்பட்ட முடிவுகளை எடுப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் முதன்மை காரணம்; தங்க முட்டையிடும் வாத்தை கொன்ற பிறகு அதன் மூலம் இத்தனை வருடங்களாக கிடைத்த லாபம் மட்டும் எப்படி இனி கிடைக்கும்?

ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதை பற்றி அவரே முடிவு செய்வாரென அப்பல்லோ ரெட்டி சொன்னதை ஏற்றவர்கள், ஆளுநர் ராவை மட்டும் எதிர்ப்பது ஏன்? அவரே முடிவு செய்யட்டுமே?! 75 நாட்கள் அப்பல்லோவில் நடந்ததும் தெரியவில்லை; 5 நாட்களாக கூவத்தூரில் நடப்பதும் தெரியவில்லை. இதையெல்லாம் பொறுமையாக மக்கள் வேடிக்கை பார்க்கவில்லையா? அவ்வளவு ஏன் அவசரம்?

”ஜெயலலிதாவின் சடலம் தான் அப்பல்லோவிற்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே ஜெயலலிதா இறந்து விட்டார்; அவர் இறந்த பிறகு தான் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்; அவரது உடலை பதப்படுத்தப்படுத்தவே கன்னத்தில் மூன்று துளைகள் இடப்பட்டன” என அப்பல்லோவில் பணிபுரிந்த ராமசீதா சொல்லிருக்கிறார். அப்படியெனில் இதில் பலர் கூட்டு களவாணிகளாக இருந்திருக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் இதுவரையிலும் அதைப்பற்றி யாருமே வாயை திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றனர் என்பது கூட மிக அழுத்தமான சந்தேகங்களை அனைவரது மனதிலுள் எழுப்பி வருகிறது.

கூவத்தூர் கூத்து:

"நாங்க ஜாலியா இருக்கோம்!"ன்னு சொல்கின்ற பன்னாடைகளில் ஒன்றிரெண்டாவது ஆளே காலியாகி பாடையில் தான் போகுமென தோன்றுகிறது. நீங்க குடியும், குடித்தனமாக கூவத்தூரில் கூத்தடிக்கத்தான் வாக்களித்தோமா? நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல சுற்றுச்சூழல் இவையெல்லாம் அந்த ஸ்டார் ஹோட்டலில் மட்டும் தான் கிடைக்கிறதா? தமிழ்நாட்டில் வேறெங்கும் கிடைக்காதா? ஊர்க்காரனுக்கே யாரென தெரியாதவனையெல்லாம், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக அடையாளம் காட்டியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். கூவத்தூரில் குதூகலமாய் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த அரசியல் பொறுக்கிகளெல்லாம், தன்னுடைய தொகுதிக்குள் செல்லும் போது, கண்டிப்பாக அடையாளம் தெரியாதவர்களால் செருப்படி வாங்குவார்கள்.
130 எம்.எல்.ஏ.க்களுக்கும் தங்களுக்கு வாக்களித்த அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் எண்ணம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், காசுக்காக கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கே அவமானமாக இருக்காதா? மானங்கெட்ட அரசியலின் உச்சம் இது. த்தூ!

குடியும், குடித்தனமாக தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த பேரம் என்ற போதை இரண்டு நாட்கள் கடந்தும் தெளியவில்லை. கறிக்கடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளுக்கும் கூட இலைதழையென கவனிப்பு அதிகமாகவே இருக்கும்; ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஆடுகளெல்லாம் மட்டன் பீசுகளாக மேலே தொங்கவிட பட்டிருக்கும். இதுதான் இன்றைக்கு கூவத்தூரில் கூத்தடித்து கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நடக்கவிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் செம்மறி ஆடுகளை தோலுரித்து தொங்கவிடப்பட போவது, அந்த கூடாரமா? இல்லை; மக்கள் அதிகாரமா? என்பதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

இனி குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்:

அனைத்து திறமையுமுள்ள தினகரனுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும். அந்த பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. ஜெயலலிதாவிற்கு அரசியலில் அடைக்கலம் கொடுத்த சசிகலாவையே வழிநடத்திய தினகரனே முதல்வராக வேண்டுமென்ற கோரிக்கைகளும் விரைவில் எழும். ஊசாலுடும் இந்த உயிருக்கு நிறைய செலவழித்து இன்று தற்காலிக சுவாசத்தோடு இயங்க வைக்கப்பட்டுள்ளது; நிரந்தரம் என்பதே இங்கில்லை, நிரந்தர பொதுச்செயலாளர் போல; இனி ஒவ்வொரு நாட்களும் எண்ணப்படும், கூடவே ஜாலியாக இருந்த 124 தலைகளையும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

01 செப்டம்பர் 2016

'சேர்வை ப.அரங்கசாமி முதலியார்'



('சேர்வை ப.அரங்கசாமி முதலியார்' இடம்: வேலூர்.)

அகமுடையார்களின் பட்டங்களான சேர்வையும், முதலியாரும் ஒரே பெயருக்குள்ளாகவே முன்னும்பின்னுமாக ஒன்றாகி போனதற்கான ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது. சேர்வை, தேவர், முதலியார், பிள்ளை, உடையார், நாயக்கர் என்று வட்டாரங்களுக்கேற்ப வெவ்வேறான பட்டங்களால் அறியப்பட்டாலும், இனக்குழுவாக #அகமுடையார் என்ற ஒற்றை அடையாளமாய் ஒன்றிணைந்தது தான் நிகழ்கால சாதனை. இதுவே வருங்காலத்திற்கான நிகழ்கால வரலாறு.

பட உதவி: விமல் உடையார், செல்வராஜ சோழன்

21 ஜூலை 2016

திருவள்ளுவரும் சாதி தலைவராகிறார்!


திருவள்ளுவர் தலித் என்பதால் தான் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ அனுமதிக்கவில்லையென நவீன பார்பனராகி போன, திராவிட வைரமுத்து சொல்லிருக்கிறார். வடக்கத்தியனுக்கு தமிழ்நாட்டுக்காரன் எல்லாருமே தலித் தான் என்ற விசயம் கள்ளரான வைரமுத்துக்கு தெரியாது போல. திருவள்ளுவர் இந்த சாதியென சர்டிபிகேட் கொடுக்க யாருக்கும் இங்கே அறுகதை இல்லை. ஏனெனில் திருவள்ளுவர் பிறந்த ஊரையே இதுவரைக்கும் யாராலும் சரியாக நிரூபிக்க முடியவில்லை. மேலும், திருவள்ளுவர் இந்த சாதிதானென உறுதியாக சொல்லவும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம்.

கீழே இருக்கிற போஸ்ட்ரல இருக்கிற, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பறையர் முதற்கே உலகு' என்ற புதுக்குறள் மாதிரி, ஒருசில வார்த்தையை மட்டும் மாற்றி புதிதாக போலியான வரலாற்றை உருவாக்கிட முடியுமே தவிர, ஒருபோதும் உண்மையை இவர்களால் வெளிக்கொணர முடியாது. அந்த முதற்குறளிலுள்ள 'பகவான்' என்ற சொல்லுக்கே பல பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்கு. ஏனெனில், திருக்குறள் ஒரு சமணநூல். திருவள்ளுவரே சமண மதத்தை சார்ந்தவர் தான். எனவே அந்த குரலில் சொல்லப்பட்ட பகவான் என்பது சமணர்களின் கடவுளான ஆதிநாதரையே குறிப்பதாக பல சான்றுகளை இப்போது திரு.பானுகுமார் போன்ற பல ஆய்வாளர்கள் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்று சொன்னவருக்கே தாடி ஜடைமுடி கொடுத்த உலகமிது. இவர்களிடமிருந்து, திருவள்ளுவரையும், பா.ரஞ்சித்தையும் தலித் ஆக்க முடியுமே தவிர, கடைசி வரை தமிழராக்கவே முடியாது.

கபாலிடா
பறையர்டா
ரஞ்சித்டா
தலித்டா
திருவள்ளுவர்டா

இப்படியே கத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான், கடைசிவரைக்கும்...

- இரா.ச. இமலாதித்தன்

18 ஜூலை 2016

விஜய் டிவியின் டி.ஆர்.பி.க்கு பின்னாலுள்ள சாதி கோட்டா சிஸ்டம்!

இந்த விஜய் டிவிக்காரன் முன்னாடியெல்லாம் மெரிட்ல சீட் கொடுத்தாய்ங்க; க்வாலிட்டி இருந்துச்சு. ஆனா இப்போ ரெகமன்டேஷன் மூலமா மேனேஜ்மென்ட் கோட்டாவுல சீட் கொடுக்கிறாய்ங்க; அதுனால இப்போயெல்லாம் ஒர்த்தான க்வாலிட்டிவுள்ள அவுட்புட் ஒன்னுமே வர போறதில்ல... விஜய் டிவியோட மேனேஜ்மென்ட் கோட்டோவுல கூட, உள் ஒதுக்கீடுல கம்யூனிட்டி கோட்டா இருக்கு. அதுல ஒன்னு, பிராமின் கோட்டா; ரெண்டாவது கிருஸ்டியன் கோட்டா.

இந்த உள் ஒதுக்கீட்டில் இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா, சூப்பர் சிங்கர் மாதிரியான ரியாலிட்டி ஷோவுல நான்கு விதமான ரோஸ்டர் முறை உண்டு. அதுல ஒரு ஃபாரினர் ( ஈழத்தமிழருக்கு முன்னுரிமை), ஒரு மலையாளி, (கண்டிப்பா) ஒரு தெலுங்கர், போனா போகட்டும்ன்னு கஷ்டபடுற தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர்னு ஆட்களை ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க.

ஏற்கனவே சொன்ன அந்த பிராமின் - கிருஸ்டியன் கோட்டாவுல கூட சில ப்ரொசிஜர்ஸ் இருக்கு. பிராமின்ல (வைஷ்ணவ)ஐயங்கரா இருந்தாலும், கிருஸ்டியன்ல நாடாரா இருந்தாலும் சிறப்பு சலுகை உண்டு. இப்படியான கேஸ்ட் சிஸ்டத்துல தான் விஜய் டிவி செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இதுக்கிடையில, அடிக்கும் ஜால்ரா மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட்டை பொறுத்து, சில விதிவிலக்குகாக சிலர் உண்டு.

16 ஜூலை 2016

தேவர் பெயரில் போலி சாதி அரசியல்!

'தேவர் யாரு?'ன்னு டெல்டா முழுக்க உள்ள எந்த சாதிக்காரன் கிட்ட கேட்டாலும், அகமுடையாரை மட்டும்தான் எல்லாரும் காமிப்பாங்க. இங்கே தேவர் என்ற பட்டம் அகமுடையாருக்கானது. டெல்டா மட்டுமில்லாது, கோவை - திருப்பூர் - திருச்சி - விருதுநகர் என பல்வேறு பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு உண்டு. அகமுடையாராகிய எங்களுக்கு, பட்டம் தேவர் - சேர்வை - முதலியார் - உடையார் - பிள்ளை எதுவென்றாலும் சாதி ஒன்று தான்!

பிள்ளை என்கிற பட்டம் அகமுடையாருக்கு இருப்பதால் வெள்ளாளரோடு மண உறவு கொள்வதில்லை; முதலியார் என்ற பட்டம் அகமுடையார்களுக்கு இருப்பதால் செங்குந்தரோடு மண உறவு கொள்வதில்லை; உடையார் என்ற பட்டமிருப்பதால் பார்க்கவ குலத்த்தோடு மண உறவு கொள்வதில்லை. சேர்வை என்ற பட்டம் இருப்பதால், எட்டுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கும் சேர்வை என்ற பட்டம் இருக்கின்ற காரணத்தால் அகமுடையார் அல்லாத எந்த சாதியோடும் மண உறவு கொள்வதில்லை; அது போலவே, தேவர் என்ற பட்டமும் அகமுடையாருக்கு இருப்பதால், பிரான்மலை கள்ளர் - மறவர் போன்ற மற்ற சாதிக்களோடும் மண உறவு செய்ய விரும்பியதில்லை.

இரா.ச. இமலாதித்தன்
பட்டம்: தேவர்
பிரிவு: பதினெட்டு கோட்டைப்பற்று
சாதி: அகமுடையார்

15 ஜூலை 2016

சாதியம் தாண்டி, சாதித்த காமராஜர்!

கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட காமராஜர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல இந்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் இங்கே இல்லாமலே போயிருந்திருக்கும். மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை, 27000 பள்ளிகளாக தன் ஆட்சிக்காலத்தில் மேம்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை முதன்முதலாக உருவாக்கிய உத்தமர் காமராஜர்.

மேலும், ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டதை ரத்து செய்த சமதர்மவாதி அவர். இந்திய அரசியலில் கிங்மேக்கராக விளங்கிய காமராஜர் காலத்தில் தான் என்.ஐ.டி. போன்ற தேசிய அளவிலான கல்வி நிலையங்களும் தமிழகத்தில் கால் பதித்தன. இது தவிர அவரால் தான் தமிழகத்தின் நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டது. காவிரி, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, மேட்டூர் போன்ற பல நீர்பாசன திட்டங்களும் காமராஜர் காலத்தில் தான் உருவாகப்பட்டது.

01. பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)

02. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

03. மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

04. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

05. நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

06. கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

07. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

வெறும் வாய்ச்சொல் வீரராக மேடையில் மட்டும் பேசி கைத்தட்டி வாங்கிக்கொள்ள விரும்பாத கர்மவீரர் காமராஜர் என்ற பச்சைத்தமிழனால் தமிழ்நாட்டிற்கு இவையெல்லாம் அற்பணிக்கப்பட்டவை என்பதை நினைக்கையிலேயே தமிழனாக பெருமையாக இருக்கிறது. படிக்காத மேதை காமராஜர் அவதரித்த நாளான ஜூலை 15ம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவோம்!

காமராஜரை அகமுடையார்கள் ஏன் போற்ற வேண்டும்? என்று கேள்வி கேட்பதை விட, காமராஜரை ஏன் அகமுடையார்கள் புறக்கணிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது. ஏனெனில்,காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான், தென் தமிழகத்தில் அகமுடையாருக்கு அதிக அளவில் தேர்தலில் நிற்க தொகுதிகள் வழங்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் உள்ள அகமுடையார் உள்பட அனைவருமே காமராஜரின் பக்கமே நின்றார்கள். அந்த காலந்தொட்டே, அகமுடையார்களுக்கும் காமராஜருக்கும் ஒருவித இணக்கமான நிலையே இருந்து வந்திருக்கிறது. அதுபோலவே நாடார்களுக்கும் அகமுடையார்களுக்கும் எந்த நேரத்திலும் தனிப்பட்ட பகை வந்தது இல்லை. அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் அகமுடையார் சமூகத்திற்கு யாரும் எதிரியில்லை என்பதை உணர்வோம். சிலர் சாதிக்காக காமராஜரை எதிர்க்கலாம். நாம் சாதித்த காமராஜரை ஆதரிப்போம்.

தன் காலத்தில் அரசியல் செய்தவர்களெல்லாம் மைக் பிடித்து பல மணி நேரம் பேசி மக்களின் கைத்தட்டலை மட்டுமே வாங்கிய நேரத்தில், தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை பேசாமல் செயல்படுத்தி காட்டியவர் கிங்மேக்கர் காமராஜர்.இத்தனை வருடங்கள் கழித்த பின்னாலும் கர்மவீரர் காமராஜரை அவரது சாதியினர் அல்லாத மாற்று சாதியினரும் வருடாவருடம் போற்றுக்கின்றனர் என்பதே அவருக்கான அங்கீகாரம். இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும், தமிழக தேர்தல் பரப்புரையில் "மீண்டுமொரு காமராஜர் ஆட்சியை நாங்கள் தருவோம்!" என்று முழுக்கமிடாத கட்சிகளே இருக்க போவதில்லை.

சாதி அடையாளம் கடந்து சாதித்த பெருந்தலைவரின் பிறந்தாள் ஜூலை 15!
பெருந்தமிழருக்கு சக தமிழனாக புகழ் வணக்கம்!

06 ஏப்ரல் 2016

சசிகலாவின் சாதி ஆளுமை!


சசிகலாவின் ஆதரவால் அதிமுகவில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக கள்ளர்களே அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்!
கள்ளர்களுக்கு, சாதி உணர்வுள்ள சசிகலா இருப்பது போல, அகமுடையார்களுக்கு என யாரும் உணர்வுள்ள அரசியல் ஆளுமைகளாக இதுவரை உருவாகவில்லை. இந்த ஆதங்கம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் சசிகலாவின் சாதி உணர்வை கண்டு ஆச்சர்யபட வேண்டியதாக இருக்கிறது.

வாழ்த்துகள்!

28 மார்ச் 2016

இந்த வார அரசியல்!

# சுழலுமா?

'பம்பரம் டிவி' என்ற இணையதள தொலைக்காட்சியை மதிமுக சார்பில் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலுக்கு பிறகு அந்த சின்னம் மிஞ்சாவிட்டால் கூட டிவியாவது மிஞ்சுமென நினைக்கிறேன்.

# திராவிட வடுகம்!

விஜயகாந்த் மனைவியின் தம்பி என்ற ஒரேவொரு தகுதி மட்டுமேயுள்ள எல்.கே.சுதீஷ் போன்றவர்களை கூட, விஜயகாந்த் முதல்வரானால், துணை முதல்வர் யார்? அமைச்சர்கள் பதவி யாருக்கு? என பேச வைத்திருக்கும் வைகோவின் திறமை போற்றுதலுக்குரியது!


# இசையின் இறைத்தூதர்!

கோடிக்கணக்கான இந்த தேசத்து மக்களின் விருதுகளை வாங்கிய இசைஞானிக்கு, தேசிய விருது என்பது ஒரு சிறிய அங்கீகாரம் மட்டுமே!



# தேர்தலும் சாதியும்‬!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தருகிறோமென சொல்லும் அரசியல் கட்சிகளையும், அந்த ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்யும் ரவுடிகளுக்கு துணை போகும் சட்டத்தையும்- காவல்துறையையும் கண்டுதான், இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் கலக்கத்தில் இருக்கின்றனர். தேர்தலில் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் திராவிட கட்சிகளுக்கு தான் போய் சேர்கின்றன. ஆனால் சட்டத்தாலும் ரவுடிசத்தாலும் நவீனமாய் மிரட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியென சொல்லிக்கொள்ளும் எந்த கட்சிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கானது 1% கூட கிடைப்பதில்லை. மாறாக, அட்டவணை சாதி மக்களின் வாக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் வாக்கும் 95% திராவிட கட்சிகளுக்கே போய் சேர்கின்றன.

# ஊழலுக்கு பின்னால் ஒளியும் சாதிக்காரன்!

கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் மகேந்திர பூபதியை இடை நீக்கம் செய்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா?! முதலில், நீதித்துறைக்குள் ஒரு சில மாற்றம் வரணும். முக்கியமான ஊழல் கொலை கொள்ளை போன்ற வழக்குகளின் நீதிமன்ற வாதங்களையும், தீர்ப்புகளையும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப செய்ய வழிவகை வேண்டும். கிராமப்புறங்களில் சட்டம் படிக்காத ஆளுங்க கூட பஞ்சாயத்து பேசும்போது 'நீதி' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க. இங்கே நீதிமன்றத்தில் 'காசு' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க போல! த்தூ...


#  ஏர்டெல் என்ற ஏமாற்றுக்காரன்!
யாருமற்ற பனி மலையிலும், பாறைகள் நிறைந்த வெட்ட வெளிகளிலும், ஹிந்தியாவெங்கும் ஏர்டெல் 4ஜி நெட்வொர்க் கிடைப்பதாக தொடர்ச்சியாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாகப்பட்டினத்திற்கு உட்பட்ட செம்பியன்மாதேவி, வடுகச்சேரி, தேவூர், வெண்மணி, திருக்குவளையென எங்களது வயல்வெளியுள்ள வண்டலூர் கிராமத்திற்கு அருகேயுள்ள ஊரெங்கும் சுற்றி கொண்டிருந்தேன். ஒழுங்காக 2ஜி நெட்வொர்க் கூட கிடைக்கவில்லை. அதை சரி பண்ணவே வக்கில்லை; இந்த லட்சணத்துல 4ஜி...

# மக்களுக்காக பாலிமர்!

நக்கீரன், ஜூவி, குமுதம் ரிப்போர்ட்டர் போல, நேரில் பார்க்காத ஒரு விசயத்தை பக்கம் அமர்ந்து பார்த்தது போல திரைக்கதை அமைத்து ஐநூறு கோடி, ஆயிரம் கோடியென விஜயகாந்த் பற்றி ஊடகங்களில் உளறிய வைகோவை, அதே ஊடகம் 'ஆயிரத்து ஐநூறு கோடிக்கு அதிமுகவிடம் நீங்கள் விலை போனதாக சொல்கிறார்களே' என ஐயம் எழுப்பியது நூற்றுக்கு நூறு வீதம் சரி. எதிர்வினையென்றால் இப்படி தான் இருக்குமென வைகோவுக்கு புரிய வைத்த பாலிமர் தொலைகாட்சியின் 'மக்களுக்காக' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்துகள்!

# சாதிய தலைமைகள்!

ஜெயலலிதாவிடமும், கருணாநிதியிடமும் மாறி மாறி இரு அணியாக பிரிந்து தன் சாதி மக்களின் தொகையை கணக்கில் காட்டி சாதியையே அடகு வைக்கிற சாதி அமைப்பின் தலைவர்களெல்லாம், இந்த 2016 தேர்தலில் ஒரேயடியாக ஜெயலலிதாவிடம் மட்டும் சரணாகதி அடைந்து விட்டனர்.
'வாழும் வேலுநாச்சியாரே!'ன்னு ஜெயலலிதாவுக்கு போஸ்டர் அடிச்சு, கீழே, 'வாழும் முத்துராமலிங்கத்தேவர்', 'அடுத்த பசும்பொன் தேவர்', 'தேவரின் வாரிசு', 'தேவரின பாதுகாவலர்'... இப்படியாக தங்களுக்கு தாங்களே தேர்தல் வரையிலும் விளம்பரப்படுத்தி கொள்வார்கள். தேர்தல் முடிந்த பிறகு, அடுத்து அக்டோபரில் ஆழ் உறக்கத்தை களைவார்கள்.
வீர வசனம் பேசி மீசை முறுக்கிக்கொண்டு போஸ்டர்ல போஸ் கொடுக்கிறவங்களையும் கூட, கையை கட்டி வாய்மூடி பேச வைக்கும் வல்லமையுள்ள ஜெயலலிதாவின் திறமை ஆச்சர்யபட தக்க ஒன்றுதான்!

- இரா.ச.இமலாதித்தன்

16 மார்ச் 2016

சாதி மறுப்பு காதல்!


சாகடிக்கும் வரை காத்திருந்து அவன் சாதி எதுவென ஆராய்ந்த பின்பே புரட்சியாளர்களாக உருவெடுக்கலாமா? வேண்டாமா? என்பதையே முடிவு செய்கிறார்கள், ஈனபுத்தி கொண்ட நடுநிலை முகமூடிகள்.

இன்றைக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுபவர்களில் எத்தனை பேர், சாதிவெறி பிடித்த அரசியல் பொறுப்பாளர்களின் பொதுமேடை பேச்சுக்களை கவனித்தது இருக்கிறீர்கள்? "கவுண்டனை வெட்டு; கவுண்டச்சியை கட்டு. தேவனை வெட்டு, படையாட்சியை வெட்டு, அவனுங்க வீட்டு பொண்ணை கட்டு." இப்படியாக ஊரூராக பேசி இளைஞர்களின் எண்ணத்தை சீர்குலைப்பதை பற்றி எந்த நடுநிலை பேசும் நபர்களாவது எதிர்ப்பு தெரிவித்து பேசியதுண்டா? இந்த மூன்று சாதி பெண்களை கட்டுவதால் இந்த மூன்று சாதிகளும் முற்றிலுமாக ஒழிந்துவிட போகிறதா என்ன? என்பது எனக்கு புரியவில்லை.

காதல் என்ற புனிதத்தை சீர்குலைக்கும் நோக்கில் சாதிவெறி பிடித்த நயவஞ்சகர்கள் பொதுமேடை அமைத்தும், வாராந்திர கூட்டம் ஒருங்கிணைத்தும் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். காதல் என்பது இயல்பாக ஆண் - பெண் இருவருக்குள் வரும் ஆழ்நிலை மனவோட்டத்தை சார்ந்தது. அதை குறிப்பிட்ட இந்த மூன்று சாதிகள் மீது மட்டும்தான் வர வைக்க சிலர் சாதி அமைப்புகள் நடத்துவதை ஆண்மையுள்ள எந்த நடுநிலைவாதியாவது வாயை திறந்தது உண்டா?

இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு எத்தனையோ 'சாதி மாற்று காதல் திருமணங்கள்' இங்கே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இருபது வருடங்கள் ஆசையாசையாய் வளர்த்தெடுத்த பெண்ணை தன் குடும்ப சூழலுக்கு ஒத்துவராத யாரோவொரு பெயர் தெரியாத ஒருவனுக்கு மணம் முடிக்க எந்த தாய்தகப்பனும் விரும்புவதில்லை என்பதே உண்மை. மாறாக, பெற்றோரின் சம்மதம் வாங்காமல் காதல் திருமணம் செய்ய துடிக்கும் ஆர்வமும் அதன் பின்னாலுள்ள மர்மமும் என்ன?

காதல் கொண்ட ஆண் பெண் இருவருக்குள்ளும் ஒத்த மனநிலை வந்த பின்னால், அந்த பெண் வீட்டாரோடு நேரடியாக சென்று பெண் கேட்டு முறைப்படி திருமண செய்யாமலேயே, ஆசை வார்த்தை சொல்லி வீட்டை விட்டு அழைத்து வருவதால் யாருக்கு லாபம்? ஒரே சாதியில் காதல் செய்யும் ஏழை ஆணுக்கு பெண் தர, அதே சாதியை சேர்ந்த பெண் வீட்டார் மறுக்கும் பல சம்பவங்களை ஊரெங்கும் பார்த்துதானே வருகிறோம். எதார்த்தம் இப்படி இருக்கையில், ஒரு குறிப்பிட்ட மூன்று சாதி பெண்களின் கற்பை, காதல் என்ற பெயரில் சூறையாட சொல்லும் குறிப்பிட்ட சாதிவெறி அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் பொறுக்கிகளை வெட்டி இருந்தால் மகிழ்ச்சியடைந்து இருக்கலாம். ஆனால், சாதிவெறியை ஏவிய 'வில்' பத்திரமாக நடுநிலை புரட்சி என்ற பெயரில் பிணத்தில் மீண்டுமொரு சாதி வன்மத்தை விதைத்து கொண்டிருக்க, அப்பாவி 'அம்புகள்' வீழ்த்தப்படுவது தான் வேதனையான விசயம்.

சாதிவெறியன் என்றும் காட்டுமிராண்டி என அறியப்படும் சாதிகளை சேர்ந்த தமிழ் சாதி உறவுகளே, தயவு செய்து அம்புகளை நோவாதீர்கள். முதலில் வில்லை உடைத்தெறியுங்கள். அதன்பிறகு எல்லாமும் சரியாகும்.
என்னதான் தமிழ் சாதிகளின் ஒற்றுமையையும், தமிழ் தேசியத்தையும் பேசினாலும், 'சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டி சாதி' என்று ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட சாதிசார் மக்களை அடையாளப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியை செய்யும் போலி தமிழ்தேசிய முகமூடிகள் இருக்கும் வரை எதுவும் இங்கே சாத்தியமில்லை.

”இயற்கையாக
மனதில் எழாத அன்பை
திட்டமிட்டு உருவாக்கி
சாதி மறுப்பு என்ற பெயரில்
செய்யப்படும் காதல் திருமணங்கள்
நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!”


- இரா.ச.இமலாதித்தன்

14 மார்ச் 2016

காதல் திருமணங்களுக்கு யார் காரணம்?

வெவ்வேறு சாதிகளை சேர்ந்த ஆண் பெண் இருவருக்குள் ஏற்படும் காதல் திருமணங்களுக்கு, டீ சர்ட் ஜீன்ஸ் பேண்ட்டோ - செல்போனோ - சாதிக்கட்சி அமைப்புகளோ காரணமில்லை. அப்பெண்ணை வளர்க்கும் விதமும், அந்த பெண்ணின் உடன்பிறந்த ஆண்கள் அப்பெண்ணிடம் அடக்குமுறையோடு பழகும் விதமும், பெற்றவர்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும், தன் குடும்ப சூழ்நிலையை பற்றி அந்த பெண்ணோடு வெளிப்படையாக பேசி புரிய வைக்காத ஒட்டுமொத்த பெண் வீட்டார்களே காரணம்; காதல் திருமணங்களுக்கு!

ஒரு பெண்ணோட கற்பில் தான், தங்களுடைய குலப்பெருமை காக்கப்படுகிறதென நினைத்தால், முதலில் அந்த பெண்ணை மதியுங்கள்; அந்த பெண்ணுக்கான அடிப்படை உரிமையை கட்டுப்படுத்தாதீர்கள்; அந்த பெண்ணின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்; மனம் விட்டு அந்த பெண்ணோடு பேசுங்கள்; வெளியுலக நடப்புகளை வெளிப்படையாக சொல்லி புரிய வையுங்கள்; அந்த பெண்ணுக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்புங்கள்; அந்த பெண்ணுக்கு பிடித்த ஒருசில விசயங்களுக்காவது தடை சொல்லாதிருங்கள்;சினிமா, பார்க், பீச் என மாதம் ஒருமுறை அழைத்து செல்லுங்கள்; ஐஸ் க்ரீம், சாக்லெட் என தாராளமாக வாங்கி கொடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் வீட்டு பெண், யாரோ பெயர் தெரியாத ஒருவனோடு காதலிக்கிறேன் என்ற பெயரில் உங்களது குடும்ப கெளரவத்தை சீர்குலைத்து ஓடிப்போக மாட்டாள். இதுவரை இப்படி இல்லாவிட்டாலும், இனிமேலாவது மேலே சொல்லிருக்கும் விசயங்களை நடைமுறைப்படுத்தி பாருங்கள். நல்லதே நடக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

01 மார்ச் 2016

என்றைக்குமே அகமுடையார் முக்குலத்தோர் இல்லை!

'தஞ்சை வரை உள்ள அகமுடையார்கள் மட்டுமே முக்குலத்தோர்; அதற்கு அடுத்துள்ள மாவட்டங்களில் உள்ள அகமுடையார் எல்லாம், முக்குலத்தோர் இல்லை' என அரைகுறை அறிவாளிகள் சிலர் கூறியதாக தெரிகிறது.
அகமுடையார்களை முக்குலத்தோர் என சொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த உரிமையை தந்தது? அகமுடையார் என்பது தனி இனக்குழு.

அகமுடையாருக்கான தேவர் பட்டத்தை மற்றவர்கள் வைத்திருப்பதால் மட்டுமே அவர்களெல்லாம் முக்குலத்தோராக ஆகிவிட முடியுமா? உடையார் - பிள்ளை - முதலியார் - சேர்வை என்ற பல பட்டங்கள் அகமுடையாருக்கு உண்டு. அந்த பட்டங்களிலெல்லாம் தனித்தனி சாதியே இருக்கிறது. (உதாரணத்திற்கு, உடையார் - பார்கவ குலம், பிள்ளை - வெள்ளாளர், முதலியார் - செங்குந்தர்). பட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு எல்லாரிடமும் உறவாட முடியுமா?

தஞ்சைக்கு அடுத்த மாவட்டத்திலுள்ள அகமுடையார் அனைவரும் வேறு என பொய் பரப்புரை செய்யும் அரைவேக்காட்டு ஜென்மங்களுக்கு ஒரு கேள்வி.
அகமுடையார் மட்டுமே வாழும் திருவண்ணாமலையில், அப்பறம் என்ன மண்ணுக்கு மதுரையில் இருந்து வந்து, முக்குலதோர் மாநாடு போட்டீங்க? சேலம் தருமபுரி திருவண்ணாமலை போன்ற தெற்கு வடக்கு கொங்கு டெல்டா என அனைத்து மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கட்சிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க மட்டும் ஏன் அகமுடையார்களின் காலை பிடிக்கிறார்கள்? த்தூ...

என்றைக்குமே அகமுடையார் முக்குலத்தோர் இல்லை!

08 ஜனவரி 2016

ஜல்லிக்கட்டு தடையும்! நீக்கமும்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைச்சதுல ஒருபக்கம் சந்தோச பட்டாலும், எல்லாருக்கும் நன்றி போஸ்டர் அடிச்சு இம்சை பண்ணுவாங்களே கஷ்டமா இருக்கு.

உண்மை என்னவெனில், இந்த வருடமும் ஜல்லிக்கட்டை தடை செய்திருந்தால் யாரும் ஒன்றுமே செய்யாமல் போஸ்டர் அடித்து அடையாள உண்ணாவிரம் இருந்திருப்பார்கள் அமைப்பு ரீதியாக. மத்திய அரசை எதிர்க்கும் இந்த பலத்தை - கூட்டத்தை அப்படியே மாநில சட்டமன்ற தேர்தலுக்கு கணக்கு காட்டி, திராவிட கட்சிக்கு அடமானம் வைத்திருப்பார்கள். ஆனால், இவர்களையெல்லாம் நம்பிய மாடு பிடி வீரர்களும், மாட்டு உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் ரொம்பபே ஏமாந்து நின்றிருப்பார்கள். ஜல்லிக்கட்டு இந்த தேர்தல் வாக்குறுதியில் கடைசி இடம் தான் பிடிக்கும் போல. அதனால் எதிர்பார்த்தது போல டாஸ்மாக் தான் இந்த வருட வாக்குறுதியில் முதலிடத்தில் இருக்க போகிறது.

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு, எல்லாருமே நாங்க தான் காரணமென மார்தட்டி கொள்கிறார்கள். ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு எதிராக 'ஹிந்திய இல்லுமினாட்டிகள்' உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்காக கூட முன்கூட்டியே மத்தியரசு அனுமதி அளித்திருக்கலாமென சந்தேகம் வருகிறது. தோல்வியென்றால் மத்திய அரசுக்கு கண்டன போஸ்டர் அடித்து போராட்டம் செய்து ஒதுங்கி கொள்வது. வெற்றியென்றால் தங்களுக்கே நன்றி போஸ்டர் அடித்து மார்தட்டி கொள்வது; இதுதான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நிலைமை.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்தால், மீசை முறுக்கி - நெஞ்சு நிமிர்த்தி - குரல் உயர்த்தி பேட்டி கொடுத்துவிட்டு தேர்தல் அரசியலுக்குள் மூழ்கி போயிருப்பார்கள். மற்றபடி இங்குள்ள அரசியல் - சாதி அமைப்புகளால் ஒரு மண்ணும் பிடிங்கிருக்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனால் கொஞ்சம் ஓரமாக போய் போஸ்டர் அடிச்சு விளையாண்டு, தனக்குதானே பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

02 ஜனவரி 2016

அகமுடையார் யாரென அளவீடு செய்ய நீங்கள் யார்?

அகமுடையார், அகம்படியார், அகம்படியர், அகம்படி, அகம்படை, அகம்படையினர், என எந்த பதத்தில் அழைக்கப்பட்டாலும் அது ஒரே சாதியைத்தான் குறிக்கும். ஆனால், முக்குலத்தோர் என சொல்லிக்கொள்ளும் சிலர், தங்களது தனிப்பட்ட சாதியின் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ளாமல், அகமுடையார் பற்றிய பொய்யான வரலாற்று தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் அகமுடையார் வரலாற்றை சீர்குலைத்து, அகமுடையார் சாதிக்குள் பிரிவினையை விதைக்க முற்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அகமுடையார் பற்றிய வரலாற்றை அகமுடையார் சாதியை சார்ந்த நாங்களே மீட்டெடுத்து கொள்கிறோம். தயவு செய்து, சாதியால் அகமுடையாராக இல்லாத நபர்கள், தவறான தகவல்களை கொடுத்து, குழப்பம் விளைவிக்க வேண்டாம். ஏனெனில் உங்களது வரலாறையே இன்னும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக நிறுவ முடியாமல் இருக்கின்றீர்கள். அதனால் உங்கள் வரலாற்றை முதலில் முழுமைப்படுத்தி, நடுநிலையாளர்களான மாற்று சாதியை சார்ந்த வரலாற்று ஆர்வலர்களும் உங்களது வரலாற்றை ஏற்கட்டும். அதன் பின்னால் அகமுடையார் வரலாற்றுக்குள் நீங்கள் மூக்கை நுழைக்கலாம்.

அகமுடையார்களாகிய நாங்கள், எங்களது வரலாற்றை (அது ஆண்ட பரம்பரையோ, அடிமை பரம்பரையோ) ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய தனித்தனிக் குழுவாக முயன்று வருகிறோம். அதுவரையிலும், உங்களது வரலாற்றை ஓரளவுக்காகவது உண்மையான தரவுகளோடு நிரூபிக்க முயற்சி எடுங்கள். வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

17 டிசம்பர் 2015

ஆகவிதியும் அட்ராசிட்டியும்!

நல்ல நாள் அதுவுமா, கோவில் வாசல்ல ஐம்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கி, கோவில் அலுவலகத்துல பத்து ரூபாய்க்கு அர்ச்சனை சீட்டு வாங்கி, அர்ச்சகர் கிட்ட போய் நம்ம ராசி - நட்சத்திரத்தை சொன்னா, அதை காதுலேயே வாங்காம காணிக்கையை போடுங்கன்னு மிரட்டுற தொனியில சொல்ற அர்ச்சகரை தான் நூத்துக்கு தொன்னுத்தொன்பது இடத்துல பாத்துருக்கேன். இதெல்லாம் என்ன எழவு விதியோ? என்ன மானங்கெட்ட குலத்தொழிலோ?

#

குலதெய்வம் கோவில்களிலும், ஊர்புற அம்மன் கோவில்களிலும் எந்த ஆகமவிதிப்படி அர்ச்சனை நடக்கிறது? எந்த ஆகமவிதிப்படி கடவுள் பூசாரியின் உடலில் வந்து தெய்வ வாக்காக குறி சொல்கிறார்? பூசாரி மட்டுமல்ல, கோவிலுக்கு வந்த யார் மீது வேண்டுமானாலும் அந்த கடவுள் அடிக்கடி வந்து போகிறாரோ? எனக்கு ஆகமவிதியை புறந்தள்ளிய இந்த கடவுளே போதும்! இறக்குமதி செய்யப்பட்ட எந்த கடவுளும் தேவையில்லை.

#

நான் தீவிர கடவுள் நம்பிக்கையாளன். என் ஆன்மீகறிவுக்கு எட்டியபடி, ஆகம விதிப்படி தான் கடவுளை ஆராதனை பண்ணமுடியும்ன்னு எந்த கடவுளும் உட்சபட்ச நீதியை வழங்கவில்லை என்பதை அறிவேன். ஏனெனில், எந்த கடவுளும் பூநூலை போட்டுக்கொண்டு மேல்தட்டு சாதியவாதியாக இருக்கவில்லை.

#

'சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற காமெடி போலத்தான், இந்த ஆகமவிதியும்!

#

சங்கரராமன்களும், தேவநாதன்களும் தான் ஆகமவிதிக்கு உரிமை கொண்டவர்களா? கோவில் கட்டி மண்ணையே ஆண்ட பரம்பரை என வீர முழக்கமிடும் என் அகமுடையார் குடியில் பிறப்பெடுத்த இந்த இமலாதித்தன் போன்றவர்களுக்கு வெறும் தலைவிதி மட்டும் தானா சொந்தம்?

#

"சாதியும் - நிறமும் ஆன்மீகத்திற்கு சர்வ நிச்சயமாக கிடையாது!"
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

குலத்தொழிலில் போர்குடிகளை தவிர்த்த ஏனையர்களும் வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கடந்தகால / நிகழ்கால வரலாறு. அதனால் குலத்தொழில் என்பதெல்லாம் ஒரு மாயை.
கோவில் கருவறையில் காம களியாட்டம் ஆடிய காஞ்சிபுரம் தேவநாதனின் குலத்தொழில் எது?

சித்தர்களில் - நாயன்மார்களில் - நால்வர்களில் - ஆழ்வார்களில் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்? இவர்களில் எத்தனை பேர் ஆகமவிதியை பயின்றவர்கள்?

அனைத்து சாதியிலிருந்தும் முறையாக பயின்று வரும் நபர்கள் சரியான முறையில் ஆன்மீக சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அன்று கோவில் கட்டிய தமிழ்குடிகளின் வருங்கால தலைமுறைகள், இன்று முறையாக பயின்ற பின்னால் கோவில் கருவறையில் நுழைய யாரும் தடை போட கூடாது. அப்படி இருந்தால் அந்த தடையை உடைப்போம் தமிழனாய்!

#

எங்க நாகப்பட்டினத்தில் மீனவனாய் பரதவர் குலத்தில் பிறந்த 'அதிபத்த நாயனார்' எந்த ஆகமவிதிப்படி வெறும் நாற்றம் பிடித்த மீனை கொடுத்து கடவுளை வணங்கி, அவரையே நேரில் வர வைத்தார் என்பதை சட்டமேதை என்ற அறிவுஜீவிகளால் பதில் சொல்ல முடியாது.
கடவுள் என்பது உணர்வு. அதுவொரு உட்சம் தொட்ட அறிவுநிலை. அது வேறுபாடற்ற அன்பின் நிறைவு. நான் யாரென்ற புரிதலோடு இயற்கை சூழ் இந்த உலகமடங்கிய ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை அணு அணுவாக அனுபவித்து, அணுவாகவே இடம் பெயர்ந்து அதுவாகவே ஆகிவிடும் பெரும்போதை. அதை இந்த ஆகம விதி, ஆகாத விதியென ஒப்பிட்டு இனியும் ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்