31 டிசம்பர் 2017

ரஜினியின் ஆன்மீக அரசியல்!

சாதி; மதமெல்லாம் இருக்கட்டும். முதலில், தன்னை சுற்றிக்கொண்டிருக்கும் பார்பனீய பாம்பை விட்டு வெளிய வர முடியுமா?

Image may contain: one or more people and text
'ஆன்மீக அரசியல்' என சொன்னதும், ஆரியமும் - திராவிடமும் குழப்பத்தில் மூழ்கிருக்கிறது. இத்தனை வருடங்களாக ஆன்மீகம் என்ற பெயரில் வெறியேற்றி அரசியல் செய்தவர்களின் நிலைதான் கவலைக்கிடமாக கிடக்கிறது; இருக்கிற நாலு பேரும் ரஜினி பின்னாடி போய்டுவாங்களோன்னு பயப்பட வைத்த ரஜினிக்கு வாழ்த்துகள்!


கொள்கைகள் என்னவென்று கேட்டவுடன் தலையே சுற்றி விட்டது.
- ரஜினி.
அப்படியெனில் தமிழக அரசியலுக்கு வருவதற்கான முழுதகுதியும் இருக்கிறது; இனிமே இங்கே நல்ல எண்டர்டெயின்மெண்ட்டும் இருக்கு; வரவேற்கிறோம்.
Image may contain: 2 people, people smiling, people standing, beard and sunglasses


வருங்கால துணை முதலமைச்சரும், இளைஞரணி தலைவருமான தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

30 டிசம்பர் 2017

'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

Image may contain: 1 person, smiling, closeup

'மீனாட்சி மிஷன்' மருத்துவமனையின் நிறுவனரும், 'மகாசேமம்' என்ற சுயநிதி உதவிக்குழுமத்தின் நிறுவனரும், 'அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக'த்தின் நிறுவனத்தலைவருமான வாராப்பூர் ஜமீன்கோட்டை பெற்றெடுத்த 'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

29 டிசம்பர் 2017

சொர்க்க வாசல் (8+2=10)

No automatic alt text available.


எண்களின் தோற்றம் என்பது எண்ணங்களின் பரிணாமத்தில் தான் உருவாகிருக்கிறது. எண்களுக்கும் எண்ணங்களுக்குமான நீண்டவொரு தொடர்பு இருக்கின்றது; அத்தொடர்பை கண்கள் தான் தீர்மானிக்கின்றன. எண்களில் சுழியம் என்பது நம்முடைய கண்டுபிடிப்பென பெருமை பேசிக்கொள்கிறோம். சுழியம் மட்டுமல்ல மீதமுள்ள ஒன்பது எண்களின் வேர்களுமே நம்முடைய கண்டுபிடிப்புகள் தான். சுழியம் என்பதன் அர்த்தம் புரிந்து, அது எதனுளிருந்து உருபெற்றிருக்கும் என்பதை கவனித்தாலே அதன் உள்ளார்ந்த அர்த்தமும் விளங்கும். பொதுவாக ஒவ்வோர் எண்களுக்கும் பின்புலமாக நீண்ட விளக்கங்களும், மறைபொருள் அர்த்தங்களும் அதனுள் கலந்திருக்கின்றன. இப்படியான பல ரகசியங்களை உள்ளுக்குள் வைத்திருக்கும் எண்களில் ஒன்றான எட்டு என்பதை முடிவிலியின் அடையாளமாக எடுத்துக்கொண்டால், இரு சுழியங்களின் கலவையாக அது உருமாறக்கூடும். இவற்றிற்கும் வைகுந்த ஏகாதசிக்கும் என்ன தொடர்பென்று நினைக்க கூடும். இங்கே எதுவுமே தனித்தில்லை; ஒன்றுக்கொன்று தொடர்பிலேயே தான் இருக்கின்றன. அவ்வாறாக எண்களுக்கான தொடர்பை வைகுந்த ஏகாதசியிலும் பார்க்க முடியும்.
பொதுவாக, மார்கழி மாத வளர்பிறை பத்து நாட்களை 'பகல் பத்து' என்றும், அதன் அடுத்த நாள் 'வைகுந்த ஏகாதசி' என்றும், அதனை தொடர்ந்த தேய்பிறை பத்து நாட்களை 'இராப் பத்து' என்றும் வகைபடுத்தி வைத்திருக்கின்றனர். ஏகாதசி என்பதன் பொருள் பதினொன்றாம் நாள் என்பதாகும். ஏனெனில் இரு பத்துகளுக்கும் இடைப்பட்ட நாள் இது என்பதுதான் இங்கு சிறப்பாக போற்றப்படுகிறது. பத்து என்பதை எட்டும் இரண்டுமாக பிரித்து பார்க்க தொடங்கினால் சொர்க்க வாசலின் உண்மைப்பொருள் புரிந்து விடும். உயிரும் உடலுமாக இரண்டற கலந்து இருக்கின்ற தனக்குள்ளேயே மூடிக்கிடக்கும் பத்தாம் வாசலை திறக்க வக்கற்றவர்கள் தான், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசலைத்தேடி கோவிலெங்கும் வரிசை கட்டி நிற்கின்றனர். இங்கே வைகுண்டம், வைகுந்தம் என இருவாறாக சொல்லப்பட்டாலும் 'வை' என்பதற்கான அர்த்தம் கூர்மை என்பதாகும்; அடுத்து இந்த சங்கு, சக்கரம், நாமம் என்பதெல்லாமும் கூட எண்களின் வெளிப்பாடே. அதை கண்டபடி திரித்து எழுதி குளிர்காய்வதெல்லாம் எண்ணங்களை சிதறடிக்க செய்யும் செயலாகவே பார்க்கிறேன். தேவையானவற்றை தவிர்த்து, எண்ணங்களை கூர்மையாக்கி உங்களின் பார்வையை விரிவிடைய செய்யுங்கள்; எண்ணற்ற உண்மைகள் உங்களுக்குள்ளாகவே புலப்படும்.
சொர்க்க வாசல் திறக்கும் திருநாளாக கொண்டாடப்படும் இந்நாளுக்கு இடைபட்ட இந்த இரு பத்து நாட்களும், 'திருமொழித் திருநாள் - திருவாய்மொழித் திருநாள்' என உயிரெழுத்தும் - மெய்யெழுத்தும் கலந்துருவான எம்மொழி தமிழை கொண்டாடும் விதமாகவும் இணைத்து வழிபாட்டு முறை அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தவர்கள் வெகுசிலராகத்தான் இருக்கக்கூடும். வழிபடும் விதம் வேறுபட்டாலும் பரம்பொருள் ஒன்றாகவே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து, பெரியத்திருவடிகள் துணையிருக்க, பத்தாம் வாசலின் புதுவெளிச்சம் எல்லாருக்கும் கிடைக்க பிரபஞ்சம் பேரருள் புரியட்டும்.

28 டிசம்பர் 2017

மலேயா கணபதி நினைவுத்தூண் திறப்பு விழா!

சோழ தேசத்தின் தேவர்பெருமகனாரான ’அகமுடையார் வழித்தோன்றல்’ மலேயா கணபதி தேவரின் நினைவுத்தூண் திறப்புவிழா!

Image may contain: 2 people, people smiling, text

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கான குறிப்புகள்!

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கான குறிப்புகள்.
(3, 12, 21, 30)


Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text
Image may contain: text

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களை பற்றிய எண்ணியல் கணிப்பை பார்த்தால், ரஜினியும் நம்ம கேட்டகிரி தான் போல? 
)


27 டிசம்பர் 2017

இரகசியமென்று எதுவுமில்லை!

Image may contain: plant

அ - உ - ஐ - கண் - அகரம் - உகரம் - தமிழ் - உயிர் - உடல் - 12 - 18 - 2+8 - 10 - சூரியன் - சந்திரன் - வாலை - வாசி - சிவ - சிவசக்தி - முக்கோணம் - 1+2 - 3 - 5 - ஐங்கோணம் - 5+3 - 8 - எண்கோணம் - எண் - எண்ணம் - 6 - அறுகோணம் - ஆறு - வழி - மார்க்கம்... இப்படியாக பல தொடர் முடிச்சுகள் ரகசியமாகவே கடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் குருவருளின் துணையோடும் நாமே தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்றவர்களின் அரைகுறையான அனுமானங்களை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது; வரவும் கூடாது. பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். இப்பிரபஞ்ச ரகசியமே தானாய் உங்கள் கண்களுக்கு தென்படும்.


இல்லுமினாட்டி என்றால் என்ன அர்த்தம்? இல்லுமினாட்டி என்பவர்கள் யார்? இல்லுமினாட்டி என்பது ஓர் இனக்குழுவா அல்லது ஒரு பெருங்கூட்டத்தினரா அல்லது ஒருசில குடும்பங்களா? அவர்கள் எங்கிருக்கின்றனர்? அவர்களின் நோக்கம் என்ன? வணிகத்தை கட்டுபடுத்துபவர்களா அல்லது மக்கள்தொகையை கட்டுப்படுத்துபவர்களா அல்லது அரசாள துடிப்பவர்களா? யார் அவர்கள் என்பதை பற்றிய தெளிவேயில்லாமல் கண்டதையெல்லாம் பரபரப்பாக சொல்லி, குழப்பி விட்டு சுயஇன்பம் தேடுபவர்களிடம் இதற்கான தெளிவான பதில்கள் இருக்குமா? என்று தம்பி ஒருவர் நேற்று என்னிடம் கேட்டார்; சிரித்து கொண்டே அவரிடமிருந்து விடைபெற்றேன்.

ரஜினி, டிசம்பர் 31!

தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை 31ம் தேதி அறிவிப்பதாக ரஜினி சொல்லிருக்கிறார். இதில் எந்த ஆண்டின், எந்த மாதத்தின் 31ம் தேதியென்றே தெரியவில்லையென்று குழப்பம் தான் பலருக்குள்ளும் இருக்கிறது. ஒருவேளை அந்த 31ம் தேதி இம்மாதமென்றால், 31.12.2017 தேதியில் தன் அரசியல் பிரவேசத்தை அவர் அறிவிப்பாரென கணக்கில் கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி - பெளர்ணமி - ஞாயிறு என பல கணக்கீடுகள் அந்நாளை தொடர்பு படுத்தி இருந்தாலும், ராகு+சனி ஆதிக்கத்தோடு இருக்கின்ற அந்த 31ம் தேதி அறிவிப்பால், ராகு காலமோ, ஜென்ம சனியோ இம்மக்களுக்கு பீடித்திருக்காமல் இப்பிரபஞ்சம் பேரருள் புரியட்டும்.

26 டிசம்பர் 2017

குருக்கள் மூர்த்தியின் ஆண்மையான அரசியல்!

ஆண்மையை பற்றி எவனவன் பேசணும்ன்னு அருகதையே இல்லாம போச்சு. 'பொட்ட பயலுக' என்ற தொனியில் விமர்சித்திருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தியை கைது செய்ய வக்கிருக்கிறதாயென பலரும் அதிமுகவின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணியினரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கைது கூட வேண்டாம்; அவாளை எதிர்த்து அதே பாணியில் பதிலுரைத்தாலே போதுமென நினைக்கிறேன். ஏனெனில் ஆண்மையற்றவர்களை ஆண்ட பரம்பரையென சொல்வதில் அர்த்தமே இல்லை.

Image may contain: 2 people, text

25 டிசம்பர் 2017

அருவி!

2017ன் ஆகச்சிறந்த திரைப்படமான அருவிக்கு, சிறந்த கதை - சிறந்த திரைக்கதை - சிறந்த வசனம் - சிறந்த இயக்குனர் - சிறந்த நடிகை - சிறந்த துணை நடிகர் - சிறந்த திரைப்படம் இப்படியாக எந்தவொரு பிரிவிலும் தேசியவிருது கொடுத்தாலும் அதற்கு தகுதியானதாகவே அமையும். இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன், கதைநாயகி அதிதி பாலன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட இம்மூவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்! இன்று தான் அருவியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது; இதுவரை அருவியை பார்க்காதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமொரு முறை பாருங்கள்; உங்களுக்கும் பிடிக்கும்.

24 டிசம்பர் 2017

நாம் தமிழரின் - ஆர்.கே.நகர் தேர்தல்!




ஹிந்திய தேசிய கட்சியையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, 3860 வாக்குகள் பெற்று தமிழ் தேசிய கட்சியாக வளர்ந்து நின்று, இத்தேர்தல் மூலமாக தமிழக கட்சி பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்! அதிலும் குறிப்பாக மத்திய மாநில ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல், வாக்கு வங்கியுள்ள மற்ற அரசியல் கட்சிகளோடு கூட்டணியும் இல்லாமல் தனித்து பெற்றிருக்கும் இவ்வெற்றி போற்றுதலுக்குரியது.

22 டிசம்பர் 2017

வேலைக்காரன் - விமர்சனம்!

வேலைக்காரன் க்ளைமேக்ஸில் சார்லியிடம் சிவகார்த்திக்கேயன், "நான் செய்ய வேண்டியதையெல்லாம் கரெக்டா செஞ்சிட்டேன்பா" என சொல்வது போன்ற வசனம் வருகிறது. இந்த இடத்தில் "அதான் எங்கள வச்சி நல்லா செஞ்சிட்டியேடா" என நாகை கணேஷ் தியேட்டரிலிருந்து பதில் கவுன்ட்டர் ரசிகர்களிடமிருந்தும் கோரஸாக வந்தது. படம் முழுக்க ஏறத்தாழ இருபது தடவைக்கு மேல் விசுவாசம் பட டைட்டிலுக்கான மார்கெட்டிங் ப்ரொமோஷன்களும் வந்து போகிறது.
தனி ஒருவனின் அரவிந்த்சாமி பாத்திரத்தை போல வேலைக்காரனில் பகத் பாசில் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பி ராமையா, சார்லி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் யாரும் நினைவில் அழுத்தமாக பதியவில்லை. காமெடியன்களாக ரோபோ சங்கர், சதீஷ், ஆர்ஜே பாலாஜி போன்ற யாரும் கதைக்கும் - காமெடிக்கும் தேவைப்படவே இல்லை. நயன்தாரா மீதான காதலும் புரியவில்லை. வசனங்கள் எல்லாமும் தனி ரகம்; நல்ல கதைக்கரு; உணவு பொருட்களை கையகப்படுத்தி நஞ்சை திணிக்கும் கார்ப்பரேட்களின் முகத்திரையை வேலைக்காரன் கிழித்திருக்கிறார். ரசிகர்களுக்கு இப்படம் எப்படியென யூகிக்க முடியவில்லை. பெரும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்க போனால், படம் பிடிக்க கூடும்.

21 டிசம்பர் 2017

ஆன்மீக குறியீடுகள்!

ஆங்கிலப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவியலை புரிந்து கொள்ள முடியாது என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. உதாரணங்களையெல்லாம் ஆங்கில படங்களோடும், மேற்கத்திய சாயல்களோடுமே தொடர்புபடுத்தி காட்டுகின்றனர். அவர்களுக்காகவே ஓர் ஆங்கில படமான அவதாரை எடுத்துக்கொண்டால், அப்படத்தை பழங்குடியினரோடு தொடர்புபடுத்துவதோடு நிறுத்தாமல், அதே அவதாரில் காட்டப்பட்டிருக்கும் மரத்தை ஆலமரமாகவும் எடுத்து கொள்ளலாம். நாகரீகம் என்பது நகர்தலின் அடையாளம்; எல்லா நாகரீக குழுக்களின் வேர் என்பது ஆதியில் பழங்குடியிலிருந்து தோன்றியதாகவே இருக்கும். உலக நாகரீகங்கள் பலவும் ஆற்றங்கரைகளை நோக்கிய நகர்தலில் இருந்தே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ஆலமரம் என்பது மயானத்தின் குறியீடு. இங்கே மயானம் என்பதை மெய்ஞானத்தின் திரிபாக பார்க்கலாம். ஆலமர்செல்வன் என்பதற்கோ தெட்சிணாமூர்த்தி என்பதற்கோ பல காரணங்கள் பின்னாட்களில் அவரவருக்கு தகுந்தாற்போல் ஆலமரத்தை வைத்து கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். எதார்த்தத்தில் பிறப்பு என்று ஒரு நிகழ்வு நடக்குமாயின் அதன் நீட்சியாக இறப்பு என்ற நிகழ்வும் நடந்தே தீரும். அந்த இறப்பினால் எவ்வுடல் அழிந்தாலும், அவர்களின் விந்து சுக்கில இணைவால் விட்டுச்சென்ற பல்வேறு உடல்களுக்குள்ளும் பல்லுயிர்கள் வாழ்ந்து கொண்டே தான் இருக்க கூடும். உடலுயிர் என்ற ஆலமரம் மறுசுழற்சியானாலும் விழுதுகள் போல இங்கே பல்லுயிர்களுக்குள் அவ்வுடல் பரிணமித்து கிடக்கும். இது சார்ந்த குறியீடே ஆலமரமும், மயானமும் என்பது என் அனுமானம்.
ஆய்வுக்காக நீங்களே தேடிப்பாருங்கள்; சுடுகாடோ - இடுகாடோ எங்கெல்லாம் இயல்பாகவே மெய்ஞானமென்ற மயானம் அமைந்துள்ள இடங்களிலெல்லாம் ஆலமரமும் அமைந்திருக்கும். தற்போது போல, காண்ட்ராக்ட் காரர்களால் உருவாக்கப்பட்ட இன்ஸ்டட்ண்ட் மயானங்களில் ஆலமரங்கள் இருப்பதில்லை. இந்த ஆலமரத்திற்கும் சுடலை மாடனுக்கும் மிக நீண்ட தொடர்புண்டு. சுடலை+மாடன் என்பதை பிரித்தாலே எளிதாக பொருள் கொள்ளவும் முடியும். சுடலை மாடன் என்பது நாட்டார் வழிபாடுகளில் முதன்மையானதாக கொள்ளலாம்; இதனை முன்னோர் வழிபாடாகவும் எடுத்து கொள்ளலாம்; சிவ வழிபாட்டின் தொடக்கம் என்பதாகவும் எடுத்து கொள்ளலாம். இவையெல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது.
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவனின் வார்த்தைகளின் வழியே பல உண்மைகள் மறைந்து கிடப்பதை உணரலாம். அந்த வகையில், இந்த முக்கோணங்களை பற்றிய ஆய்வு பெரும்பாலானோரிடம் பல்வேறு கோணங்களில் வெளிப்பட்டு வருகிறது. இதை பற்றி பலரும் தனக்கான கற்பனை குவியல்களை கொட்டிக்கொண்டே இருக்கின்றனர். பலரும் இதை பெரும்புதிராக்கி குளிர் காய்கின்றனர். என்னளவில் இந்த முக்கோண கதையெல்லாம் நம்முள் உள்ள வடிவங்களே. அதை புற வடிவங்களாக்கி பார்ப்பதால் மட்டுமே உண்மை வெளிப்படப்போவதில்லை. அண்டமும் பிண்டமும் ஒன்றென சொல்லும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, உட்புறமுள்ள இவ்வடிவங்களை எங்கெங்கோ தேடி, கண்டதையெல்லாம் அந்த வடிவத்தோடு தொடர்புபடுத்த வேண்டியதில்லை. அதன் மீதான என்னுடைய பார்வை வேறு.
அறுகோணமாகவும் ஐங்கோணமாகவும் பார்க்கப்படும் இரு தலைகீழ் முக்கோணங்களை, மூன்று கோணங்களில் பார்க்க முடியும். ஒன்றாவது, ஆண் பெண்ணாக உருவகப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, முதுகெலும்பின் நுனியும் அடியுமாக பார்க்கலாம். மூன்றாவது, சூரிய சந்திரனாகவும் பார்க்க முடியும். இங்குள்ள அனைத்தும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே அமைந்திருக்கிறது. எவையும் இங்கு தனித்டில்லை. எல்லாவற்றையுமே விரிவாக சொல்வது நேர விரயம்; மற்றவர்களின் சிந்தனையையும் மழுங்கடிக்கவே இது செய்யும். எனவே உங்களது பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். இங்கே சொல்லப்பட்ட / சொல்லப்படும் கருத்தியல்கள் எல்லாமே உண்மையின் பக்கமில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களது பார்வையை ஆழமாகவும், விரிவாகவும் கவனிக்க தொடங்கினாலே பல உண்மைகள் வெகு எளிதாக புரிய வரக்கூடும்; ஏனெனில் இந்த எண்ணங்களுக்கு எல்லாவற்றையும் விட வீரியம் அதிகம். கேள்விகள் கேட்குமிடத்தில் மட்டும் இருக்காமல், பதில்களை அறிந்தவராகவும் மாற, முதலில் அனைத்தையும் கவனிக்க தொடங்கி, தேடலோடு பயணியுங்கள்; எல்லாமே நிச்சயம் புரியவரும். நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை எதிரி தான் முடிவு செய்கிறானென்ற தத்துவத்திற்கேற்ப கைப்பற்றப்பட்ட நம் ஆயுதத்தை, மீண்டெழுந்து நாமே அதை மீட்டெடுத்தால் எல்லாமும் சாத்தியமே.

14 டிசம்பர் 2017

சாதி மறுப்பு திருமணத்தின் மறுபக்கம்!

இந்த அரச கொலைக்கு எதிராக பதிவிட அவர்கள் குடும்பம் சார்ந்த குறிப்பிட்ட சாதியான கள்ளர் என்பது காரணமில்லை. பக்கத்து வீடு தீப்பற்றி கொண்டால் நம் வீடும் நாளை பற்றிக்கொள்ளும் என்ற அடிப்படையில் தான் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இதில் அகமுடையார் மட்டுமல்ல; திருமணம் என்பதே குடும்ப கெளரவம் சார்ந்தது என்ற அடிப்படையில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். குடும்பமென்ற உயரிய அமைப்பின் கெளரவத்தை பாதிக்கும் பிரச்சனையாக பார்க்கும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாத சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைவருமே இந்த நீதிமன்ற கொலையை எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள். இதில் முக்குலமும் இல்லை; அதில் அகமுடையாரும் இல்லை.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்ற கணக்கீடெல்லாம் இதற்கு ஒத்து போகாது. அப்படி பார்த்தால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வன்னியரும், நாடாரும் கூட இருக்கின்றனர். அவர்களுக்கும் கள்ளருக்கும் என்ன சதை உறவு இருக்கிறது? இதை குறிப்பிட்ட சாதியின் பிரச்சனையாகவோ, சில சாதி கூட்டமைப்புகளின் பிரச்சனையாகவோ பார்க்க வேண்டியதில்லை.
எல்லா சாதிகளிலும் பெரும்பான்மையானோர் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய சாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்வதற்கே இங்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதில் சாதி மட்டும் பிரச்சனை இல்லை; சாதியோடு சேர்ந்த பொருளாதார நிலையும் தான் ஒவ்வொரு திருமணங்களையும் முடிவு செய்கின்றன. இந்த விசயத்தில் சாதிக்கும் சதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஏனெனில் ஒரே இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ள அதே சாதியில் காதலித்து திருமணம் செய்வதும் கூட இப்போதெல்லாம் எளிதல்ல.

13 டிசம்பர் 2017

பிளாஸ்டிக் வணிகம்!

No automatic alt text available.



பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், மரமும் - சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருக்குமென சொல்லிருக்கும் அந்த நாலாவது பாயிண்ட்டை நம்ம எடப்பாடியார் பாசறையை சேர்ந்த எவனோ ஒருத்தன் தான் சிந்திச்சிருப்பான்னு நினைக்கிறேன்.

12 டிசம்பர் 2017

கெளசல்யா!

தன்னை பின்னாலிருந்து இயக்குபவர்களை பற்றி தன் வாயாலேயே இதே ஊடகங்கள் முன்பாக பச்சை பச்சையாக கிழித்தெறியும் நாளும் தொலைவில் இல்லை. அப்போ வந்து, ”பார்த்தீங்களா வீரத்தை; இவள் எங்க குல நாச்சியார்டா!”ன்னு எவனும் கம்பு சுத்திடாதீங்க.

சாதி மறுப்பு திருமணங்கள் தோல்வியே!

Image may contain: 2 people, text



சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொண்ட 99% பெண்கள், தங்களது பெற்றோர்களின் அருமை பெருமைகளை திருமணமாகி சரியாக ஆறு மாதத்திற்குள்ளாகவே தெரிந்து கொள்கிறார்கள். எத்தனையோ பெண்கள், வெளியே சொல்ல முடியாமலும் - வேற வழியில்லாமலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறன்றனர் என்பதே எதார்த்த கள நிலவரம். இது நாமாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கை; அதனால் நடப்பவைகளை வெளியே சொன்னால் நம்மளோட முடிவை எல்லாரும் ஏளனம் செய்வார்களென்ற எண்ணத்தாலே போலியாக வாழும் பெண்களே இங்கு அதிகம். இந்த சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக இவ்வளவு பேச வேண்டியதே இல்லை. ஓர் ஆய்வுக்காக, சாதி மறுப்பு செய்த பெண்களின் தங்கைக்கோ - நெருங்கிய தோழிகளுக்கோ, தன்னைப்போலவே சாதி மறுப்பு திருமணத்தை செய்ய அறிவுரை கூற சொல்லுங்கள் பார்ப்போம்; கண்டிப்பாக ஒருபோதும் அப்படியோர் அறிவுரையை கூற மாட்டார்கள்.
குடும்ப கெளரவத்தை மீறி, தங்களின் சம்மதமின்றி சங்கரை திருமணம் செய்து கொண்டதை கேள்விபட்ட போதே கெளசல்யாவின் தந்தை இறந்திருப்பார்; இப்போது விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையானது அவரது உடலுக்கு மட்டும் தான். என்னை பொறுத்தவரை, சங்கரை இவர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தாலேயே, கெளசல்யாவே கதறிக்கொண்டு இவர்களை தேடி ஆறு மாதத்திற்குள் வந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இப்போதோ, மனம்பிறழ்ந்த நிலையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொல்ல வேண்டுமென்ற மூளை சலவை செய்யப்பட்டவராக உருவாக இவர்களே ஒருவகையில் காரணமாகி விட்டனர்.
ஐந்து வயது கூட நிரம்பாத விழுப்புரம் நந்தினியை பாலியல் கொலை செய்த ஜெயபிரகாஷிற்கு மரண தண்டனை கொடுத்தாகி விட்டதா? சமீபத்தில், கடலூர் ஆனந்தனை தீயிட்டு கொளுத்திய சாதிவெறி கும்பல்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாகி விட்டதா? சென்னையில் ஹாசினி என்ற பச்சிளங்குழந்தையை பாலியல் கொலை செய்து ஜாமீனில் வெளிவந்து, தான் பெத்தெடுத்த தாயையும் கொன்று விட்டு மும்பையில் கைதான பின், தன் தந்தையையும் கொல்லத்தான் திட்டமிட்டிருந்தேனென கெளரமாக சொன்ன ஆணவ கொலையாளி தஷ்வந்த் போன்றவர்கள் தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை காறி உமிழ சரியான நபர்கள். ஒரு கொலைக்காக, ஆறு கொலைகளை திட்டமிட்டு செய்ய தீர்ப்பு வழங்கிய சட்டமும் தீர்ப்புகளும் வாழும் இம்மண்ணில், இனி பல பாலியல் கொலைகளும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்க போகிறது... த்தூ

சட்டம் ஒரு சார்பானது!

"பொம்பள புள்ளைகள ஆசையாசையா பெத்தெடுத்து வளர்த்தவனெல்லாம், இனிமே பேசாம எவன் கூட வேணும்னாலும் கூட்டி கொடுத்துட்டு போய்டுங்க!"ன்னு இதன் மூலம் புரிஞ்சிக்கலாமா?
இப்படித்தான் பாமரனின் கேள்விகளும் இருக்கும். நான் அப்படியல்ல; ஒரு கொலைக்கு எதிர்வினையாக ஆறு பேரையல்ல, ஆயிரம் பேரை கூட கொலை செய்யலாமென்று நீதிமன்றம் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களில் நானும் ஒருவன். காலம் முழுக்க பொய்யையே முதலீடாக்கி வாதாடிய வக்கீல் திடீரென கணம் நீதிபதியாகும் உயரிய நடைமுறை பற்றி எம்.ஆர்.ராதா அன்று சொன்ன வார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், இவ்வேளையில் நினைவுக்கு வருவது 'கடுப்பேத்துறார் மை லார்ட்' என்ற வார்த்தைகள் மட்டும் தான்!
(இதுபோன்ற எக்கசக்கமான காமெடி வார்த்தைகள் கொண்ட பல மீம்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதற்கான காரணமே கீழே படத்திலுள்ள இருவரின் மோதல்களால் தான்)

11 டிசம்பர் 2017

குறியீடு!

பார்வையின் கோணத்தை விரிவாக்கினால், பல கேள்விகளுக்கான பதில்களை இந்த கண்களே தந்து விடும்!




இன்னுமா இந்த 'கன்னித்தீவு'க்கு ஒரு முடிவு வரல?! கதையை எப்படி முடிக்கிறதுன்னு முழி பிதுங்கி, வேற வழியே இல்லாம கடைசியா 'கருடன் - பாம்பு' வரைக்கும் வந்துட்டாய்ங்க. இன்னும் என்ன மாதிரி பில்டப்பெல்லாம் கொடுத்து பீதியை கிளப்ப போறாய்ங்களோ முருகா!? என் தாத்தா காலத்தில் ஆரம்பிச்ச கதையை, என் பேரன் காலம் வரைக்கும் கொண்டு போவாய்ங்க போல; சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்கய்யா... 

10 டிசம்பர் 2017

மார்க் ஜூகர்பர்க்கின் மன்னிப்பு!

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இணைய ஊடகமான இந்த முகநூலும் கூட அவர்களின் மற்றுமோர் ஆயுதம் தான். அதையும் நமதாக்கி கொண்டதற்கு தைப்புரட்சியும் ஒரு சின்ன எடுத்துக்காட்டே! இங்கே நடப்பவையெல்லாம் நிகழ்காலமோ - எதிர்காலமோ சம்பந்தப்பட்டதல்ல; கடந்தகால தொடர்புள்ளது. அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக முயற்சித்தும் இவ்வினத்தை யாராலும் வெற்றிப்பெற முடியவில்லை. கடைசியில் வெளிப்படையாக யாரிடமோ மன்னிப்பெல்லாம் கேட்டு, தோல்வியை மறைமுகமாக ஒத்துக்கொண்டார் மார்க் ஜூகர்பர்க்.


இராமதேவரும் - முகமது நபியும்!

முகமது நபிகளை புகழ்ந்து கொண்டே சித்தர்களை தவறாக விமர்சிக்கும் எண்ணமுள்ளவர்கள் சித்தர்களில் ஒருவரான இராமதேவரின் வரலாற்றை தேடி படித்து உண்மை உணரலாம். எங்கள் நாகப்பட்டினத்திலிருந்து மெக்கா சென்ற மகான் இவர். யாகோபுவாக சிலகாலம் வாழ்ந்து பின்னாட்களில் இராமதேவராகவே அழகர்மலையில் ஜீவசமாதி ஆகிருக்கிறார்.
(நாகப்பட்டினம் - இராமதேவர் - காசி - சட்டநாதர் - மெக்கா - யாகோபு - முகமது நபி - அழகர்மலை...)

சிவனுக்கு வாழ்த்துகள்!

தமிழ்ப்பெருங்கடலில் அரங்கேற்றப்படும் திட்டமிட்ட மீனவ படுகொலைகளையும், பயமுறுத்தலையும் ஆய்வு நோக்கில் ஆராய யாரும் தயாராகவில்லை. கடற்படையும், விண்வெளித்துறையும் யாருக்கானது? பல மில்லின் கணக்கான தொலைவிலுள்ள புதுப்புது கிரகங்களை கண்டுபிடித்து, அங்குள்ள பிடிமணலை கூட எளிதாக எடுத்துவர முடியும் போது, ஏன் மீனவனுக்காக அந்த நுட்பத்தை இவ்வரசு பயன்படுத்தவில்லை? தென்னவனான பாண்டியனின் மற்றொரு பெயர் மீனவன் தான்; என்னவன் கடலோடும் நெய்தலும் எம் நிலமே; தென்னாடுடைய சிவனும் பாண்டியனே!

08 டிசம்பர் 2017

புத்தனும் சித்தனும்!



பத்து லட்சம் பேரை அம்பேத்கர் பெளத்தர்களாக மதமாற்றம் செய்ததை மிகப்பெரும் சாதனையாக இசுலாமிய தலைவர்களுக்கிடையே மேடையில் சொல்லும் திருமாவளவன், ஏன் அதே அம்பேத்கர் அந்த பத்து லட்சம் பேரையும் இசுலாம் மதத்திற்கு மாற்றவில்லை என்பதை பற்றியும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாம்.
ஹிந்து மத கோட்பாட்டின் படி வகுக்கப்பட்டுள்ள பத்து அவதாரங்களில் ஒருவராக புத்தரை சேர்த்து பலகாலம் ஆகிவிட்டதை கூட கவனிக்காமல் பெளத்தத்திற்காக திருமாவளவன் மார்கெட்டிங் செய்திருந்த அவருடைய பேச்சு அர்த்தமற்றதாகவே தெரிந்தது. அதைத்தவிர திருப்பதி - காஞ்சிபுரம் - திருவரங்கம் கோவில்களை இடித்துவிட்டு பெளத்த விகாரங்களாக மாற்ற வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் அந்த கண்டன உரையில் தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் 'உருவ வழிபாட்டையும் - கோவில்களையும் - வேதங்களையும்' கடுமையாக எதிர்த்த சித்தர்கள் ஜீவசமாதியான இடங்கள் தான் இவை என்பதையும் திருமாவளவன் இனி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
தகவலுக்காக,
(புத்தரை விட காலத்தால் முற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களில் திருமாவளவன் சுட்டிக்காட்டிய பகுதிகள்... திருப்பதி - கொங்கண சித்தர், காஞ்சிபுரம் - கடுவெளி சித்தர், திருவரங்கம் - சட்டைமுனி சித்தர்)
புத்தர் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காமல் புத்தரையே கடைபிடித்த இலங்கையால், தமிழின அழிப்பையே செய்ய முடிந்ததென்பதை புத்தரின் ஆன்மாவும் கூட அறிந்திருக்கும். உலகுக்கே தெரிந்த இந்த உண்மை திருமாவளவனுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த நன்றி!

02 டிசம்பர் 2017

பாம்பாட்டியாரின் புரட்சி வரிகள்!

பொய் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி
ஆடாய் பாம்பே! (09)
நாறும் மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினாலும் அதன் நாற்றம் போமோ?
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே! (65)
காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ?
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடாய் பாம்பே. (88)
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ?
அஞ்ஞானம் போகாது மூடர்க்கு என்று ஆடாய்பாம்பே! (92)
சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
விதவிதமான தான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே!
(98)
பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ?
பூமிவலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாமென்று துணிந்து ஆடாய் பாம்பே! (100)
- பாம்பாட்டியார்
(எளிய தமிழில் அமைந்துள்ள இப்பாடல்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டோருக்கு நன்றி!)

சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல்!




சொந்த ஊர் மக்களுக்காக குளம் வெட்டிக் கொடுத்த செய்தியைத் தமது பத்திரிகையில் ‘குளம் வெட்டிய கோ.சி.மணி’ என்ற தலைப்பில் அண்ணா பிரசுரித்த பின்னர், 'கோவிந்தசாமி சிவசுப்ரமணியன்' என்ற இவரது பெயரும் மாறிப்போனது. ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் திமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். கோவில் நகரமான கும்பகோணத்தை சீரமைத்த சிற்பியாக, அவர் பெயரைக் காலம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்.
எல்லா நாட்களிலும் அதிகாலை ஐந்து மணிக்கே தயாராகி மக்களைப் பார்ப்பதற்கு உட்கார்ந்திருப்பார். பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரன் எல்லாரையும் ஒரே மாதிரிதான் சந்திப்பார். அமைச்சராக இருந்த போதும் கூட சனி, ஞாயிறுகளில் தொகுதிக்குள் தான் இருப்பார். இதைச் சுட்டிக்காட்டி, "கோ.சி.மணியைப் போல எல்லா அமைச்சர்களும் இருந்துவிட்டால், தி.மு.க ஆட்சியே தமிழ்நாட்டில் தொடரும்" என்று ஒருமுறை முரசொலி மாறன் அக்கட்சியின் பொதுக்குழுவில் ஆதங்கப்பட்டார்.
"மிகச்சாதாரண மனிதனும் உழைப்பையும் கொள்கைப்பிடிப்பையும் வைத்துக் கொண்டு அரசியலில் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு கடைசி தலைமுறை உதாரணம் கோ.சி.மணி" என்ற ஆனந்த விகடனும் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறது.
மேக்கிரிமங்கலத்தில் முளைத்த விருட்சமே! சோழநாட்டு அரசியலின் ஆணி வேரே! அரசியல் ஆளுமையால் ஒருங்கிணைந்த தஞ்சையை ஆண்டவரே! அகமுடையார்களின் பெருமைமிகு அடையாளமாக மாறிப்போன, சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல் இன்று. (திசம்பர் 02, 2016)
(நன்றி: கோமல் அன்பரசன்)

பாம்பாட்டியார் குருபூசை!



நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள திருக்கடவூர் மயானத்தில் அமைந்துள்ள பாம்பாட்டி சித்தர் பீடத்தில், வருகின்ற திசம்பர் 4ம் தேதி (கார்த்திகை 18ம் தேதி) திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள பாம்பாட்டியார் குருபூஜையில் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்! வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
சார்பாக,

மதமென்பது...

ஆதித்தமிழனுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை. ஆதிசங்கரர் தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கினார். சக்தி வழிபாட்டை சாக்தம் என்றும், முருக வழிபாட்டை கெளமாரம் என்றும், கணபதி வழிபாட்டை கணபத்யம் என்றும், சூரிய வழிபாட்டை செளரம் என்றும், பெருமாள் வழிபாட்டை வைஷ்ணம் என்றும், சிவ வழிபாட்டை சைவம் என்றும் ஆறு வழிபாட்டு குழுக்களை ஒரே வட்டத்திற்குள் அடைத்தார். அதற்கு முன் வரை எல்லாம் வேறு வேறு தான். ஐவகை நில தெய்வங்களான குறிஞ்சி -
(சேயோன்) முருகன் , முல்லை - (மாயோன்) திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை வழிபாட்டை தான், சமகிருதத்திற்கு முன்னோடியான தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
ஆதித்தமிழனுக்கு இயற்கை வழிபாடு தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு நெருப்பு, பிறகு ஐம்பெரும்பூத வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு என்ற நாட்டார் வழிபாடு தான் இருந்தது; இருக்கிறது. இதில் எங்கேயும் ஹிந்து மதம் வராது. பிற்காலங்களில் சமண-பெளத்த ஆதிக்கத்திலிருந்து, காரைக்கால் அம்மையார் மற்றும் சைவ குரவர்கள் நால்வராலும், நாயன்மார்களாலும் தான், இன்றைய சைவ வழிபாடு கூட மீளெடுக்கப்பட்டது. ஆழ்வார்களால் வைணவம் என்ற மாயோன் வழிபாடு கூட மீட்கப்பட்டது. சுடலை மாடன் என்ற நீத்தார் வழிபாடும், கருப்பசாமி என்ற திருமால் வழிபாடும், முனீஸ்வரன் என்ற சிவ வழிபாடும் தான் தமிழர்களுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சிவன் என்பதே ஒரு மன்னன் தான். தென் பாண்டியநாட்டை ஆண்டவன். அதனால் தான் தென்னாடுடைய சிவனானான் அவன். மற்றபடி ஹிந்து என்பது பல மொழி பேசிய, பல இனங்களை கொண்ட பல நூறு சிற்றரசு நாடுகளை ஒன்றிணைத்து ஹிந்தியா என்ற ஒற்றை நாடாக்கிய வல்லபாய் படேலின் யுக்திகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே இது.

30 நவம்பர் 2017

அரசக்கொலை, ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!


அகமுடையாரான மதுரை தா.கிருட்டிணனையும், பார்பனரான காஞ்சிபுரம் சங்கரராமனையும் திட்டமிட்டு படுகொலை செய்த கொலைகாரர்களான மு.க.அழகிரியையும் - ஜெயந்திரரையும் பதிலுக்கு பதிலாக இந்த அரசு என்கவுண்டர் செய்து விட்டதா? ஆனால், ஆல்வின் சுதனை கொன்றதாக குற்றஞ்சாட்டி ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டிலிருந்த அரசாங்க காவல்துறையால் பிரபு - பாரதியை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட நாள், நவம்பர் 30. இவர்களை தொடர்ந்து இதே நிகழ்விற்காக குமாரையும் என்கவுண்டர் செய்து பழிதீர்த்து கொண்டது அரசு காவல்துறை. (30.11.2012)
ஒரு கொலைக்கு இன்னும் பல கொலைகள்தான் தீர்வென்று அரசும் - காவல்துறையும் முடிவெடுத்தால், இந்த மக்களாட்சி தத்துவமே தேவையில்லை. ஆனால் அதில் ஏன் இவ்வளவு பாகுபாடு? ஆண்டுகள் ஐந்தானாலும் அகம்படியானாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.
”செல்வி” ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!

29 நவம்பர் 2017

இமலாதித்தவியல்: மதம்!

ஒரு மதத்தை ஏற்பதும், துறப்பதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. மதம் மாறினால் தான் தன்னுடைய காதலையோ - அன்பையோ நிரூபணம் செய்ய முடியுமென்றால், அப்படியொரு மானங்கெட்ட தனத்தை, எந்தவொரு அயோக்கியத்தனமான கடவுள் சொல்லிருந்தாலும் அந்த கடவுளை செருப்பாலேயே அடிக்கலாம். நிச்சயமாக கடவுள் அப்படி சொல்லிருக்க முடியாது; ஏனெனில் கடவுளின் தூதுவனாக காட்டிக்கொண்டவனும், நானே கடவுளென்று சொல்லிக்கொண்டவனும் செய்த திருட்டுத்தனம் தான் இது. மற்றபடி பிறப்பிலேயே அறியப்படும் மதத்திலேயே இருப்பதா? அந்த மதத்தை விட்டு வெளியேறி வேறொரு மதத்தில் இணைவதா? மதமே எனக்கு தேவையில்லையென முற்றிலும் மதமற்றவராக வாழ்வதா? என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது தனிப்பட்ட நபர் தானே ஒழிய, எந்தவொரு மத அமைப்புகளும் இதை கட்டுப்படுத்த கூடாது; கட்டுப்படுத்தவும் முடியாது.

28 நவம்பர் 2017

செல்வியா ஜெயலலிதா?!

'செல்வி' ஜெ.ஜெயலலிதா ஒரு முறை சட்டமன்றத்திலேயே கூறினார்; என்னை 'அம்மா' என்று அழைப்பது தான் பிடித்திருக்கிறதென...



பொட்டு அம்மானுக்கு புகழ் வணக்கம்!

உலகின் தலைச்சிறந்த புலனாய்வுத்துறையை கட்டியமைத்த அகத்தமிழனுக்கு ஐம்பத்தைந்தாவது புகழ் வணக்கம்!

27 நவம்பர் 2017

தமிழ் மாவீரர் பெருநாள்!



தேசிய மாவீரர் நாளில், பிரபஞ்சமெங்கும் நட்சத்திரங்களாக கலந்திருந்து நம்மோடு தொடர்பிலிருக்கும் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்.

ராஜராஜன் அகமுடையாரா?!

Pandi Pandi: அண்ணா, ராஜராஜசோழர் அகமுடையார் வழிதோன்றலா? கள்ளர் வழிதோன்றலா?


இரா.ச. இமலாதித்தன்: சோழர்கள் ஆண்ட பகுதிகளிலெல்லாம் உடையார் பட்டமும், தேவர் பட்டமும் கொண்ட ஒரே இனக்குழு அகமுடையாராக மட்டுமே இருக்கின்றனர். ராஜசோழனின் மெய்கீர்த்தியில் கூட, ”உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்” என்றே பெயர் வருகிறது. அப்படியெனில் ராஜராஜசோழர் யாராக இருக்க முடியும்?

ஈழத்திலும் சோழத்திலும் அகமுடையார்!




பிள்ளை பட்டமும், தேவர் பட்டமும் இயல்பாகவே தன்னகத்தே கொண்ட இனக்குழு அகமுடையார் மட்டுமே. ஈழமண்டலத்தை சோழர்களின் கீழ் ஆட்சி செலுத்திய போது, எம் தஞ்சை மண்ணிலிருந்து படைத்தளபதிகளாகவும், நிர்வாக பொறுப்பாளர்களாகவும் அகமுடையார்களே அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள்.
அதன் நீட்சியாக இலங்கை அரசு இணையதளத்தில் அகமுடையார் பற்றிய குறிப்பு: (http://www.e-thaksalawa.moe.gov.lk/…/139-hired-soldiers-aga…)

26 நவம்பர் 2017

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரனின் வம்சாவழி பட்டியல்!



#பிரபாகரவியல்

ஐயக்கதேவர் வழிவந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்!




சோழர் காலத்தில் இலங்கையின் வடக்கே ஐந்து பெரும் தளபதிகள் நிர்வாகத்தை நடாத்தினார்கள். ஒருவர் ஐயக்கதேவர் – வல்வை, பொலிகண்டி, தொண்டைமானாறு பகுதிக்கும், வீரமாணிக்கதேவர் மயிலிட்டி பகுதிக்கும், சமரபாகுதேவர் உடுப்பிட்டி, வல்வெட்டி பகுதிகளையும், வெள்ளிவண்டிதேவர் துன்னாலைப் பகுதியையும், மாயாண்டிபாகுதேவர் கற்கோவளம் குறிச்சியையும் பாதுகாக்க சோழப் பேரரசனால் அனுப்பப்பட்டனர்.
இந்த ஐவரில் ஐயக்கதேவர் வம்சத்தில் வந்தவரே வேலுப்பிள்ளையும் அவர் மகன் பிரபாகரனுமாகும். ஐயக்கதேவர் பின் கரியதேவர் – காராளர் – ஐயன் – வேலர் – ஐயம்பெருமாள் – வேலாயுதர் – திருமேனியர் – வெங்கடாசலம் – குழந்தைவேற்பிள்ளை – வேலுப்பிள்ளை – திருவேங்கடம் – வேலுப்பிள்ளை – பிரபாகரன் என்பதே இந்த வம்சத்தின் படிமுறையான வளர்ச்சியாகும்.
தமிழகத்தில் இருந்து வந்து சோழர் காலத்தில் வல்வையில் குடியேறிய போர்த் தளபதிகள் குடும்பமாக இவர்கள் இருந்தார்கள். இதனால் போர்க்குணம், விடுதலை போன்றன இவர்களின் இயல்பாக இருந்தது. வேலுப்பிள்ளை எல்லாளனுக்கு விளக்கு வைத்ததும், பிரபாகரன் பிறந்ததும் தற்செயலான நிகழ்வல்ல. தமிழ் ஈழ மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றின் தொடர்ச்சியே அது.
தஞ்சைப் பெருங்கோயில்களைக் கட்டிய சோழர்கள் போலவே சிவாலயங்களை கட்டுவதும் இவர்களுடைய குடும்ப இயல்பாக இருந்தது. திருமேனியர் வெங்கடாசலம் பிள்ளை அவர்களே வல்வை சிவன்கோயிலைக் கட்டினார். அவருடைய சகோதரர் குழந்தைவேற்பிள்ளை அவர்களே கொழும்பு செக்கடித் தெருவில் உள்ள கதிரேசன் கோயிலைக் கட்டினார். சோழர்கால வரலாற்றையும், பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் வரலாற்று நாவல்களையும் உன்னிப்பாகப் படித்தால் வேலுப்பிள்ளை குடும்பத்தின் வாழ்வியல் நெறியை எளிதாக விளங்க முடியும்.
நன்றி: ஈழ இணையதளங்கள்
(இந்த கட்டுரை தொடர்பான விரிவான பகுதிகளை படிக்க கீழே ஒருசில இணையதள லிங் கொடுக்கப்பட்டுள்ளது)

http://eelavarkural.blogspot.in/2010/01/blog-post_14.html?view=classic
http://www.vvtuk.com/archives/15520
https://varnakulattans.weebly.com/veluppillai-appah.html
http://valvainilam.blogspot.in/2013/01/3.html
https://velupillaiprabhakaran.wordpress.com/2010/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8/

பிரபாகரனும் - மருதுபாண்டியரும்!


அண்ணன் வே.பிரபாகரன் ஜாதகம்!

தமிழின தேசியத்தலைவர் மேதகு அண்ணன் வே.பிரபாகரனின் ராசி / நட்சத்திரம்: விருச்சிகம் / கேட்டை. அவரது தாத்தாவின் பெயர்: திருவேங்கடம் பிள்ளை. அடியேனுக்கும், அதே விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்; அதுபோல, என்னுடைய (தாய் வழி) தாத்தாவின் பெயரும் திருவேங்கடம் பிள்ளை! இப்படியான சின்னஞ்சிறு ஒப்பீட்டில் கூட பெருமைப்பட வைத்திருக்கும் ஆளுமைமிகு அண்ணனின் சமகாலத்தில் வாழ்ந்தேன் என்பது கூட வருங்காலங்களின் வரலாற்று பெருமையாகக்கூடும்.
(கீழே அண்ணனின் ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது)