பிஜேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஜேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 அக்டோபர் 2017

மெர்சல் - ஒரு பார்வை!



நடிக்கிறது மட்டும் தான் என் வேலை; நடித்து கொடுத்த அந்த படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட எவ்வித ப்ரோமோஷன்களுக்கும் வராமல், அந்த படம் ரிலீஸானால் என்ன? ரிலீஸ் ஆகாமல் போனால் என்ன? அந்த தயாரிப்பாளர் எவ்வளவு சிரமப்பட்டால் எனக்கென்ன? என அந்த படத்தில் பின்புலமாக பணியாற்றிய நூற்றுக்கணக்கான கலைஞர்கள் உள்ளிட்ட யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சம்பள பணத்தை மட்டும் கறாராக வாங்கி கொண்டு ஒதுங்கி கொள்ளாமல், தான் நடித்த படத்திற்கு பல சிக்கல்களும், இடையூறுகளும் - தடைகளும் பல்வேறு திசைகளிலிருந்து வரும் போது, அதை வேடிக்கை மட்டும் பார்க்காமல் தன்னை நம்பியவர்களுக்காக ஆளும் வர்க்கத்திடமும் இறங்கி போய் பேசுறதுக்கு கூட, நல்லெண்ணமும் மனசும் வேணும். இந்த விசயத்தில் விஜய், தளபதி அல்ல; தலைவன்!





விமர்சனம்:

இல்லுமினாட்டி என்ற சொல் சிலருக்கு நகைப்புக்குரியதாக மாறிவிட்டது. இந்த இல்லுமினாட்டி என்பவர்கள் வேற்று கிரக வாசிகள் அல்ல; நம்மோடு கலந்துவிட்ட பின்னாலும், நம்முளிலிருந்து விலகி நிற்கும் உலகையாளும் அந்த கூட்டத்திற்கு ஏதாவதொரு பெயர் இருந்துவிட்டு போகட்டும். என்னளவில், எம்.என்.சி.களே நவீனகால உலகை ஆளும் வர்க்கத்தினர்; அவர்களை பற்றி கத்தியில் தோலுறித்திருக்கிறார். அந்த வகையில், இன்னொரு மிகப்பெரும் மர்மங்கள் நிறைந்த உலகெங்கும் கிளைகள் வைத்திருக்கும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துமனைகளின் மற்றுமொரு கோர முகத்தை மெர்சலில் கிழித்திருக்கிறார் தளபதி விஜய்.


ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் ஹிந்தியா, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு, சிசேரியன் பிரசவம், இறந்த தன்னுடைய மகளை தன் தோளில் சுமந்து சென்ற தந்தை, மிக்சர் அரசியல்வாதிகள் என யாரும் சொல்ல தயங்குகிற பல விசயங்களை பற்றி எதிர்வினையாற்றி இருக்கிறார். இலவச மிக்சர் - டிவி - கிரையண்டர்களை தரும் அரசு, ஏன் இலவச மருத்துவம் தரவில்லையென்ற கேள்வியும், பெண்களின் தாலியறுக்கும் சாரயத்திற்கு ஏன் ஜி.எஸ்.டி. வரி இல்லையென்ற கேள்வியும் புரட்சியின் அடையாளம். இது தவிர, தமிழ் சார்ந்த பாரம்பரியத்தையும், (கருப்பு உள்ளிட்ட) குலதெய்வம் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் காட்சி படுத்திருக்கும் விதம் உள்ளிட்ட பல விசயங்களில் கலக்கிருக்கிறார் அட்லி.

என்னை கவர்ந்த காட்சிகளில் சில... தொடக்க காட்சியிலும் - இறுதி காட்சியிலும் சைகை மூலமும் விஜய் காட்டிருக்கும் கருட முத்திரையும், இதை தவிர முக்கியமான பல இடங்களில் காட்டப்பட்டிருக்கும் கருடன் குறியீடும் தான்!

மெர்சல் உண்மையாவே மிரட்டல். செந்தமிழன் சீமான் விதைத்த வினையெல்லாம் காட்சிகளாக அட்லியின் மூலம் பிரதிபலித்திருக்கிறது. ரசிகனாக மட்டுமில்லாமல் தமிழனாக எனக்கு மெர்சல் பிடித்திருக்கிறது.

#Mersal




தலைவா படத்தின் டைட்டிலில் வரும் "Time to Lead" இப்போதுதான் மெர்சலின் மூலம் தொடங்கிருக்கிறது. தளபதியாக இருக்கும் ஒருவரை, தமிழனாக தலைமையேற்க ஆரியர்கள் ஆசைப்படுகிறார்கள் போல. மதவெறியை சாமானியர்களிடம் திணிப்பதற்காக ஜோசப் விஜய் என்றோ, யூசுப் விஜய் என்றோ எப்படி வேண்டுமானாலும் ஷர்மாக்கள் மெர்சலின் மூலம் மிரண்டு போய் உளறினாலும், விஜயை தமிழனாக ஆதரிக்க ஆன்ட்டி ஹிந்தியன்கள் பலரும் இங்கிருக்கின்றனர்.

மதவெறியர்கள், அட்லியின் சாதி மதம் வரைக்கும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர். அட்லி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஹிந்து - அகமுடையார். அது மட்டுமில்லாமல் ஜோசப் என திசைதிருப்பப்படும் விஜயின் அம்மா ஷோபாவும் ஹிந்து - அகமுடையார் தான். திலிப்குமாராக பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பாவான சேகரும் ஹிந்து - அகமுடையாரே. இம்மூவரின் தாய்மார்களும் பிறப்பால் ஹிந்துதான் என்பதை பாரத மாதவை வணங்கும் ஹிந்துத்துவ வெறியர்கள் உணர வேண்டும்.

#Mersal


எந்த கடவுளை வணங்க வேண்டும்? எந்த மார்க்கத்தை பின்பற்ற வேண்டும்? என்பதெல்லாம் தனிநபர் உரிமை. அதை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் இவர்களால் எப்படி அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும்? ஒரே பெயரில் இருக்கிற கூட்டாட்சி நாட்டையே துண்டு துண்டாக துண்டிக்கத்தானே இவர்கள் துடிக்கின்றனர். ஜோசப் மட்டுமல்ல; யூசுப்பும், இமலாதித்தனும் சேர்ந்து வாழ்ந்திருப்பது தானே மக்களாட்சி நாடு. ஹிந்துக்களை தவிர மற்ற அனைவரையும் நாடு கடத்த விரும்புகிறார்களா இவர்கள்? கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு; விமர்சனம் சொல்பவரையெல்லாம் தனிநபர் தாக்குதல் நடத்தி, அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஜோசப் விஜயை, ஹிந்துவான நான் ஆதரிக்கிறேன். என்னைப்போல் இன்னும் எத்தனையோ சோ கால்டு ஹிந்துக்களும் ஜோசப் விஜயை ஆதரித்து கொண்டுதான் இருக்கின்றனர்; இருப்பார்கள்.


#Mersal




தளபதியாக இருந்தவரை அனைத்து வடக்கத்திய செய்தி ஊடகங்கள் மூலமாக சூப்பர் ஸ்டார் ஆக்கிய அனைவருக்கும் நன்றி!

#Mersal #SuperStarVijay






இந்த ஆட்சியின் குளறுபடிகளை பற்றி பாஜகவை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதில் இருக்கா? என்பதை பற்றியும், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுடைய நிறுவனத்தின் சொத்தானது ரூ 50,000லிருந்து ஒருசில வருடங்களிலேயே பல்லாயிரம் கோடிகளை தொட்டது எப்படி என்பதை பற்றியும் அண்ணன் சீமான் கேட்க வேண்டும்.

#Seeman #NTK #Mesal


மெர்சலில் வரும் ஒரு காட்சிக்காக மதவெறியோடு திசை திருப்பி பொங்குவது ஏன்? மெர்சலில் சொல்லப்படும் சங்கிலி கருப்பனுக்கு கோவில் கட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பது குலதெய்வ (நாட்டார்) வழிபாட்டை செய்யும் வழக்கமுள்ள தமிழர்களின் பிரச்சனை. சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டியதாகவா மெர்சலில் அட்லி சொல்லிருக்கிறார்? பெரும்பாலான குலசாமி கோவில்கள் இன்றைக்கும் வெட்டவெளியின் ரகசியத்தை வெளிக்காட்டுவது போலவே, கோபுரமெல்லாம் இல்லாமல் தானே இருக்கிறது; கோபுரம் எழுப்பிய குலசாமி கோவில்கள் கூட, பெருங்கோவிலின் பாதிப்பால் ஏற்பட்ட சமீபத்திய மாற்றம் தானே? கல்லையும், வேலையும், சூலத்தையும், மரத்தையும் வணங்கியது தானே தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டின் அடிப்படை. இயற்கையோடு இயைந்த வழிபாடாக கோவில் சுவரே இல்லாத எங்களுக்கு, கோவிலும் கோபுரமும் ஒரு விசயமே இல்லை. ஷர்மாக்கள் போன்ற ஆரிய பிராமணர்கள் மட்டுமே பெருங்கோவில் கருவறைக்குள் சென்று பூசை செய்யலாமென இத்தனை வருடங்கள் நாட்டாமை செய்தவர்களுக்கு கேரள அரசாங்கம் தந்த பேரடி போதாதா? தென்னகத்தில் மகான் வைகுண்டரால் 'அய்யா வழி' என்ற மார்க்கம் ஏன் உருவானது என்பதை பற்றி கொஞ்சம் யோசித்தாலே இதன் பின்னாலுள்ள உண்மை புரியும்.




#Mersal




கேஷ்லெஸ் எக்கானமிக்காக டிஜிட்டல் ஹிந்தியாவாக வளர்ச்சியடைந்த காலகட்டமான 2017லேயே கோவில்களை விட கழிவறை தான் முக்கியமெனில், மெர்சல் படத்தில் 70களில் வருகின்ற அப்பா விஜய் கேரக்டர் பார்வையில் கோவிலை விட மருத்துவமனை தானே முக்கியமாக தெரிந்திருக்கும்?

#Mersal






மிக அதிகளவிலான வாக்குகளை தமிழ்நாடு சாரணர் தலைவர் தேர்தலில் பெற்றவரும், பல ஆன்ட்டி ஹிந்தியன்களை உருவாக்கியருமான மரியாதைக்குரிய ஹெச்.ராஜா சர்மா அவர்கள், மெர்சல் படத்தை நெட்டில் (தமிழ்ராக்கர்ஸ்) பார்த்ததாக 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் 'அக்னி பரீட்சை' விவாதத்தில் சொல்லிருக்கிறார். இதைப்பற்றி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அன்பிற்குரிய இணையப்போராளி 'புரட்சி தளபதி' விஷால் ரெட்டி அவர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்?

#Mersal




மெர்சலுக்காக #MersalVsModi என்றிருந்த ட்விட்டர் ட்ரெண்ட் தற்போது, #TamiliansVsModi ஆகி விட்டது. அஜித்-விஜய்-சூர்யா என்ற ரசிக வேறுபாட்டை கடந்து தமிழராக ஒன்றிணைந்திருக்கிறார்கள்; மிகச்சிறப்பு. இதே ஹாஷ்டேக்கில் ஹிந்திக்காரனுங்களும் ஏதேதோ ஹிந்தியிலேயே கதறிகிட்டு இருக்கானுங்க. என்னதான் கூட்டாட்சியாக இருந்தாலும், தமிழ்நாடு எப்போதுமே தனிநாடு தான்.

தமிழன்டா எந்நாளும்; சொன்னாலே திமிறேரும்! காற்றோடு கலந்தாலும், அதுதான் நம் அடையாளம்!

#Mersal






மெர்சலுக்காக ராகுல்காந்தியையும் தமிழில் ட்விட் செய்ய வைத்த சார்ந்தோர் அனைவருக்கும் நன்றி!

#Mersal






குறியீடுகளை வார்த்தையில் வைத்த 'அருமைபிரகாசம்' கருணாகரனின் ட்வீட்டும் அருமை!

#Mersal






நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரிய உனை கேட்கும்!

#Mersal





சிபிஐ, இன்கம்டாக்ஸ், ரிபப்ளிக் டிவி, வரிசையில் போட்டோஷாப் அப்ளிகேசனும்...

#Mersal






வேறுவழியே இல்லாமல், 'காலா'வதியான சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்திருப்பவரும் மெர்சலுக்கு வாயை திறந்திருக்கிறார்.

சிறப்பு.

#Mersal





சூப்பர் ஸ்டார் விஜயின் #Thalapathy62 படத்திற்கான டைட்டிலாக "ஜோசப் விஜய் எனும் நான்" என்று கூட ஏ.ஆர்.முருகதாஸ் வைக்கலாம்.

#MyOpinion

- இரா.ச. இமலாதித்தன்

07 ஏப்ரல் 2017

கருப்பு இம்மண்ணின் பெருமைமிகு அடையாளம்!



நிறத்தால் கருப்பானவன் என்பதில் எனக்கு பெருமையே. இம்மண்ணின் பூர்வகுடிகளின் இயல்பான நிறமே கருப்பு தான். அதனால் பிறப்பால் இம்மண்ணின் மைந்தனென அடையாளப்படுவதும் கூட இந்த கருப்பு தான். ஆரியர்கள் போன்ற அந்நியர்கள் தான் கருப்பில்லாத நிறத்தில் மனம் முழுக்க கருத்த எண்ணங்களோடு எம்மண்ணை சூழ்ச்சியால் ஆக்கிரமித்தனர். அரப்பா நாகரீகத்தை அழித்தொழித்த வரலாற்று பெருமையை தன்னகத்தே கொண்டவர்களின் வழிவந்த தருண்விஜய் போன்றோர்கள், எம்மைப்போன்ற கருப்பர்களோடு சகித்துக்கொண்டு எம் மண்ணில் ஏன் வாழ/ஆள வேண்டும்? கைபர் போலான் கணவாய் வழியே கால்நடையாக நாடோடியாய் கடந்து வந்தது போலவே, இப்போதும் மீண்டும் தங்களது சொந்த பகுதிக்கே கிளம்பிச்செல்லலாமே?

ராமனும், கண்ணனும் என்ன நிறமென்பதை சகிப்புத்தன்மையுடைய வந்தேறிகள் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். கலப்பில்லாத நிறம் கருப்பு என்பதையும் இனிமேலாவது அந்த அந்நியர்கள் உணர வேண்டும். "இன்றைய ஹிந்தியா முழுமைக்குமுள்ள நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இம்மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி தமிழர்கள் தான்!" என்பதை 'வந்தேறி' பற்றிய கேள்விக்கு, நிறத்தால் சிவப்பாய் இருந்த பீமராவ் அம்பேத்கர் அன்றைக்கே இவ்வுண்மையை ஊரறிய சொல்லிருப்பதே தமிழர்களின் பாரம்பரியத்திற்கான சாட்சி. வந்தேறிகளே எங்களையும், எம் மண்ணையும், எம் பண்பாட்டையும், எம் ஆன்மீகத்தையும், சுரண்டியது போதும்; எங்களைப்போன்ற கருப்பர்களை விட்டு வெளியே கிளம்புங்கள்!

சிவப்பாய் இருக்கும் இவர்கள் செய்யும் கூத்துகளுக்கெல்லாம் முட்டுக்கொடுக்கின்ற தமிழக பாஜக தலைமையாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், தற்பொழுது தலைமையாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இல்லாத சகிப்புத்தன்மையா தருண் விஜய்க்கு இருக்கிறது? வேண்டுமென்றால், சிவப்பாய் இருக்கின்ற சு.சுவாமியையோ, ஹெச்.ராஜாவையோ இங்கே தலைமையாக்குங்கள் பார்ப்போம். 'கருப்பு' தான் இம்மண்ணின் அடையாளம். அதை நாளைவொருநாள் தமிழக தலைமை பதவிக்கான சரியான தலைவராக (ஒருவர்) வரும்போது 'கருப்பை' பற்றி தருண் விஜய் புரிந்து கொள்வார்.

12 மார்ச் 2017

அரசியல் கூத்து!




போராளிகளுக்கான அரசியல் எது?


மணிப்பூரிலுள்ள தோபால் தொகுதியில் மொத்தமாக பதிவான 27271 வாக்குகளில், நோட்டாவிற்கு கூட 143 வாக்குகள் பதிவாகிருக்கிறது. ஆனால் இரோம் ஷர்மிளா என்ற பெண் போராளிக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில், போராளிகளுக்கு மக்களாட்சியும் கை கொடுப்பதில்லை; அம்மண் சார்ந்த மக்களும் தோள் கொடுப்பதில்லை. ஹிந்தியாவில் அரசியல் செய்து வெற்றிப்பெற வேண்டுமென்றால், ஐஸ்வர்யா தனுஷ் போன்ற சிறுபான்மையினரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளுக்கான வாய்ப்பு:

ஜெயலலிதாவின் மரணத்தால், கருணாநிதியின் உடல்நலக்குறைவால், வைகோ உள்ளிட்ட மநகூவினர் போன்றவர்களின் செயல்பாட்டால், தமிழ்நாட்டு அரசியலும் உத்திரப்பிரதேச அரசியல் போல குழம்பிய குட்டையாக மாறி இருக்கலாம். ஆனால், அந்த குட்டையில் ஹிந்திய மீனவன் என அடையாளப்படும் யாரும் மீன் பிடிக்க முடியாது. ஏனெனில், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலுமே தமிழ்நாடு, தனி நாடு தான்! இத்தனை வருட திராவிட அரசியல் தோற்கும் நேரம், அந்த இடத்தை நிரப்ப தமிழ் தேசிய அரசியலே தன்னெழுச்சியாக மேலெழும். இத்தனை ஆண்டுகால ஹிந்தியத்தின் புறக்கணிப்புகளுக்கு ஆளான இம்மண்ணில், வேறெந்த ஹிந்திய தேசியமும் அவ்வளவு எளிதாக தலையெடுக்க முடியாது.

ஆர்.கே.நகர் அரசியல்:

லெட்டர் பேடு சாதி சங்கங்களெல்லாம் இன்னும் ஓரிரு மாதத்திற்கு செழிப்பாகத்தான் இருப்பார்கள். போஸ்டர், பேட்டி, அறிக்கையென பணத்தை வாங்கிக்கொண்டு கண்ட இடங்களில்லாம் பல்லிளிப்பார்கள். அநேகமாக, அதிமுகவிலுள்ள சசி அணியின் வேட்பாளரான தினகரனுக்கு தான், பல லெட்டர் பேடு அமைப்புகள் ஆதரவு கொடுக்க கூடும். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு, ஆர்.கே.நகர் தொகுதியில் தான், புதிய ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும்.