ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 நவம்பர் 2018

தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர் தேர்வின் அத்துமீறல்!



தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கின்றனர். தமிழரல்லாதவர்களை தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்களாக திணிக்கவே இம்முயற்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தமிழில் கேள்வித்தாளை அமைப்பதற்கான நபர்கள் இல்லையென்று காரணம் சொல்லிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாகவே வெளி மாநிலத்தவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி தமிழ்நாட்டு அரசின் ஊழியர்களாக வரலாமென திருத்தம் செய்தனர்.

இப்போது குரூப் 2 தேர்வுகள் போன்றவற்றிலும் தமிழ் மொழி வழியிலான கேள்விகள் இல்லையென்றால், வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும், ஆங்கில வழிக்கல்வி பயின்றவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் எளிதாக தமிழக அரசாங்க பணியாளர்களாக அமர்த்தப்படுவார்கள். PSTM என்ற தமிழ்மொழி வழியிலான பள்ளிப்படிப்பை படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இங்கிருக்கிறது. அதை இல்லாதொழிக்கவும், தாய்மொழி, மாநில மொழிகளின் அடிப்படையிலான இடப்பகிர்வை பறித்து கொள்ளவுமே இம்மாதிரியான அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன.


பொருளாதார அடிப்படையில் இடைநிலை/கீழ்நிலை குடும்பத்தில் பிறந்து, முதல் பட்டதாரியாக உருவெடுத்து, சமூகத்தில் புறக்கணிக்கப்படும் எத்தனையோ லட்சம் பேருக்கான கடைசி நம்பிக்கை இந்த டி.என்.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகள் தான். இந்த தேர்வுகளுக்காக, தனியார் வேலைகளை துறந்து, வாடகைக்கு தனியறை எடுத்தும், கோவில்களில் தங்கியும், கூட்டாக படித்து மாத கணக்கில் அல்லும் பகலும் தங்களை தகுதிப்படுத்தி வருகின்றனர். அந்த எளியோரின் கனவெல்லாம் அரசு வேலை மட்டுமே. அதற்கு பின்னால் தான், அவர்களது வாழ்க்கையே தொடங்கவிருக்கிறது. அந்த கனவில் மண்ணையள்ளி போடும் கயவர்களை கண்டிக்க இளையோர் ஒன்று கூட வேண்டும்.

இட ஒதுக்கீடு / அரசு ஊக்கதொகை / கல்லூரி சேர்க்கை உள்பட, எல்லா வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கும் அகமுடையார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கென இருக்கும் ஒரே ஆயுதம், அரசு வேலை தான். குறிப்பாக பெரும்பான்மையானோரில் தமிழ்வழி கல்வி பயில்வோரின் எண்ணிக்கையே அதிகம்; அதிலும் இப்படியான குளறுபடி. அனைவரும் தங்களது பக்கத்தில், இச்செயலை எதிர்த்து பதிவு செய்து கண்டியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#TNPSC#TNPSCExam

02 நவம்பர் 2015

ஆயிரம் கோடி ஊழலையும் ஆதரிக்கும் சாதி பாசம்!

"சாதி என்பது பச்சை அநாகரிகம். சாதியையும், நிறத்தையும் பார்ப்பவன்
அரசியலுக்கு லாயக்கில்லை. சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன், அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை; ஆன்மீகத்துக்குமி்ல்லை."

- பசும்பொன் தேவர்.

சசிகலா கும்பல் ஆயிரம் கோடிகளுக்கு தியேட்டரை வாங்கி இருக்கிறார்களென ஊடகங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தும், அதை தி.மு.க. என்ற கட்சியின் ஊழலோடு ஒப்பிட்டு திசை திருப்பி விடுவதை போன்றதொரு கேவலமான செயல் வேறொன்றுமில்லை. பி.ஆர்.பி கிரானைட் ஊழலையும், சசிகலா ஊழலையும் சாதி பாசத்தோடு அணுகும் ஒவ்வொருவரும், பசும்பொன் தேவரின் கொள்கையை தங்களது செருப்பால் மிதித்து, அவரின் உடலின் நெஞ்சத்து குருதியை உறிஞ்சி குடிப்பதற்கு சமம். நேர்மையாக இருக்க தெரியாதவனுக்கு எதற்கு மீசை மயிர்? அதையெல்லாம் மழித்து விட்டு மானம் ரோசமில்லாமல் ஊர் பணத்தை ஊழல் செய்து சுகபோகமாய் வாழும் யாருடைய காலையாவது கழுவி வயிற்றை கழுவலாம். அடத்தூ!

- இரா.ச.இமலாதித்தன்

14 செப்டம்பர் 2015

சாதிக்கு பின்னாலுள்ள ஊழல்!



தன் பரம்பரை சொத்தையே சாதி வேறுபாடின்றி பிரித்து கொடுத்த பசும்பொன் தேவரின் படத்தை போட்டு, பாரம்பரிய மண்ணையே மலையோடு கூறுபோட்ட பி.ஆர்.பி.க்காக பரிந்து பேசுவது சரியா? கொள்ளையடிக்கிறவனுக்கும், கொலை பண்றவனுக்கும் சாதி தான் கடைசி அஸ்திரம் என்பதற்கு இந்த போஸ்டரும் ஓர் உதாரணம்.

27 மே 2015

அரசியலுக்குள் ஊழல்!

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த, முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் மூலம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அந்த ரகசிய குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

- விகடன்


இரண்டு துறைகளிலும் வெறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் ஊழல் நடத்து இருக்கா? ச்சே, ஊழலுக்கு இருக்கிற கெளரவத்தையே குறைச்சிட்டாய்ங்களே. எங்க ஊரு காரர் ஜெயபால்கிட்ட இருக்கிற மீன்வளத்துறை உள்பட மிச்சம் இருக்கிற அமைச்சகங்களை விசாரணை பண்னி பாருங்கய்யா. அப்போதான் ஊழல் பண்னின தொகைக்கு ஒரு மரியாதையே கிடைக்கும்.