கருப்பு முருகானந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்பு முருகானந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஆகஸ்ட் 2017

அரசியல் ஆளுமைகளை அகமுடையார் என்பதால் ஏற்கிறோமா?- sarahah



ஐயா தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ஆகட்டும், அண்ணன் ஜாம்பவனோடை கருப்பு முருகானந்தம் ஆகட்டும் டெல்டாவிலிருந்து அரசியல் களம் கண்டு, மிகப்பெரும் பதவிகளையும் பொறுப்புகளையும் அவர்களது கட்சியில் பெற்றிருக்கின்றனர். டெல்டாவின் அரசியல் என்பதே கள்ளரான சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்த போது, அங்கிருந்து மற்ற சாதியை சேர்ந்தோர் மேலெழுவது அவ்வளவு எளிதான விசயமில்லை. அதிலும் டெல்டாவை பொறுத்தவரை தேவர் என அறியப்படும் அகமுடையார்களுக்கும் - கள்ளர்களுக்கும் எல்லா விசயங்களும் எதிரெதிர் துருவங்களில் தான் இருக்கின்றன; அதில் அரசியல் முதன்மையானது. குறிப்பாக சசிகலாவின் குடும்பத்தை பொறுத்தவரை அகமுடையார்கள் அரசியலில் மேலெழுவதை தடுப்பதற்காகவே தனித்த எச்சரிக்கையோடு காய் நகர்த்தி கொண்டிருக்கும் வேளையில், சுயம்பாக எழுந்து தாக்குபிடித்து தேசிய கட்சியின் மாநில பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த ஆளுமையை கொண்டாடமல் இருக்க முடியவில்லை. கடந்த சட்டமன்ற/ நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் கருப்பும், ஐயா டீ.ஆர்.பி.யும் எதிரெதிர் அணிகளாக தான் களம் கண்டார்கள் என்பது தனிக்கதை.

டெல்டாவிலுள்ள அகமுடையார் அனைவருமே ஏதோவொரு வகையில் தூரத்து உறவினராகவே இருப்பார்கள் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். டெல்டாவில் அகமுடையாரில் கோட்டைப்பற்று உட்பிரிவை சேர்ந்தவர்களே பெரும்பான்மை என்பதாலும், தளிக்கோட்டையை சுற்றியும், ஜாம்பனோடையை சுற்றியும் எனக்கு உறவினர்கள் இருப்பதாலும், அவர்களுக்கு இந்த இருபெரும் தலைவர்களும் உறவினர்கள் என்பதாலும், உறவு அடிப்படையில் பொது விசயங்களில் ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அரசியலை ஏற்பது என்பது வேறு; அவர்களது ஆளுமையை போற்றுவது என்பது வேறு. தமிழ் தேசிய ஆதரவாளனான எனக்கு, மு.கருணாநிதியின் தளபதியென அறியப்படும் டீ.ஆர்.பாலு ஐயாவும், தமிழகத்தின் மோடியென அடையாளப்படும் கருப்பு முருகானந்தம் அண்ணனும் உறவினர்களாக தெரிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

18 நவம்பர் 2015

தமிழக வெள்ள நிவாரணமாக பா.ஜ.க. ஒரு கோடி!



தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்காக, நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாயை பா.ஜ.க.தலைமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்புலமாக இருந்த, தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதும் நம் கடமையாகிறது.

28 நவம்பர் 2014

வாசனுக்கு வாழ்த்துகள்!

ஏற்கனவே உள்ள பழைய பெயரை கட்சிக்கு வைத்தாலும் கூட சோழ நாட்டிலிருந்து ஒருவர், மாநில கட்சிக்கு தலைமை வகிப்பது சோழநாட்டானாக எனக்கு பெருமையே. மாநில கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவராக பொறுப்பேற்கும் திரு. ஜி.கே.வாசனுக்கும், மேலும் சோழ நாட்டிலிருந்து தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு மாநிலத்துணை தலைவராக பதவி வகிக்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கும் தமிழக வாக்களனாக என் வாழ்த்துகள்!

ஃபேஸ்புக் போன்ற சமூக இணைய பக்கங்களில் பின்னி பெடலெடுக்க பதினோறு பேர் கொண்ட ஒரு குழுவை ஜி.கே.வாசன் ஏற்கனவே நியமிச்சிட்டாருன்னு நினைக்கிறேன். முகநூல் உள்ளிட்ட இணையபக்க நண்பர்களுக்கும் நன்றின்னு மாநாட்டு மேடையிலேயே சொல்கிறார். டெல்டா காரய்ங்களான்னா வெவரம் தான்!

G.K.Vasan GK Vasan Tamil Maanila Congress

தி.மு.க. தலைவரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையின் திரு மு.கருணாநிதி, த.மா.க. முன்னாள் தலைவரான தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தின் திரு ஜி.கே.மூப்பனார், பா.ஜ.க. மாநில துணைத்தலைவரான திருவாரூர் மாவட்டம் ஜாம்பனோடையின் திரு கருப்பு மு.முருகானந்தம் உள்ளிட்ட இம்மூன்று தலைவர்களுக்கு பிறகு டெல்டாவிலிருந்து உருவெடுத்திருக்கும் அடுத்த மாநில தலைவரான திரு ஜி.கே.வாசனுக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

14 நவம்பர் 2014

பதவியேற்பு வாழ்த்துகள்!

தமிழக பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் பணி சிறக்க எம்பெருமான் திருமுருகன் அருள் புரியட்டும்! டெல்டாவிலிருந்து தேசியக்கட்சியின் மாநிலத்துணை தலைவரென்ற பெரிய பதவியை அலங்கரிக்கும் உங்களுக்கு உறவுக்காரனாக என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

15 ஏப்ரல் 2014

மதவெறி தீவிரவாதம்!

இசுலாமியர்கள் பெரும்பான்மையாகை இருக்கும் ஊருக்குள் வாக்கு சேகரிக்க போனாலே தீவிரவாதிகள் போல கொலைவெறி தாக்குதல் நடத்தும் இசுலாமிய அமைப்புகள், மதவெறி பற்றி பேச அருகதையே இல்லாதவர்கள். நேற்று மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் திரு கருப்பு முருகானந்தம் அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்திய இசுலாமிய அமைப்புகள் மீது வழக்கு பதியவே தமிழ்நாடு காவல்துறை மறுக்கின்றது; நேற்று முன்தினம்தான் செல்வி ஜெயலலிதா பாஜகவை விமர்சித்து மேடையில் பேசினார். அதனை தொடர்ந்துதான் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது. அப்படியானால் இந்த தாக்குதலுக்கு ஆளுங்கட்சியின் தலையீடும் இருக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



ஏற்கனவே திரு கருணாநிதி தனது மேடை பேச்சுகளில் இசுலாமிய வாக்குகளை குறிவைத்தே பேசி வருகிறார் என்பது நாடறிந்த விசயம். இப்போது செல்வி ஜெயலலிதாவும் தமிழ்நாடு ஜவ்ஹீத் அமைப்பின் வெளியேற்றத்தால் பாஜகவை விமர்சிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றார். இதை தெளிவாக அறிந்துள்ள இசுலாமிய அமைப்புகள் திரு கருப்பு முருகானந்தம் மீது நடத்தப்பட்ட இம்மாதிரியான கொலைவெறி தாக்குதல்களை அச்சமின்றி தொடர்வாகளென தோன்றுகிறது. சிறுபான்மையினர் என்ற ஒற்றை சொல்லை வைத்தே கேவலமானதொரு அரசியலை நிகழ்த்திவரும் கேடுக்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கும் இதுபோன்ற சம்பவங்களால் வெளிப்படையாகவே தெரிகின்றது.

தேசிய கட்சியின் வேட்பாளரையே மதவெறியால் தீவிரவாத தாக்குதலை நடத்தும் இசுலாமிய அமைப்புகள் இன்றைக்கும் சிறுபான்மையினர் தான் என்பதனை மனதில் கொண்டால் நலம். இப்படிப்பட்ட தாக்குதலை சக குடிமகனாக வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒருவேளை இதே பாணியில் பெரும்பான்மை சமூகத்தினர் களமிறங்கினால், சொந்த நாட்டிற்குள்ளாகவே இசுலாமிய மத வெறியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என புறக்கணிக்கப்படுவார்கள் என்பதுதான் எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்.

08 ஏப்ரல் 2014

தஞ்சை நாடாளுமன்ற நாயகர்கள்!

திமுக - திரு. டி.ஆர்.பாலு

இவரை இந்திய முழுமைக்குமே தெரியும். ஏனெனில் மத்திய கேபினட் அமைச்சராக பணியாற்றியவர். திமுகவின் முக்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.

காங்கிரஸ் - திரு. டி.கே.வி

இவரையும் தஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் தஞ்சையில் முதன் முதலாக கிராமத்து மாணவர்களின் கல்விக்காக அடித்தளமிட்ட பூண்டி பெரியவரின் புதல்வன் இவர்.

பிஜேபி - திரு கருப்பு முருகானந்தம்

இவரை இங்குள்ள பகுதிகளில் கருப்பு என்ற அடைமொழியோடு தெரியாவதவர்களே இல்லை எனலாம். மேலும் ஒட்டுமொத்த டெல்டா பகுதியில் மாநில பொது செயலாளர் என்ற மிகப்பெரிய பதவியை வகிக்கும் ஒரே அரசியல் தலைவர் இவர் மட்டுமே என்ற பெருமைக்கு உரித்தானவர்.

அதிமுக - திரு. கே.பரசுராமன்

ஆம் ஆத்மி - திரு எஸ். பழனிராஜன்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் - எஸ். தமிழ்செல்வி


இந்த மூன்று பேரையும் தஞ்சை தொகுதியின் பெரும்பாலான வாக்களர்களுக்கு யாருன்னே தெரியல... இதுதான் எதார்த்தம். கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகளை விட, மாநிலத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவின் சார்பாக வேட்பாளரை நிறுத்தி, மத்திய சர்க்காருக்கான பிரதமர் ஆவதாக கனவு கண்டு கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவின் வேட்பாளருக்கே இந்த நிலைமை என்ற போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஒருவேளை நம்மளோட காலில் தானே விழுந்து கிடக்க போகிறார்கள், அவர்களை மக்களுக்கு தெரிந்தால் என்ன? தெரியாவிட்டால் என்ன? யென்று கூட செல்வி ஜெயலலிதா நினைத்திருக்கலாம். அதுவும் உண்மைதானே? கூன்பாண்டிகளின் வரிசையில் இன்னொரு அடிமை அதிமுகவிற்கு சிக்கியாகிவிட்டது. ஆனால், ஜெயிக்கணுமே... எது எப்படியோ ஆழ்ந்த அனுதாபங்கள்!

-இரா.ச.இமலாதித்தன்