18 ஏப்ரல் 2014

தில்லையில் திருமாவளவன்?!

ஹிந்து மதத்தை ஒழிக்கணும்; பார்பனியத்தை ஒழிக்கணும்; சாதியை ஒழிக்கணும்; ஆண்ட பரம்பரை என்ற ஆரவாரத்தை ஒழிக்கணும்; ஆனால் கோவிலில் எனக்கு மட்டும் பிரசாதமும், பூரண கும்ப மரியாதையும், பொன்னாடையும், மாலையும் போட்டு நெற்றியில திருநீர் - குங்குமத்தை பூசி விடணும். இதுக்கு பேருதான், அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடியா?

பெண்ணை பெற்றவர்களிடம் அடங்க மறுத்து;
அப்பாவி பெண்களிடம் அத்து மீறி;
காமவெறியில் திமிறி எழுந்து;
காதலென்ற பெயரில் காசு அடிப்பது!

இதுதான் உங்க நோக்கம் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து போன பிறகும், போலியான வேஷமெல்லாம் தேவையா?


இந்த போட்டோவுல பார்க்கும்போது, முகத்துல மஞ்ச தண்ணி மட்டும் தான் மிஸ்ஸிங். மத்தபடி கழுத்துல அருவாள வைக்கிற கோவிலுக்கு நேந்துவிட்ட கிடா மாதிரிதான் இருக்கு. இனி ஹிந்து மதத்தை பற்றி இழிவாக பேச திருமாவளவன் போன்ற பச்சோந்திகளுக்கு அறுகதையே இல்லை.

- இரா.ச.இமலாதித்தன்

பூமகள்!


பூங்கொடி, மலர்விழி, மலர்மணி, மலர்கொடி,
தாமரை, புஷ்பவதி, செண்பகம், பூமிகா,
பூங்காவனம், புஷ்பா, அல்லி, முல்லை,
கனகா, செம்பருத்தி, பூவரசி, மலர், ரோஜா,
செவ்வந்தி, வனரோஜா, செம்பருத்தி,
அலர்மேல்மங்கை, பூங்கோதை, நித்யமல்லி,


செந்தாமரை, லில்லி, மரகதம், சரோஜா,
மலர்வேணி, கனகவள்ளி, பூந்தளிர்,
தாமரை செல்வி, புஷ்பலதா, மல்லிகா,
பனிமலர், செம்மலர், கவின்மலர், பூவிழி,
பாரிஜாதம், நிஷாந்தி, மனோரஞ்சிதம்,
பூஜா, செவ்வந்தி, கமலா, பூங்குழலி...

முருகா! முருகா!

(என்னவளின் பெயர் இப்படியாக கூட இருக்கலாமாம்...)

15 ஏப்ரல் 2014

மதவெறி தீவிரவாதம்!

இசுலாமியர்கள் பெரும்பான்மையாகை இருக்கும் ஊருக்குள் வாக்கு சேகரிக்க போனாலே தீவிரவாதிகள் போல கொலைவெறி தாக்குதல் நடத்தும் இசுலாமிய அமைப்புகள், மதவெறி பற்றி பேச அருகதையே இல்லாதவர்கள். நேற்று மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் திரு கருப்பு முருகானந்தம் அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்திய இசுலாமிய அமைப்புகள் மீது வழக்கு பதியவே தமிழ்நாடு காவல்துறை மறுக்கின்றது; நேற்று முன்தினம்தான் செல்வி ஜெயலலிதா பாஜகவை விமர்சித்து மேடையில் பேசினார். அதனை தொடர்ந்துதான் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது. அப்படியானால் இந்த தாக்குதலுக்கு ஆளுங்கட்சியின் தலையீடும் இருக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



ஏற்கனவே திரு கருணாநிதி தனது மேடை பேச்சுகளில் இசுலாமிய வாக்குகளை குறிவைத்தே பேசி வருகிறார் என்பது நாடறிந்த விசயம். இப்போது செல்வி ஜெயலலிதாவும் தமிழ்நாடு ஜவ்ஹீத் அமைப்பின் வெளியேற்றத்தால் பாஜகவை விமர்சிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றார். இதை தெளிவாக அறிந்துள்ள இசுலாமிய அமைப்புகள் திரு கருப்பு முருகானந்தம் மீது நடத்தப்பட்ட இம்மாதிரியான கொலைவெறி தாக்குதல்களை அச்சமின்றி தொடர்வாகளென தோன்றுகிறது. சிறுபான்மையினர் என்ற ஒற்றை சொல்லை வைத்தே கேவலமானதொரு அரசியலை நிகழ்த்திவரும் கேடுக்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கும் இதுபோன்ற சம்பவங்களால் வெளிப்படையாகவே தெரிகின்றது.

தேசிய கட்சியின் வேட்பாளரையே மதவெறியால் தீவிரவாத தாக்குதலை நடத்தும் இசுலாமிய அமைப்புகள் இன்றைக்கும் சிறுபான்மையினர் தான் என்பதனை மனதில் கொண்டால் நலம். இப்படிப்பட்ட தாக்குதலை சக குடிமகனாக வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒருவேளை இதே பாணியில் பெரும்பான்மை சமூகத்தினர் களமிறங்கினால், சொந்த நாட்டிற்குள்ளாகவே இசுலாமிய மத வெறியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என புறக்கணிக்கப்படுவார்கள் என்பதுதான் எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்.

12 ஏப்ரல் 2014

மின்வெட்டு நாளில்...

தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், இந்தியாவின் எதிர்கால பிரதமராகவும் இருக்க கூடிய செல்வி ஜெயலலிதா, தற்போதுள்ள மின்வெட்டுக்கு காரணம் எதிர்கட்சிகளின் சதி யென்று வாய் கூசாமல் பொய் சொல்லி ஒவ்வொரு மேடைகளிலும் பேசி வருகின்றார். ஒருவேளை தன்னுடைய ஏற்ற இறக்க மேடை பேச்சை கேட்குறவனெல்லாம் அடி முட்டாளென்று நினைத்து விட்டார் போல செல்வி ஜெயலலிதா...

உங்களது அடி முட்டாள்தனமான வாதத்தை ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொள்வோமேயானால், ஆளுமை திறன்மிக்கவரென்று உங்களை சில ஜால்ராக்கள் புகழ்வார்களே, அவர்களது வாக்கு இப்போது பொய்த்து போய்விடுமே.  நான், எனது என அடிக்கடி தானென்ற தம்பட்டம் அடிப்பீர்களே, அப்படிப்பட்ட தங்களது கட்டுப்பாட்டில் தானே தமிழக அரசு உள்ளது. உங்களுக்கு தெரியாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் எப்படி, உங்களுக்கு எதிராக சதி செய்ய முடியும்? ஒருவேளை சதி செய்திருந்தாலும் எந்த யூனிட்டில் சதி நடந்தது என்பது கூடவா உங்களது கவனத்திற்கு வரவில்லை? தமிழ்நாட்டுல மழை வரலைன்னா கூட இனி எதிர்கட்சிகளின் சதியென்று தான் சொல்வீர்கள் போல....


இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்ற ஒன்று இல்லவே இல்லையே... திரு விஜயகாந்தின் எம் எல் ஏக்களை பேரம் பேசி உங்களது காலடியில் விழ வைத்த பின்னால் எதிர்கட்சிக்கான தகுதியும் தேமுதிவிற்க்கு இல்லாமல் போய்விட்டது. மைனராட்டி அரசு என்ற சென்ற ஆட்சியாளர்களை மணிக்கொருமுறை விமர்சித்த நீங்கள் இப்போது மிகப்பெரும் மெஜாரிட்டி அரசாகத்தானே இருக்கின்றீர்கள். இதுவரை மின்வெட்டு பிரச்சனையை உங்களால் கூட சரி செய்ய முடியவில்லையே? அப்படியென்றால் அதற்கான திராணி உங்களிடம் இல்லையென்று அர்த்தம் கொள்ளலாமா?

இப்படியாக, தமிழ்நாட்டு பிரச்சனையை கூட சரிவர தீர்க்க முடியாத நீங்கள் வெறுமனே வருங்கால பிரதமர் என்ற பகல்கனவை காணுவது வேடிக்கையாகத்தான் உள்ளது என்பது ஏழை எளிய வாக்கள பெருமக்களின் பேச்சாக இருக்கிறது என்பதை எப்போது உணரப்போகின்றீர்கள்?

மின்வெட்டு நாமம் வாழ்க! பாதாள சாக்கடை நாமம் வாழ்க!

- இரா.ச.இமலாதித்தன்

இழப்பொன்றும் புதிதல்ல!


சிங்களவனுக்கு தமிழின அழிப்பை செய்ய ஏதாவது ஒரு காரணம் வேண்டும். அதனால் தான் திட்டமிட்டே விடுதலை புலிகளின் புதிய தலைவர் உள்பட மூன்று பேரை கொன்றோம். இவர்கள் இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டியமைக்க வந்தவர்களென புரளியை கிளப்பி விட்டு, அப்பாவி தமிழ் இளைஞர்களை மீண்டும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று கோபி, தேவியன், அப்பன் உள்ளிட்ட மூவரை சுட்டு கொன்று அவர்களை தீவிரவாதிகளென பொய்யான பரப்புரையையும் மேற்கொண்டுள்ளது சிங்கள அரசு.

இழப்பொன்றும் புதிதல்ல...
  





தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்




 

அரசியலில் மதம்!

நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

Photo: நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல....

- இரா.ச.இமலாதித்தன்

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல...

- இரா.ச.இமலாதித்தன்

11 ஏப்ரல் 2014

திருமணம் என்ன பெரும்பிழையா?

மணமாகாத (மோடி)அவர் காமராஜர் போல கடைசிவரை தேசத் தொண்டு ஆற்றப் போகிறார் என எண்ணினோம்.

- திரு. மு.கருணாநிதி



18ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருது சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டவர்களே; பூமரங் என்ற வளரி வீச்சு, கொரில்லா போர்முறை போன்ற பல்வேறு யுக்திகளை கற்றுதேர்ந்து, வெள்ளையனுக்கு எதிராக உலகிலேயே முதன் முறையாக ஜம்புத்தீவு பிரகடனத்தை வீரசங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் போர் பிரகடனத்தை வெளியிட்டவர்கள் தானே?

19ம் நூற்றாண்டில் என் தலைவன் தேசத்தந்தை நேதாஜி கூட எமிலி செனகலை காதல் திருமணம் தான் செய்து கொண்டார்; ஆனாலும், அவர் கொண்ட கொள்கைக்காக அந்நியனை விரட்டி தேசத்தை காப்பாற்ற இந்திய தேசிய ராணுவத்தையே கட்டியமைக்கவில்லையா?

20ம் நூற்றாண்டில் என் அண்ணன் பிராபகரன் கூட மதிவதனியை திருமணம் செய்து கொண்டார்; தமிழனின் புறநானூற்று வீரத்தை உலகளாவிய அளவில் வெளிக்காட்டி, உலகிலுள்ள போராளி இயக்கங்களில் முப்படையையும் உருவாக்கி எதிரிகளின் இனவழிப்பை எதிர்த்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டிமையக்கவில்லையா? 

படுக்கையறையை பற்றி பொதுமேடையில் பேச வேண்டியதன் அவசியம் என்ன? தாலி கட்டினாலே பிரம்ச்சர்யம் போய்டுமா என்ன? மோடி தனது திருமணத்தை முற்றிலுமாக மறைக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், தனிக்கட்டையென்றே சொல்லி இருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது தானே? தாலி கட்டினாலும் அவர் தனிக்கட்டையாகத்தானே வாழ்ந்திருக்கிறார்.

என் கேள்வி, அவர் ஏன் திருமணம் செய்ததை மறைத்தார் என்பதை பற்றியல்ல... அவரது திருமணத்தை காரணம் காட்டி கீழான அரசியல் செய்வது ஏன்? திருமணமான அடுத்தநாளே தனியாக போயிருந்த கதைகள இங்கே ஏராளம் உண்டு. அவர் கல்யாணம் செய்ததால் காமராஜ் மாதிரி ஆட்சி செய்ய முடியாதா என்ன? அன்றைய தமிழகத்தின் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பென்று சொன்னது இதே வாய் தானே?

திருமணத்தை மறைத்ததவர் இன்று ஒத்து கொண்டு விட்டார்; அதை வரவேற்க வேண்டுமே தவிர, அதையே சொல்லி அவருக்கு மனவருத்ததை ஏற்படுத்த கூடாது. மேலும் திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விசயம். அதை அரசியல் ஆக்குவது கேவலமான செயல் தானே? தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கையை பற்றி பேச இது சரியான தருணம் இல்லையென்று மோதி நினைத்திருக்கலாம். அவரது படுக்கையறையை விமர்சித்து என்னவாகி விட போகிறது? காங்கிரஸ் காரர்களுக்கும், காங்கிரஸோடு தான் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க போகிறோம் என்ற மனநிலையொடு இருக்கும் திரு கருணாநிதி போன்றோருக்கும், காமராஜர் ஓர் ஊறுகாய்... மற்றபடி சொல்வதற்கொன்றுமில்லை.

இந்த வயதிலும் மனைவி துணைவி யென்று குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தந்து கட்சி மேடையிலும் தனக்கருகே அவர்களை அமர வைத்து கொண்டும், இவ்விருவர்களுக்கு முன்னாடி ஏற்கனவே ஒரு திருமணத்தையும் செய்த நீங்கள், சிறப்பாக ஆட்சி செய்யவில்லையா என்ன? மணமாகாதவர்கள் மட்டும்தான் தேசத்தொண்டு ஆற்ற முடியுமென்ற தொனியில் நீங்கள் சொல்லிருப்பது நகைப்புக்குரியதாகவே பொருள் கொள்ளப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? அரசியலில் விமர்சனம் என்ற போர்வையில் படுக்கையறையை பற்றியெல்லாம் பொது இடத்தில் பேசுவது உங்களை போன்ற மூத்த அரசியல் தலைவருக்கு சரியான முறையா?

- இரா.ச.இமலாதித்தன்

08 ஏப்ரல் 2014

தஞ்சை நாடாளுமன்ற நாயகர்கள்!

திமுக - திரு. டி.ஆர்.பாலு

இவரை இந்திய முழுமைக்குமே தெரியும். ஏனெனில் மத்திய கேபினட் அமைச்சராக பணியாற்றியவர். திமுகவின் முக்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.

காங்கிரஸ் - திரு. டி.கே.வி

இவரையும் தஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் தஞ்சையில் முதன் முதலாக கிராமத்து மாணவர்களின் கல்விக்காக அடித்தளமிட்ட பூண்டி பெரியவரின் புதல்வன் இவர்.

பிஜேபி - திரு கருப்பு முருகானந்தம்

இவரை இங்குள்ள பகுதிகளில் கருப்பு என்ற அடைமொழியோடு தெரியாவதவர்களே இல்லை எனலாம். மேலும் ஒட்டுமொத்த டெல்டா பகுதியில் மாநில பொது செயலாளர் என்ற மிகப்பெரிய பதவியை வகிக்கும் ஒரே அரசியல் தலைவர் இவர் மட்டுமே என்ற பெருமைக்கு உரித்தானவர்.

அதிமுக - திரு. கே.பரசுராமன்

ஆம் ஆத்மி - திரு எஸ். பழனிராஜன்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் - எஸ். தமிழ்செல்வி


இந்த மூன்று பேரையும் தஞ்சை தொகுதியின் பெரும்பாலான வாக்களர்களுக்கு யாருன்னே தெரியல... இதுதான் எதார்த்தம். கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகளை விட, மாநிலத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவின் சார்பாக வேட்பாளரை நிறுத்தி, மத்திய சர்க்காருக்கான பிரதமர் ஆவதாக கனவு கண்டு கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவின் வேட்பாளருக்கே இந்த நிலைமை என்ற போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஒருவேளை நம்மளோட காலில் தானே விழுந்து கிடக்க போகிறார்கள், அவர்களை மக்களுக்கு தெரிந்தால் என்ன? தெரியாவிட்டால் என்ன? யென்று கூட செல்வி ஜெயலலிதா நினைத்திருக்கலாம். அதுவும் உண்மைதானே? கூன்பாண்டிகளின் வரிசையில் இன்னொரு அடிமை அதிமுகவிற்கு சிக்கியாகிவிட்டது. ஆனால், ஜெயிக்கணுமே... எது எப்படியோ ஆழ்ந்த அனுதாபங்கள்!

-இரா.ச.இமலாதித்தன்

07 ஏப்ரல் 2014

அரசியலாகி போன ஆன்மீகம்!

 தமிழ்நாட்டுல உள்ள காவல் தெய்வங்களான மதுரை வீரன், சுடலை மாடன், கருப்புசாமி, கருப்பண்ணசாமி, அய்யனார், இடும்பன், கருப்பன், சோணையாசாமி, மலைச்சாமி, முணியாண்டி, காத்தவராயன் போன்ற தெய்வங்களை புறக்கணித்துவிட்டு வடக்கத்திய இராமரை மட்டும் முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழின் ஆதிகாலம் தொட்டே "மாயோன் - சேயோன் - கொற்றவை" வழிபாடு மட்டும்தானே இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அப்படி பார்த்தால், மாயோனென்ற பெருமாளையும், சேயோனென்ற முருகனையும், கொற்றவை என்ற அம்மனையும் தானே இங்குள்ள ஹிந்து அமைப்புகள் முன்னிறுத்த வேண்டும்?

நீங்க இராமர்கோவிலை கட்டுங்க; கட்டாமல் விடுங்க. தமிழ்நாட்டிலுள்ள எத்தனையோ பிரசித்தி பெற்ற கோவில்களில் எக்கசக்கமான சிவாலயங்கள் இன்றளவும் புதுப்பிக்கப்படாமல் இடிபாடோடு பாதி உடைந்தும், மீதி சிதிலமடைந்தும், கோவிலில் கையேந்த்தும் பிச்சைக்காரர்கள் போல பரிதாபமாக காட்சி தருகின்றது! அதை சரி செய்யுங்கய்யா மொதல்ல... அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வக்கில்லாமல் மதம் சார்ந்த அரசியல் செய்வது இழிவானது. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?



- இரா.ச.இமலாதித்தன்

தரணியாண்ட தஞ்சை தொகுதி!


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடைய தஞ்சாவூர் தொகுதி தேர்தல் பரப்புரையை நேரலையாக பி.ப 3.00 மணியிலிருந்து பி.ப 4.00 மணி வரை அந்த ஒரு மணி நேரமும் பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போல திமுக தலைவர் திரு கருணாநிதி உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள மட்டுமே சம்மட்டியடி விமர்சனம் செய்யும் செல்வி ஜெயலலிதா, தஞ்சாவூரில் மட்டும்தான் திரு டி.ஆர்.பாலுவை மட்டுமே முழுக்க முழுக்க விமர்சித்து கொண்டிருந்தார். திரு டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களை பட்டியலிட்டு கொண்டிருந்தார்.

செல்வி ஜெயலலிதாவிடம் இல்லாத சொத்தா? அரசியலில் உள்ள ஒவ்வொருவருக்கும் எக்கசக்கமான சொத்து இருக்கத்தான் செய்கின்றது. வார்டு கவுன்சிலர் கிட்ட கூட இப்போதெல்லாம் வங்கி கணக்கில் கோடிகள் புரளும்போது திரு டி.ஆர்.பாலுவின் சொத்தை மதிப்பிட்டு கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. மேலும் அதை மட்டுமே பிரதான காரணமாய் சொல்லி செல்வி ஜெயலலிதா ஓட்டு கேட்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. திரு கருணாநிதிக்கு கொடுக்கும் அதே முக்கியவத்தையே திரு டி.ஆர்.பாலுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவின் நோக்கமும் புரிந்தது.

திரு டி.ஆர்.பாலுக்கு அடுத்து செல்வி ஜெயலலிதா பேசியது மீத்தேன் பிரச்சனையை மட்டும்தான். இத்தனை நாளாக வேளான்ஞானி தெய்வத்திரு நம்மாழ்வார் மேற்கொண்டிருந்த போராட்டத்தின் போதெல்லாம் மெளனியாக இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன புது கரிசனம்? மீத்தேன் விசயத்தில் திமுக மட்டுமே குற்றவாளியல்ல அதிமுகவுக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாகவே படுகிறது. எத்தனையோ முறை வெறும் கடிதங்களை மட்டுமே மத்திய சர்க்காருக்கு அனுப்பி கொண்டிருந்த செல்வி ஜெயலலிதா, ஏன் ஒரு முறை கூட மீத்தேன் பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதவில்லை?

மீத்தேன் விசயத்தில் டெல்டா மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் போரட்டம் அல்லவா அதிமுக செய்திருக்க வேண்டும்? சோழ நாடு சோறுடைத்து  என்ற வார்த்தையை மேடையில் பேசும்போது மட்டும் அலங்கரித்துவிட்டு நெற்களஞ்சியம் குப்பைமேடாவதை செல்வி ஜெயலலிதா வேடிக்கை பார்ப்பதேன்?


டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்களாக உள்ள திரு காமராஜோ, திரு வைத்தியலிங்கமோ, திரு ஜெயபாலோ ஏன் மீத்தேன் பிரச்சனை தொடர்பாக மக்களை சந்திக்கவில்லை? டெல்டா மக்களின் ஓட்டுகளை வாங்கித்தானே இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள ஆயினர்? அப்பறமும் ஏன் இவர்கள் மீத்தேன் தொடர்பாக வாயையே திறக்கவில்லை.

பன்னாட்டு முதலாளிகளிடம் கூட்டு களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டை கூறுபோடும் திராவிட கட்சிகள் ஒன்றுக்கொன்று யாரும் சளைத்தவர்களில்லை. இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் ஒரே கொள்கை உடையவர்களே. எனவே, தஞ்சை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக என்ற திராவிட கட்சிகளுக்கோ, தமிழர் விரோத காங்கிரஸ் கட்சிக்கோ வாக்களிக்காமல் இருப்பதுதான் சரியான முறையாக இருக்கும். அதுதான் உணர்வுள்ள தமிழனாக, நேர்மையான வாக்களானாக நாம் செய்யும் கடமையாக இருக்கும். செய்வீர்களா...? நீங்கள் செய்வீர்களா?

ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்.

02 ஏப்ரல் 2014

போற்ற வேண்டிய தெய்வங்கள் மருதுபாண்டியர்!



உலகிலேயே முதன்முறையாக ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி "வீரசங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.

பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை - கடின உழைப்பை - நாட்டுப்பற்றை - தன்னம்பிக்கையை - இறை பக்தியை - அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல்  ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருதுசகோதரர்களது விசயத்தில் மட்டுமே நடந்தேறியது என்பதை நினைக்கையில் மருதுசகோதரர்களின் வீரத்தையும் ஆளுமையையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியை பிடிப்பதற்காக துரோகிகளின் தூண்டதலால்  மெய்க்காப்பாளன் கருத்தன் மூலமாக காட்டிக்கொடுக்கப்பட்டு மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிடும்போது அவர்களுக்கு ஆதராவாக கடைசிவரை நின்ற அனைத்து தரப்பட்ட மக்களான 500க்கும் மேற்பட்டோரை  ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட அதிர்ச்சிகரமான மாபெரும் துயர சம்பவமும் இங்கேதான் அரங்கேறியது.

இன்றைய காலக்கட்டங்களில் விடுதலைப்புலிகள் உள்பட பல இராணுவ இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கொரில்லா போர்முறையை மிக நேர்த்தியாக அன்றைக்கே பயன்படுத்தி வெற்றிவாகை சூடிய மருதுபாண்டியர்களை வெறும் சாதீய வட்டத்தில் மட்டும் அடைக்க நினைப்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

ஆன்மீகப்பணியில் கிருத்துவம் - இசுலாம் - ஹிந்து என்ற பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களையும் திருப்பணி செய்த மண்ணுரிமை போராளிகளான வெள்ளை மருதுவும் - சின்ன மருதுவும் நாம் போற்றி வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள் என்பதை நினைவில் கொண்டு எந்நாளும் அவர்களது ஆளுமையையும் வீரத்தையும் விவேகத்தையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்.