நாம் தமிழர் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாம் தமிழர் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 நவம்பர் 2018

தமிழ்த்தேசிய நாட்காட்டி!



காமராஜர் - வேலுப்பிள்ளை பிரபாகரன் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
பொதுவாக நேதாஜி - பசும்பொன் தேவர் காம்பினேசனை தான் அதிகம் பார்த்திருப்போம். காரணம், ஐ.என்.ஏ., பார்வார்ட் ப்ளாக் கட்சி. மேலும் நேதாஜி வழியில் பயணித்த பசும்பொன் தேவருக்கும் - காமராஜருக்கும் இடையிலான அரசியல் பகைக்கு பலிக்கடா ஆனவரே இமானுவேல் சேகரன். இதன் பின்புலத்திலேயே, பசும்பொன் தேவரோடு மட்டுமில்லாது பிற்காலத்தில் நேதாஜியோடும் நேரெதிர் திசையில் பயணித்தவர் காமராஜர். இப்படியாக நேதாஜிக்கும், காமராஜருக்கும் கருத்தொற்றுமையே இல்லாத போது, இந்த நாம் தமிழரின் 2019ம் ஆண்டு நாட்காட்டி எந்த வகையில் இம்மூவரையும் இணைத்திருக்கிறது?



தமிழ் தேசியத்தின் முன்னோடிகளான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படங்கள் இடம்பெற்ற நாம் தமிழரின் தமிழ்த்தேசிய நாள்காட்டி. வரவேற்கிறோம்!

30 அக்டோபர் 2014

செபஸ்டியன் சைமனின் தேவர் சாதி ஒழிப்பு!

தான் பிறந்த நாளிலிருந்து தனது இறுதி நாள் வரை உ.முத்துராமலிங்கத்தேவர் என்றே சமகால மக்களால் அறியப்பட்டவரின் கையெழுத்து கூட, 'மு.உ.தேவர்' தான். இந்திய அரசியலை தாண்டி, உலகத்தமிழர்களுக்காக ஹிந்து அல்லாத பெளத்தம் உள்ளிட்ட  பல ஆன்மீக சொற்பொழிவாற்ற பல நாடுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். உள்ளூர் பள்ளி முதல் உலக நாடுகளுக்கு பயணிக்க தேவைப்படும் கடவு சீட்டு வரை பயன்படுத்திய அவரது பெயரும் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். அந்த திருப்பெயரை 107 ஆண்டுகள் கழித்தும் இன்றும் உலகெங்கும் பல அரசியல்வாதிகளால் அழைக்கப்படுவதும் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று தான்!

ஆனால் நேற்றைய மழையில் முளைத்த காளான் போல தமிழக அரசியலில் உருவெடுத்திருக்கும் ’நாம் தமிழர் கட்சி’ மட்டும், தெய்வத்திருமனாரை முத்துராமலிங்கனார் என சுருக்கி தமிழகமெங்கும் போஸ்டர் அடித்திருப்பது கண்டனத்துக்குரியது. பெருந்தமிழனரான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை. பெற்றோர் வைத்த ’செபஸ்டியன் சைமன்’ என்ற பெயரை சுருக்கி, தனக்கு தானே ’சீமான்’ என வைத்து கொண்டவரின் தலைமையில் கீழ் இயங்கும் கட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

திரு செபஸ்டியன் சைமன் அவர்களே, நீங்க வழக்கம் போல, உங்க சாதிக்கார முதலாளி திரு வைகுண்டராஜனோடும், உங்க சாதிக்கார தொலைக்காட்சி தந்திடிவியோடும், உங்க சாதிக்காரர் திரு. ஆதித்தனார் அன்று உருவாக்கிய நாம் தமிழர் கட்சி என்ற பெயரை காப்பாற்றி கொள்ளுங்கள். எங்களுக்கு ஏற்கனவே தெருவுக்கொரு கட்சி - அமைப்பு -  சங்கம் - பாசறை - கழகம்- இயக்கம்ன்னு எக்கசக்கமா இருக்கு. ஆனாலும் எங்க சாதி கட்சி தேர்தலில் வெற்றி பெறாது. ஏனென்றால் அதிமுகவுக்கு போட்ட முக்குலத்தோரின் ஓட்டு அக்ரிமெண்டே இன்னும் முடியிற மாதிரி தெரியல. அதுனால எங்க ஓட்டு உங்க மாற்று அரசியலுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


எனவே, உங்கள் வீட்டு சமையலறையில் மட்டும் இனி களமாடுங்கள். தயவு செய்து, எங்கள் தெய்வத்தின் பெயரோடு விளையாட வேண்டாம். மேலும், நரகாசூரனுக்கும். -, சூரபத்மனுக்கும் வீர வணக்கம் வைப்பதோடு உங்களது தமிழ்தேசியப்பற்றை நிறுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு உங்களோட உங்க பொங்கச்சோறும் வேண்டாம்; உங்க சங்காதமும் வேண்டாம்!

- இரா.ச.இமலாதித்தன்

28 அக்டோபர் 2014

மருதுபாண்டியர்களை புறக்கணிக்கும் சீமான்!



இந்த நாம் தமிழர் கட்சி காரய்ங்க, நரகாசுரனுக்கெல்லாம் வீரவணக்கம் ஃப்ளக்ஸ் அடிச்சு சொன்னாய்ங்க. ஆனால், தமிழ் தேசியத்தின் முன்னோடியான மாமன்னர் மருதுபாண்டியருக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட நடத்துன மாதிரியே தெரியல. இதுதான் தமிழ் தேசிய மாற்று அரசியலா? தீபாவளியே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டே நிரூபணம் செய்ய முடியாத நரகாசுரனுக்கு வீரவணக்கம் சொல்வீங்க. ஆனால், 500க்கும் மேற்பட்ட அனைத்து சாதி/மத மக்களும் மன்னர்களுக்காக தங்களுயிரையே தந்த அக்டோபர் 24ம் தேதியை வசதியாக மறந்து விடுவீர்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க, 200 வருடங்களுக்கு முன்பான காலத்திலேயே ’வீரசங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியரை மறந்து விட்டதா நாம் தமிழர் கட்சி? தமிழீழ விடுதலைப்புலிகளின் கொரில்லா போர்முறையை, 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்தி காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை புறக்கணித்ததன் உள்நோக்கம் தான் என்ன?