30 நவம்பர் 2017

அரசக்கொலை, ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!


அகமுடையாரான மதுரை தா.கிருட்டிணனையும், பார்பனரான காஞ்சிபுரம் சங்கரராமனையும் திட்டமிட்டு படுகொலை செய்த கொலைகாரர்களான மு.க.அழகிரியையும் - ஜெயந்திரரையும் பதிலுக்கு பதிலாக இந்த அரசு என்கவுண்டர் செய்து விட்டதா? ஆனால், ஆல்வின் சுதனை கொன்றதாக குற்றஞ்சாட்டி ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டிலிருந்த அரசாங்க காவல்துறையால் பிரபு - பாரதியை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட நாள், நவம்பர் 30. இவர்களை தொடர்ந்து இதே நிகழ்விற்காக குமாரையும் என்கவுண்டர் செய்து பழிதீர்த்து கொண்டது அரசு காவல்துறை. (30.11.2012)
ஒரு கொலைக்கு இன்னும் பல கொலைகள்தான் தீர்வென்று அரசும் - காவல்துறையும் முடிவெடுத்தால், இந்த மக்களாட்சி தத்துவமே தேவையில்லை. ஆனால் அதில் ஏன் இவ்வளவு பாகுபாடு? ஆண்டுகள் ஐந்தானாலும் அகம்படியானாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.
”செல்வி” ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக