மருது பாண்டியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருது பாண்டியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 நவம்பர் 2018

சிங்கார பூமியிலே - போத்திராஜாவின் இசையில் பாடல் வெளியீடு.

"சிங்கார பூமியிலே... சிவகங்கை சீமையிலே" எனத் தொடங்கும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் புகழ் பாடும் 'சிங்கிள் ஆடியோ' வருகின்ற அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இப்பாடல், வரிசையூர் மணி அவர்களின் பாடல் வரிகளிலும், தம்பி மதுரை போத்திராஜாவின் இசையமைப்பிலும் - குரலிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 'தாய்மாமன் வாரானடி' பாடல் மூலம் அடையாளப்பட்ட போத்திராஜாவின் இம்முயற்சிக்கும் துணையிருப்போம். அன்புத்தம்பி போத்திராஜாவின் இசையிலும், குரலிலும் உருவான 'சிங்கார சீமையிலே' பாடல்!

https://youtu.be/zFh9d63cFlk

01 நவம்பர் 2018

தமிழ்த்தேசிய நாட்காட்டி!



காமராஜர் - வேலுப்பிள்ளை பிரபாகரன் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
பொதுவாக நேதாஜி - பசும்பொன் தேவர் காம்பினேசனை தான் அதிகம் பார்த்திருப்போம். காரணம், ஐ.என்.ஏ., பார்வார்ட் ப்ளாக் கட்சி. மேலும் நேதாஜி வழியில் பயணித்த பசும்பொன் தேவருக்கும் - காமராஜருக்கும் இடையிலான அரசியல் பகைக்கு பலிக்கடா ஆனவரே இமானுவேல் சேகரன். இதன் பின்புலத்திலேயே, பசும்பொன் தேவரோடு மட்டுமில்லாது பிற்காலத்தில் நேதாஜியோடும் நேரெதிர் திசையில் பயணித்தவர் காமராஜர். இப்படியாக நேதாஜிக்கும், காமராஜருக்கும் கருத்தொற்றுமையே இல்லாத போது, இந்த நாம் தமிழரின் 2019ம் ஆண்டு நாட்காட்டி எந்த வகையில் இம்மூவரையும் இணைத்திருக்கிறது?



தமிழ் தேசியத்தின் முன்னோடிகளான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படங்கள் இடம்பெற்ற நாம் தமிழரின் தமிழ்த்தேசிய நாள்காட்டி. வரவேற்கிறோம்!

26 அக்டோபர் 2018

மாமன்னர் மருதுபான்டியர்கள் யாருக்கு சொந்தம்?



மாமன்னர் மருதுபாண்டியர்கள் குறிப்பிட்ட இனக்குழுவிற்கு மட்டும் உரிமையானவர்கள் இல்லை; ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அடையாளமானவர்கள்; இது உண்மை தான்; ஆனால் இத்தனை நாட்கள், அகமுடையார்கள் கொண்டாடவில்லையென்றால், என்றைக்கோ மருதரசர் புகழை, கரடி கருத்தான் போன்ற காட்டிக்கொடுத்த துரோகிகளின் வம்சாவழியினரால் இருட்டடிப்பு செய்திருப்பார்கள். சிவகங்கை சீமை ஆட்சிப்பட்டியல் கல்வெட்டில் கூட, எம் மன்னவர்களின் பெயர்களை இடம்பெற செய்யாத அளவிற்கான அவலநிலையே இன்றளவும் தொடர்கிறது; இந்த அநியாயத்தை அகமுடையார்களை தவிர வேறு யாராவது கண்டித்தது உண்டா?
கொலை காரனுக்கும், கொள்ளை காரனுக்கும், தொடை நடுங்கிக்குமென கண்டவனக்கெல்லாம் தமிழ்நாடெங்கும் சிலை இருக்க, மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மதுரையை தவிர வேறெங்கும் முழு உருவ சிலைகள் உண்டா? 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்களின் சிலையை, இன்றளவும் கூட அங்கே வைக்க முடியாத அளவிற்கு துரோகம் உச்சத்தில் இருக்கிறது. இதுதான் கள எதார்த்தம். சாதியம் தாண்டி தமிழ் தேசியத்தை, மண்ணுரிமை மீட்பை, மக்கள் புரட்சியை எமக்குள் விதைத்து சென்ற ஆண்டவர்கள் அவர்கள்; எங்கள் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய அவர்களை, ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் கொண்டாட முன்வரும்போது நாங்கள் அவர்கள் பின்னால் நிற்போம். அதுவரை நாங்கள் முன்னெடுக்கும் எங்கள் கொண்டாட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
- இரா.ச. இமலாதித்தன்
#மருதுபாண்டியர் #MarudhuPandiyar #அகமுடையார் #Agamudayar

24 அக்டோபர் 2017

மாமன்னர்களுக்கு புகழ் வணக்கம்!




ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்பாகவே, ஐரோப்பிய ஏகாபத்தியத்திற்கு எதிராக ஐநூற்று தமிழர்களை பலிகொண்ட கொலைக்களம் எம் தமிழ்மண்ணான திருப்பத்தூர். காரணம் ஒன்றே; அது இன விடுதலையுடன் கூடிய மண்ணுரிமை தான். ஆங்கிலேயனுக்கு எதிராக, அனைத்து சிற்றரசர்களையும் ஒருங்கிணைத்து "வீர சங்கம்" என்ற மாபெரும் புரட்சி கூட்டணியை உருவாக்கி, ஜம்புத்தீவு போர் பிரகடனத்தை வெளியிட்ட எம் தமிழினத்தின் தலைமகன்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம், துரோகிகளாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தப்பட்ட மாதமிது. எனக்கான முன்னுதாரணம் இவர்கள்; மாபெரும் வீரம்பொருந்திய இம்மண்ணின் மைந்தர்கள்; புறநானூறு சொன்ன அகத்தமிழர்கள்; ஆதித் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளங்களாகி போன மாமன்னர்கள், எங்கள் மருதுபாண்டியர்கள்!
எம் முப்பாட்டன்களான மருதரசர்களுக்கு புகழ் வணக்கம்!

14 அக்டோபர் 2017

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மீதான வரலாற்று களங்கம்! (மறுப்பு கட்டுரை)





அக்டோபர் மாதத்திற்கும் வேலுநாச்சியாருக்கும் என்ன தொடர்பிருக்கிறதென தெரியவில்லை. ஐயா மு.ராஜேந்திரன் அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த திடீர் அக்கறையென்று புரியவுமில்லை. கரடி கருத்தான் என்ற துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு, காளையார்கோவிலை தகர்த்தெறிவோமென மிரட்டி திருப்பத்தூரில் தூக்குமேடையேற்றி சதிகாரர்களான ஐரோப்பிய இழிபிறவிகளால் அக்டோபர் 24, 1801ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்களை சூழ்ச்சியால் மரணமடைய வைத்த மாதம் இது. மருதுபாண்டியர்களின் விசுவாசிகள் என்ற காரணத்திற்காக சாதி மத வேறுபாடின்றி ஐநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழினக்குழுக்களை சேர்ந்தவர்களையும் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மாதமான இந்த அக்டோபரில் வேலுநாச்சியாரை நினைவூட்டியது ஏன் என்பது ஐயா மு.ராஜேந்திரனக்கே தெரிந்திருக்க கூடிய வியப்பான ரகசியம். மேலும், உலக வரலாற்றிலேயே குடிவழி ஆண் வாரிசுகளையும், சின்னஞ்சிறு குழந்தைகளையும் தேடித்தேடி கொன்ற மாபெரும் கொலைக்களம் திருப்பத்தூராக மட்டுமே இருக்க முடியும். இப்படியான வீரம்செறிந்த பெருஞ்சோக வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அக்டோபர் மாதத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களை இழிவுபடுத்தியது ஏன்?

”வேலுநாச்சியார் மீதான வரலாற்றுக் களங்கம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை 12.10.207 அன்று தி இந்து தமிழில் அவசரகதியில் மிகவும் பதற்றத்தோடு ஐயா மு.ராஜேந்திரன் எழுதிருக்கிறார். “வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம்.” இப்படியாக அவரது கட்டுரையை ஆரம்பித்து, ‘சோழர் கால செப்பேடுகள்’ என்ற நூலின் வரலாற்று ஆசிரியராக தன்னை முன்னிலைப்படுத்தி முடித்திருக்கிறார். இவரும் தங்களைத் தாங்களே வரலாற்றை முற்றுமுழுதாக கரைத்து குடித்தவர்கள் போல வரலாற்று ஆசிரியாக புனைந்து கொண்டிருக்கிறார் என்பதை இக்கட்டுரையை படித்து முடிக்கும் போது வெகுஎளிதில் புரிந்து கொள்ளலாம்.

“ஒரு பெண் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதில் உள்ள பலவீனத்தைக் கொண்டு அரசியின் வழியினரான நாலுக் கோட்டை குடும்பத்தின்மீதும் அக்குடும்பத்தின் பங்காளிகள் மீதும், சிவகங்கை பகுதி மக்கள் மீதும் அவர்கள் கொடுங்கோன்மையும் யதேச்சதிகாரத்தையும் பிரயோகித்தார்கள்” என சென்னை மாகாண ஆளுநர் எட்வர்ட் கிளைவ் 06.07.1801-ல் வெளியிட்ட பிரகடனத்தை ஆதாரமாக சொல்லும்போதே ஐயா. மு.ராஜேந்திரனின் வரலாற்றறிவை புரிந்துகொள்ள முடிகிறது. எப்படியென்றால், வேலுநாச்சியார் 1796லேயே இறந்து விடுகிறார் என்பது ஊரறிந்த விசயம். ஆனால், இந்த கிளைவ் அறிக்கையில் 1801ம் ஆண்டிலும் பெண் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறாரென்ற தொனியில் சொல்லப்பட்ட பொய் பரப்புரையை ஆவணமாக சொல்லிருக்கிறார், நம் ஐயா மு.இராஜேந்திரன். அடுத்து, எட்வர்ட் கிளைவ்க்கு 1796லிருந்து 1801 வரை ஐந்தாண்டுகள் கோமாவிலிருந்து பிழைந்த வந்தவன் போல சொல்லிருக்கும் இந்த அறிக்கையை எப்படி ஒரு மாபெரும் வரலாற்று அறிவையுடைய ஐயா.மு.ராஜேந்திரன் ஏற்றுக்கொண்டார் என்பது அவர் மனசாட்சிக்கே விட்டுவிடலாம்.

அதிலும் உட்சபட்ச கோமாளித்தனம் என்னவென்றால் சிவகங்கை மக்கள் மீது கொடுங்கோன்மையும், யதேச்சதிகாரத்தையும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிரயோகித்தார்கள் என்று சொல்லிருப்பது தான். ஒருவேளை இப்படி அவர்கள் நடந்திருந்தால் தன் மன்னனுக்காக தன்னுயிரையே நூற்றுகணக்கானோர் அக்டோபர் 24ம் தேதி உயிர்கொடை கொடுத்திருப்பார்களா என்ன? ”தன்னாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம்; எப்போதும் மூடப்படாமல், திறந்தே இருக்கும் மருதுபாண்டியர் அரண்மனையின் வாசற்கதவுகள்” என்று சொன்னதும் கூட எட்வர்ட் கிளைவோடு பணியாற்றிய ஆங்கில தளபதிகளில் ஒருவர் தானே? கி.பி. 1772 முதல் கி.பி. 1780 வரையிலான எட்டு ஆண்டுகள் திண்டுக்கல் - விருப்பாட்சியில் யாரிடம் அடைக்கலம் புகுந்தார் வேலுநாச்சியார்? நாலுக்கோட்டை குடும்பத்தினரிடமா? பங்காளிகளிடமா? இல்லையே; அவர் நம்பிக்கை முழுவதும் மாமன்னர் மருதுபாண்டியர்களிடம் தானே இருந்தது? ஏன் மாமன்னர் மருதுபாண்டியர்களோடு வேலுநாச்சியார் கை கோர்த்தாரென ஐயா மு.இராஜேந்திரன் சிந்தித்திருந்தால், எட்வர்ட் கிளைவின் உளறலை உதாரணமாக சொல்லிருக்க மாட்டார். அப்போதுள்ள சூழலில் எப்படியாவது சிவகங்கையை தன் வசமாக்க வேண்டுமென நினைத்திருந்து, உள்ளுக்குள்ளாகவோ அல்லது உள்நாட்டிற்குள்ளவோ பகையை ஏற்படுத்த ஐரோப்பிய இழிபிறபிகள் தீட்டிய திட்டங்களில் இந்த அறிக்கையும் ஒன்று என்பதை சின்னக்குழந்தைக்கு கூட புரியக்கூடும். ஆனால், இதை வரலாற்று ஆசிரியர் ஐயா மு.இராஜேந்திரன் தான் வலுக்கட்டாயமாக அறிய மறுக்கிறார்.
மாமன்னர் மருதுபாண்டியர்களில் மூத்தவரான பெரியமருதுவின் இயற்பெயர் வெள்ளை மருது; இளையவரின் பெயர் சின்ன மருது. இதில் மருது என்பதற்கான பின்புலம் அவர்களின் தாய் - தந்தை வழி குலதெய்வங்களான வாணியங்குடி மருதப்ப ஐயனார் மற்றும் மருதங்குடி மருதாருடையார் என்பதன் நினைவாக மருது என்ற பெயர் வைக்கப்பட்டது. அடுத்து வெள்ளை என்பதற்கு வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் படைப்பிரிவில் இருந்ததன் காரணமாக வெள்ளை மருது என பெயர் சூட்டப்பட்டது. சரி; சில சந்தேகங்களை இங்கே வைக்கிறோம். இவற்றிற்கெல்லாம் ஐயா மு.இராஜேந்திரனிடம் மட்டுமல்ல; அவரைப்போன்ற உள்நோக்கம் கொண்ட யாரிடமும் பதில் இருக்காது.

வேலுநாச்சியார் பெற்றெடுத்த மகளுக்கு ஏன் வெள்ளச்சி நாச்சியார் என பெயர் சூட்டப்பட்டது?

வெள்ளச்சி நாச்சியர் பிறந்த ஆண்டிற்கான ஆதாரம் இருக்கிறதா?

கி.பி.1793 லேயே வெள்ளச்சி நாச்சியார் ஏன் திடீரென இறந்தார்?

கி.பி.1796ல் இறந்த வேலுநாச்சியாருக்கு முன்பாக வெள்ளச்சி நாச்சியார் இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

வேலுநாச்சியார் பெரியமருதுபாண்டியரை திருமணம் செய்து கொண்டதாக பலரும் தங்களது நூல்களில் குறிப்பிட்டு இருக்கின்றனர். அவர்களில், 1944ம் ஆண்டில் ’குமரிமலர்’ இதழில் திரு. தி.நா. சுப்ரமணியன், ’மருது சகோதரர்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் திரு. எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், ’பஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்’ என்ற நூலில் திரு. ஜெகவீரபாண்டியனார், ’ஊமைத்துரை’ நூலில் வித்வான் திரு. ந.சண்முகம், ’வீராங்கனை வேலுநாச்சியர்’ என்ற நூலில் திரு. சிரஞ்சீவி, ’தென்னிந்திய வரலாறு’ கி.பி.1356 முதல் கி.பி 1983 என்ற நூலில் டாக்டர் ஏ.சுவாமிநாதன், பேராசிரியர் வானமாமலை உள்ளிட்ட ஏராளமானோர் வேலுநாச்சியார் பெரியமருதுபாண்டியரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக நிரூபணம் செய்திருக்கின்றனர். ஜெ.ஹெச்.நெல்சன் எழுதிருக்கும் ’THE MADURA COUNTRY - A MANUAL’ என்ற நூலில் கூட வேலுநாச்சியாரை Mitress என்ற வார்த்தையிலுள்ள உள்ளார்ந்த அர்த்ததை ”மருதுபாண்டிய மன்னர்கள்” வரலாற்று நூலில் வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரனார் புரிய வைக்கிறார். இவற்றையெல்லாம் தொகுத்து வரலாற்று ஆவணமாக ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கும் போற்றுதலுக்குரிய வரலாற்று ஆய்வாளர் மீ.மனோகரனார் அவர்களுக்கு இந்நாளில் நன்றியை காணிக்கையாக்குகிறோம். மேலும்,

வேலுநாச்சியார் நாலுக்கோட்டை குடும்பத்தை சேர்ந்த முத்துவடுகநாதருக்கு வாழ்க்கைப்பட்டவர். அந்த நாலுக்கோட்டையினர் யாராவது இந்த மறுமணத்தை எதிர்த்து மறுப்பு தெரிவித்ததாக ஆதாரம் ஏதும் இருக்கிறதா? ஆனால் நாலுக்கோட்டை வழியினரான சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவர், தன்னுடைய கடைசி காலம் வரை மாமன்னர் மருதுபாண்டியர்களோடு தான் அவர்களுக்கு ஆதரவாக நின்றார்; இது தான் வரலாற்று உண்மை. இதைப்பற்றி, மலேசியத்தமிழரும் வரலாற்று ஆசிரியருமான திரு. ப.சந்திரகாந்தம் எழுதிய ’ஆளப்பிறந்த மருது மைந்தன்’ என்ற நூலில் கடைசி அத்தியாத்தில், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும் - படமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கும் இடையேயுள்ள உட்பகையையும், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும், மாமன்னர் சின்ன மருதுபாண்டியரின் வாரிசான துரைச்சாமி சேர்வைக்கும் உள்ள பாசப்பிணைப்பையும் விவரிக்கும் சில செய்திகள் இந்த பக்கங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதை வைத்தே மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கும், ஒருசில துரோகிகளை தவிர வேற யாருக்கும் எவ்வித பகையும் இல்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்னவர்களின் கருத்தையெல்லாம், ஆதாரத்தோடு இல்லையென்று மறுக்க ஐயா மு.இராஜேந்திரனுக்கு திராணி இருக்கிறதா? 1772 - 1780 வரையிலான இக்கட்டான சூழலில் வேலுநாச்சியாரை காத்து, இழந்தை நாட்டை மீண்டும் கைப்பற்றியது மாமன்னர் மருதுபாண்டியர்களால் தானே? இழந்த சீமையை மீட்ட வரலாறு வேறெங்கும் உண்டா? அப்படியான புகழை உருவாக்கி கொடுத்த மாமன்னர் மருதுபாண்டியர்களை போற்றாமல் கூட இருந்திருக்கலாமே ஐயா மு.இராஜேந்திரன்? ஏன் இப்படி தூற்றிருக்கிறீர்கள்? வரலாற்று பிழை செய்தது நீங்கள் தான்; மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆன்மா உங்களைப் போன்றோரை ஒருபோதும் மன்னிக்காது.; நிச்சயம் ஒருநாள் இதற்காக வருந்துவீர்கள். அன்றைய நாட்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை பற்றி அவதூறாக எழுதுவதற்காக, அதே மறவர் இனக்குழுவை சேர்ந்த தினகரன் தேவர் என்பவர் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டார். அதே போல, இன்றும் எங்கள் விரல்களை கொண்டே எம் கண்கள் காயப்படுத்தப்படுகிறதென்பதை எங்களாலும் அறிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற எந்தவொரு சூழ்ச்சிகளையும் இளந்தலைமுறையினர் எளிதாக கடந்து, ஒற்றுமையாக செயல்படுவோம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஓங்கட்டும் மாமன்னர் மருதுபாண்டியர் புகழ்! பெருகட்டும் அகமுடையார் ஒற்றுமை!

மறக்க முடியுமா மாமன்னர் மருதுபாண்டியரை!?அடக்க முடியுமா அரசாண்ட அகமுடையாரை?!


- இரா.ச.இமலாதித்தன்

(படங்கள்: மீ.மனோகரனாரின் ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ பக்: 161, 162, ப.சந்திரகாந்தத்தின் 'ஆளப்பிறந்த மருது மைந்தன்' பக்: 706, 707)

08 அக்டோபர் 2017

தலைவன் உருவாக யுகம் தேவைப்படலாம்!

("ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுகிறது!" - தளபதி விஜய், மெர்சல் டீசரிலிருந்து...)
உண்மை தான்.
தலைவனாகும் தகுதி ஒரு சிலருக்கு பிறப்பிலேயே இயல்பாக அமைந்து விடுகிறது. வேறு சிலருக்கு பிறந்ததற்கு பின்னால், அத்தகுதியை சூழல்கள் உருவாக்கி கொடுக்கின்றன. ஆனால், இந்த இரு வகையினருமே பெரும்பாலும் தன்னையறிந்து கொள்ளாமலேயே ஆளுமைமிக்க அந்த தகுதியை பயன்படுத்துவதில்லை; சரியான நேரத்தில் முடிவெடுக்க தெரியாமல், தகுதி இருந்தும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இங்குண்டு. வரலாற்று நிகழ்வுகளை ஆழ்ந்து கவனிக்கும் போது, விரல் விட்டு எண்ணுமளவிற்கு வெகு சிலருக்கு தான், தலைவனாகும் தகுதியை, பிறப்பும் - சூழலும் - நேரமும் உருவாக்கி கொடுத்திருக்கிறது. எனக்கு தெரிந்து இவையனைத்தும் சரியாக பொருந்தி வரலாற்றில் நிலை நிறுத்திக்கொண்டது, மாமன்னர் மருது பாண்டியர்கள் தான்!

16 செப்டம்பர் 2017

சிவகங்கை சீமை: துரோகமும் - பாசமும்!









மலேசியத்தமிழரான ப.சந்திரகாந்தம் எழுதிய "ஆளப்பிறந்த மருது மைந்தன்" நூலிலுள்ள கடைசி அத்தியாத்தில் சொல்லப்பட்ட செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும் - படமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கும் இடையேயுள்ள உட்பகையையும், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும், மாமன்னர் சின்ன மருதுபாண்டியரின் வாரிசான துரைச்சாமி சேர்வைக்கும் உள்ள பாசப்பிணைப்பையும் விவரிக்கும் சில செய்திகள் இந்த பக்கங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.


- இரா.ச. இமலாதித்தன்

11 ஜூன் 2017

216 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்புத்தீவு பிரகடன நிகழ்வு!





மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்தது அகமுடையார் இனக்குழு என்பதால் அவரை அகமுடையார் இனக்குழுவை சேர்ந்தவர் மட்டுமே உரிமை கொண்டாட வேண்டிய கட்டாயமில்லை. எடுத்துக்காட்டாக, அம்பேத்கர், ஈ.வெ.ரா., வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் போன்றவர்களை தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும், ஹிந்துத்துவ அமைப்புகளும், இன்னபிற புரட்சிகர அமைப்புகளும் பயன்படுத்துகின்றனர்; இப்படி இவர்களை பலரும் பயன்படுத்துவதால் எவ்வித குழப்பமும் யாருக்கும் வந்ததில்லை. எத்தனை பேர் இவர்களின் படங்களையும், பெயர்களையும் பயன்படுத்தினாலும் கூட அவர்களது தனித்த அடையாளம் ஒருபோதும் மாறப்போவதே இல்லை.


தாய் மண்ணில் கோலோச்சிய அந்நியர்களின் அடக்குமுறைக்கு எதிராக, அனைத்து இனக்குழுக்களையும் இணைத்து தான் 'வீரசங்கம்' என்ற அரசியல் கூட்டமைப்பையே மருதுபாண்டியர்கள் உருவாக்கினர். பொது ஆண்டு 1801 ஜுன் மாதம் 12ம் தேதி, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகிலேயே முதன் முதலாக 'ஜம்புத்தீவு' போர் பிரகடனத்தை 'வீரசங்கம்' என்ற கூட்டமைப்பின் சார்பாக திருச்சி-திருவரங்கத்தில் சின்ன மருதுபாண்டியர் வெளியிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்டு 216 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்ற ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது. ஒரு தலைமுறை என்பது சராசரியாக 33 ஆண்டுகள்; அந்த வகையில் கணக்கிட்டால், ஏறத்தாழ ஏழு தலைமுறைகள் கடந்து, இந்த 2017ம் ஆண்டில் தமிழ்தேசியவீரச்சங்கம் சார்பாக திருச்சி திருவரங்கத்தில் மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வு ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ளது. மாமன்னர் மருது பாண்டியர்கள் 216 ஆண்டுகளுக்கு முன்பாக, எந்தவொரு குறிப்பிட்ட இனக்குழுவின் அடையாளமுமின்றி 'வீரசங்கம்' என்ற எப்படியான கூட்டமைப்பை உருவாக்கி 'ஜம்புத்தீவு' பிரகடனத்தை வெளியிட்டனரோ, அதே போன்ற நிகழ்வை தமிழ் தேசிய வீரச்சங்கம்அமைப்பினர் மீண்டும் நம் சமகாலத்தில் அந்தவொரு களத்தை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ் தேசிய அடையாளத்தோடு அரசியலில் பயணிக்கும் பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், தனியரசு உள்ளிட்ட அனைத்து தமிழ் இனக்குழுவை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இப்படியான மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வை ஒருங்கிணைக்கும் சகோ. மருதுபாலா உள்ளிட்ட அனைத்து உறவினர்களுக்கு நன்றியும், விழா சிறக்க வாழ்த்துகளும்!

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மாமன்னர் மருதுபாண்டியர்கள் மீது உணர்வுள்ளவர்களும், ஜூன் 12ம் தேதி காலை 8 மணிக்கு திருச்சி திருவரங்கத்தில் ஒன்று கூடுங்கள்; சந்திப்போம்.

- இரா.ச. இமலாதித்தன்

07 ஜூலை 2016

மருதுபாண்டியர்களின் பள்ளிவாசல்!


1780 முதல் 1801ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், நரிக்குடி-முக்குளத்தில் கட்டியெழுப்பிய "ஜமால் அவுலியா" என்ற பள்ளிவாசல்!

02 மார்ச் 2016

'சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த அகமுடையார்!'


முக்குலத்தோர் என்ற பெயரில் நடத்தப்படும் எந்த போராட்டத்தாலும் வெற்றி கிடைத்ததில்லை என்பதே கடந்தகால வரலாறு. இந்த மாதிரியான போரட்டங்களுக்கு பிறகு, புதுப்புது அமைப்புகளும், புதுப்புது தலைவர்களும் தான் உருவெடுப்பார்கள். அதுவும் இப்போதைய சூழல் என்பது தேர்தல் நேரமென்பதால், இந்த மாதிரியான போரட்டங்களால் சிலர் அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஏதாவதொரு திராவிட கட்சிகளிடம் கூடிய கூட்டத்தை கணக்கு காட்டி, முக்குலத்தோர் இளைஞர்களெல்லாம் எங்கள் பக்கம். அதனால் இம்முறை உங்களுக்காக தேர்தல் பணியாற்றுகிறோம் என்று கூறி சாதியை ஓட்டு என்ற பெயரில் அடகு வைக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட அகமுடையார் அமைப்புகள் மட்டும் போராட்டம் செய்வதுதான் சரியான நடைமுறை. மாறாக, முக்குலத்தோர் அமைப்புகளை வைத்து போராட்டம் செய்வதால் எந்த பயனும் கிடைக்க போவதில்லை.
ஏனெனில், இதே முக்குலத்தோர் அமைப்புகள் தான், சிவகங்கை சமஸ்தானத்தில் ஆட்சியாளர்கள் பட்டியலுள்ள கல்வெட்டில் மாமன்னர் மருதுபாண்டியர் பெயர்களை இடம்பெற செய்யாமல் விட்ட போதும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை திட்டமிட்டு அழித்தொழிக்கும் செயலுக்கு மறைமுகமாக ஆதரவும் தந்து கொண்டிருப்பவர்கள்.

நரிக்குடி பிரச்சனையை முதலில் அங்குள்ள அகமுடையார்களோடு கலந்து பேசி சரி செய்து, மணிமண்டபம் பற்றிய கோரிக்கையை அரசுக்கு நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லாமல், செய்யப்படுகின்ற இந்த மாதிரியான போராட்டங்களால் எந்த பயனுமில்லை என்று நிச்சயமொரு நாள் புரிந்து கொள்ளப்படும் அனைவராலும்.

- இரா.ச. இமலாதித்தன்

19 டிசம்பர் 2015

முக்குளத்தை முக்குலத்தோருக்கு தெரியுமா?


அகமுடையார் முதுகில் சவாரி செய்யும் முக்குலத்து அமைப்பினரே!

இந்த வீடு யாருடைய வீடு?
இங்கு யார் பிறந்தார்கள்?
இந்த வீடு எங்குள்ளது?

இதெல்லாம் தெரியுமா? அக்டோபர் மாதம் மட்டும் அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்த புண்ணியபூமியில் உங்களது பாவப்பட்ட பாதங்கள் பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இடம்: நரிக்குடி-முக்குளம்.

இங்குதான் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவதரித்தனர். அப்படிப்பட்ட பெருமைமிகு இந்த வீட்டை சீரமைக்கவோ, இங்கு மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டவோ, அவர்கள் பிறப்பெடுத்த இவ்வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூட வக்கில்லை. கேட்டால் 'வாழும் மருது' என அடைமொழியை பெயருக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் போட்டுகொள்வீர்கள்.

வாழ்க முக்குலம்! ஒழிக முக்குளம்!

- இரா.ச.இமலாதித்தன்

15 நவம்பர் 2015

மருதுபாண்டியர்களை அவமதிக்கும் அரசாங்கம்!







அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசியத்தின் முன்னோடி அமைப்பின் மூலமாக கி.பி.1800 களிலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த, மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவொரு தமிழனும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழனின் வீரத்தையும், கொரில்லா போர்முறையும் அன்றைக்கே வெளிக்காட்டி, 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட, முதல் சுதந்திர போராட்ட வீரர்களான 'வெள்ளை மருது - சின்ன மருது' என்ற மருது சகோதர்களின் வெண்கல சிலைகளின் அவலத்தை பாருங்கள். சிவகங்கை அருங்காட்சியகத்தின் வெளியே புல் மண்டி கிடக்கும் இடத்தில் வெண்கல சிலைகளின் இழிநிலையை பார்த்தும் சலனம் ஏதுமின்றி நகர்ந்து சென்றால் நீங்களும், உணர்வுள்ள அக்மார்க் பச்சை தமிழனே!

இதை இத்தனை நாட்களாக கண்டும் காணாமல் ஒன்றுமே செயல்படுத்தாத சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா? வருடந்தோறும் அக்டோபர் 24ம் தேதி மருது சகோதரர்களுக்கு அரசு விழா மட்டும் எடுக்கிறது இந்த அரசாங்கம். ஆனால், அவர்களின் முழு உருவ வெண்கல சிலைகளை இப்படி கேட்பாரின்றி அவமானப்படுத்திருக்கும் இச்செயலை கண்டிக்க கூட ஆளில்லை என்பது தான் வருத்தமான விசயம்.

மேலும், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி அருகிலுள்ள முக்குளம் கிராமத்தில் அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டை சீர்படுத்தி அங்கேவொரு மணிமண்டபம் கட்டவும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யுமா இந்த அரசாங்கம்?


- இரா.ச.இமலாதித்தன்

27 அக்டோபர் 2015

நாம் தமிழரே மாற்று!



நாம் தமிழர் கட்சியிடமிருந்து அனைத்து கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களில் முதன்மையானது, சுவரொட்டி, பதாகைகளில் தான். யாருக்காக, எந்த நிகழ்வுக்காக பதாகை-சுவரொட்டி வைக்கிறோமென்ற செய்தியே வெளித்தெரியாமல், தலைமையை துதி பாடி, தலைமையின் பெயரும் படமும் மட்டுமே பெரிதாக இருக்கும். அவர் அழைக்கிறார், இவர் அழைக்கிறாரென இருக்குமே தவிர, யார் விழாவிற்கு, எந்த நிகழ்விற்கு என்பதே தெரியாமல் போய்விடும்.

முதலில், ஒரு தலைவனை ரொம்பவே மெனக்கெட்டு பெரிய பிம்பமாய் நிலை நிறுத்துகிறார்கள். பிறகு தங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவனென்ற வெறும் பிம்பத்தோடு அருகே நின்று படம் பிடித்து படம் காட்டுகிறார்கள்.

இந்த விதத்தில் நாம் தமிழரே மாற்று.

மருது பாண்டியர் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணி மண்டபம்!

அனைத்து இணையமெங்கும் - இதயமெங்கும் - இவ்வூரெங்கும் - மாமன்னர் மருதுபாண்டியர்களாக தென்படுகின்றனர். தமிழ் தேசியத்தின் முன்னோடிகளை நினைவுபடுத்தும் அனைவருக்கும்,
தமிழ் தேசியத்திருநாள் நல் வாழ்த்துகள்!

 ~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி-முக்குளத்தில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும். அக்டோபர் மாதம் மட்டும் மாலை அணிவித்துவிட்டு போகும் அரசியல்-சாதி கட்சிகள் இதை முன்னெடுக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட விருப்பப்படும் அனைத்து உறவுகளும், கீழே உள்ள கோரிக்கையை காப்பி செய்து, http://www.cmcell.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக முதல்வர் தனிப்பிரிவுக்கு இதை அனுப்பலாம். நாம் அனுப்பும் இந்த கோரிக்கையானது அதிகமானால் மணிமண்டபத்தை அரசங்கமே விரைவாக கட்டி முடிக்க வாய்ப்பு அதிகமுள்ளது.

-------------------------------------------
வணக்கம்!
முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது சகோதரர்களின் நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் அரசுவிழா நடைபெற்று வருகிறது. இது தமிழக அரசின் முன்னெடுப்பால் தான் சாத்தியாமானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின / குடியரசு தின உரையில், மாமன்னர் மருதுசகோதரர்களின் சுதந்திர போராட்ட வீரத்தை பறைசாற்றும் வகையில் அவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி, கூடவே அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஊதியத்தொகையை அதிகரித்து கொடுத்து வரும் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவிக்க நாங்கள் அனைவருமே கடமைப்பட்டிருக்கின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, உத்ரகாண்ட் நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு. தருண்விஜய் அவர்கள் கூட, ”நாட்டுக்காக உயிர் நீத்த மருது சகோதரர்கள் பற்றிய வரலாற்று செய்தியை நாடு முழுவதுமுள்ள பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்படிப்பட்ட நாடுபோற்றும் சுதந்திர போராட்டவீரகளான மாமன்னர் மருதுசகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி-முக்குளம் என்ற ஊரில் அவர்களது நாட்டுப்பற்றை உலகறிய செய்யும் வகையில் அங்கே ஒரு மணிமண்டபம் கட்டி, அவர்கள் பிறந்த வீட்டை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். எந்தவிதமான செயற்கரிய கோரிக்கையை கூட செயல்படுத்தும் வல்லமையும், தாயுள்ளமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணான நரிக்குடியில் மணிமண்டபத்தை ஏற்படுத்துவார்களென நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நன்றி.
---------------------------------

25 அக்டோபர் 2015

ஆளும் வர்க்கத்தை தட்டிக்கேட்போம்!


அதிகாரத்துல இருக்கிறவனெல்லாம், சாவு வீட்டுக்கு போனாலும் பிணத்துக்கு முன்னாடி நின்னு போஸ்தான் கொடுக்குறாய்ங்க; கல்யாண வீட்டு போனாலும் மாப்பிள்ளையை ஓரமா தள்ளிட்டு பொண்ணு பக்கத்துல போஸ்தான் கொடுக்குறாய்ங்க. அதையெல்லாம் விமர்சனம் பண்ணினா, தன்னோட பதவியை பயன்படுத்தி தனிநபர் தாக்குதல் செய்றாய்ங்க.
அதற்கு ஓர் உதாரணம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர் நினைவிடத்தில்... "144 தடையையும் போட்டுக்கிறீங்க, போட்டோவுக்கு போஸூம் கொடுத்துக்குறீங்க?!" என்ற இந்த ஒற்றைக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வக்கில்லை என்பதுதான்.
இக்கேள்வியை துணிச்சலாக கேட்ட காரைக்குடி மாமன்னர் மருதுபாண்டியர் நலச்சங்க செயலாளரான சகோதரர். செந்தில் சேர்வைக்கு எம் நன்றியும் - வாழ்த்துகளும்!

மருதுபாண்டியருக்காக குரல் கொடுத்த தருண்விஜய் எம்.பி!



தமிழரல்லாத உத்ரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு. தருண் விஜய் அவர்கள் சொன்ன மாமன்னர் மருதுபாண்டியர்கள் பற்றிய கோரிக்கையை நினைத்து, இத்தனை வருடங்களாக வாயே திறக்காத தமிழ்நாட்டு மாநிலங்களவை - மக்களவை உறுப்பினரெல்லாம் இனி வெட்கி தலை குனிய வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழனத்தின் சார்பாக நன்றி மாண்புமிகு. தருண் விஜய்க்கு!

24 அக்டோபர் 2015

போற்ற வேண்டிய தெய்வங்கள் மருதுபாண்டியர்!


உலகிலேயே முதன்முறையாக ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி "வீரசங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.

பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை - கடின உழைப்பை - நாட்டுப்பற்றை - தன்னம்பிக்கையை - இறை பக்தியை - அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல் ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருதுசகோதரர்களது விசயத்தில் மட்டுமே நடந்தேறியது என்பதை நினைக்கையில் மருதுசகோதரர்களின் வீரத்தையும் ஆளுமையையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியை பிடிப்பதற்காக துரோகிகளின் தூண்டதலால் மெய்க்காப்பாளன் கருத்தன் மூலமாக காட்டிக்கொடுக்கப்பட்டு மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிடும்போது அவர்களுக்கு ஆதராவாக கடைசிவரை நின்ற அனைத்து தரப்பட்ட மக்களான 500க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட அதிர்ச்சிகரமான மாபெரும் துயர சம்பவமும் இங்கேதான் அரங்கேறியது.

இன்றைய காலக்கட்டங்களில் விடுதலைப்புலிகள் உள்பட பல இராணுவ இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கொரில்லா போர்முறையை மிக நேர்த்தியாக அன்றைக்கே பயன்படுத்தி வெற்றிவாகை சூடிய மருதுபாண்டியர்களை வெறும் சாதீய வட்டத்தில் மட்டும் அடைக்க நினைப்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

ஆன்மீகப்பணியில் கிருத்துவம் - இசுலாம் - ஹிந்து என்ற பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களையும் திருப்பணி செய்த மண்ணுரிமை போராளிகளான வெள்ளை மருதுவும் - சின்ன மருதுவும் நாம் போற்றி வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள் என்பதை நினைவில் கொண்டு எந்நாளும் அவர்களது ஆளுமையையும் வீரத்தையும் விவேகத்தையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இன்று 214வது வீரவணக்க நினைவேந்தல் நாள்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்.

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?


உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.

எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!
எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி 500 க்கும் மேற்பட்ட மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 214 வது நினைவேந்தல் நாள் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்

மருது பாண்டியர் நினைவேந்தல்!

உலக வரலாற்றில் சாதி மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்டோரை தங்களது மன்னனுக்காக தூக்கிலிடப்பட்ட ரத்த சரித்திரம் 1801ம் ஆண்டு அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழ் மண்ணில் அரசாண்ட அனைத்து சிற்றரசர்களையும் சாதி மத வேற்றுமையின்றி தமிழ் இனக்குழுக்களையெல்லாம் ஐரோப்பிய வல்லாதிக்கத்திற்கு எதிராக, "வீரசங்கம்"என்ற பேரமைப்பு மூலம் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள், தமிழ்தேசியத்தின் முன்னோடி!

‪#‎மருதுபாண்டியர்‬

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக, திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கம் கோவில் வாசலிலும் "ஜம்புத்தீவு" போர் பிரகடனத்தை அறிவித்த முதல் சுதந்திர போரின் மாவீர்களின் வீரம் விதைக்கப்பட்ட நாள் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னோடியாக, "கொரில்லா போர்யுக்தி முறை"யை கையாண்டு வெற்றி கண்ட மாமன்னர்களின் மரணம் முத்தமிட்ட நாள், அக்டோபர் 24.

‪#‎மருதுபாண்டியர்‬

சிவகங்கை சமஸ்தானத்தை 1780 முதல் 1801 வரை ஆட்சி செலுத்தி தமிழ்தேசிய மாமன்னர்களான வெள்ளை மருது - சின்ன மருது இரு மருதரசர்களையும் சூழ்ச்சியின் வலைபின்னி கரடி கருத்தான் மூலமாக துரோகிகளால் காட்டிக்கொடுத்து வரலாற்றில் துயரம் விளைவித்த நாள் இன்று. அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

அக்டோபர் 24, கி.பி.1801...
மாமன்னர் மருதுபாண்டியர்களால் எடுப்பித்த காளையார்கோவில் கோபுரங்கள் தகர்க்கப்படுமென்ற ஐரோப்பியர்களின் தந்திரத்தை முறியடித்த ஆன்மீகப்பற்றாளர்களான தீவிர முருக-சிவ பக்தர்களான மருதீசர்களின் 214 வது நினைவேந்தல் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

மறக்க முடியுமா?
மாமன்னர் மருதுபாண்டியர்களை!
அடக்க முடியுமா?
அரசாண்ட அகமுடையார்களை!
அக்டோபர் 24 - அரசு விழா, திருப்பத்தூர்.
அக்டோபர் 27 - அரசியல் விழா, காளையார்கோவில்.

‪#‎மருதுபாண்டியர்‬

தங்கள் மன்னனுக்காக தங்களது உயிரை துச்சமென நினைத்து, சாதி மத வேறுபாடின்றி தங்கள் உயிரை கொடுத்த 500க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீரமும் ஈரமும் உலகிலேயே இதுவரை நடந்ததில்லை; நடக்க போவதுமில்லை.
அது, கி.பி.1780 முதல் கி.பி.1801 வரையிலான மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலம்.

‪#‎மருதுபாண்டியர்‬





23 அக்டோபர் 2015

நாகையில்...

( நாகை புதிய பேருந்து நிலையமுள்ள அவுரித்திடலில் வைக்கப்பட்ட பதாகை)


மாமன்னர் மருதுபாண்டியர்களின் 214வது நினைவேந்தலுக்காக, நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகையில் 30 × 10 அடி அளவிலான பதாகையை வைத்தோம்.
இடம்: நாகப்பட்டினம் - புதிய பேருந்து நிலையம், அவரித்திடல்.