கொம்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொம்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஏப்ரல் 2015

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?



தேவேந்திர குல வேளாளர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பள்ளர்கள், தங்களது அரசியலுக்காக ஒருபுறம் மன்னர் பரம்பரை என்று சொல்வதும், மறுபுறம் அரசியல் சமூக எதிரிகளை எதிர்க்க திராணியில்லாமல் PCR வழக்குகள் மூலம் தங்களை தலித் -தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதும் கடந்த சில வருடங்களாக அதிகமாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, பறையர்களை எங்களோடு ஒப்பீடு செய்யாதீர்கள் என்றும், எங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும், நாங்கள் மன்னர் பரம்பரை என்றும் சொல்லிக்கொண்டு, செந்தில் மள்ளர் எழுதிய பள்ளர் வரலாற்று(?) நூலான மீண்டெழும் பாண்டியர் வரலாறில், பறையர் இன மக்களை மிகவும் கீழ்த்தரமாக பாலியல் தொழில் சார்ந்து விமர்சனம் வைத்து தங்களது கோர முகத்தை வெளியுலகுக்கு காட்டினர். இதுபோன்ற அவதூறுகளை உள்ளடக்கிய அந்த நூல், பல தரபட்ட மக்களின் எதிர்ப்பால் நீதிமன்றத்தின் வாயிலாகவே தடை செய்யப்பட்டது என்பது வேறொரு கதை. இங்கே சாதியை வைத்து இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல் செய்யும் கிருஷ்ணசாமி போன்றவர்கள், தமிழ்சாதிகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பல சதி வேலைகளில் இறங்கி கொண்டே இருக்கின்றனர் என்பதையும் நடுநிலையாளர்கள் தொடர்ச்சியாக கவனித்து கொண்டே வருகின்றனர்.

”கொம்பன்” என்ற பெயருக்கு தேவர் என்று பெயர் என்பது போலவும், கொம்பன் வெளிவந்தால் தென் தமிழகத்தில் சாதி கலவரம் ஏற்படும் என்பது போலவும் அறிக்கை விட்டு இழிவானதொரு அரசியல் செய்யும் கிருஷ்ணசாமி, தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான மீத்தேன், நியூட்ரினோ, கெயில், மேகதாது அணை போன்ற பலவித பிரச்சனைக்கெல்லாம் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர வக்கில்லாமல், சினிமாவுக்காக சட்டமன்றத்தில் ரகளை செய்ததை நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது. பதினோறு வருடங்களுக்கு முன்பாக ஏற்கனவே கமலின் ’சண்டியர்’ படத்தின் போது, சண்டியர் என்பது தேவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது என்றும் போராட்டம் செய்ததால், சினிமா தொழிலில் முதலீடு செய்தவர்களையும், அந்த தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் மனதிற்கொண்டு, கமல் அந்த படத்தின் டைட்டிலை 'விருமாண்டி'யாக மாற்றி வெளியிட்டார். மீண்டும் அதே பெயரில் 'சண்டியர்' என்ற படம் சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அதுவும் தேவர் சாதி மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் படமாகவே உருவாகியிருந்தது. ஆனால், அதை எதிர்க்க இந்த சினிமா போராளி கிருஷ்ணசாமி வரவில்லை. ஏனென்றால், படத்தில் பணியாற்றிய அனைவரும் புதுமுகம். அதனால், அந்த படத்தை எதிர்த்து எந்தவித லாபமும் கிருஷ்ணசாமிக்கு வரபோவதில்லை. அதனால் அந்த 'சண்டியர்' திரைப்படமானது எவ்வித எதிர்ப்புமின்றி வந்தது. கடந்த வருடங்களில் குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், சண்டியர், மதயானை கூட்டம் என தொடர்ச்சியாக முக்குலத்து மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் வெளிவந்தன. அப்போது கிருஷ்ணசாமி போன்றோர்களிடமிருந்து எந்தவித எதிர்ப்புமில்லை. ஏனெனில் அப்போது சட்டமன்ற தேர்தலும் நெருங்கவில்லை. ஆனால், இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போது மக்கள் பிரச்சனைகளை இளைஞர்களே கையில் எடுத்து போராடி வருவதால், போரட்ட கவனமெல்லாம் அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கின்றது. அதனால் மீண்டும், ஒரு பிரபல ஹீரோவின் படத்தை எதிர்த்தால் தான் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் கூட்டணி பேரத்தில் ஓரிரு சீட்டுகள் கூடுதலாக வாங்க முடியும் என்பதால், கொம்பனை எதிர்க்கிறார் இந்த கிருஷ்ணசாமி.

இங்கே குழப்பம் என்னவென்றால், தலித் சாதிக்கட்சி தலைவரான கிருஷ்ணசாமியால் இன்றைக்கு கடுமையாக எதிர்க்கப்படும் ’”கொம்பன்” திரைப்படத்தில் நடித்திருக்கும் கதைநாயகனான கார்த்தியின் நடிப்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியான ”மெட்ராஸ்” திரைப்படத்தை ஏன் எதிர்க்கவில்லை? இந்த கொம்பன், சண்டியர் என்ற பெயரெல்லாம் படத்திற்கு தலைப்பாக வைக்க கூடாது. அது தேவர் சாதியின் குறியீடுயென்று முறையிடுவது ஏனென்று தான் இன்னமும் புரியவில்லை. ஒரு பக்கம் மன்னர் பரம்பரைன்னு சொல்லிக்கொண்டே, மறுபக்கம் சாதி பெயரை சொல்லி திட்டிவிட்டதாக பிசிஆர் கேஸ்ல தலித்திய தாழ்த்தப்பட்டவர்களாக மாறிவிடுவது தான் ஆண்டபரம்பரைக்கான அடையாளங்களா? மாற்றம் என்பது மாறுதலுக்குரியது தான். முக்குலத்தோரும் மாற்றமடைந்து வருகிறார்கள். அவர்களிடம் மீண்டுமொரு முதுகளத்தூர் கலவரத்தை எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் இப்போது காமராஜரும் இல்லை; அவரின் காங்கிரஸ் ஆட்சி இங்கில்லை.

சென்ற வாரம் நியூஸ் 7 தமிழ் சேனலுக்கு நேயர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்த திருமாவளவன், நிகழ்ச்சியின் இறுதியில் என்னுடைய கேள்வியொன்றுக்கும் இப்படித்தான் பதிலளித்தார். அந்த கேள்வி என்னவென்றால், ”தென் தமிழகத்தில் பள்ளர் சாதியினர் தங்களை தேவேந்திர குலம் என சொல்லி கொள்வதையும், அவர்கள் தங்களை தலித் இல்லையென்று சொல்லிக்கொள்வதையும் எப்படி பார்க்கின்றீர்கள்?” என்பது தான். அந்த கேள்விக்கு, ”விளிம்பு நிலை சமூகம், மேலே வருவதற்காக எந்த மாதிரியான சொல்லாடல் பயன்படுத்தினாலும் அது தவறில்லை” என்று திருமாவளவன் பதிலளித்திருந்தார். இந்த நேர்மையை பாராட்டும் வேளையில் தான், ஒரு சந்தேகமும் எழுகிறது. விளிம்புநிலை சமூகம் என்பதாக பள்ளர்களை, பறையர்களோடு திருமாவளவன் ஒப்பிட்டு சொல்வதாக எடுத்துக்கொண்டால், பள்ளர்களோ நாங்கள் வேறு; பறையர் வேறு. நாங்கள் ஆண்டபரம்பரை, அவர்கள் அடிமை. என்று வெளிப்படையாக பல ஊர்களில் மேடை போட்டு பேசி வருகிறார்களே. அதையெல்லாம் இனியாவது புரிந்து கொண்டு இந்த தலித் நாடகங்களை நிறுத்திவிட்டு, தமிழ் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.

அது போக, பறையர் சாதி அரசியலுக்குள் நடக்கும் உண்மை நிலையை மெட்ராஸ் படத்தின் மூலமாக திரைக்குள் கொண்டு வந்த இயக்குனர் ரஞ்சித்தை விடவா, கொம்பன் இட இயக்குனரான முத்தையா தவறுதலாக சொல்லிவிட போகிறார்? மெட்ராஸ் படத்தில் வன்னியர்களை கொடியின் நிறத்தின் மூலமாக எத்தனை இடங்களில் மறைமுகமாக தாக்கியுள்ளனர் என்பது திருமாவளவனுக்கு தெரியாதா என்ன? நீல நிறத்தை மட்டுமே உயர்வாக தூக்கிபிடித்த மெட்ராஸ் கார்த்தி, இந்த படத்தில் கொம்பன் கார்த்தியாக மஞ்சள் பச்சையை தூக்கி பிடித்திருந்தாலும் அது தப்பில்லை என்பதும் இந்த திருமாவளவனுக்கு புரியாதா என்ன? முதலில் பள்ளர்கள் உங்கள் மீது அவதூறை பரப்பி வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்ய முயலுங்கள். அதை விட்டுவிட்டு சினிமாவில் கிருஷ்ணசாமியோடு தலித் கூட்டணியை உருவாக்க முயன்றால், அதை தங்களுக்கு சாதகமாக்கிவிட நினைக்க, முக்குலத்து சினிமா கலைஞர்கள் யாரும் கலைஞர் கருணாநிதி இல்லை என்பதையும் சினிமா போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும். திராணியிருந்தால், உங்கள் வாழ்வியலை பெருமையாக சொல்லி படமாக்குங்கள். அதை விட்டுவிட்டு இப்படி தரக்குறைவான அரசியலை சினிமாவுக்குள் திணிக்காதீர்கள். ஏனெனில் பல சாதி தொழிலாளர்கள் சினிமாவை நம்பி வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.

ஆப்பநாடு அரசநாடாகி போனாலும் 'கொம்பன்' மாபெரும் வெற்றியடைய போவது உறுதி. இவ்வேளையில் கொம்பன் கதைக்களத்தை உருவாக்கிய மருது மைந்தன் இயக்குனர் முத்தையாவிற்கு எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

சாதியை தூக்கி பிடிக்க வேண்டுமா?

சாதியை தூக்கி பிடிக்காமல் தமிழ் தேசியத்தில் கலக்கலாமென்று நினைத்தாலும் கூட, கிருஷ்ணசாமி & கோ போன்றவர்களால் பொதுவெளியில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தேவர் சாதி மீதான வன்மங்களை கண்டு மனம் கொதித்து, தடம் மாறுகிறது என்பது தான் எதார்த்தம். பல சாதிகளுக்கு பரம எதிரிகளாக முக்குலத்தோரை நினைக்க வைக்கும் முயற்சியில் பல அமைப்புகள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றன என்பதையும் பல தரவுகள் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. சாமானியனான என்னாலேயே, ஒருவாரம் காலமாகியும் கொம்பனை விட்டு வெளிவர முடியவில்லை. கொம்பன் என்பது சினிமாவுக்கான அரசியலல்ல. தனக்கான இருப்பை வெளிக்காட்டிகொள்ளும் ஒரு பூனையின் சீற்றம். இதையெல்லாம் உணராத புலியோ, பல காலங்களாய் பதுங்கியே கிடக்கின்றது.

31 மார்ச் 2015

கொம்பனுக்கு பின்னாலுள்ள அரசியல்!



 -001-

கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்(?) உருவாகியுள்ள "நண்பேன்டா" திரைப்படம், ஏப்ரல் 2ம் தேதி வெளிவருகிறது. அதற்காக தமிழ்நாடெங்கும் கட்சி மாநாட்டு அழைப்பு போல சுவர் விளம்பரங்களெல்லாம் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் பார்த்திருக்க கூடும். அதே ஏப்ரல் 2ம் நாளில், கார்த்தி நடிப்பில் தெற்கத்தி மண் சார்ந்த கதைக்களத்தோடு ”கொம்பன்” திரைப்படமும் திரையரங்குகளுக்கு வருகிறது. தென்னாட்டு மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை பதிவு செய்த எந்த திரைப்படமும் இதுவரை மோசமாக தோல்வி அடைந்ததாக வரலாறில்லை. அந்த வகையில் நிச்சயம் கொம்பனும் ஹிட் தான். இவ்வேளையில், தலித் கோட்டா அடிப்படையில் திருமாவளவனுக்கு மாற்றாக, தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் கிருஷ்ணசாமியின் தொடர் முயற்சியால், கொம்பன் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிகள் ஏதுமின்றி, உன்னத கருத்துகளை உலகிற்கு சொல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள "நண்பேன்டா" திரைக்காவியம் வெற்றிப்பெற கிருஷ்ணசாமி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

-002-
ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவிருக்கும் நண்பேன்டா படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினின் அப்பாவும், திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக இருக்கும் எஸ்.வீ.சேகரும் நல்ல நண்பர்கள்ன்னு ஊருக்கே தெரியும். அதிமுகவுல இருக்கும் போதே, திமுகவை பாராட்டியவர். அடுத்து பிஜேபில் இணைந்த பிறகு, இம்முறை புதிய தலைமுறையின் விவாதத்தில் பிஜேபியில் இருந்து யாரும் கலந்து கொள்ள கூடாதுன்னு சொன்ன பிறகும் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக கலந்து கொண்ட அஞ்சா நெஞ்சனான எஸ்.வீ.சேகர், கொம்பன் படத்தை பற்றி ஊடகங்களுக்கு ஏன் பேட்டி கொடுக்கிறாருன்னு தான் புரிய மாட்டுது. எது எப்படியோ, நண்பேன்டா படம் மிகப்பெரிய வெற்றி பெற ஸ்டாலினின் நண்பனான எஸ்.வீ.சேகர் சார்பாக வாழ்த்துகள்!

-003-

பீட்டர் ரமேஷ்குமார்ன்னு ஒருத்தரு, தந்தி டிவியின் விவாதத்தில் கிருஷ்ணசாமியின் வழக்குரைஞராக கலந்து கொண்டு கொம்பன் படவிவகாரம் தொடர்பாக ஒன்றரை மணி நேரம் விவாதத்தில் பேசினார். பேச்சு முழுக்க முக்குலத்தோர், கவுண்டர் மீதான வக்கிரமும், காழ்ப்புணர்ச்ச்சியும் தான் தெள்ளத்தெள்வாக தெரிந்தது. நீதிபதியையே சந்தேகிக்கும் இவரை போன்ற வழக்குரைஞரை தான் முதலில் தடை செய்ய வேண்டும். கொம்பன் பட பாடலின் வரியையெல்லாம் படிச்சு காட்டினாரு. அதுலயும் அவ்வளவு சாதிவெறி தெரிந்தது. பாலுத்தேவர் கதாப்பாத்திரம், தெய்வத்திருமகன் படத்தின் பெயரை தெய்வமகள் என பெயர் மாற்றம் செய்தது, மருதநாயகம் வெளிவராமல் இருப்பதற்கு பூலித்தேவரின் வீழ்ச்சியை சொல்லிவிடும் என்பதால் தான் என்ற பிதற்றல், என அவர் சொன்ன எல்லாமும் தேவர் சாதிக்கு எதிராகவே முழுக்க முழுக்க இருந்தது. ஒரு சாதி மக்கள் மீது இவ்வளவு வன்மத்தை கக்கும் இது போன்ற நபர்களின் பேச்சை, அந்த வன்மத்திற்கு உள்ளாகும் சாதியை சார்ந்த ஒருவன் கேட்பதும் ஒருவகையில் நல்லது தான்ன்னு நினைக்கிறேன். இதுனால இன்னைக்கு ஒரு கூடுதல் இலக்கும் எனக்குள் சேர்ந்திருக்கு. கண்டிப்பா ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும், அப்போது இதை விட வேறொரு மிகப்பெரிய பொதுவெளியில் வீரியமாய் பதிவு செய்வேன். நன்றி பீட்டர் ரமேஷ்குமார்!

-004-
கிருஷ்ண சாமிக்களே, கும்புடுறேன் சாமிக்களே அந்த சாமி மேல சத்தியமா இன்னமும் எனக்கு புரியல... சண்டியர், கொம்பன், குட்டிபுலி, சண்டக்கோழி இதெல்லாம் தேவர் சாதியை தான் குறிக்கிறதுன்னு நீங்களே ஏன்யா நம்புறீங்க? நாங்களே அதை நம்புறது இல்ல...

-005-

எங்கப்பன் சாமி மாதிரின்னு பெருமையா உண்மையை சொன்னால் மத்தவனுக்கு ஏன் எரியணும்? அவன் அப்பன் பொம்பள பொறுக்கியா இருக்கிறதுக்கு நான் என்னய்யா பண்ண முடியும்? வக்கிருந்தா உன் அப்பன் பெருமையா ஊர கூட்டி சொல்லு. அதவிட்டுட்டு என் அப்பனை பத்தி பேசாதன்னு பஞ்சாயத்தை கூட்டுறதெல்லாம் கேவலமா இருக்கு. என்னைக்குமே என் அப்பன் கொம்பன்யா...

-006-

சிவக்குமார், ஸ்டாலின், விஜயகாந்த் என்ற இந்த மூவருடைய வாரிசுகளின் படமும் நாளைக்கு வருது. சேர,சோழ,பாண்டிய தேசம் தான் இம்மூவரும் பிறந்து வளர்ந்தது என்பதும் குறிப்பிடதக்கது. சகாப்தம் படத்துல கூட தான், குறிப்பிட்ட அந்தவொரு சாதியினை பற்றிய காட்சி இருக்குன்னு சொல்றாங்க. கொம்பன் பிரச்சனையில விஜயகாந்துக்கும் ஒரு வகையில் ஆதாயம் இருக்கிறதுனால தான், முன்னாள் நடிகர் சங்க தலைவர், சமகால எதிர்க்கட்சி தலைவர், ஓர் அரசியல்வாதி, சக நடிகன் என எந்த முறையிலும் கூட இதுவரை வாயையே திறக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

- இரா.ச.இமலாதித்தன்

13 மார்ச் 2015

சினிமாவுக்கு பின்னாலும் அரசியலே

கிட்டத்தட்ட பதினோறு வருசங்களுக்கு முன்னாடி ”சண்டியர்”ன்னு பெயர் வைக்க கூடாதுன்னு மிரட்டல் விட்ட புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமிக்காக ”விருமாண்டி”ன்னு பெயரை மாற்றி படத்தை வெளியிட்டார் கமல்ஹாசன். கோடி கணக்குல பணத்தை செலவு பண்றவனுக்கு தானே வலி தெரியும். எத்தனை பைனான்சியர்கிட்ட எவ்வளவு வட்டிக்கு பணத்தை வாங்கி படத்தை தயாரிப்பாளர் தயாரிச்சாரோ? கடனை வாங்கி ஒரு படம் வெளியீட்டுக்கு தயாரானாலும் கூட தியேட்டர் கிடைக்கிறதுல்ல. அப்படியே தியேட்டர் கிடைச்சாலும் வெடிகுண்டு மிரட்டல் விட்டு, தியேட்டர் பக்கம் வர ஒன்னு ரெண்டு கூட்டத்தையும் பயமுறுத்தியே காலி பண்ணிடுறாய்ங்க. இந்த மாதிரி இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் படத்தை ஒருவழியா வெளியிட்ட பிறகும், அந்த படம் ஓரளவுக்காவது ஓடுமா? ஓடாதா?ன்னு பிரசவ வலி போல மொத்த பட யூனிட்டும் துடிச்சிக்கிட்டு இருக்கிறப்போ, அரசியல்வாதிகளினாலும் இடையூறும் வந்துடுது.

தேர்தல் நேரத்துல அதிமுக, திமுகன்னு மாறி மாறி காலில் விழுந்து ஒன்னு ரெண்டு சீட்டுகளை பிச்சை வாங்கி எம்.எல்.ஏ. / எம்.பி ஆனதுக்கு பிரயோசனமா, மக்களுக்கு ஏதாவது உருப்படியா நல்லது பண்ண பாருங்கய்யா. நீங்க அரசியல் பண்றதுக்கு சினிமாவை தொழிலாக செய்து பிழைப்பை நடத்தும் லைட்மேன் தொடங்கி துணை நடிகன் வரையிலான சினிமா தொழிலாளர்களின் வயித்துல ஏன்யா அடிக்கிறீங்க? உழைக்கும் வர்க்கத்திடம் சாதி வெறியை தூண்டி, இழிவானதொரு அரசியல் வியாபரம் செய்யுறப்பவே இந்த மாதிரி அலப்பறைய கொடுத்திங்கன்னா, உண்மையாவே நேர்மையான அரசியல் செய்தால் என்னவெல்லாம் பண்ணுவீங்க? ஷப்பா... நினைச்சாலே கண்ண கட்டுது. சாதி அரசியல் செய்றப்போ ”மன்னர் பரம்பரை”ன்னு சொல்லி மேடை போட்டு ஊர்வலம் போறது. போற வழியில ஏதாவது ஒரு தகராறுல அடிதடி சண்டையா ஆய்டுச்சுன்னா ”தாழ்த்தப்பட்டவர்களின் மீது தாக்குதல்”ன்னு அந்தர் பல்டி அடிக்கிறது. இந்த மாதிரி கேவலமான அரசியல் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில், சண்டியருக்கு பிறகு மீண்டும் பதினோறு வருடஙகள் கழித்து ”கொம்பன்” என்ற படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதே கிருஷ்ணசாமி அறைகூவல் விடுக்கின்றார். காரணம் என்ன? தேர்தல் நெருங்கிடுச்சு. இப்படி ஏதாவது பண்ணி ஊடகங்களில் கட்சி பேரு வந்தால் தானே, அதிமுக, திமுக கிட்ட ஒன்னு ரெண்டு சீட்டு கேட்க வசதியா இருக்கும்.

தமிழ் தமிழ்ன்னு பேசுற கிருஷ்ணசாமிக்கு வக்கிருந்தால், தேர்தலில் தமிழகமெங்கும் தனித்து நின்று வெற்றி பெறட்டுமே. எதற்காக சினிமா தொழிலாளர்களை சீண்டி பார்த்து அரசியல் செய்ய வேண்டும். ஏற்கனவே பட தயாரிப்பாளர்களில் பாதி பேரு காணாம போய்ட்டாங்க. மீதமிருக்கும் தயாரிப்பாளர்களை தக்க வைக்க, மூனு மாசம் படம் பிடிப்பே கிடையாதுன்னு கலைப்புலி தாணு சொல்லிருக்காரு. இதுல இப்படியும் இடைஞ்சல் கொடுத்தால் சீரியல் தான் பார்த்துக்கிட்டு கிடக்கணும்.

கொம்பன் - இம்மண்ணின் மைந்தர்களின் படம். தமிழ் பண்பாட்டு கலச்சாரத்தை பிரதிபலிக்கு படம். இதை எதிர்க்க எவனுக்கும் அறுகதை இல்லை. சென்சார் போர்டே அனுமதி வழங்கிய பின்னால், மத்த எந்த அரசியல் ப்ரோக்கருக்கும் அடிபணிய அவசியமில்லை. ”கொம்பன்” வெற்றி பெற வாழ்த்துகள்!

(Komban Official Page)

- இரா.ச.இமலாதித்தன்

17 அக்டோபர் 2014

தேவர்மகன்களின் சுயரூபம்?!

“காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு… யாரடா கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது” - வினவு

http://www.vinavu.com/2014/10/16/vimaladevi-honour-killing-mugilan-cartoon/
சோ கால்டு காட்டுமிராண்டி கொலைகளுக்கு கெளரவக்கொலை என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்யும் இதே வேளையில், பள்ளுப்பாட்டு பாடல்பெற்ற பண்டைய காலம் தொட்டே பள்ளர் என்று அறியப்பட்டவர்களுக்கு, தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதையும் ஆய்வு செய்து கேலி சித்திரம் ஒன்றை ஓவியர் முகிலன் மூலமாக வரைய சொல்லி தனிப்பதிவை வினவு போடலாம். மேலும், இந்த திரு.பாரதிராஜா - திரு.கமலஹாசன் - திரு. சசிகுமார் மூவருமே மூன்று வித சாதி பின்னணிகளை கொண்டவர்கள். அதிலும் திரு.பாரதிராஜா மட்டும் தான் தேவர் சாதியை சேர்ந்தவர். அவர் சாதியால் தேவரென அறியப்பட்டாலும் தேவர் சாதி சார்ந்த விசயத்தில் மாற்று கருத்துடையவர். தன் மகனுக்கு கூட வேறுவொரு சாதியில் தான் திருமணம் முடித்துள்ளார் என நினைக்கின்றேன்.

ஆனால், இந்த மூவருக்குள்ளும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவெனில், மூவருமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சாதியால் வேறுபட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையைத்தான் படமாக பதிவு செய்துள்ளார்கள். அது தேவர்மகன் ஆகட்டும். வினவு திரை விமர்சனம் எழுதிய படமான சுந்தரபாண்டியனாக இருக்கட்டும். இது மக்களின் நடைமுறை வாழ்க்கையை தான் படத்திலும் காட்டிருப்பார்கள். இதை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், உங்களது விமர்சனத்தை கண்டு அஞ்சு யாருமே இனி தேவர் சாதி மக்கள் சார்ந்த படமே எடுக்கமால் இருக்க போவதில்லை.

விரைவிலேயே திலகர் என்ற படம் வெளிவர விருக்கின்றது. அதுவும் முழுக்க முழுக்க தேவர் சாதி படம் தான். திருநெல்வேலி - வெள்ளலூர் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் தான். திலகரை, தேவர்மகன் பாட் 2 என்றும் சொல்கின்றனர். அந்த படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் வெள்ளாள பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு திரைத்துறையில் பாலுத்தேவர் என்ற அடைமொழியும் உண்டாம். இந்த பாலுத்தேவர் என்ற காதாப்பாத்திரத்தை வைத்து தான் பாரதிராஜா, சாதிங்கிறது படிச்சு வாங்கின பட்டமா?ன்னு கேட்டாரு. அவரையே இன்னைக்கு கேலி சித்திரம் மூலம் விமர்சிக்கிறீங்க. தொடரட்டும் உங்கள் பணி.

நிறைய தேவர் சாதி இயக்குனர்கள் சமகாலத்தில் படம் இயக்கி கொண்டே இருக்கின்றனர். மேலும் பல புதுமுக இயக்குனர்களும் அணிவகுத்து காத்திருக்கின்றனர். குட்டிப்புலி படத்தை இயக்கிய தேவர்சாதி இயக்குனர் முத்தையாவின் அடுத்த படைப்பான கொம்பனுக்கும், பெருமாள் பிள்ளை இயக்கிய திலகருக்கும் வினவு விமர்சனம் எழுதுவீர்களென நம்புகிறேன். ஏனெனில் உங்களுக்கு அட்டைக்கத்தி/மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் மட்டும் தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக தெரியலாம். ஏனெனில் அவர் தேவர்சாதி இல்லை என்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்