31 மார்ச் 2017

பெருந்தமிழர் வள்ளல் பச்சையப்பருக்கு புகழ் வணக்கம்!



சென்னை பெரியபாளையத்தில் பிறந்து, வேதாரண்யத்தில் மணமுடித்து, தஞ்சாவூரில் குடியேறி, பல ஆன்மீக-கல்வி சேவைகளை செய்து கடைசியாக தன் விருப்பப்படியே திருவையாறில் தன்னுயிரை 40வது வயதிலேயே விண்ணுக்கு கொடுத்து இறைவனடி சேர்ந்த, ஆன்மீக செம்மலும், கல்வி வள்ளலுமாகிய அகமுடையார் குலத்தோன்றலான பச்சையப்ப முதலியாரின் 223வது நினைவுநாள் இன்று.

கோயில்களிலும், மடங்களிலும் நிரந்தர அண்ணதானம் வழங்கியதோடு மட்டுமில்லாமல், பல்வேறு கோவில்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார். இன்றளவும் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன. காஞ்சிபுரம், சென்னை, சிதம்பரத்தில் இலவச பள்ளிகளை துவங்கினார். தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார். இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகளும், 16 பள்ளிகளும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் இருக்கின்றன. தஞ்சை அரசருக்கே, ஒரு லட்சம் வராகன் கடன் தருமளவு உயர்ந்தார். தன்னுடைய சொத்து யாவையும் பொதுதர்மத்திற்கே உயில் எழுதி வைத்தார். இப்படியாக தன் வாழ்நாளில் ஆன்மீகத்திலும், கல்வியிலும் தன்னலம் பாராது சேவையாற்றிய இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த வள்ளலின் பெருமைகளை போற்றத்தவறிய சமூகம் இதுவென்பதால் நினைவூட்டுவது எம் கடமையாகிறது.

ஏழ்மையான சூழலில் பிறந்த போதும், கொடை வள்ளலாய் இறந்து, இன்னமும் நம்மோடு நினைவில் வாழும் எம் அகமுடையார் குலத்தில் உதித்த மாபெரும் மனிதருக்கு எளியவனின் புகழ் வணக்கம்!

29 மார்ச் 2017

முதுகெலும்பில்லாத ஹிந்தியா!



இம்மண் சார்ந்த பிரச்சனைகளுக்காக யார் போராடினாலும் ஆரம்பத்திலேயே அந்த போரட்டத்தை பல்வேறு வடிவங்களில் நீர்த்து போக செய்வதில் இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் ரொம்பவே திறமைச்சாலிகள். இவர்களின் முதல் ஆயுதம், தேசத்துரோகி. இந்த ஒற்றை வார்த்தையை வைத்து, போராளிகளுக்கு எதிராக தேசத்துரோக வழக்காக பதிய வைத்து கைது செய்து சிறையிலும் அடைப்பார்கள். எது தேசத்துரோகம்? பன்னாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளுக்காக இம்மண்ணின் வளத்தையே சூறையாடி வாரி கொடுப்பது தானே தேசத்துரோகம். அந்த இழிசெயலை எதிர்க்கும், மண்ணின் மைந்தர்கள் எப்படி தேசத்துரோகி ஆக முடியும்?

மதத்தை வைத்து தீவிரவாதி, கட்சியை வைத்து நக்சலைட், மொழியை வைத்து பொறுக்கி, இனத்தை வைத்து ஈழவியாபாரிகள், என இப்படியாக பல அடைமொழிகளை கொடுத்து விட்டு இவர்கள் மட்டும் உத்தமனாகி விடுகிறார்கள். இங்குள்ள அனைவருக்குமே ஏதோவொரு வகையில் ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது. அதை தேடிப்பிடித்து அவர்களை தனிநபர் தாக்குதல் நடத்தி உளவியல் ரீதியாக ஒடுக்கும் யுக்தியை இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் முறையாக கையாளுகின்றனர். அப்படித்தான், ஹிந்திய கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போரட்டத்தையும் கொச்சை படுத்துகிறார்கள். முசிறியை சேர்ந்த ஐயாக்கண்ணு அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட டெல்லி விவசாய போரட்டத்தை மழுங்கடிக்க, அவரது சொத்து மதிப்பு, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட அந்தரங்க விசயங்களை அவதூறாக பரப்பி சுகம் காண்கிறார்கள். விவசாயி என்பவனுக்கு தொப்பை இருக்கவே கூடாதா? அவனுக்கு சொந்தமாக ஏக்கர் கணக்கில் நிலம் இருக்க கூடாதா? என்ன மாதிரியான மனநிலையில் சில ஹிந்துத்துவ வாதிகள் இருக்கிறார்களென தெரியவில்லை.

ஒருவேளை, பச்சை துண்டிற்கு பதிலாக காவித்துண்டை தலையில் கட்டி விவசாயிகள் போராடிருந்தால் ஹிந்திய ஆட்சியாளர்கள் கடைக்கண் பார்வை எப்போதே பட்டிருக்கலாம். இப்போதும் பெரிய விசயமில்லை; அவர்கள் மொழியில் சொல்வதென்றால், விவசாயிகளில் பெரும்பாலானோர் 'சோ கால்டு' ஹிந்து தான் என்பதையாவது ஆட்சியாளர்களுக்கு உணர வைத்தாலே போதும், போரட்டத்திற்கான பலன் சீக்கிரமாகவே கிடைக்கும். 'மான்கி பாத்' போன்ற மக்களோடு உரையாடும் ஒவ்வொரு முறையும் புதிய ஹிந்தியா பிறந்து விட்டதாக நரேந்திர மோடி மார் தட்டுகிறார். அப்படியொரு ஹிந்தியா பிறப்பது உண்மைதான். அதில் சிக்கல் என்னவென்றால், விவசாயத்துடன் கூடிய கிராமம் என்ற முதுகெலும்பு இல்லாமலேயே குறை பிரசவமாக புதிய ஹிந்தியா பிறந்து விடுகிறது.


திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்களில் "உழவு" என்ற அதிகாரமும் உண்டு. அதிலுள்ள முதல் ஐந்து குறள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)


பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)

தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

------

விவசாயியென்றால் பிச்சைக்காரன் போல இருக்க வேண்டுமென்ற பொது புத்தியை செருப்பாலேயே அடிக்க வேண்டும். எம் சோழ தேசத்தின் பெரும்பான்மையானோர் விவசாய குடும்பத்தினர் தான். அதில் சிறு/குறு/நடு/பெரு என பலதரப்பட்ட விவசாயிகள் இருக்கின்றனர். ஆளுக்கு தகுந்தாற்போல் நிலங்களின் எண்ணிக்கையுடன் கூடிய அளவும் மாறுபடும். விவசாய கூலியும் இருக்கிறார்கள்; மற்றவர் நிலத்தையோ, கோவில் நிலத்தையோ குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் இருக்கிறார்கள்; ஏக்கர் கணக்கிலும், வேலி கணக்கிலும் நிலங்களை வைத்து விவசாயம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எங்கள் குடும்பமும், எங்களது உறவினர்களது குடும்பங்களும் முழுக்க விவசாய பின்னணியிலுள்ள குடும்பங்கள் தான். ஒருகாலத்தில் டிராக்டர் என்பது பத்து கிராமங்களுக்கு ஒன்று இருக்கும்; மாட்டு வண்டிகளெல்லாம் காலாவதி ஆனபின்னால், இப்போதைய நிலவரப்படி, ஒரு கிராமத்திற்கு குறைந்தது நான்கைந்து டிராக்டர்களாவது இருக்கின்றது. பண்ணை போன்ற பெரு விவசாயிகளிடம், முன்பெல்லாம் ஒரு டிராக்டரும், ஒரு அம்பாசிட்டர் காரும் இருக்கும்; இப்போது டிராக்டரோடு, கதிரடிக்கும் மெசினும் இருக்கிறது. ஆடிகார் இல்லாவிட்டாலும் கூட நவீனரக காரும் அவர்களிடம் இருக்கிறது. காவிரியும், வானமும் கை கொடுத்திருந்தால், அனைவருக்கும் முப்போகம் சாகுபடி விளைந்திருக்கும். அப்போது ஆடி காரெல்லாம் ஒரு விசயமாகவே இருந்திருக்காது. விவசாயிகள் என்பவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல; அனைவருக்கும் உணவளிக்கும் முதலாளிகள்; கடவுளின் தூதுவர்கள். அவர்களை போற்ற கூட வேண்டாம்; குறைந்த பட்சம் அவதூறு பரப்பி தூற்றாமலாவது இருங்கள்!

விவசாயி மகனாக,
இரா.ச. இமலாதித்தன்

28 மார்ச் 2017

அரசியலுக்கு லாயக்கற்ற கருணாஸ்!




ஏற்கனவே, 'இரட்டை இலை' சின்னத்தில் நிற்பதற்காகவே, தன்னை அரசியலில் அடையாளப்படுத்திய அமைப்பின் பெயரான 'முக்குலத்தோர் புலிப்படை' என்பதையே வெறும் 'புளிப்படை'யாக மாற்றி சமத்துவ காவலனாக இரட்டை வேடம் போட்ட போதே உடனிருந்தவர்களின் ஆதரவும் குறைந்து போனது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில், முக்குலத்தோர் என்பதே போலியான ஒரு கூட்டமைப்பு; அந்த வார்த்தையால் கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தோர் மட்டுமே பயன்பெற்று வருகிறார்கள்; இந்த எதார்த்த கள நிலவரங்களையெல்லாம் அகமுடையாரான கருணாஸ் கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. அதற்கடுத்து, கூவத்தூரில் கூத்தடித்த கோமாளிகளின் தேவைகளுக்காக கண்டதையெல்லாம் 'சேவை' செய்த போதே கொஞ்சம் நஞ்சமிருந்த மானமரியாதையும் போச்சு.

இனிமேல் அந்த லெட்டர்பேடு அமைப்பில் தலைவராக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதே கருணாஸை, தமிழ்நாடு தேவர் பேரவையினர் கடுமையாக போரட்டம் நடத்தி எதிர்த்த போது, அகமுடையார் இனக்குழுவை சார்ந்தவரென்பதால் எவ்விடத்திலும் விட்டுகொடுக்காமல் ஆதரவளித்த எங்களை போன்றவர்களையும், கூவத்தூர் கூத்துகளால் கேவலப்படுத்திய கருணாஸை இம்முறை எதிர்க்கிறோம். உணர்வை தூண்டும் வெறும் பேச்சை மட்டுமே முதலீடாக வைத்து சமூக அரசியலில் நீடித்திருக்க முடியாதென்பதை கருணாஸ் இனியாவது உணரட்டும். சுயசாதிக்கென்று இருக்கும் விவேகத்தோடும், அகமுடையார் என்ற உண்மையான அடையாளத்தோடும், விஷால் போன்ற அந்நியரின் துணையுமின்றி தமிழ்தேசிய அரசியலில் புது அவதாரமெடுக்க வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

22 மார்ச் 2017

இரு செய்திகளுக்கு பின்னாலுள்ள அரசியல்!

இருகுலத்தோர் அரசியல்:

சின்னத்தை மட்டுமல்ல; கட்சிப்பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி, கள்ளர் அணி; மறவர் அணியென இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த போலியான முக்குலத்து சாதி அரசியலில், எப்போதுமே அகமுடையார் தனி என்ற நிலையும் மீண்டும் தெளிவாகியுள்ளது.

தமிழகத்தில் இத்தனை வருடங்களாக, கள்ளராலும் - மறவராலும் கட்டமைக்கப்பட்ட போலி சாதி கூட்டமைப்பான 'முக்குலத்தோர் அரசியல்' கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகிறது. இத்தனை காலம், மக்கள்தொகைக்கேற்ற உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட அகமுடையார் பேரினம், இனி மெல்ல மெல்ல தன் இருப்பை நிலை நிறுத்துமென நம்பிக்கையும் துளிர்விடுகிறது. மகிழ்ச்சி!

கூத்தாடி அரசியல்:

தமிழரல்லாத ரஜினி, சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கூட இருந்துவிட்டு போகட்டும். காலாவதியான அந்த பட்டத்தைப்பற்றியெல்லாம் கவலையேதுமில்லை. ஆனால், அரசியலில் அவர் செல்லாக்காசாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைக்கு போனால் என்ன? போகவிட்டால் என்ன? ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவன அதிபரின் படமான 2.0 வில் நடிப்பதற்காக வாங்கிய கோடி கணக்கான பணத்திற்கான விசுவாசம் அது. அப்படி சுயலாபத்திற்காகவும், தன் படத்தினை புலம்பெயர் தமிழர்களிடம் விளம்பரப்படுத்தவும் தான், ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்பட்டது. அதை எதிர்க்க திருமாவளவன், வைகோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த எதிர்ப்பை வைத்து பாஜகவினர் சிலர் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க மெனக்கெடுகின்றனர். ஆர்.கே.நகரில் ரஜினியே நின்றாலும் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்பதுதான் களநிலவரம். அரசியலில் என்றைக்கோ அடையாளமற்று போன ரஜினிக்காக தொலைக்காட்சிகள் அரசியல் விவாதம் செய்வது ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது.

21 மார்ச் 2017

ராயல்டி விசயத்தில், ராகங்கள் மட்டுமல்ல; ராஜாவும் புதிது தான்!




எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.

”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை”

இது அந்த பாடலிள்ள முதல் சரணத்தில் வருகின்ற வரிகள். இந்த நான்கு வரிகளிலேயே இசையின் எதார்த்தம் அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் என்ற இம்மூவரின் கீர்த்தனைகளையோ அல்லது இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தமிழிசை மும்மூர்த்திகளான, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை போன்றோரின் கீர்த்தனைகளையோ, பின்னாட்களில் தமிழிசை நால்வராக இணைக்கப்பட்ட பாபநாசம் சிவன் போன்றோரின் கீர்த்தனைகளையோ பயன்படுத்தாமல், இத்தனை பாடல்களை இளையராஜாவால் இசையமைத்திருக்க முடியுமா? என்பது அவருக்கே வெளிச்சம்.

”ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது”

இதுவும், அதே பாடலிலுள்ள இரண்டாவது சரணத்தின் வரிகள். இந்த பாடலில் கூட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை, இளையராஜா சுட்டிக்காட்டிருப்பார். இப்படியான இசையின் எதார்த்தத்தை 80களிலேயே நன்றாக புரிந்து வைத்திருந்த இளையராஜா, இன்றைய இசையமைப்பாளர்கள் போல வெளிப்படையாகவே காப்பியடிக்காமல் கீர்த்தனைகளில் காப்பியடிப்பதெல்லாம் ராயல்டியில் வருமா? வரதா? என்பதை அவரது மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும். மேலும், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி போன்ற மூத்த இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களை காப்பியடித்த பாடல்களும் இளையராஜாவின் ஹிட்லிஸ்டில் இன்றளவும் இருக்கிறது என்பதை இளையராஜா உணராதவர் கிடையாது; அதை ஒருசில மேடைகளில் அவரே சொல்லியும் இருக்கிறார். அப்படிப்பட்ட இளையராஜா இப்போது சமீப காலமாக ராயல்டி விசயத்தில் மல்லுக்கட்டுவது தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது. இந்த ராயல்டி விசயத்தில் இளையராஜாவை எதிர்த்தால், ”ரஹ்மான் மட்டும் யோக்கியரா? அவரை மட்டும் ஏன் யாரும் குறை சொல்லவில்லை? விளிம்பு நிலை சமூகத்தில் பிறந்த இளையராஜவை தான் இச்சமூகம் வஞ்சிக்கிறது!” என சிலர் வகுப்பெடுத்து கொண்டிருக்கின்றனர். இசைக்கு சாதியுமில்லை; மதமுமில்லை; அது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும், கலையாகவும் தான் ஆதிகாலம் தொட்டே விளங்கி வருகிறது.

இளையராஜாவின் பாடல்கள் தான் மக்களிசை; மண்ணின் இசை. அதனால் தான் பெரும்பாலான சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. ரஹ்மானின் பாடல்கள் அப்படியல்ல; இன்றைய லெக்கின்ஸ், ஜூன்ஸ் போல, அது மேற்கத்திய இறக்குமதியின் கலவை. ஆனால் இளையராஜாவின் இசையோ வேட்டி, புடவை போல; இம்மக்களின் மனதோடு நெருக்கமானதாக இன்றளவும் அவர்களுக்குள் இணைந்திருக்கிறது. தொலைத்தொடர்பு வளர்ச்சியில் உச்சம் தொட்டுவிட்ட இக்காலத்தில், செல்போன் இல்லாதவர்களே அநேகமாக இருக்க முடியாதென்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிராமம், நகரம் என எவ்வித பாகுபாடுமின்றி செல்போன்களும், அதன் வழியாக இசையும் இங்கே முழுவதுமாக பரவிக்கிடக்கிறது. திரையிசை சம்பந்தமாக இங்கேவொரு கணக்கெடுப்பு நடத்தினால், இளையராஜாவின் பாடல்கள் சேமிக்கப்படாத செல்போன்களோ, மெமரி கார்டுகளோ இருக்கவே முடியாதென்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

சமூகத்திலுள்ள அனைத்து நிலை மக்களின் மனதோடும் நெருங்கிப்போன இசைக்கு யாரிடம் ராயல்டி கேட்க முடியும்? சமீபமாக பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் இசையமைப்பாளர்களே, உரியவரிடம் அனுமதி வாங்குவதில்லை. இன்னும் சில ரீமிக்ஸ் பாடல்களுக்கு நீதிமன்றம் அளவுக்கு பிரச்சனை வந்தபோதும் கூட, அதையெல்லாம் வெகு எளிதாக தயாரிப்பாளர்களே சரி செய்து விடுகின்றனர். ”பொதுவாக இசையமைப்பாளர்கள் அனைவருமே, யாரோவொரு தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு தானே, குறிப்பிட்ட படத்திற்கு இசையமைத்து கொடுக்கிறார்கள்; அப்படியென்றால் அந்த இசைக்கான ராயல்டி, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு தானே சென்றடைய வேண்டும். இடையில் ஏன் இசையமைப்பாளர்கள் உரிமை கோருகிறார்கள்?” என கேட்கும் சாமானியனின் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதாக யாரும் பதில் சொல்லிவிட முடியாது.

சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பாக, தன் அண்ணன் பாவலரோடு பொதுவுடைமை கொள்கைகளை தெருமுனை பிரச்சார பாடல்களாக உருவாக்கியும், அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தும் தானே, பின்னாட்களில் இளையராஜாவாக உருவெடுத்தார். அந்த தெருமுனை பரப்புரை பாடல்களின், மூலஇசை யாருடையது? அன்றைக்கு பிரபலமான கே.வி.எம்., எம்.எஸ்.வி., போன்ற இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட திரையிசைப்பாடல்களின் வரிகளை மாற்றியமைத்து தானே, தன் இசையாளுமையை அதே மெட்டுகளோடு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அன்றைக்கு தங்களது பொருளாதாரச்சூழலுக்கு கைக்கொடுத்த கே.வி.எம்., எம்.எஸ்.வி. போன்றோரின் இசைக்கு, அவர்கள் என்றாவது பாவலர் & கோ விடம் ராயல்டி கேட்டிருந்தால் நிலைமை என்னவாகிருக்கும் என்பதையும் இசைஞானி இளையராஜா சிந்தித்திருக்கலாம் என்பதே பலரது மனநெருடல்களாக இருக்கிறது.”இதற்கு மேலுமா அவர் சம்பாரிக்க வேண்டும்? அவரிடம் காசே இல்லையா? அவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை? அவரால் நாலுபேர் வாழ்ந்துட்டு போகட்டுமே” என்றெல்லாம் கேட்கும் எளியவர்களுக்கு, ராயல்டி பற்றிய உள்ளார்ந்த விசயங்கள் விளங்காமல் இருக்கலாம். ஆனால் இந்த ராயல்டி பிரச்சனையால், இளையராஜா பேசுபொருளாகி இருக்கிறார். பலரது ஏசுபொருளாகவும் மாறியிருக்கிறார். புகழின் உச்சத்தை என்றைக்கோ தொட்டுவிட்டு, இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக உச்சாணிக்கொம்பில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜா, இந்த ராயல்டி விசயத்திலும் இன்னும் கொஞ்சம் பெருந்தன்மையாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

நகரமயமாக்கப்பட்ட போதும் கூட, அங்கே வசிக்கும் பெரும்பான்மையினரின் பூர்வீகம் ஏதோவொரு கிராமமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட கிராமங்களில் நடைபெறும் ஒவ்வொரு வருட திருவிழாவிலும் அரிச்சந்திர நாடகமோ, வள்ளித்திருமண நாடகமோ கூட இப்போது அரங்கேற்றுவது குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆடலும் பாடலும், ஆர்க்கெஸ்ட்ரா என இசை நிகழ்ச்சி இல்லாமல் எந்தவொரு கிராமத்தின் திருவிழாக்களும் முழுமையடைவதில்லை. சாமானிய இசை ரசிகர்களாக, எவ்வித பொருளாதார பின்னணியும் இல்லாமல் எத்தனையோ ஆர்கெஸ்ட்ரா குழுக்களிலுள்ள எளியவர்கள் அன்றைய இளையராஜாவின் பாடல்களால் தான் இன்றைக்கும் தங்களது பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இது தான் எதார்த்தம். அவர்களுக்கெல்லாம் இளையராஜா என்பவர் இசைஞானி மட்டுமல்ல, ”ஓர் தேவ தூதன்”, ”பிழைப்பை கொடுக்கும் கடவுள்”; அப்படியாகத்தான் நினைத்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ பேர், இளையராஜா என்ற ஒற்றை மனிதரால் நாள்தோறும், திருமண விழா, ஊர்த்திருவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள் என பல வடிவங்களில் பலன்பெற்று வருகிறார்கள். அவர்களுக்காகவது இசைஞானி, கெடுபிடிகளை தளர்த்தி இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம். இதன் மூலம் பணம் வேண்டுமென்றால் கிடைக்காமல் போகலாம்; ஆனால் முகம் தெரியாத எத்தனையோ பேரின் அழ்மனதிலிருந்து வெளியெழும் அன்பு கிடைக்குமே?! அதற்கு நிகராக வேறேதும் உண்டா இவ்வுலகில்? இந்த ராயல்டி விசயத்தில் இசைஞானியின் இசைவுக்காக தான் காத்திருக்கிறது, ஒட்டுமொத்த இசைப்பிரியர்களின் மனங்களும்!

- இரா.ச.இமலாதித்தன்

18 மார்ச் 2017

அரசியலில் ஆன்மிகமும் - அரசாங்கத்தில் ஊழலும்!


# அரசுத்துறை தேர்வுகளில் உள்ள ஊழல்:

டி.என்.பி.எஸ்.சி என்ற தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணைய தேர்வுக்குழுவை நிர்ணயம் செய்ததில் சட்டவிதிமீறல் இருப்பதாக கூறி, அந்த குழுவே ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கலைக்கப்பட்டது. ஆனால், மத்திய தேர்வுக்குழுவில் உள்ள ஊழலை யார் களையெடுப்பது? ஆர்.ஆர்.பி. என்ற ரயில்வே துறை தேர்விலும், தென்னக ரயில்வே வேலைவாய்ப்பிலும் வடக்கத்தியர்கள் தான் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வருகிறது. அதுபோலவே மத்திய தபால்துறை தேர்விலும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வெழுதியதிலும் கூட வடக்கத்தியர்கள் தான் அதிகளவில் தேர்ச்சிப்பெற்றிருப்பதாக சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்பது? இந்த சதியின் பின்னணியிலுள்ள ஊழலை யார் வெளிக்கொண்டு வருவது? சமுதாய பிரச்சனையை வெட்டவெளிச்சம் போட்டு தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களெல்லாம் ஊமையாகி போய்விட, ஆட்சி அதிகாரமோ ஊனமாகி போய்விட்டது. :(  ஏமாளிகள் தமிழர்கள் தான்!


 # உத்ரபிரதேச முதல்வர் தொகுதியின் பின்புலம்:


உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் ஏதோவொரு வகையில் தொடர்பிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக ஐந்து முறை கோரக்பூரில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த கோரக்பூரில் தான் பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் ஜீவசமாதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. கோரக்கரின் ஜீவசமாதியுள்ள அந்த மடத்தை தான், யோகி ஆதித்யாநாத் நிர்வகிக்கிறார். காகபுஜண்டரின் சீடரான கோரக்கர், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். சித்தர்களின் ஜீவசமாதி பல இடங்களில் உண்டு. அதுபோலவே, ஒரே சித்தர் பல இடங்களில் ஜீவசமாதி ஆகியிருப்பதும் உண்டு. அப்படியாக, சித்த மருத்துவ ரகசியத்தை மறைபொருள் ஏதுமின்றி மிகவும் எளிமையாக தன் நூல்களில் வெளிக்கொண்டு வந்த கோரக்க சித்தரின் ஜீவசமாதி நாகையிலிருந்து ஆறு மைல் தொலைவிலுள்ள வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கிறது. இவர் எழுதிய பல நூல்களில் சந்திர ரேகை என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

கோரக்க சித்தர் ஜீவசமாதிகள்:

1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (மானாமதுரை)
4. வடக்கு பொய்கை நல்லூர் (நாகை)
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (உ.பி)

மதம் எனும் வெறி!


பகுத்தறிவு என்ற கொள்கைக்காக கடவுளே இல்லையென்று யார் பேசினாலும் எதிர்ப்பு மட்டுமே வரும். ஆனால் ஓர் இசுலாமியன் அதே கடவுள் மறுப்பை பேசினால் கொலையே விழும். இதுதான் அமைதி மார்க்கமா? இசுலாமியர்கள் அல்லாதவர்கள் வணங்கும் அனைத்து கடவுளையும் எப்படி வேண்டுமானாலும் அனைவரும் விமர்சிக்கலாம்; அந்த கடவுளெல்லாம் இல்லவே இல்லையென வாய்கிழியவும் பேசலாம்; ஆனால் இதுபோல் பலரது நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும் கூட பெரும்பான்மையாக உள்ளவர்கள், வாய் உள்பட அனைத்தையும் மூடிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். அதையே ஓர் இசுலாமியன், கடவுள் மறுப்பு கொள்கையை பொதுவெளியில் பேசினால், அவர் சார்ந்த மதவெறியர்களாலேயே வெட்டிக் கொல்லப்படுவார். அதை எதிர்த்து எந்த மாட்டுக்கறி கும்பலோ, தாலியறுக்கும் கழகமோ, பிரியாணி பிரியர்களோ வாய் திறக்க மாட்டார்கள். காரணம், சிறுபான்மை அரசியல்; போலி நடுநிலைவாத அரசியல். த்தூ... இசுலாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பாரூக் அவர்களின் ஆன்மா இளைப்பாறட்டும். பாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அவர் சார்ந்த அமைப்பு உறுதுணையாக இருக்கட்டும்.

16 மார்ச் 2017

உளவியல் கொலைக்கு உள்ளான தமிழன்!

சேலத்திலுள்ள அரிசிபாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற (ஜெ.என்.யூ) தமிழ் மாணவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திலேயே தூக்கிட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். மூன்று முறை முயற்சித்து, நுழைவுத்தேர்வு மூலமாக ஆய்வு மாணவனாக சென்றவரின் உடலே இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது எத்தனை கொடுமையான விசயம். எளிய குடும்பத்தில் பிறந்த போதும் இத்தனை துன்பங்களையெல்லாம் கடந்து டெல்லி சென்றது, இளம் வயதிலேயே இறப்பதற்காகவா?யென அவரை சார்ந்தோரும், அவரை போன்றோரும் கொதித்தெழுவது இயல்பு தான்.
இன்னும் சொல்லப்போனால் பட்டியல் சாதியை சேர்ந்தவரென்பதால் தானே, முத்துக்கிருஷ்ணன் கொல்லப்பட்டிருக்கிறார்; அதற்கான எதிர்வினையாகத்தான் சாலமனின் செருப்பும் இருந்திருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட இச்செயலை கண்டிக்கும் யாருமே, இறந்த முத்துக்கிருஷ்ணனின் உயிரை பற்றி கவலை கொள்ளவே இல்லை. இணையதள ஆதரவாளர்களான இவர்களெல்லாம் தாங்கள் தான் ஹிந்தியாவையே ஆட்சி செய்வது போல, என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி பார்த்தால், மேல் வகுப்பென அறியப்படும் அந்த சிறுபான்மை சாதியவாதிகளின் உளவியல் தாக்குதலால் கொல்லப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் உயிரை விட, சாலமனால் வீசப்பட்ட ஒற்றை செருப்பு ஒரு விசயமே அல்ல.

14 மார்ச் 2017

இனக்குழுவின் மூத்தோருக்கு வீர வணக்கம்!


மார்ச் - 13: மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மேதகு இராச.பாஸ்கர் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.


மார்ச் - 14: தனித்தமிழர் சேனையின் நிறுவனர் மேதகு க.நகைமுகன் ஐயாவின் முதலாமாண்டு நினைவேந்தல்.




மார்ச் - 15: லெனின் கம்யூனிஸ்ட் நிறுவனர் மேதகு கூத்தக்குடி ச.சண்முகம் ஐயாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.



அகமுடையார் பேரினத்தின் போற்றுதலுக்குரிய அடையாளமாய் திகழ்ந்த தமிழுணர்வுமிக்க இம்மூன்று மாபெரும் தலைவர்களையும் ஒரே மாதத்தில் இழந்தோம் என்பது சோக வரலாறாகி போனாலும் கூட, தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக சமுதாய பணியாற்றிய இம்மூத்தோரின் வழித்தடத்திலேயே நாங்களும் பயணிக்கிறோம்.


வீர வணக்கம்!

கமலின் அரசியல்!


தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஜெயலலிதாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. அது, தனக்கு இணையான எதிரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்வது; மற்ற யாரும், ஜெயலலிதாவை நேரடியாக தாக்கி பேசியோ, அறிக்கை விட்டோ விமர்சனம் செய்தால் கூட அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து விடுவது; வேண்டுமென்றால், தன் கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து, பதிலடி கொடுப்பது; அந்த முறையில், கடைசி வரை ஜெயலலிதா எதிர்த்தது கருணாநிதியை மட்டும் தான்.

இதையெல்லாம் கவனிக்க தெரியாமல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக முதலமைச்சர் பதவியை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ, கமல்ஹாசனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நடப்பதை பார்க்கும் போது, சிவாஜி படத்தில் வரும் "சும்மா இருந்தவனை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டுட்டோம்" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. என் கணிப்பு சரியாக இருக்குமெனில், ஒருவேளை கமல்ஹாசன் நேரடி அரசியலுக்கு வந்தால், பல பேரின் அரசியல் கனவு சுக்குநூறாகும் அளவுக்கு, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல் இருப்பார்.

அன்று, ஜெயலலிதாவிற்காக தான் பேசாமல் இருந்தாராயென தெரியவில்லை; ஆனால், இன்று பேசுவதற்கு காரணம், கெளதமி தான்; வாழ்த்துகள்!

12 மார்ச் 2017

அரசியல் கூத்து!




போராளிகளுக்கான அரசியல் எது?


மணிப்பூரிலுள்ள தோபால் தொகுதியில் மொத்தமாக பதிவான 27271 வாக்குகளில், நோட்டாவிற்கு கூட 143 வாக்குகள் பதிவாகிருக்கிறது. ஆனால் இரோம் ஷர்மிளா என்ற பெண் போராளிக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில், போராளிகளுக்கு மக்களாட்சியும் கை கொடுப்பதில்லை; அம்மண் சார்ந்த மக்களும் தோள் கொடுப்பதில்லை. ஹிந்தியாவில் அரசியல் செய்து வெற்றிப்பெற வேண்டுமென்றால், ஐஸ்வர்யா தனுஷ் போன்ற சிறுபான்மையினரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளுக்கான வாய்ப்பு:

ஜெயலலிதாவின் மரணத்தால், கருணாநிதியின் உடல்நலக்குறைவால், வைகோ உள்ளிட்ட மநகூவினர் போன்றவர்களின் செயல்பாட்டால், தமிழ்நாட்டு அரசியலும் உத்திரப்பிரதேச அரசியல் போல குழம்பிய குட்டையாக மாறி இருக்கலாம். ஆனால், அந்த குட்டையில் ஹிந்திய மீனவன் என அடையாளப்படும் யாரும் மீன் பிடிக்க முடியாது. ஏனெனில், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலுமே தமிழ்நாடு, தனி நாடு தான்! இத்தனை வருட திராவிட அரசியல் தோற்கும் நேரம், அந்த இடத்தை நிரப்ப தமிழ் தேசிய அரசியலே தன்னெழுச்சியாக மேலெழும். இத்தனை ஆண்டுகால ஹிந்தியத்தின் புறக்கணிப்புகளுக்கு ஆளான இம்மண்ணில், வேறெந்த ஹிந்திய தேசியமும் அவ்வளவு எளிதாக தலையெடுக்க முடியாது.

ஆர்.கே.நகர் அரசியல்:

லெட்டர் பேடு சாதி சங்கங்களெல்லாம் இன்னும் ஓரிரு மாதத்திற்கு செழிப்பாகத்தான் இருப்பார்கள். போஸ்டர், பேட்டி, அறிக்கையென பணத்தை வாங்கிக்கொண்டு கண்ட இடங்களில்லாம் பல்லிளிப்பார்கள். அநேகமாக, அதிமுகவிலுள்ள சசி அணியின் வேட்பாளரான தினகரனுக்கு தான், பல லெட்டர் பேடு அமைப்புகள் ஆதரவு கொடுக்க கூடும். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு, ஆர்.கே.நகர் தொகுதியில் தான், புதிய ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும்.

11 மார்ச் 2017

சினிமாத்துறையில் திராவிடம்!







சங்கத்தின் பெயரில் மட்டும் தான், தமிழ் இருக்கிறது. வேட்பாளர்களில் விஷால், தெலுங்கன்; பிரகாஷ்ராஜ், கன்னடன்; கெளதம் வாசுதேவ் மேனன், மலையாளி.

தமிழன் ரொம்ப பாவம் :(

10 மார்ச் 2017

இசுலாம் என்பது மொழியின் அடையாளமா?




எப்படி பார்த்தாலும் தாய்மொழி தமிழ்தான்; வந்தேறிய தந்தையின் மொழி தான், உருதுவாகவோ - அரபியாகவோ இருக்க முடியும். உண்மையான வரலாற்றை தெரிந்த எவனும் மதத்தை தூக்கி வைத்து கொண்டாடவே முடியாது. இந்த மாதிரியான அரை கிறுக்குகளுக்கு, ஆப் கீ பார் குரூப் தான் லாயக்கு.

09 மார்ச் 2017

ஓர் அரசியல்வாதி உருவாகின்றான்!






கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம் இதெல்லாம் இருக்காதா? தன்னெழுச்சியாக இளையோர் கையிலெடுத்து வெற்றிக்கண்ட ஜல்லிக்கட்டு போரட்டத்தை, தன்னுடைய சுயலாபத்திற்காகவும், புகழ் போதைக்காகவும் சுய இன்பம் செய்து கொள்வது போல கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கும்மியடித்து விட்டால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ஆகிவிட முடியுமா? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல, 'ஒரு கோடி ரூபாய் தரேன்!' என வாயாலேயே வடை சுட்டுவிட்டால் மக்கள் எல்லாரும் நம்பி விடுவார்களா என்ன? சூப்பர் ஸ்டாரென அடையாளப்படும் ரஜினியையே மக்கள் அனைவரும் தற்போதைய சூழலில் ஏற்று கொண்டுள்ளனரா என்பதே கேள்விக்குறி தான். தமிழ்நாட்டை பொறுத்த வரை மக்கள் ஏற்று கொண்டுவிட்டால், மாட்டு சாணம் கூட (பிடி பிள்ளையார்) கடவுள் தான். வக்கிருந்தால், சென்னைக்காரன் என பில்டப் கொடுக்கும் லாரன்ஸ், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மக்கள் சூப்பர் ஸ்டாரென தன்னை நிரூபிக்கட்டும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மானங்கெட்ட பொழப்பு எதற்கு? த்தூ...

08 மார்ச் 2017

கடல் மேல் கசியும் ஓர் இனத்தின் குருதி!

இரு நாடுகளுக்கான கடல் எல்லையை பிரிக்கும் அளவிற்கான தொலைவே இல்லாத பகுதியில் தான் இலங்கை என்ற குட்டித்தீவு இருக்கின்றது. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஏறத்தாழ 12 நாட்டிக்கல் மைல்; அதாவது 22 கி.மீ. அளவுக்கு அந்த நாட்டின் கடல் எல்லையை வகுத்து கொள்ள முடியும். அப்படி பார்த்தால் ஹிந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள கடற்தொலைவை வைத்து கணக்கிட்டால், தமிழர் பெருங்கடலிலுள்ள சில கடலோர பகுதிகளுக்கு எல்லையே பிரிக்க முடியாது. கோடிக்கரை, முத்துப்பேட்டை பக்கமெல்லாம் உள்ள கடலின் இருபக்க கரையோரங்களுக்கு இடைபட்ட தொலைவு மிகக்குறைவு. அந்த பகுதிகளுக்கெல்லாம் சர்வதேச எல்லையே பிரிக்க முடியாது.

2014ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி எங்கள் நாகப்பட்டினமே கடலுக்குள் மூழ்கி விட்டதாக பரப்புரை செய்தது ஊடகங்களெல்லாம்; இன்றும் அதே பழைய உயிர்ப்போடு தான் நாகை உள்பட தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளெல்லாம் மீனவர்களின் ஒத்தழைப்போடு இயங்குகிறது. சுனாமியென்ற கோரத்தாண்டவத்தின் சோக சுவடுகளை கடந்த பின்னும், தமிழர்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் இனவெறி குறைந்தபாடில்லையென்றே தொடர்ச்சியான மீனவ படுகொலைகள் மூலமாக உணர முடிகிறது. பெளத்த-சிங்கள இனவெறியில் ஊறிப்போன ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு, ஆசையை துறக்க சொல்லி அன்பை போதித்த புத்தரின் வாக்கு இன்னும் கேட்கவே இல்லை போல. பாவம் புத்தர்; அவர் பெயரில் நடக்கும் அவலங்களை அறியாமல், கண்களை மூடி புன்னகைத்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை தனிநாடாக தமிழ் பொறுக்கிகள் ஆளும் நாளில், மீனவன் தான் கடற்புலிகள் என்பதை அரசியல் பொறுக்கிகளும் உணரும் ஒருநாள் நிச்சயம் வரும். தான் யாருக்கு பிறந்தேனென சொல்வதில் கூட குழப்பத்தில் சிக்கிய சுப்ரமணிய சுவாமி மீதெல்லாம் கொஞ்சம் கூட மரியாதையோ, பரிதாபமோ இப்போதெல்லாம் வருவதேயில்லை. "எதிரியை தோற்கடிக்க வேண்டுமே தவிர, சாகடிப்பது வெற்றியல்ல!" என்ற எண்ணமும் கூட சு.சுவாமி விசயத்தில் சுக்குநூறாக உடைந்து போகிறது. அவர் இறந்தால் அந்நாளை கொண்டாட தமிழ்நாடே காத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். மண்டல் கமிஷனை செயல்படுத்திய வி.பி.சிங் என்ற பிராமணரில்லாதவரின் இறப்பை வரவேற்ற இன வெறியர் சோ.ராமசாமி, "ஒரு மனிதரின் இறப்பு குறித்து நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஆனால் இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிகவும் நல்லது" என துக்ளக்கில் எழுதினார். அதுபோலவே, ஓர் இனமே மகிழ்ச்சியடைய சு.சுவாமி சீக்கிரமாவே இறந்து தொலையட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது போன்ற மாயையை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டே இருக்க போகிறார்களென தெரியவில்லை. யார் அந்த ஆண்கள்? என அவர்களுக்கு இன்னும் தெரியவே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய வட்டம், ஒரு புள்ளியிலிருந்தே தொடங்குவது போல, அவர்களை அடக்கும் ஆண்களும் கூட தங்கள் குடும்பத்தில் தான் இருக்கிறார்களென்ற உண்மையை ஒத்துக்கொள்ள பழகிக்கொள்வது தான் நேர்மையாகவும் இருக்க முடியும். ஆணாதிக்கம் என்ற போர்வைக்குள், ஒட்டுமொத்த ஆண்களையும் இன்னும் தூற்றிக்கொண்டிருக்காமல்ம், தன் வீட்டிலிருந்தே ஆணாதிக்கம் என்ற அடிமைதனத்தை எதிர்க்கும் சக்தியை எல்லாம்வல்ல அந்த பரம்பொருளின் அம்சமான பராசக்தி அவர்களுக்கு இந்நாளிலாவது அளிக்கட்டும்!

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

தமிழர் கடலில் செத்து மடியும் மீனவ சமூகம்!





இரு நாடுகளுக்கான கடல் எல்லையை பிரிக்கும் அளவிற்கான தொலைவே இல்லாத பகுதியில் தான் இலங்கை என்ற குட்டித்தீவு இருக்கின்றது. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஏறத்தாழ 12 நாட்டிக்கல் மைல்; அதாவது 22 கி.மீ. அளவுக்கு அந்த நாட்டின் கடல் எல்லையை வகுத்து கொள்ள முடியும். அப்படி பார்த்தால் ஹிந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள கடற்தொலைவை வைத்து கணக்கிட்டால், தமிழர் பெருங்கடலிலுள்ள சில கடலோர பகுதிகளுக்கு எல்லையே பிரிக்க முடியாது. கோடிக்கரை, முத்துப்பேட்டை பக்கமெல்லாம் உள்ள கடலின் இருபக்க கரையோரங்களுக்கு இடைபட்ட தொலைவு மிகக்குறைவு. அந்த பகுதிகளுக்கெல்லாம் சர்வதேச எல்லையே பிரிக்க முடியாது.

2014ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி எங்கள் நாகப்பட்டினமே கடலுக்குள் மூழ்கி விட்டதாக பரப்புரை செய்தது ஊடகங்களெல்லாம்; இன்றும் அதே பழைய உயிர்ப்போடு தான் நாகை உள்பட தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளெல்லாம் மீனவர்களின் ஒத்தழைப்போடு இயங்குகிறது. சுனாமியென்ற கோரத்தாண்டவத்தின் சோக சுவடுகளை கடந்த பின்னும், தமிழர்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் இனவெறி குறைந்தபாடில்லையென்றே தொடர்ச்சியான மீனவ படுகொலைகள் மூலமாக உணர முடிகிறது. பெளத்த-சிங்கள இனவெறியில் ஊறிப்போன ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு, ஆசையை துறக்க சொல்லி அன்பை போதித்த புத்தரின் வாக்கு இன்னும் கேட்கவே இல்லை போல. பாவம் புத்தர்; அவர் பெயரில் நடக்கும் அவலங்களை அறியாமல், கண்களை மூடி புன்னகைத்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை தனிநாடாக தமிழ் பொறுக்கிகள் ஆளும் நாளில், மீனவன் தான் கடற்புலிகள் என்பதை அரசியல் பொறுக்கிகளும் உணரும் ஒருநாள் நிச்சயம் வரும். தான் யாருக்கு பிறந்தேனென சொல்வதில் கூட குழப்பத்தில் சிக்கிய சுப்ரமணிய சுவாமி மீதெல்லாம் கொஞ்சம் கூட மரியாதையோ, பரிதாபமோ இப்போதெல்லாம் வருவதேயில்லை. "எதிரியை தோற்கடிக்க வேண்டுமே தவிர, சாகடிப்பது வெற்றியல்ல!" என்ற எண்ணமும் கூட சு.சுவாமி விசயத்தில் சுக்குநூறாக உடைந்து போகிறது. அவர் இறந்தால் அந்நாளை கொண்டாட தமிழ்நாடே காத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். மண்டல் கமிஷனை செயல்படுத்திய வி.பி.சிங் என்ற பிராமணரில்லாதவரின் இறப்பை வரவேற்ற இன வெறியர் சோ.ராமசாமி, "ஒரு மனிதரின் இறப்பு குறித்து நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஆனால் இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிகவும் நல்லது" என துக்ளக்கில் எழுதினார். அதுபோலவே, ஓர் இனமே மகிழ்ச்சியடைய சு.சுவாமி சீக்கிரமாவே இறந்து தொலையட்டும்.