அகமுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகமுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 மே 2019

’சுயமரியாதை சுடரொளி’ எஸ்.இராமச்சந்திரனார்!



வாங்காத விருதுக்கு 250 பக்கத்தில் ஒரு புத்தகம் ஒரு கேடா? ஒருபக்கம், ஈ.வெ.ரா. தான், சாதியை ஒழித்தாரென திராவிடவாதிகளெல்லாம் தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால், ஈ.வெ.ரா பற்றிய படத்திற்கு தலைப்பே நாயக்கர் என்ற அவரின் சாதிப்பெயரிலேயே வெளியிட்டனர். வைகோ கூட முன்பொருமுறை, ஈ.வெ.ரா.வின் நாயக்கர் என்ற அவரது சாதிப்பட்டத்தை சேர்த்தே கடிதம் எழுதி கேரள முதல்வருக்கு அனுப்பிருந்தார். இதுபோல பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

எதற்கெடுத்தாலும் ஈ.வெ.ரா. புராணம் பாடும், திராவிட வாதிகளுக்கு, தன் இறுதி மூச்சு வரை,தனிமனித ஒழுக்கம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, மதுஒழிப்பு, பெண்விடுதலை போன்ற தளங்களை தென்மாவட்டங்களில் உருவாக்கி, தன் வாரிசுகளும் அதைக்கடைப்பிடிக்கும் வகையில் செய்த எஸ்.இராமச்சந்திரனாரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1929ம் ஆண்டு பிப்ரவரி 17,18ம் தேதிகளில் செங்கற்பட்டில் நடைபெற்ற 'தமிழ் மாகாண சுயமரியாதை' மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னாலுள்ள “சேர்வை”எனும் அகமுடையாருக்கான சாதிப்பட்டத்தைத் துறந்த 'சுயமரியாதை சுடரொளி' வழக்குரைஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் போன்றோரின் புகழை மறைத்தது தான் திராவிடத்தின் வெற்றி.

யார் அந்த எஸ்.இராமச்சந்திரனார்?


1925ம் ஆண்டில் பனகல் அரசர் தலைமையில் அம்ரோட்டில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டில் பங்கேற்ற தமிழக பிரதிநிதி இவர்தான்.

1926ஆம் ஆண்டு முதல் அரசியல் அதிகாரப்பணியான ஜில்லா போர்டு தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்ட கல்விக்கழகம்,மதுவிலக்கு கமிட்டி,தேவஸ்தான கமிட்டிகளில் பொறுப்பு வகித்து,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிந்தார்.

1927ம் ஆண்டு சூலை 20,21ம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட மாநாடு, ஈரோட்டில் நடைபெற்ற மதுவிலக்கு மாநாடுகளில்.தலைமை தாங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களின் குறைகளை உடனுக்குடன் போக்கிட பாடுபட்டார்.

நீதிமன்றங்களில் தன் வாதத்திறமையால் சமஸ்தானத்துக்கும் தான் சார்ந்த இயக்கத்துக்கும் நற்பெயர் பெற்றுக்கொடுத்தார்.

சிவகங்கை நீதிமன்றத்தில் பிராமணர்களுக்கு தனியாக குடிநீர் பானை இருந்ததை நீதிபதி முன்பாக போட்டு உடைத்து சமூகநீதி பற்றி அவர் செய்த வாதம் இன்றும் அங்கு முத்தாய்ப்பாக பேசப்படுகிறது.

”இந்தக்கையால் எந்த பிராமணருக்கும் ஆதரவாக கையெழுத்திட மாட்டேன்”என்று சபதம் செய்தவர்.

நீதிகட்சி ஆட்சியில் சட்ட அமைச்சராக ஆகிட இவருக்கு வாய்ப்பு வந்தபோது, சமூகப்பணியாற்றிட அமைச்சர் பதவி தடையாக இருக்கும் என்பதால் அந்த வாய்ப்பை உதறியவர்.

இவர் போன்ற திறமை வாய்ந்த வழக்கறிஞர் காங்கிரசுக்கு வரவேண்டும் என மதுரை வைத்தியநாத ஐயர் இவரை அணுகிய போது,”மனிதரில் ஏற்ற தாழ்வைக்குறிக்கும் பூணூலை நீங்கள் கழற்றினால் அது பற்றி ஆலோசிக்கலாம்”என்று சொன்னவர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர் நடத்திய ஆதிதிராவிடர்கள் மாநாடு தான், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச்சென்ற நிகழ்வுக்கு முன்னோடி சம்பவமாகவும் அமைந்தது.

- இரா.ச. இமலாதித்தன்


(தகவல்: திரு.அரப்பா)

30 ஏப்ரல் 2019

நாங்கள் அகமுடையாராகவே இருக்கிறோம்!



யார் கள்ளர்? யார் மறவர்? என்ற பாடங்களையெல்லாம் நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அது எங்கள் வேலையுமில்லை. அகமுடையாருக்கான வரலாற்றை மீட்டெடுப்பது; அதை ஆவணப்படுத்துவது; மக்கள் தொகை அடிப்படையிலான அகமுடையாருக்கான பிரதிநிதித்துவ அரசியலை உருவாக்குவது. தேவர், சேர்வை, முதலியார், பிள்ளை, உடையார், நாயகர் போன்ற பல்வேறு பட்டங்களால் சிதறிக்கிடக்கும் அகமுடையார்களை ஒருங்கிணைப்பது; இப்படியாக எங்களுக்கான பாதையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.

ஆனால், தலா மூன்று மாவட்டங்களில் வாழும் கள்ளரும், மறவரும் தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழும் அகமுடையார்கள் யாரென்று இணையமெங்கும் பாடமெடுத்து கொண்டிருக்கின்றனர். உங்கள் அடையாளத்தோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள். இந்த பட்டமுள்ளவர்களே அகமுடையாரென்றும், இந்த பகுதியிலுள்ளவர்களே அகமுடையாரென்றும் புலம்பிக்கொண்டிருக்காமல், உங்களுக்கான அடையாளத்தை வெளியுலகுக்கு தயக்கமில்லாமல் சொல்லப் பழகுங்கள். எல்லா இடங்களிலும் அகமுடையார்களை இணைத்துக்கொண்டு முக்குலத்தோர் என்று போலியாக கட்டமைக்காதீர்கள்.

ஒட்டுமொத்த கள்ளர், மறவரின் எண்ணிக்கையை சேர்த்தாலும் அகமுடையார்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல. அது தனித்த பேரினக்குழு. அந்த பேரினக்குழுக்குள், ராஜகுலம், ராஜவாசல், ராஜபோஜ, கோட்டைப்பற்று, இரும்புத்தலை, கீழ்மன்று, மேல்மன்று, ஐவளிநாடு, பதினோறுநாடு, பில்லூர்நாடு, நாட்டுமங்கலம், புண்ணியரசுநாடு, கலியன், சானி, தொழுவ என பல உட்பிரிவுகள் உண்டு. அகமுடையார் எப்போதுமே தனித்து இயங்கக்கூடிய ஆண்வழி சமூகம். எங்களை மற்ற சாதிகள் நட்பு அடிப்படையில் பார்க்கலாமே ஒழிய, உறவு அடிப்படையில் பார்க்க கூடாது. அகமுடையார்களான நாங்கள், மாவலி வேந்தன் வழி வந்த வாணர் குலம். அகம்படவன், அகம்படி என்றும் எங்களுக்கு தனித்த பல அடையாளங்கள் உண்டு. எனவே, எங்களை மற்ற சாதியினர் உரிமை கோரும் கீழ்த்தரமான போக்கை கைவிடுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

24 ஏப்ரல் 2019

வாணாதிராயரின் தஞ்சாக்கூர் திருவிழா!





வாண ஆதி அரச மரபிரான அகமுடையார் உறவுகளே,


நம் முப்பாட்டரான தஞ்சை வாணன் ஆண்ட பூமியான வாணாதிராய மதுரைக்கு உட்பட்ட தஞ்சாக்கூரில் உள்ள காவேரி ஐயனார் கோவில் குடமுழுக்கு பெருவிழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வாணர் - வாணன்,
தஞ்சாவூர் - தஞ்சாக்கூர்,
காவிரி - காவேரி,
மானாமதுரை - வாணாதிராயமதுரை

இப்படி நிறைய ஒப்பீடுகள் உண்டு. இந்த தஞ்சாக்கூரில் முழுக்க முழுக்க வாண ஆதி அரசரான தஞ்சைவாணனின் வாரிசுகளான அகமுடையார்களே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

10.05.2019 சித்திரை 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ள காவேரி ஐயனார் கோவில் குடமுழுக்கு விழாவில் அகமுடையார் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்.


- இரா.ச. இமலாதித்தன்


(பட உதவி: எஸ்.பி.எஸ்.குமார்)

30 அக்டோபர் 2018

அகமுடையாருக்கு, பசும்பொன்னா? காளையார்கோவிலா?



அகமுடையார்களெல்லாம் பசும்பொன்னுக்கு செல்லுங்கள்; செல்லாமல் இருங்கள்; அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "திருப்பத்தூருக்கும் - காளையார் கோவிலுக்கும் ஸ்டாலின் வரவில்லை, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் வரவில்லை, திமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; முதல்வரோ, எதிர்க்கட்சித்தலைவரோ, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களோ, யாரும் வரவில்லை; ஆனால் பசும்பொன்னுக்கு மட்டும் இவர்கள் செல்கிறார்கள்; திட்டமிட்டே அகமுடையார்களை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்கின்றன." என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்படியான விமர்சனங்கள் தேவையே இல்லை. அப்படி விமர்சித்தே ஆக வேண்டுமென நீங்கள் விரும்பினால், அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூருக்கு வராத, அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலுக்கு வராத அகமுடையார்களை முதலில் விமர்சியுங்கள். குறிப்பாக திருப்பத்தூருக்கும், காளையார்கோவிலுக்கும் வராமல், அக்டோபர் 30ஆம் தேதி மட்டும் பசும்பொன் செல்லும் அகமுடையார்களை விமர்சியுங்கள். இந்த விசயத்தில் முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல் கட்சி தலைவர்களல்ல; அவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை. அவர்கள் ஓட்டுரசியல் செய்யும் தலைவர்கள். அவர்களின் பார்வையில், கள்ளர் - மறவர் - அகமுடையர் என்ற 'சோ கால்டு' முக்குலத்தோர் போற்றும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் சென்று வந்தால், நமக்கும் அவர்களது ஆதரவு கிடைக்கும்; ஓட்டுரசியலுக்கு இந்த வாக்கு வங்கி தேர்தல் நேரங்களில் தங்களுக்கு பயன்படுமென்ற நம்பிக்கையில் தான் வருகின்றனர். அப்படியான அரசியல் கணக்கீடுகளோடு பசும்பொன் வருபவர்களை விமர்சிப்பது வீண்.

போலியான முக்குலத்தோர் அரசியலை நம்பி விலாங்கு மீன் போல, 'அகமுடையார் ஒற்றுமை - முக்குலத்தோர் ஒற்றுமை' என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் அகமுடையார்களிடம் முதலில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்கள்தொகை எண்ணிக்கையிலும், விகிதிச்சார அடிப்படையிலும், அகமுடையாருக்கு கிடைத்திருக்க வேண்டிய அரசியல் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவே இல்லை என்பதை தெளிவு படுத்துங்கள். அகமுடையாருக்கான தொகுதிகளை, பதவிகளை, கள்ளரும் - மறவரும் 'சோ கால்டு' முக்குலத்தோர் என்ற முகமூடிகளால் ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துங்கள்.

அக்டோபர் 24ல் திருப்பத்தூருக்கோ, அக்டோபர் 27ல் காளையார் கோவிலுக்கோ, எத்தனை கள்ளர் / மறவர் வந்து போகிறார்கள்? வரவே இல்லையென்றும் சொல்ல முடியாது; ஆனால் பசும்பொன்னுக்கு செல்பவர்களில் எத்தனை சதவீதம் பேர் காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வந்தார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அமைப்பு சார்ந்தோ, தங்களது தலைவர்களுக்காகவோ ஒருவேளை அவர்கள் வந்திருக்கலாம். தனித்து, கள்ளரும் மறவரும் காளையார்கோவில் / திருப்பத்தூர் வந்திருப்பார்களா என்றால், மிக சொற்பமான எண்ணிக்கையில் வந்து இருக்கலாம். ஆனால் அகமுடையார்களின் நிலைப்பாடோ வேறொன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கோ, காளையார்கோவிலுக்கோ வருகிறார்களோ இல்லையோ, ஆனால் பசும்பொன்னுக்கு அகமுடையார்கள் செல்கின்றனர். இந்த விசயத்தில் மனமாற்றம் ஏற்படாத வரை, வெளியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட போவதே இல்லை.

அகமுடையார்கள் பசும்பொன்னுக்கு போவதோ, போகாமலிருப்பதோ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வரவே மாட்டேன்; ஆனால் பசும்பொன்னுக்கு கண்டிப்பாக செல்வேனென இப்படியான எண்ணவோட்டத்தில் இருக்கும் அகமுடையார்கள் மாறாதவரை, ஹிந்திய தேசிய / திராவிட / தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் பார்வையும் மாறாது. அவர்களை விமர்சிக்கும் முன், இதுமாதிரி நமக்குள்ளேயே உள்ள முரண்களை கலைந்து, குறைகளை சரிசெய்ய நாம்தான் முன்வர வேண்டும். அப்போது தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் முழுமையாக கிடைக்க வாய்ப்புகளும் உருவாகும்.

- இரா.ச. இமலாதித்தன்

26 அக்டோபர் 2018

மாமன்னர் மருதுபான்டியர்கள் யாருக்கு சொந்தம்?



மாமன்னர் மருதுபாண்டியர்கள் குறிப்பிட்ட இனக்குழுவிற்கு மட்டும் உரிமையானவர்கள் இல்லை; ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அடையாளமானவர்கள்; இது உண்மை தான்; ஆனால் இத்தனை நாட்கள், அகமுடையார்கள் கொண்டாடவில்லையென்றால், என்றைக்கோ மருதரசர் புகழை, கரடி கருத்தான் போன்ற காட்டிக்கொடுத்த துரோகிகளின் வம்சாவழியினரால் இருட்டடிப்பு செய்திருப்பார்கள். சிவகங்கை சீமை ஆட்சிப்பட்டியல் கல்வெட்டில் கூட, எம் மன்னவர்களின் பெயர்களை இடம்பெற செய்யாத அளவிற்கான அவலநிலையே இன்றளவும் தொடர்கிறது; இந்த அநியாயத்தை அகமுடையார்களை தவிர வேறு யாராவது கண்டித்தது உண்டா?
கொலை காரனுக்கும், கொள்ளை காரனுக்கும், தொடை நடுங்கிக்குமென கண்டவனக்கெல்லாம் தமிழ்நாடெங்கும் சிலை இருக்க, மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மதுரையை தவிர வேறெங்கும் முழு உருவ சிலைகள் உண்டா? 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்களின் சிலையை, இன்றளவும் கூட அங்கே வைக்க முடியாத அளவிற்கு துரோகம் உச்சத்தில் இருக்கிறது. இதுதான் கள எதார்த்தம். சாதியம் தாண்டி தமிழ் தேசியத்தை, மண்ணுரிமை மீட்பை, மக்கள் புரட்சியை எமக்குள் விதைத்து சென்ற ஆண்டவர்கள் அவர்கள்; எங்கள் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய அவர்களை, ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் கொண்டாட முன்வரும்போது நாங்கள் அவர்கள் பின்னால் நிற்போம். அதுவரை நாங்கள் முன்னெடுக்கும் எங்கள் கொண்டாட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
- இரா.ச. இமலாதித்தன்
#மருதுபாண்டியர் #MarudhuPandiyar #அகமுடையார் #Agamudayar

25 மார்ச் 2018

எம்.ஜி.ஆர் - சான்டோ சின்னப்பாதேவர் - அகமுடையார் வரலாற்று தொடர்பு!



எம்.ஜி.ஆருக்கும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருக்கும் பல ஒற்றுமை உண்டு. அவற்றுள் ஒன்று, மருதூர்.

எம்.ஜி.ஆரின் முழுப்பெயர்:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரின் முழுப்பெயர்:மருதூர் மருதாசலமூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்.

அகமுடையார்களில் பலருக்கு இன்றைய கேரளத்தில் குலதெய்வ கோவிலும், திருமண உறவும் உண்டு. போக்குவரத்து சிரமங்களுக்காக கேரளாவிலிருந்து பிடிமண் எடுத்து வந்து அதே பெயரில் தங்களது பகுதியிலேயே குலசாமி கோவிலை கட்டியெழுப்பினார்கள். சேரநாடு என்ற பெயரில் ஆதித்தமிழகமாக இருந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியபட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள மருதூர் ஐயனார் கோவில் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த மருதூர் ஐயனார் கோவிலானது கேரளாவில் உள்ள கோவில்; இந்த ஐயனார் தான் எம்.ஜி.ஆரின் குலசாமி; இதே மருதூர் தான் எம்.ஜி.ஆரின் பூர்வீக ஊர்; இவையெல்லாம் கவனிக்கதக்க விசயம். கேரளாவிலுள்ள நாயர் சாதி என்பது பல இனக்குழுக்களின் கூட்டமைக்காகவே பிற்காலங்களில் உருவெடுத்தது. 13ம் நூற்றாண்டில் சேரநாடான கேராளவில் ஏற்பட்ட எழுச்சியில் அகம்படியர் மற்றும் வேளாளர் (நாயர்) என்போர் ஈடுபட்டதாக வரலாற்று குறிப்புகளை நோக்கும் போது, அகமுடையார்களின் கிளைக்குடிகளாக மேனன் பட்டமுள்ளோர் இருந்திருக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் தாய் தந்தை வழி குலசாமிகளான, மருதங்குடி மருதாருடையாரும், வாணியங்குடி மருதப்ப ஐயனாரும் கூட ஒருங்கிணைந்த இராமநாதபுரத்திற்கு (விருதுநகர், சிவகங்கை) அருகிலுள்ள ஊர்கள் என்பதும், அங்கெல்லாம் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், மருது என்பது இயல்பாக இவர்களுக்கு சூட்டும் பெயராகவும் இருப்பதை கவனித்தாலே பல வரலாற்று உண்மைகள் புரியும். வாணியங்குடி மருதப்ப ஐயனார் மற்றும் மருதங்குடி மருதாருடையார் என்பதன் நினைவாகவே மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு, வெள்ளை மருது - சின்ன மருது என்ற பெயர்கள் அவர்களுக்கு வைக்கப்பட்டது.
இதுபோலவே கோயம்புத்தூரிலும் ஒரு மருதூர் உண்டு; அவ்வூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மை. கோவை - திருச்சி சாலையிலிருந்து சிக்னலில் தெற்கு நோக்கி நஞ்சுண்டாபுரம் சாலையின் கிழக்கு பகுதி மருதூர், மேற்கு பகுதி இராமநாதபுரம், (ஸ்டாக் மார்க்கெட்டிலிருந்து சிக்னல் வரை உள்ள பகுதி மருதூர்) பொதுவாக கிழக்கால ஊர், மேற்கால ஊர் என அழைப்பார்கள், இரட்டை கிராமம்.

சோழநாடான டெல்டா பகுதியிலுள்ள அகமுடையார்களுக்கு தேவர் பட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல விருதுநகர் மாவட்டத்திலும் அகமுடையாருக்கு தேவர் பட்டமென்பதை பார்வார்ட் ப்ளாக் தேசியத்தலைவராக இருந்த ஏ.ஆர்.பெருமாள் தேவர் மூலமாகவும், இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட மருதூர் ஐயனார் கோவிலிலுள்ள பங்காளிகளின் பெயர் அச்சிடபட்டுள்ள அழைப்பிதழிலும், பெயர் பலகையிலும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யத்திற்கு அருகேயுள்ள மருதூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்த மருதூருக்கு அருகிலுள்ள ’கடிநெல்வயல்’ வேம்படி ஐயனார் / வேம்புடையார் கோவில் தான் எங்களுக்கு குலசாமி.

இதே வேம்புடையார் என்ற பெயர்கொண்ட ஐயனார் சிவகங்கை அருகிலுள்ள பில்லூரிலுள்ள முத்தையா கோவிலில் வீற்றிருக்கிறார்; அவ்வூருக்கு ஓரிருமைல் தொலைவில் தான் வேம்பத்தூர் என்ற ஊரும் இருக்கிறது. இந்த வேம்பத்தூரும், வேம்புடையாரும் தொடர்புடையதாக இருக்கலாம். இன்றைக்கு அந்த வேம்புடையார் என்ற பெயர், வேகமுடையார் என மாற்றமடைந்திருந்தாலும் வேம்புடையாராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். மேலும், அவ்வூரில் அகமுடையாரே பெரும்பான்மை என்பதும், பில்லூர் அகமுடையார் என்ற தனித்த அடையாளமும் அவர்களுக்கு உண்டு என்பது கூடுதல் தகவல். வேதாரண்யம் அருகிலுள்ள இந்த மருதூர் ஐயனார் கோவிலின் பெயரிலும் ’வாணர்’ என்ற பெயர் உள்ளீடாக இருக்கின்ற ‘துயில் வாண ஐயனார்’ என்பதை கவனித்தால் மாவலி பூமியின் வரலாற்று தொடர்பு எளிதில் விளங்கும்.

#சின்னப்பாதேவர் #எம்ஜிஆர் #மேனன் #ஐயனார் #தேவர் #அகமுடையார்#வாணியங்குடி #மருதங்குடி #மருதூர் #கடிநெல்வயல் #வேம்புடையார்#பில்லூர் #விருதுநகர் #இராஜகுலம் #வாணர் #மாவலி #கோவை #ஏஆர்பெருமாள்தேவர் #மருதாருடையார் #மருதப்பஐயனார்


(இந்த பதிவோடு தொடர்புடைய படங்களெல்லாம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆருக்கும் அகமுடையாருக்கும் தொடர்புள்ள செய்திகளை பகிர்ந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன் ஐயாவுக்கும், அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளரான நண்பர் சோ.பாலமுருகனுக்கும், கோவை மருதூர் பற்றிய தகவல்களை தந்த பழ.செல்வராஜூ அண்ணனுக்கும் நன்றி.)

30 டிசம்பர் 2017

'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

Image may contain: 1 person, smiling, closeup

'மீனாட்சி மிஷன்' மருத்துவமனையின் நிறுவனரும், 'மகாசேமம்' என்ற சுயநிதி உதவிக்குழுமத்தின் நிறுவனரும், 'அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக'த்தின் நிறுவனத்தலைவருமான வாராப்பூர் ஜமீன்கோட்டை பெற்றெடுத்த 'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

02 டிசம்பர் 2017

சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல்!




சொந்த ஊர் மக்களுக்காக குளம் வெட்டிக் கொடுத்த செய்தியைத் தமது பத்திரிகையில் ‘குளம் வெட்டிய கோ.சி.மணி’ என்ற தலைப்பில் அண்ணா பிரசுரித்த பின்னர், 'கோவிந்தசாமி சிவசுப்ரமணியன்' என்ற இவரது பெயரும் மாறிப்போனது. ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் திமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். கோவில் நகரமான கும்பகோணத்தை சீரமைத்த சிற்பியாக, அவர் பெயரைக் காலம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்.
எல்லா நாட்களிலும் அதிகாலை ஐந்து மணிக்கே தயாராகி மக்களைப் பார்ப்பதற்கு உட்கார்ந்திருப்பார். பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரன் எல்லாரையும் ஒரே மாதிரிதான் சந்திப்பார். அமைச்சராக இருந்த போதும் கூட சனி, ஞாயிறுகளில் தொகுதிக்குள் தான் இருப்பார். இதைச் சுட்டிக்காட்டி, "கோ.சி.மணியைப் போல எல்லா அமைச்சர்களும் இருந்துவிட்டால், தி.மு.க ஆட்சியே தமிழ்நாட்டில் தொடரும்" என்று ஒருமுறை முரசொலி மாறன் அக்கட்சியின் பொதுக்குழுவில் ஆதங்கப்பட்டார்.
"மிகச்சாதாரண மனிதனும் உழைப்பையும் கொள்கைப்பிடிப்பையும் வைத்துக் கொண்டு அரசியலில் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு கடைசி தலைமுறை உதாரணம் கோ.சி.மணி" என்ற ஆனந்த விகடனும் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறது.
மேக்கிரிமங்கலத்தில் முளைத்த விருட்சமே! சோழநாட்டு அரசியலின் ஆணி வேரே! அரசியல் ஆளுமையால் ஒருங்கிணைந்த தஞ்சையை ஆண்டவரே! அகமுடையார்களின் பெருமைமிகு அடையாளமாக மாறிப்போன, சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல் இன்று. (திசம்பர் 02, 2016)
(நன்றி: கோமல் அன்பரசன்)

30 நவம்பர் 2017

அரசக்கொலை, ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!


அகமுடையாரான மதுரை தா.கிருட்டிணனையும், பார்பனரான காஞ்சிபுரம் சங்கரராமனையும் திட்டமிட்டு படுகொலை செய்த கொலைகாரர்களான மு.க.அழகிரியையும் - ஜெயந்திரரையும் பதிலுக்கு பதிலாக இந்த அரசு என்கவுண்டர் செய்து விட்டதா? ஆனால், ஆல்வின் சுதனை கொன்றதாக குற்றஞ்சாட்டி ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டிலிருந்த அரசாங்க காவல்துறையால் பிரபு - பாரதியை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட நாள், நவம்பர் 30. இவர்களை தொடர்ந்து இதே நிகழ்விற்காக குமாரையும் என்கவுண்டர் செய்து பழிதீர்த்து கொண்டது அரசு காவல்துறை. (30.11.2012)
ஒரு கொலைக்கு இன்னும் பல கொலைகள்தான் தீர்வென்று அரசும் - காவல்துறையும் முடிவெடுத்தால், இந்த மக்களாட்சி தத்துவமே தேவையில்லை. ஆனால் அதில் ஏன் இவ்வளவு பாகுபாடு? ஆண்டுகள் ஐந்தானாலும் அகம்படியானாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.
”செல்வி” ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!

27 நவம்பர் 2017

ராஜராஜன் அகமுடையாரா?!

Pandi Pandi: அண்ணா, ராஜராஜசோழர் அகமுடையார் வழிதோன்றலா? கள்ளர் வழிதோன்றலா?


இரா.ச. இமலாதித்தன்: சோழர்கள் ஆண்ட பகுதிகளிலெல்லாம் உடையார் பட்டமும், தேவர் பட்டமும் கொண்ட ஒரே இனக்குழு அகமுடையாராக மட்டுமே இருக்கின்றனர். ராஜசோழனின் மெய்கீர்த்தியில் கூட, ”உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்” என்றே பெயர் வருகிறது. அப்படியெனில் ராஜராஜசோழர் யாராக இருக்க முடியும்?

ஈழத்திலும் சோழத்திலும் அகமுடையார்!




பிள்ளை பட்டமும், தேவர் பட்டமும் இயல்பாகவே தன்னகத்தே கொண்ட இனக்குழு அகமுடையார் மட்டுமே. ஈழமண்டலத்தை சோழர்களின் கீழ் ஆட்சி செலுத்திய போது, எம் தஞ்சை மண்ணிலிருந்து படைத்தளபதிகளாகவும், நிர்வாக பொறுப்பாளர்களாகவும் அகமுடையார்களே அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள்.
அதன் நீட்சியாக இலங்கை அரசு இணையதளத்தில் அகமுடையார் பற்றிய குறிப்பு: (http://www.e-thaksalawa.moe.gov.lk/…/139-hired-soldiers-aga…)

26 நவம்பர் 2017

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரனின் வம்சாவழி பட்டியல்!



#பிரபாகரவியல்

ஐயக்கதேவர் வழிவந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்!




சோழர் காலத்தில் இலங்கையின் வடக்கே ஐந்து பெரும் தளபதிகள் நிர்வாகத்தை நடாத்தினார்கள். ஒருவர் ஐயக்கதேவர் – வல்வை, பொலிகண்டி, தொண்டைமானாறு பகுதிக்கும், வீரமாணிக்கதேவர் மயிலிட்டி பகுதிக்கும், சமரபாகுதேவர் உடுப்பிட்டி, வல்வெட்டி பகுதிகளையும், வெள்ளிவண்டிதேவர் துன்னாலைப் பகுதியையும், மாயாண்டிபாகுதேவர் கற்கோவளம் குறிச்சியையும் பாதுகாக்க சோழப் பேரரசனால் அனுப்பப்பட்டனர்.
இந்த ஐவரில் ஐயக்கதேவர் வம்சத்தில் வந்தவரே வேலுப்பிள்ளையும் அவர் மகன் பிரபாகரனுமாகும். ஐயக்கதேவர் பின் கரியதேவர் – காராளர் – ஐயன் – வேலர் – ஐயம்பெருமாள் – வேலாயுதர் – திருமேனியர் – வெங்கடாசலம் – குழந்தைவேற்பிள்ளை – வேலுப்பிள்ளை – திருவேங்கடம் – வேலுப்பிள்ளை – பிரபாகரன் என்பதே இந்த வம்சத்தின் படிமுறையான வளர்ச்சியாகும்.
தமிழகத்தில் இருந்து வந்து சோழர் காலத்தில் வல்வையில் குடியேறிய போர்த் தளபதிகள் குடும்பமாக இவர்கள் இருந்தார்கள். இதனால் போர்க்குணம், விடுதலை போன்றன இவர்களின் இயல்பாக இருந்தது. வேலுப்பிள்ளை எல்லாளனுக்கு விளக்கு வைத்ததும், பிரபாகரன் பிறந்ததும் தற்செயலான நிகழ்வல்ல. தமிழ் ஈழ மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றின் தொடர்ச்சியே அது.
தஞ்சைப் பெருங்கோயில்களைக் கட்டிய சோழர்கள் போலவே சிவாலயங்களை கட்டுவதும் இவர்களுடைய குடும்ப இயல்பாக இருந்தது. திருமேனியர் வெங்கடாசலம் பிள்ளை அவர்களே வல்வை சிவன்கோயிலைக் கட்டினார். அவருடைய சகோதரர் குழந்தைவேற்பிள்ளை அவர்களே கொழும்பு செக்கடித் தெருவில் உள்ள கதிரேசன் கோயிலைக் கட்டினார். சோழர்கால வரலாற்றையும், பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் வரலாற்று நாவல்களையும் உன்னிப்பாகப் படித்தால் வேலுப்பிள்ளை குடும்பத்தின் வாழ்வியல் நெறியை எளிதாக விளங்க முடியும்.
நன்றி: ஈழ இணையதளங்கள்
(இந்த கட்டுரை தொடர்பான விரிவான பகுதிகளை படிக்க கீழே ஒருசில இணையதள லிங் கொடுக்கப்பட்டுள்ளது)

http://eelavarkural.blogspot.in/2010/01/blog-post_14.html?view=classic
http://www.vvtuk.com/archives/15520
https://varnakulattans.weebly.com/veluppillai-appah.html
http://valvainilam.blogspot.in/2013/01/3.html
https://velupillaiprabhakaran.wordpress.com/2010/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8/

பிரபாகரனும் - மருதுபாண்டியரும்!


தமிழினத்தின் தலைவன்!



ஓர் உயரிய கொள்கைக்காக ஒரு தலைவன் போராடினான் என்பதை விட, எத்தனை பேரை போராட வைத்தான் என்பதில்தான் அந்த போராட்டத்தின் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில் என் அண்ணன் மேதகு. வேலுப்பிள்ளை பிராபகரன் தான், சமகால வரலாற்றில் யாருக்கும் நிகரற்ற தலைவன் என்பதில் மாற்றுகருத்தே இல்லை.
நீ இருக்கிறாயா? இல்லையா? என்று ஆராய விரும்பவில்லை; தலைவனாகவோ - இறைவனாகவோ தமிழர்கள் அனைவரும் உன்னை போற்றிக்கொண்டே இருப்போம். உன் மீதான நம்பிக்கையில் நாங்கள் என்றும் உன்னோடும் - உணர்வோடும் - தமிழோடும் - புலிக்கொடியோடும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
எங்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

17 நவம்பர் 2017

வாய்மேட்டின் வரலாறான சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!





”தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!” என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்து மதுரையை அடுத்த திருநகரில் 6.8.1962 ஆம் நாள் ”தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்!” என்னும் நோக்கத்தையும் முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார்.
தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ Yes sir என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர் இவரே. இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.
குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை.
மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். "தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்" என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சா நெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். ”அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர்!” என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய 'சங்க இலக்கியம்' வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.
வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு 'குறள்நெறி' என்னும் இதழையும், Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார். விருதுநகரில் இருந்தபோது ’இலக்கியம்’ (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது ’திராவிடக்கூட்டரசு’ போன்ற இதழ்களையும் நடத்தினார்
பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும் பெருமாள்.
இத்தகைய பெருமைக்குரிய சி.இலக்குவனாரின் நூல்கள் பட்டியல்கள்:-
எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933) மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)
துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)
தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)
என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)
அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)
அம்மூவனார் (ஆராய்ச்சி)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)
திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)
தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)
மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956) வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)
வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)
கருமவீரர் காமராசர் (வரலாறு)
அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)
தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)
தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)
சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)
Tholkappiyam in English with Critical Studies
Tamil Language (1959)
The Making of Tamil Grammar
Brief Study of Tamil words
சோழநாட்டிலுள்ள நாகை மாவட்டத்தின் திருமறைக்காட்டிற்கு அருகேயுள்ள வாய்மைமேட்டில் மு.சிங்காரவேலத்தேவருக்கும் - அ.இரத்தினம் அம்மையாருக்கும் பிறப்பெடுத்த பெருந்தமிழர் முனைவர் சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!
#இலக்குவனார் #அகமுடையார் #Agamudayar
(நன்றி: அகமுடையார் அரண்)

15 நவம்பர் 2017

எங்கள் இரணியனுக்கு 97வது புகழ் வணக்கம்!



சோழ நாட்டின் அகமுடையார் குலத்தில் பிறப்பெடுத்த வெங்கடாச்சலத்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட 'பொதுவுடைமை சித்தாந்தத்தின் பெருந்தலைவன்' வாட்டக்குடி இரணியனுக்கு 97வது புகழ் வணக்கம்!