கேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஆகஸ்ட் 2017

செம்பியன் மாதேவியார்!



பெரும்பாலான கோவில்கள் இன்றைக்கும் எஞ்சி நிற்கும் விதமாக கற்றளிகளாக மாற்ற காரணமாக இருந்த (அடியேனின் நட்சத்திரமான) கேட்டை நட்சத்திரத்தில் உதித்த, கோட்டை கட்டி வாழ்ந்த எங்கள் பெரும்பிராட்டி செம்பியன்மாதேவி கட்டியெழுப்பிய கோவிலில் இன்றைய மாலைப்பொழுது கடந்து கொண்டிருக்கிறது.

உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவரை வளர்த்தெடுத்து அரியணையேற்றிய அவரது பாட்டியின் பெயரான செம்பியன்மாதேவியின் பெயரிலேயே இவ்வூரும் மீளுருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இவ்வூருக்கான கூடுதல் சிறப்பு. மேலும் இந்த ஊருக்கு சுற்று வட்டாரத்தில் தான் எங்கள் உறவினர்களின் ஊர்களும், அடியேன் படித்து வளர்ந்து ஊர்களும் இருக்கிறதென்பது பெருமைக்குரிய விசயமாக நினைக்கிறேன். ஆண்டுதோறும், செம்பியன்மாதேவி அவதரித்த மார்கழி மாத கேட்டை திருநாளில் பெண் வீட்டார் சீதனம் எடுத்து கொண்டாடப்படும் விழா காலம்காலமாக இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.


- இரா.ச. இமலாதித்தன்

#கேட்டை #ராஜராஜசோழன் #செம்பியன்மாதேவி

06 மார்ச் 2016



கி.பி. 910ம் ஆண்டு சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்து, கோட்டையாண்ட அரசியான செம்பியன்மாதேவியார், 'பெரிய பிராட்டி' என்றும் அழைக்கப்பட்டார். இவரின் கணவர் தான் கண்டாரதித்தன்.
மிக முக்கியமாக ஆதித்த கரிகாலன், ராஜராஜசோழன், குந்தவை நாச்சியார் உள்ளிட்ட தனது பெயர குழந்தைகளை சிறுவயது முதலே வளர்த்தெடுத்து, தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டச்சொல்லி அறிவுறுத்தி, மேலும் அனைத்து சிவன் கோவில்களையும் கற்றளியாக மாற்றச்சொல்லி தன் பெயரனுக்கு ஆன்மீக - அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் வாழ்ந்து ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

இவர் கட்டிய சிவன் கோவில் இன்றளவும் நாகை மாவட்டம் - கீழ்வேளூர் வட்டம் - செம்பியன் மகாதேவி என்ற அவரது பெயரிலேயே அமைக்கப்பட்ட ஊரில் பெரியகோவில் அமையப்பெற்றுள்ளது. அங்கே இவருக்கு தனிச்சிலையும் உண்டு. இவர் பிறந்த நாளான சித்திரை மாதம் கேட்டை நட்சத்திர நாளில், ஊர்மக்கள் சீர்வரிசை எடுக்கும் பெருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

செம்பியன்மாதேவியார் பிறந்த அதே கேட்டை நட்சத்திரத்தில் தான் அடியேனும் பிறந்தேன் என்பதிலும், அவரது கணவர் பெயரின் பின்பாதி தான் என் பெயரும் என்பதிலும், அவரது பெயர் கொண்ட 'செம்பியன்மகாதேவி' என்ற ஊருக்கு அருகிலேயே தான் நானும் படித்து வளர்ந்தேன் என்பதிலும் கூட எனக்கு பெருமையே.

- இரா.ச.இமலாதித்தன்

26 நவம்பர் 2015

தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

என் ராசி, என் நட்சத்திரம், என் தலைவன்! தமிழ் தேசிய தலைவனின் பிறந்தநாளே, தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

(அடியேனும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் தான்)


(படம்: மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம்.)

தமிழ் தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் பிறந்த நாளான இன்றைக்கும் கூட, இனத்தாலும் - மொழியாலும் தமிழர்களான இசுலாமியர்களில் பெரும்பான்மையானோர் வடக்கத்திய அந்நிய மொழி பேசும் ஆமீர்கானுக்காக மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றனர்.

ஆக, இவர்களின் முதன்மை அடையாளம் மொழி, இனம் இல்லை; மதம் தான் இவர்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்பது போலவே செயல்படுவது வேதனையான விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

11 ஜூன் 2015

திருப்பதி திருமலை திருமுருகா!

புரட்டாசி சனிக்கிழமை பிறந்ததால், ’பாலாஜி’ன்னு தான் எனக்கு பேரு வச்சாங்க. நான் பிறந்த அன்னைக்கு் என் தாய்மாமன் திருப்பதி போய்ட்டு வந்தாரம். அதுனாலேயே வீட்லயும் சரி, சொந்தகாராய்ங்களுக்கும் சரி ’பாலாஜி’ன்னு சொன்னாதான் என்னை தெரியும். ஆனால் எங்கப்பா தான் கேட்டை நட்சத்திரத்துக்கு ’இ’ ல ஆரம்பிக்கிற பேரு தான் வைக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. அதுலயும் தமிழ் வரலாற்றை சேர்ந்த மன்னர் பெயராத்தான் வைக்கணும்ன்னு ’இளஞ்செழியன், இளமாறன், இளந்திரையன்’ன்னு இப்படி என்னன்னமோ யோசிச்சு கடைசியா, ராஜராஜசோழனின் ஒரே பெண்ணான குந்தவையை கட்டிக்கொடுத்த விமலாதித்தனின் பெயரின் முதலெழுத்தை மட்டும் மாற்றி, ’இமலாதித்தன்’ன்னு வச்சிட்டாங்க.
எதுக்கு இந்த பெயர் பற்றிய சுய புராணம்ன்னு கேட்குறீங்களா? பாலாஜின்னு பேரு வச்சதுல இருந்து இதுவரைக்கும் நான் அந்த பாலாஜியை திருப்பதில போய் பார்த்தது இல்ல. 20,30 தடவைக்கு மேல பல தடவை முயற்சித்து நேற்றைய முந்தையநாள் தான் திருப்பதி போயிட்டு வந்தேன். அடிவாரத்துல இருந்து திருமலைக்கு நடந்தே பயணம். நல்ல தரிசனம்! என்னா அழகு?! அந்த அழகுக்கே கோடி ரூபாய் கொட்டி கொடுக்கலாம். நான் 50 ரூபாய் தான் உண்டியல்ல போட்டேன்.

ஊரே கோவிந்தா கோவிந்தான்னு கத்திக்கிட்டு கடந்துச்சு. அநேகமாக நான் மட்டும் தான் முருகா முருகான்னு முனுகிருப்பேன்னு நினைக்கிறேன். வேங்கடமுடையார் என்ற அழகு தமிழ் பெயர் கல்வெட்டுகளில் பல இடங்களில் சுவரெங்கும் காண முடிந்தது. திருப்பதியை தான் தெலுங்கரிடம் இழந்தோம், எம்பெருமான் முருகனான சேயோனின் திருத்தலத்தையும் மாயோனான பெருமாளிடம் இழந்துவிட்டோம் என்ற வருத்தம் மட்டுமே திரும்பி வருகையில் மிச்சம் இருந்தது; கூடவே பத்து லட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

06 ஜூன் 2015

செம்பியன் மகாதேவியின் சித்திரை கேட்டை திருவிழா!

தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்த செம்பியன் மாதேவியின் ஜென்ம நட்சத்திரத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் சின்ன மகிழ்ச்சி.


நாகை மாவட்டம் செம்பியன்மகாதேவி என்ற ஊரில் செம்பியன் மகாதேவியாலேயே கட்டியெழுப்பப்பட்ட சிவன் கோவில் உள்ளது. அங்கு செம்பியன்மாதேவியின் பிறந்த நாளான சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் வருடம் தோறும் கேட்டை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஊர் மக்களே சீர் எடுத்து வந்து அங்குள்ள செம்பியன்மாதேவி கற்சிலைக்கு சிறப்பு செய்து வழிபடுவார்கள்! இன்று அந்த கோவிலும் கேட்பாரற்று தான் கிடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு நவகிரக கோவில்கள் போன்ற வருமான தரும் கோவில்களை கணக்கிலெடுத்து கல்லா கட்டத்தான் நேரம் சரியா இருக்கு.

ஆளப்பிறந்தவன்...

இரா.ச.இமலாதித்தன்

26 நவம்பர் 2014

அண்ணன் வே.பிரபாகரனுக்கு அகவை 60!



அண்ணன் வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம் இது. அண்ணனை போலவே இந்த தம்பிக்கும் அதே விருச்சிக ராசி, அதே கேட்டை நட்சத்திரம். கேட்டை நிச்சயம் ஒருநாள் கோட்டையை ஆளும்! என்ற எதிர்பார்ப்போடும் - நம்பிக்கையோடும் அகவை 60ல் அடியெடுத்து வைக்கும் என் அண்ணனுக்கு இனிய வாழ்த்துகள்! சேவற்கொடி ஏந்திய தமிழின போர்க்கடவுளான எம்பெருமான் திருமுருகனை இதுவரை நேரில் பார்த்ததில்லை. பார்த்தேன், சம காலத்தில் முருகவதாரமாக புலிக்கொடி ஏந்திய என் அண்ணனான வே.பிரபகரனை...

இனிய அகவை 60 வாழ்த்துகள் அண்ணா!