இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 மார்ச் 2016

பாகிஸ்தான் வெல்லட்டும்!

பாகிஸ்தான் அணியை இந்தியாவில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதில் தான் தேசபக்தி இருக்கிறதா என்ன? பிசிசிஐ என்ற தன்னாட்சி நிறுவனம் இந்தியாவில் நடத்தும் உலகளாவிய போட்டியில் பிசிபி என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் விளையாடுவதில் என்ன தவறு? ரவிசங்கர் குருஜியின் விழாவிற்காக இராணுவ வீரர்களை பணியாட்களாக ஈடுபடுத்தும் போதே உங்களது தேசப்பற்று பல்லிளிக்க வில்லையா?

நாங்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த மண்ணையும், கல்லையும், மலையையும், மரங்களையும், நதியையும், கடலையும் கடவுளாக வணங்கும் நாங்கள் தீவிர கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த தாய்மண்ணையே தன்னுயிர் போல நேசிக்கும் உண்மையான தேசபக்தி எங்களுக்கு உண்டு. ஆனால், எங்கள் தாய்மண்ணின் வளத்தையும், எங்கள் வரிபணத்தையும், அதானிகளும் - அம்பானிகளும் - மல்லையாக்களும் சுரண்டும் போது உங்களுக்கு வராத தேசபக்தி, இந்த கிரிக்கெட்டில் தான் வருகிறதா?
சென்றமுறையே டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற்றிருக்க வேண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இம்முறை உலக கோப்பையை இந்தியாவில் வெல்லட்டும்!

சோ கால்டு ஹிந்தியனாக என் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

30 ஜனவரி 2016

தேசியம் என்பது கொடியில் இருக்கிறதா?!

ஒரு நாட்டின் தேசிய கொடியில் தான், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் தேசியமும் அடங்கிருப்பது போன்ற மாயை மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியா என்பது பலதரப்பட்ட தேசிய இனங்களின் (சமஸ்தானங்களின்) கூட்டாட்சி தத்துவமுடைய ஒரு நாடு. ஆனால் கூட்டாட்சி போலவா இந்தியா செயல்படுகிறது? பாகிஸ்தானில் கடற் எல்லையில் சிக்கினால் அவன் இந்திய மீனவன்; அதுவே இலங்கை எல்லையில் சிக்கினால் தமிழ் மீனவன். இதுதான் இந்திய தேசியத்தின் அளவீடு.

பண்டைய தமிழகத்திலேயே சேர - சோழ - பாண்டிய - பல்லவ என நான்கு பெரிய நாடுகளும், அதற்கு கட்டுப்பட்ட நடுநாடு, சேதிநாடு போன்ற பல சிற்றரசு நாடுகளும் இருந்திருந்தன. ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனி கொடியும் - இலச்சினையும் இருந்தது. அந்த கொடிகளெல்லாம் அந்த நாட்டின் எல்லைக்கும், அதிகாரத்திற்குமான ஓர் அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது. இப்போதும் கூட கொடியை அடையாளமாக மட்டுமே பார்த்தாலே போதும்.

ஆனால், இன்றைக்கு எவனோ ஒருவன் இந்திய கொடியை எரித்து, அதை மெனக்கெட்டு போட்டோவும் எடுத்து விளம்பர நோக்கில் சமூகசலைதளங்களில் பகிர்கிறானெனில் அதை நாமும் ஏன் மீண்டும் பகிர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும்? தமிழனாக ஹிந்திய தேசியத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் கூட, இந்திய கொடியை எரித்ததை நான் ஆதரிக்கவுமில்லை. ஆனால் ஒரு நாட்டின் மீதான வெறுப்பு சாமானியனுக்கும் ஏற்படுகிறதென்றால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்க்கே இருக்கிறது. மோடிக்கள் எல்லாம் அதானிகளையும், சோனியாக்கள் எல்லாம் அம்பானியையும் நண்பர்களாக்கி கொண்டால், நாலாபுறமும் வெறுப்பு உண்டாகி ஹிந்திய தேசியம் என்பது யாரோ ஒருவனால் நாளுக்கு நாள் தினந்தோறும் எரிக்கப்பட்டே தீரும்.

- இரா.ச.இமலாதித்தன்