26 நவம்பர் 2015

தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

என் ராசி, என் நட்சத்திரம், என் தலைவன்! தமிழ் தேசிய தலைவனின் பிறந்தநாளே, தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

(அடியேனும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் தான்)


(படம்: மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம்.)

தமிழ் தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் பிறந்த நாளான இன்றைக்கும் கூட, இனத்தாலும் - மொழியாலும் தமிழர்களான இசுலாமியர்களில் பெரும்பான்மையானோர் வடக்கத்திய அந்நிய மொழி பேசும் ஆமீர்கானுக்காக மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றனர்.

ஆக, இவர்களின் முதன்மை அடையாளம் மொழி, இனம் இல்லை; மதம் தான் இவர்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்பது போலவே செயல்படுவது வேதனையான விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

25 நவம்பர் 2015

கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துகள்!

தமிழர்களின் பெரும்பாலான விழாக்கள் முழுநிலவு பெருநாளில் தான் இருந்தது. அதற்கு மற்றுமொரு சான்றாக, உலகத்திற்கே வழிகாட்டிய பெருந்தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துகள்!

ரஹ்மானென்ற தமிழன்!



2009ம் ஆண்டு உலக ஊடகங்களே உற்று நோக்கிய ஆஸ்கார் மேடையில், 'எல்லா புகழும் இறைவனுக்கே!' என தாய்த்தமிழில் முழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானை, அன்றைய வட இந்திய ஊடகங்கள் மொழிரீதியாக மென்மையாக சாடின. இரண்டு ஆஸ்கார் விருதுகளை இந்தியனாக வாங்கி இந்தியாவிற்கு கெளரவம் சேர்த்த போதும், தென்னிந்தியனாகவும், தமிழனாகவும் தான் ரஹ்மான் வடக்கத்திய ஊடகங்களுக்கு தென்பட்டார். இப்போதும் கூட அவர் சொன்ன கருத்தை பெரிதாக்கி அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க மற்றுமொரு காரணம் தமிழன் என்பதால் கூட இருக்கலாம்.

அமீர்கானின் பின்புல வரலாறு எதுவும் தெரியாது. அந்த வரலாறை தேடவும் விரும்பவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின், தந்தையும் தாயும் தமிழர்கள் என்பதும், ரஹ்மானின் அப்பாவான இசையமைப்பாளர் திரு.சேகர் அவர்கள் தமிழ் இனக்குழுவான முதலியார் பட்டமுள்ள அகமுடையார் தான் என்பதும், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார் என்பதும் தான் எனக்கு தெரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தமிழனின் கடந்தகால பின்புல வரலாறு.

இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு ரஹ்மானின் இசைக்கு பரம ரசிகன் என்பது மட்டுமல்ல; மேலும் இளையராஜாவை விட ரஹ்மானின் தனிப்பட்ட குணநல பண்புகளுக்கும், தன்னடக்கத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில், ஊடகங்கள் என்ன சொன்னாலும், சக தமிழ் பேரினத்தவனாக, மதம் கடந்து ஏ.ஆர்.ரஹ்மானை ஆதரிக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

என் பார்வையில் இந்த வாரம்

விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கான அறிவுபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் இன்றைய பகுதியில், பெரும்பாலான வார்த்தைகளில் தமிழில்லை; சமக்கிருதம் தான்!

#



விகடன் மீது அ.தி.மு.க.விற்கும், தந்தி மீது தி.மு.க.விற்கும், ஆமீர்கானின் மனைவி சொன்ன 'அது' இல்லை போல!


#

பல லட்ச மக்களை தங்களது பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கட்டிப்போட்டு ஆட்சியை பிடித்த தி.மு.க., இன்று தந்தி டி.வி.போன்ற ஊடக விவாதக்களங்களில் ஒருசிலர் மத்தியில் கூட தனது ஆளுமையை நிரூபணம் செய்ய முடியாமல் ஒதுங்கி செல்வது ஆச்சர்யம் தான்.
களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட, தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் அந்த களத்தையே இழப்பது தான் பலவீனம் என்பது போலவே தி.மு.க.வின் இந்த முடிவும் அமைந்திருக்கிறது.

#

திரு. நெப்போலியன் ரெட்டியாரும், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரானார்!

வாழ்க தமிழக பா.ஜ.க.!

#

கருணாநிதியை சந்தித்த கோவன் மீதான புரட்சி - புடலங்காய் - நம்பிக்கையெல்லாம், இனி சந்தேகத்திற்கு உள்ளானாலும் துளியும் தவறில்லை.

#
கூகிள் போன்ற இணைய தேடுபொறிகளில், Tiger என தேடினால் புலி வருமா என தெரியாது. கண்டிப்பாக எம் அண்ணன் பிரபாகரன் வருவார்.
‪#‎Hbd_TamilTiger‬
#

கோமள விலாஸ் உணவகம்
தமிழ் முரசு பத்திரிகை
தமிழ்

சிங்கப்பூர்!

இந்தியா
நரேந்திர மோடி
ஹிந்தி

#

23 நவம்பர் 2015

நரேந்திர மோடிக்களால் நரேந்திரனாக முடியாது!



சிகோகோவில், அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! என புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்தி, இந்திய ஆன்மீகத்தை வெளியுலகிற்கு அடையாளப்படுத்திய விவேகானந்தரை, அங்கு அனுப்பி வைத்ததே பாசுகர சேதுபதி என்ற தமிழர் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தனக்கு வந்த அழைப்பை பெருந்தன்மையாக, என்னை விட விவேகானந்தர் சென்றால் பொருத்தமாக இருக்குமென எண்ணி அனைத்து பயண செலவுகளையும் செய்து வைத்தவர் பாசுகர சேதுபதி.

நேற்று, மலேசியாவில் விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்து, சகோதர சகோதரிகளே என உரையாற்றியதற்காக நரேந்திர மோடியை விவேகானந்தரோடு ஒப்பிட்டு புகழ்வதை ஏற்க முடியவில்லை. விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன் என்பதால், மோடியின் பெயரோடு மட்டும் ஒப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், எத்தனை பிறப்பெடுத்தாலும் மோடி விவேகானந்தர் ஆக முடியாது.

அரசியலில் நேதாஜியையும், ஆன்மீகத்தில் விவேகானந்தரையும் பின்பற்ற சொன்ன பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் உறவுகள் இந்த மாதிரியான, தவறான ஒப்பீடுகளையும் கண்டிக்க வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

அமீர்கான்களும் - கமல்ஹாசன்களும்!

அமீர்கான்களுக்காக சிரியாக்களும், கமல்ஹாசன்களுக்காக இஸ்ரேல்களும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. சகிப்புத்தன்மை இல்லாத இந்த நாட்டில் இனிமேலும் இருந்து என்ன கிழிக்க போகிறீர்கள்? குரைக்கிற நாய்கள் பெரும்பாலும் இங்கே கடிப்பதேயில்லை என்ற பழமொழியை இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பழமைவாதிகளின் நாட்டில், புதுமை படைக்கவே அவதரித்த நீங்கள் பிறந்ததே ஓர் அதிசயம் தான். உங்களது சாதனைகளுக்கு நன்றி!

சீக்கிரம் கிளம்புங்கள்.

20 நவம்பர் 2015

ஆவணத்தான்கோட்டை பிரபாகரனுக்கு ஜாமீன்!



ஈழ விசயத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான் கோட்டையை சேர்ந்த, உறவின்முறை சகோதரர் திரு.பிரபாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி! மேலும், இதற்கு பின்புலமாக இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி.

சகோ.பிரபாகரன், பிறப்பாலும், சாதியாலும் அகமுடையாராக இருக்கலாம். ஆனால் அவர் இனத்தாலும், செயலாலும் சுத்த தமிழன் என்பதாலேயே, அவருக்கு பின்னால் அனைத்து தமிழ் அமைப்பினர்களும் துணை நின்றார்கள் என்ற இந்த ஒற்றை நிகழ்வே மறக்க முடியாத சமகால வரலாறு!
இனிவரும் காலங்களில் ஏற்றத்தாழ்வின்றி தமிழர்களாகவே பயணிப்போம்.

- இரா.ச.இமலாதித்தன்

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம்!




இதைத்தான் எதிர்பார்க்கிறோம் ஒவ்வொரு முறையும். முன்னாள் முதல்வராக, நிதித்துறை அமைச்சராக இருந்த போதும் பொது இடங்களில் தலைமையின் காலைத்தேடி முதுகு குனிந்தே பார்த்த நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். தரையில் அமர்ந்திருந்தாலும் கம்பீரமாய், முதுகெலும்போடு, தமிழனாய் நிமிர்ந்த இந்த ஒரு படம் போதும்.

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம் என்ற நம்பிக்கை விதையை, சாமானியன் மத்தியிலும் ஆழமாய் விதைத்த, மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் கையிலும் தேநீர் கோப்பை, கடலூர் வெள்ள நிவாரண பணிகளின் போது!

- இரா.ச.இமலாதித்தன்

19 நவம்பர் 2015

ஆளும் வர்க்கத்தின் அரஜாகம் - மருதுபாண்டியர் நினைவுத்தூண் அகற்றம்!



விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஆத்திப்பட்டியில், சுதந்திர போராட்ட வீரர்களும், தமிழ் தமிழ் தேசியம் காத்தவர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவம் பதித்த நினைவுத்தூணை அரசு சார்பில் தரைமட்டமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழக தலைநகரிலே, நாட்டிற்காக என்ன சாதனை செய்தாரென்றே தெரியாத தெலுங்கர் சோபன்பாபு சிலையெல்லாம் பாதுபாப்பாக இருக்கையில், ஏதோவொரு கிராமத்து மூலையில் பெருந்தமிழர்களான மருது சகோதர்களின் நினைவுத்தூணை அகற்றுவதுதான் நாடு போற்றும் நான்காண்டு சாதனை போல.
ஆளும் வர்க்கத்தின் அராஜக போக்கான இச்செயலை, அனைத்து தமிழ் உறவுகளும் நிச்சயம் கண்டிப்பார்களென நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

18 நவம்பர் 2015

நயன்தாராவுக்கு வாழ்த்துகள் சொல்வது சரியா?

தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காத வரையிலும், அயோக்கியன் கூட மற்றவர்களின் பார்வையில் நல்லவன் தான். அதே மாதிரிதான் நயன்தாரா விசயமும், மற்றவர்கள் பார்வையில் பார்க்க படுகிறது. இன்றைக்கு நயன்தாரா பிறந்தநாள் என்பதால், எதிர்ப்பும் - ஆதரவுமாக, வாழ்த்துகளும் - அவதூறுகளுமென பல பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
நயன்தாராவை விமர்சிக்கும் எத்தனை பேர், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்க சீலராக வாழ்கின்றனர் என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். சினிமா என்பது பொது ஊடகம். அதில் நடிப்பர்களை திரையில் ரசிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள். நடிகைகளை வெறும் உடலாக மட்டும் பார்க்காமல், அவர்களது படுக்கையறை திரையை நீக்கி எட்டிப்பார்த்து எச்சில் விட்டு, உங்களது வன்மங்களை வார்த்தைகள் ஆக்காதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

தமிழக வெள்ள நிவாரணமாக பா.ஜ.க. ஒரு கோடி!



தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்காக, நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாயை பா.ஜ.க.தலைமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்புலமாக இருந்த, தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதும் நம் கடமையாகிறது.

அஜித் ரசிகனும், கடலூர் வெள்ளமும்!

ஆமா! அஜித் மட்டும்தான் நல்லவர்; மத்த நடிகரெல்லாம் திருடனுங்க. அஜித் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்; ஆமா! மத்த கூத்தாடிகளெல்லாம் கேடுகெட்டவனுங்க. படத்தை படமாக மட்டும் பார்க்க தவறிய தமிழனின் தலைமைத்துவ துதி இப்படித்தான் இருக்கிறது.
 
தமிழ் சினிமா வரலாற்றில் 'வேதாளம்' மிக அதிக வசூலை பெற்றதாக பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த பல கோடிகள் வசூலித்த தொகையில் ஒருசில கோடிகளை சென்னை - கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் மழை வெள்ள பாதிப்புகளுக்காக கொடுத்திருந்தால் பெருமை படலாம். அதை விட்டுவிட்டு, "தலடா, தெறிடா, இத்தனை கோடிடா!" ன்னு மழையால் வீடிழந்த மக்கள் அவதிப்படும் இம்மாதிரியான சூழலில் பீற்றி கொள்வதில் என்ன பெருமை கிடைக்கிறதோ, சில டேஷ்களுக்கு...

வ.உ.சி.யும் சாதி தலைவரானார்!

வரலாற்றில் தன் நாட்டுக்காக தனிக்கப்பலையே வாங்கி, கப்பலோட்டிய சுதேசித்தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் இன்று! ஆனால், அவரையும் சாதி தலைவராக்கி அரசியல் ஆதாயம் தேடும் அமைப்புகளெல்லாம் வ.உ.சி.பிள்ளையின் நேரடி வாரிசு தாரர்களின் குடும்பத்தினர், இன்று வறுமையில் வாடுவதை கண்டும் தோள் கொடுக்கவில்லை என்பதும் கூட வருத்தமான வரலாறு தான்!

விமர்சகரெல்லாம் யோக்கியரா?

தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காத வரையிலும், அயோக்கியன் கூட மற்றவர்களின் பார்வையில் நல்லவன் தான். அதே மாதிரிதான் நயன்தாரா விசயமும், மற்றவர்கள் பார்வையில் பார்க்க படுகிறது. இன்றைக்கு நயன்தாரா பிறந்தநாள் என்பதால், எதிர்ப்பும் - ஆதரவுமாக, வாழ்த்துகளும் - அவதூறுகளுமென பல பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

நயன்தாராவை விமர்சிக்கும் எத்தனை பேர், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்க சீலராக வாழ்கின்றனர் என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். சினிமா என்பது பொது ஊடகம். அதில் நடிப்பர்களை திரையில் ரசிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள். நடிகைகளை வெறும் உடலாக மட்டும் பார்க்காமல், அவர்களது படுக்கையறை திரையை நீக்கி எட்டிப்பார்த்து எச்சில் விட்டு, உங்களது வன்மங்களை வார்த்தைகள் ஆக்காதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

17 நவம்பர் 2015

திருத்துறைப்பூண்டி அகமுடையார்களால் ஒருங்கிணைக்கும் கந்த சஷ்டி பெருவிழா!




டெல்டா பகுதியான திருத்துறைப்பூண்டி நகர அகமுடையார்களால் ஒருங்கிணைக்கப்படும் எம்பெருமான் திருமுருகனின், 'கந்த சஷ்டி பெருவிழா' அழைப்பிதழ்! அருகிலுள்ள ஆன்மீக சொந்தங்கள் கலந்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் கந்த சஷ்டி பெருவிழா வாழ்த்துகள்!

16 நவம்பர் 2015

கடலூரும் - ஆர்.கே.நகரும்!

ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல. தமிழகத்தின் தலைநகரிலேயே பல பகுதிகளில் இடுப்புக்கும் மேலே மழை நீர் தேங்கி நிற்கிறது. கடலூர் போன்ற கடலோர வெளி மாவட்டங்கள், மழையால் சின்னாபின்னமாகி இருக்கிறது. ஆர்.கே.நகரில் மட்டும் 48 இடங்களில் மீட்பு பணி செய்து, தான் வரும் வழியெங்கும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி இரைத்துவிட்டால், ஒட்டுமொத்தமாக மற்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரெல்லாம் வடிந்து விடுமா என்ன? ஆர்.கே.நகர் ஒரு தொகுதியால் மீண்டுமொரு முறை எம்.எல்.ஏ. ஆகிவிடலாம். மற்ற மாவட்ட தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவாக சரி செய்தால் தான் மீண்டும் முதல்வராக முடியும். ஏனெனில், ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல!

அடுத்த மாதமே கடலூரில் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கட்டும். நாளைக்கே அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு, வார்டு வாரியாக அங்கு அனுப்பப்படும்.
திராவிடம், தீரா விடம்!

- இரா.ச.இமலாதித்தன்.

வாழ்த்துகள் அகமுடையாரே!






சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பட்டறைபாக்கத்தில், தனியொருவனாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தன் பணி சுமைகளுக்கிடையே தன் சொந்த செலவில் சாப்பாட்டு பொட்டலங்களை தயார் செய்து, நேரடியாக களத்திற்கும் சென்று அன்னதானம் செய்யும் அன்பு சகோதரர். மருது பரணி அகமுடையார் அவர்களின் செயல்களால் பெருமை கொள்கிறோம்.

பெயருக்கு பின்னால் சாதியை போட்டு கொள்வது பெருமையுமல்ல, அவமானமும் அல்ல. ஆனால், நம் செயல்களால் அந்த சாதி பெயருக்கு புகழையும் மரியாதையும் தேடித்தருவதில் தான், உண்மையான பெருமையே அடங்கி இருக்கிறது. வாழ்த்துகள் அகமுடையாரே!

- இரா.ச.இமலாதித்தன்

குறிஞ்சாக்குளத்து பிரச்சனை துணை நிற்குமா தேவரினம்?

குறிஞ்சாக்குளத்து கோவில் பிரச்சனைக்கு முக்குலத்தோர் அமைப்புகளும், மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும் துணை நிற்குமா?
கலிங்கப்பட்டியை தெரிந்து வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு அதன் அருகிலுள்ள குறிஞ்சாக்குளத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள குறிஞ்சாக்குளத்தில் 1992ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி அப்பகுதி வடுகர்களால், அதே பகுதியை சார்ந்த மண்ணின் மைந்தர்களான நான்கு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர் கண்டந்துண்டமாக ஏன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்கள்? என்பதை பற்றி கவலைப்படவோ, யோசிக்கவோ கூட நமக்கு நேரமில்லை. காரணம் கேட்டால், அது 'பறையர் - நாயக்கர்' சாதி பிரச்சனையென சொல்லி எளிதாக கடந்து, மறந்து விடுகிறோம்.

உண்மை என்னவெனில் அங்குள்ள தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதுதான் துயரமான செய்தி. அக்குள்ள பெரும்பாலான நிலப்பகுதி வடுகர்களிடம் இருந்ததால், தமிழனுக்கு கோவில் கட்ட இடம் கொடுக்க மனம் வரவில்லை; அதனால் தான் நால்வர் படுகொலை அரங்கேறியது.

இந்த கொலைக்கு, கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மாமா திரு. சங்குவெட்டி மோகன்தாசு நாயக்கர் தான் என திருவேங்கடம் காவல்துறை குற்றஞ்சாட்டியும் பலன் ஏதுமில்லை. காரணம் என்னவெனில் மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த தம்பிதான், இந்த கொலை வழக்கின் முதல் குற்றவாளியான ரவிச்சந்திரன்.

இதெல்லாம் கடந்த கால வரலாறு. இப்போதைய சூழல் மிக மோசமாக இருக்கிறது. குறிஞ்சாக்குளத்தில், கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட நால்வரின் கனவைவும், தமிழர்களின் உரிமையையும் நிறைவேற்றும் நோக்கத்தோடு தமிழின உணர்வாளர்களால் அங்கே, கந்தாரி அம்மனுக்கு கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மீண்டும் ஒரு யுத்தக்களம் வெடித்துள்ளது.

மதுரையில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுத்த முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் முக்குலத்தோர் அமைப்புகளும், கி.பி.1800 களிலேயே சாதி மத வேறுபாடின்றி 'வீரசங்கம்' என்ற அமைப்பின் மூலம் அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் ஒன்றிணைத்து காளையார்கோவில் கோபுரத்தை கட்டி காத்து, சிவகங்கையை கி.பி 1780 முதல் கி.பி 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் கொள்கைகளை பின்பற்றும் அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும், அகமுடையார் அமைப்புகளும், இந்த கோவில் கட்டும் பிரச்சனையை கையில் எடுத்து, சாதி என்ற வட்டம் தாண்டி சக தமிழர்களின் பிரச்சனைக்கும் தோள் கொடுப்பதுதான் காலத்தின் தேவை.

மண்ணின் மைந்தர்களான சக தமிழ் இனக்குழுக்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை, தன் மக்கள் பிரச்சனையென முடிவு செய்து, குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மனுக்கு கோவில் கட்ட தடையாய் இருக்கும் அனைத்து எதிர்ப்புகளையும் உடைத்து, தமிழர்களாக ஒன்றிணைந்து ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- இரா.ச.இமலாதித்தன்

15 நவம்பர் 2015

மருதுபாண்டியர்களை அவமதிக்கும் அரசாங்கம்!







அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசியத்தின் முன்னோடி அமைப்பின் மூலமாக கி.பி.1800 களிலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த, மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவொரு தமிழனும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழனின் வீரத்தையும், கொரில்லா போர்முறையும் அன்றைக்கே வெளிக்காட்டி, 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட, முதல் சுதந்திர போராட்ட வீரர்களான 'வெள்ளை மருது - சின்ன மருது' என்ற மருது சகோதர்களின் வெண்கல சிலைகளின் அவலத்தை பாருங்கள். சிவகங்கை அருங்காட்சியகத்தின் வெளியே புல் மண்டி கிடக்கும் இடத்தில் வெண்கல சிலைகளின் இழிநிலையை பார்த்தும் சலனம் ஏதுமின்றி நகர்ந்து சென்றால் நீங்களும், உணர்வுள்ள அக்மார்க் பச்சை தமிழனே!

இதை இத்தனை நாட்களாக கண்டும் காணாமல் ஒன்றுமே செயல்படுத்தாத சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா? வருடந்தோறும் அக்டோபர் 24ம் தேதி மருது சகோதரர்களுக்கு அரசு விழா மட்டும் எடுக்கிறது இந்த அரசாங்கம். ஆனால், அவர்களின் முழு உருவ வெண்கல சிலைகளை இப்படி கேட்பாரின்றி அவமானப்படுத்திருக்கும் இச்செயலை கண்டிக்க கூட ஆளில்லை என்பது தான் வருத்தமான விசயம்.

மேலும், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி அருகிலுள்ள முக்குளம் கிராமத்தில் அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டை சீர்படுத்தி அங்கேவொரு மணிமண்டபம் கட்டவும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யுமா இந்த அரசாங்கம்?


- இரா.ச.இமலாதித்தன்

பாரீஸ் முதல் கடலூர் வரை!

நாம் எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும்? எதைப்பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்? எதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதை கூட ஊடகங்களே தீர்மானிக்கின்றன என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் தான், 'சப்போர்ட் பாரீஸ்' என்ற தற்காலிக ப்ரோஃபைல் மாற்றம்.

முள்ளிவாய்க்காலில் பல லட்சம் உயிர்கள் கொலை செய்யபட்ட போது, அது அடுத்த நாட்டு பிரச்சனை. ஆனால், பாரீஸ் மட்டும் பக்கத்து வீட்டு பிரச்சனை. டெல்லி கற்பழிப்புக்காகவும், ஆந்திர வெள்ளத்திற்காகவும் நிதியுதவி - போராட்டம். ஆனால், தமிழகத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளோ, கடலூர் மழை வெள்ளத்தால் வீடிழந்த மக்களோ, இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களோ, வேற்றுகிர வாசிகளாக போய் விடுகின்றனர், புரட்சி பேசும் போராளிகளுக்கு.
த்தூ...

பாரீஸ் படுகொலைகளுக்கு பின்னாலுள்ள வல்லாதிக்கம்!

பாரீஸ் படுகொலைகள் கண்டிக்கப்பட வேண்டியவையே. மும்பை கூட முன்னோடிதான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு. இந்த கொலைகளெல்லாம் யாரால்? எந்த அமைப்பால்? செய்யப்படுகின்றது என்ற ஆய்வெல்லாம் தேவையில்லை; உடனடியாகவே அவர்களாகவே பொறுப்பேற்று கொள்வார்கள். உடனே, அல்-கொய்தா, தாலிபான்கள், சிமி, இந்தியன் முஜாகிதீன், ஐஎஸ்ஐஎஸ் என படுகொலைகள் செய்த பயங்கரவாத அமைப்புகளை ஒருபக்கம் கண்டிப்பதும், மறுபக்கம் அவர்கள் போராளிகள், ஜிகாதிகள் என போற்றுவதும், இன்னொரு பக்கம் இசுலாமிய மதவெறியர்கள் என ஒட்டுமொத்த மார்க்கத்தினரையே இழிவு படுத்துவதும் தொடர்ந்து கொண்டே வருவதைத்தான் பார்க்க முடிகிறது.

எய்தவன் யாரென ஆராயாமல், அம்பை வசை பாடி என்னாக போகிறது? வில்லாளன் யாரென யூகித்து, உலகின் பொது எதிரியின் நோக்கம் எதுவென பொறுமையாக சிந்தித்து விட்டு, உணர்ச்சிவசப்படுங்கள். அப்போதுதான் அந்த உணர்வுக்கும் ஏதாவது மதிப்புண்டு. நேற்று தாலிபான்கள்; இன்று ஐஎஸ்ஐஎஸ்கள்; நாளை இன்னொரு புதிய பெயரிலான ஏதோவோர் அமைப்பு இதுபோன்ற பல படுகொலைகளை செய்து கொண்டே தான் இருக்க போகிறது; உண்மையான எதிரி யாரென உலகம் அறியாத வரை.

- இரா.ச.இமலாதித்தன்.

மானிய கேஸ் சிலிண்டர் ரத்து!

ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு மானிய கேஸ் சிலிண்டர் ரத்து.

- வெங்கய்யா நாயுடு, நடுவண் அமைச்சர்.

நல்லது.

அப்படியே, எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர், சபாநாயகர், ஆளுநர், ஜனாதிபதி போன்ற பதவியில் ஒருமுறை இருந்துவிட்டு, காலம் முழுக்க கோடிக்கணக்கில் பணம் புரளும் அரசியல்வாதிகளுக்கான அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய உத்தரவிடுங்கள்.

14 நவம்பர் 2015

சமத்துவ குழந்தைகள் விழா!

'நமக்கு நாமே'வுக்கு போட்டியாக தான், இந்த போட்டோ ஷூட் நடத்திருக்காரு போல... ஹிந்து - முஸ்லீம் - கிருஸ்துவம் என சரியான காம்பினேசனில் குழந்தைகள். இந்த திரைக்காட்சியிலும் குறை சொல்லவே முடியாது. அதுதான் தலைவருக்கும், தளபதிக்கும் உள்ள வித்தியாசம். கலைஞன்யா!

நேரு மாமா தின வாழ்த்துகள்!

மவுண்ட்பேட்டன் மனைவியின் மனம் கவர்ந்தவரும், பல துரோக வரலாறுகளுக்கு சொந்தக்காரருமான நம்ம நேரு மாமா தின வாழ்த்துகள்! இணையத்தில் நேரு மாமா கழுவி ஊற்றப்படுவதை பார்த்து வளர்ந்து வரும் இளம் மாணவ சமுதாயம், இன்னும் சில ஆண்டுகளிலேயே 'குழந்தைகள் தினம்' என்ற பெயரை நீக்க சொல்லி போரட்டம் நடத்தலாம்.

12 நவம்பர் 2015

நிவாரணம் கேட்டால் அடி உதையா?

சிதம்பரம் அருகே, வெள்ளக்காடான கிராமத்தை சேர்ந்த வீடுகளை இழந்த மக்கள் தன்னெழுச்சியாக நிவாரண பணிகளை விரைவாக செய்யச்சொல்லி ஜனநாயக நாட்டில் சாலை மறியல் மூலமாக அடையாள அறவழி போரட்டத்தை நடத்திய, முதியோர் - பெண்கள் - சிறியோரென அனைவரையும் காவல்துறையினர் கேவலமான முறையில் பேசி, அடித்து விரட்டி ஓடவிடும் காட்சிகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.


மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் மக்கள் சேவை செய்யும், மக்கள் தொகையில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத காவல்துறையின் அடக்குமுறை தட்டி கேட்க யாருமே இல்லை. ஏனெனில், காவல்துறை அமைச்சத்தை கையில் வைத்தல்துள்ள தலைமையே, 144 தடையையும், 110 விதியையும் நம்பித்தானே ஆட்சி நடத்தும் அவலம் இங்கே அரங்கேறி கொண்டிருக்கிறது.

- இரா.ச.இமலாதித்தன்

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும்!

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும் ஒரே மாதிரியாக செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு, இன்னொரு பக்கம் கடவுள் அழிச்சாத சொல்ற நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அந்த பக்கம் பார்த்தால், வர்ணாசிரம கொள்கையெல்லாம் இனி தேவையில்லை; நாமெல்லாம் ஒன்றென சொல்லி, கடவுள் கொல்றதெல்லாம் தமிழன் என்பது மாதிரியே கதை புனைகிறார்கள்.
திராவிட-ஆரிய கூத்தாடிகளுக்கு, தமிழன் என்ற ஒருவன் இல்லையென்றால் அரசியல் பிழைப்பே இருக்காது போல.

11 நவம்பர் 2015

முருகபெருமானின் பக்தரான முத்துசுவாமி தீட்சிதர்!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், சோழநாடான டெல்டாவின் திருவாரூரில் அவதரித்து, எட்டையபுரத்தில் ஐப்பசி அமாவசை நாளில் இசையாலேயே இறைவனோடு ஐக்கியமான நாள் இன்று! திருமுருகனின் அருளால் திருத்தணியில் இந்திய (கர்நாடக+ஹிந்துஸ்தானி) இசைகளுக்கான விதைகளை அழியா கீர்த்தனைகளாக தந்த மகானின் ஜீவன் திருமுருகனிடம் சராணாகதி அடைந்த நாள் இன்று!

திருமுருகா!

கந்த ஷஷ்டி திருநாள் நல்வாழ்த்துகள்!



சிக்கல் சிங்காரவேலனை தரிசிக்க வருபவர்கள், அரை மைல் தொலைவிலுள்ள பொரவச்சேரி என்கிற பொருள்வைத்தசேரி திருமுருக பெருமானையும் தரிசிக்க மறவாதீர்கள்.

எட்டுக்குடி, என்கண், பொரவச்சேரி இந்த மூன்று கோவில்களில் தான், ஒரே ஸ்தபதியால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மேலும், சிக்கல் கோவிலில் திருமுருகரின் உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். மூலவர் சிலை பொரவ்ச்சேரியில் தான் இருக்கிறது. மேலும், பொரவச்சேரியில் முதலில் சிலை செதுக்கிய சிற்பியின் கட்டைவிரலை மன்னன் துண்டித்து விட்டார். ஏனெனில் இதுபோனற அழகானதொரு திருமுருக சிலையை வேறெங்கும் இந்த சிற்பி செதுக்கிவிட கூடாதென்பதால்.

ஆனால் அந்த சிற்பி, எட்டுக்குடியில் கட்டைவிரல் இல்லாமலேயே பக்தியின் விளைவால் மீண்டும் அதே போன்ற அழகான சிலையை செதுக்கியதால் கண்களும் மன்னனால் பறிக்கப்பட்ட பின்னாலும், என்கண்ணிலும் மீண்டும் அழகான திருமுருக சிலையை அதே மாதிரியே உருவாக்கியதால், அந்த சிற்பிக்கு திருமுருகரே காட்சியளித்து தன்னோடு ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு.

பொரவச்சேரி - எட்டுக்குடி - என்கண் உள்ளிட்ட இந்த மூன்று ஊர்களிலும் உள்ள திருவுருவ சிலைகளிலும் தத்துரூபமாக மிகவும் நேர்த்தியாக அழகாக ஒரே மாதிரியாகவே திருமுருகன் காட்சியளிப்பார். என்பதே சிறப்பம்சம். மயில்களின் கால்கள் இரண்டில் மட்டுமே வள்ளி தெய்வயானை முருகனென ஒட்டுமொத்த சிலையும் தாங்கி நிற்கும் அற்புதத்தை பார்க்கவே கண்கள் கோடி வேண்டும்.

மேலும், கந்த ஷஷ்டி அன்று திருச்செந்தூர் சூர சம்ஹாரத்திற்கு முந்தைய நாள் சிக்கலில், வேல்நெடுங்கன்னி (வேளாங்கன்னி மாதா உருவான கதையும் சிக்கல் பார்வதியால் தான் என்பது தனிக்கதை) என்ற பார்வதி தாயிடம் வேல் வாங்கி, கடல் மார்க்கமாக திருச்செந்தூர் கொண்டுன்போய் போரில் சூரனை வீழ்த்துவது தான் மற்றுமொரு வரலாறு. அப்படி வேல் வாங்கும் ஷஷ்டிக்கு முந்தைய நாள், சிக்கலிலுள்ள திருமுருகனின் சிலை வேர்த்து வேர்வை நீர் சுரக்கும் நிகழ்வும் பெரும் அதிசய நிகழ்வாகும்.

வெற்றி வேல்! வீர வேல்! திருமுருகா!


இன்றிலிருந்து இந்த ஒருவார கால 'கந்த ஷஷ்டி பெருவிழா'வின் போது, மற்றவர்களை போல விரதம் இருங்கன்னு சொல்லல; அசைவம் சாப்பிடாம இருந்தா நல்லாருக்கும்ன்னு தான் சொல்றேன்.


தமிழின உறவுகள் அனைவருக்கும் கந்த ஷஷ்டி திருநாள் நல்வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

10 நவம்பர் 2015

நாகை ’தேவ நதி'யின் ஒரு பகுதி!



இந்த பெருமழையின் விளைவாக, எங்க நாகப்பட்டினத்தின் எல்லையான 'கோட்டைவாசல்' பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தோடும், 'தேவ நதி'யின் ஒரு பகுதி!

தீபாவளி வாழ்த்துகள்!



அடுத்த வருசம் "தலை தீபாவளி" கொண்டாட காத்திருக்கும், அனைத்து பங்காளிகளுக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்!
தீபாவளி வாழ்த்துன்னா, இப்படி சொல்லணும்... டாட்.

09 நவம்பர் 2015

நரகாசுரன் யார்? தீபாவளி, தமிழர் பண்டிகையா? - ஓர் ஆய்வு.


நராகசுரனை கொன்றொழித்த நாள் தான் தீபாவளியென வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த புராண வரலாறெல்லாம் முற்று முழுதாக உண்மையில்லை. புராணங்களெல்லாம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஏதாவதொரு கதாபாத்திரத்தை கடவுளோடு ஒப்பிட்டு நம்பும்படியாக செய்வதுதான் ஆன்மீக நூலோரின் கடமையாக இருந்தது.

வள்ளுவன் சொன்ன அந்த ஆதிபகவனான சிவஜோதியை முதலாம் தீர்த்தங்கர் ரிஷபதேவரான நந்திதேவர் முதற்கொண்டு 24ம் தீர்த்தங்கராக அவதரித்த மகாவீரர் வரையிலும் சமணம் என்ற மார்க்க பெயரில் பாரத தேசமெங்கம் சாதி வேறுபாடின்றி உண்மையான ஆன்மீகத்தை அவரவர் தாய் மொழிகளின் வாயிலாகவே பரவ செய்தனர்.

இன்றைய நாட்களில் ஹிந்து பண்டிகைகளில் முதன்மையானதாக தீபாவளியே அறியப்படுகிறது என்பதற்கு, கத்தோலிக்க வாடிகனின் வாழ்த்து செய்திகளில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற நாளை நினைவு படுத்தவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்றும், இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பியது நாள்தான் தீபாவளி என்பதே பலரின் நம்பிக்கை.

ஹிந்து என்பது ஒரு மதமென அறியப்படும் முன், பாரதம் உள்ளிட்ட பழம்பெரும் நாடுகளில் ஆதிமதமாக சமணமே விளங்கியது. உலகில் மூத்தக்குடியென அறியப்படும் நம் தமிழர்களின் ஆதிமதத்தின் பெயரே ஆசீவகம் தான். அந்த ஆசீவகமும், சமணமும் ஒன்றே. அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என, தமிழின் பழைய அகராதிகளான, திவாகர நிகண்டும் - பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது.

"சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீவகரும் அத்தவத் தோரே"
- திவாகர நிகண்டு

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குக் கற்பித்த மகாவீரரை, 'வென்றவர்' என்ற பொருளில் 'ஜெயனா' என்று மக்கள் அழைத்தனர். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.சம்மணம் போட்டு தியானத்தில் இருப்பதால் ச(ம்)மணர் என்றும், அம்மணமாய் இருந்ததால் அ(ம்)மணர் என்றும், அன்றைய சமகாலத்தில் இவர்கள் அறியபட்டதாகவும் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்தில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்க, விடியற்காலையில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே இறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவர் முக்தியடைந்த நாளில், மக்கள் அனைவரும் வீட்டினுள் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர்.

தீப+ஆவளி =தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்று பொருள். மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்ததாலேயே தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது.

"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!"

- ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, (புத்தகம்: சமணமும் தமிழும்)

வர்ணாசிரமங்களை கொண்டு சாதிய அடிப்படையில் கடவுளை வணங்க மனிதனால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட போலி கொள்கைகளை உடைத்தெறிந்து, உண்மையான ஆதி மார்க்கத்தை வழிகாட்டிய 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் இறப்பானது, ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. அதனாலேயே, மகாவீரரை அசுரனாக்கி, பெருமாள் வதம் செய்ததாக பொய் பரப்புரையை புராணக்கதைகள் மூலமாக பரப்பிட காரணமாகவும் அமைந்தது. இது போன்ற பொய் புராண கதையை திருவோணம் பண்டிகையிலும் காணலாம். தமிழ் அகம்படி குலத்தில் உதித்த மாவலி சக்கரவர்த்தியின் இறப்பின் பின்னாலேயே கேரளத்தில் சமகிருதம் கோலோச்சியது. கேரள தமிழ் மன்னனை கொன்றொழித்த நாளே ஓணம் பண்டிகையென அம்மக்களையே நம்ப வைத்தது கூட பொய் புராணக்கதைகள் தான் என்பதும் சிந்திக்க வேண்டிய விசயமாகும். எது எப்படியோ, தமிழர்களின் ஆதி மதமான ஆசிகவத்தின் இறைத்தூதரான மகாவீரரின் நினைவுநாளை தீபமேற்றி மனதில் ஏற்றுவோம் அவரது நினைவேந்தலை!

கொல்லாமை வேண்டாமென்று சொன்ன மகாவீரரின் நினைவுநாளிலேயே அசைவம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்; இதுதான் கால மாற்றம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழின உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

- இரா.ச.இமலாதித்தன்

மழைக்காலங்களில்...

ஏரி - குளம் - குட்டைகளையெல்லாம் ஆக்கிரமித்ததன் எதிர்வினையாக தான், வீட்டிற்குள்ளும் மழை தண்ணீர் வந்து போகிறது. குறைந்த பட்சம், ரியல் எஸ்டேட்கள் மூலமாக புதுப்புது நகர்களை உருவாக்கும் போதாவது நீர்தேக்கத்திற்காக இடம் ஒதுக்கினால் தான் ஓரளவுக்கு மழைக்காலங்களை சமாளிக்க முடியும்.

08 நவம்பர் 2015

பா.ஜ.க!?

மாபெரும் மாட்டுத்தீவன ஊழலையே மறக்கடித்து மாட்டுக்கறி பிரச்சனை பீகாரில் ஆட்சியமைக்க உதவியுள்ளது. இனியாவது பாஜக பக்குவப்படட்டும் பேச்சுகளில்!

நாடு போற்றும் நான்காண்டு சாதனை!

திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துக்குள் வரிசையாக குடையோடு பயணிகள் பயணிக்கும் அவல நிலைதான், நாடு போற்றும் நான்காண்டு சாதனை!

கைக்குழந்தைகளோடும், தீபாவளி சாமான்களோடும், முதியோர்களும், பெண்களும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்மில்லை. பேருந்தின் எல்லா இடங்களிலும் மழை தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தை பற்றி நடத்துனரிடம் கேட்டால், விரக்தியில் பேருந்து பணிமனை அலுவலர்கள் தான் காரணமென பல விசயங்களை சொன்னார்.

தொ.மு.ச., அ.தொ.ச., என தொழிற்சங்க தேர்தலுக்கும், பதவிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நான்கில் ஒரு பங்கையாவது பேருந்துகளின் பழுதை சரி செய்ய கொடுத்தால், வாங்கும் சம்பளத்திற்கு ஓரளவு தொழிற்தர்மமாவது இருக்கும்.

நாகை பேருந்து நிலையமே பெரிய குட்டை போல, சாக்கடையும் சகதியுமாக மழைத்தண்ணீரில் மிதக்கிறது. இலக்கு வைத்து குடிக்க வைக்கும் அரசாங்கத்தின் சட்டமன்ற அலுவலகமும் நாகை பேருந்து நிலையத்திற்கு அருகில் தான் இருக்கிறது என்பதும், அதுதான் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபாலின் அலுவலகம் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

மேலும், நாகூர் - வேளாங்கண்ணி என ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்ட பயணிகள் எல்லாம் காறி துப்புறாங்க; நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையில், பலரது நாக்கில் உமிழும் எச்சிலும் மிதந்து கொண்டிருக்கிறது, நாடு தூற்றும் நான்காண்டு வேதனையை சொல்லி...

- இரா.ச.இமலாதித்தன்

07 நவம்பர் 2015

இமலாதித்தவியல் (ஆக - நவ 2015)

சூழ்நிலையை மட்டும் காரணம் சொல்லி தப்பித்து கொள்வதை விட, இதுநாள் வரை நமக்கு இந்த வாழ்க்கை கற்று கொடுத்த அனுபவங்களை கொண்டு நமக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொள்வதே வெற்றி பெற எளிதான ஒரே வழி!


ரத்த சொந்தங்களையெல்லாம் எதிரிகளாக்கி விட்டு உறவினர்களின் திருமண வீட்டிலோ, நெருங்கியவர்களின் துக்க வீட்டிலோ பார்த்தும் பார்க்காதது போல் கடந்து செல்லும் காலம் இது. பெத்தெடுத்த தாய் தகப்பனை கூட சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு தனக்கெல்லாம் தெரியுமென கடுஞ்சொல்லால் காயப்படுத்தி விட்டு, பொதுவெளியில் வேடம் தரித்து உலவும் உலகம் இது. இந்த போலிகள் சூழ் வாழ்வில் உண்மையை எளிதாக உணரவே முடியாது. பொய்யாக வாழ்வது தான் எளிது.

தனித்து இருப்பதற்கும், தனிமையாய் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனித்திருத்தல் நம்மை உலகறிய வைக்கும்;தனிமை நம்மையே உணர வைக்கும்!

இருக்கும் வரையிலும் அதன் அருமை புரியாமல், இழந்த பின்னால் வருந்த வைக்கும் எல்லா விசயங்களுக்கு பின்னாலும் ஈகோ மட்டுமே ஒளிந்திருக்கிறது!

தான் அடைந்த அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் மறக்காமல் மனதினுள் சேமித்து வைத்தவர்களுக்கு, வாழ்க்கையின் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட பின்னாலும் தலைக்கணமும், புகழ்போதையும் வருவதேயில்லை!

எண்ணங்களுக்கு தான் எத்தனை வலிமை? எதையும் தன் வசப்படுத்த முதலில் உங்கள் எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, அதை தீவிரமாக நம்புங்கள். இந்த உலகமே உங்கள் வசமாகும்!

மிகப்பெரிய அளவிலான தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை பதில் கொடுக்க தோன்றினால், 'அமைதி' தான் ஆகச்சிறந்த பதில். கூடவே, அன்றாட வேலையை தொடர்ச்சியாக செய்து இயல்பாகவே இருப்பதும் தான்.

வெளிப்படை தன்மையில்லாத உண்மைகளும், தனக்கான முன்னுரிமை கொடுக்காத புறக்கணிப்புகளும், இருவர் பயணிக்கும் அன்பின் பாதையை ஒருநாள் பழுதாக்க கூடும்!

கமல் எனும் நாயகன்!

மேற்குலக சினிமாவை காப்பிகேட் செய்யும் காலமெல்லாம் மலையேறி போனதால் தான், உன்னைப்போல் ஒருவன், பாபநாசம் போன்ற இந்திய துணைக்கண்டத்தின் படங்களையும் காப்பி அல்லது இன்ஸ்பியர்ட் பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

"அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே, முருகா! முருகா! முருகா!" ன்னு முதல் படத்திலேயே அப்படி நடித்ததால் தான் 50 வருடங்கள் கழித்தும் இங்கே நீடித்து நிலைத்து நின்று, "கடவுள் இல்லைன்னு சொல்லல; இருந்தால் நல்லாருக்கும்ன்னு தான் சொல்றேன்" ன்னு கைத்தட்டல்களுக்காக போலியாக உரத்த குரலில் கரகரவென பேச முடிகிறது கமலால்!

 பேச்சளவில் மட்டும் பகுத்தறிவு என பேசிக்கொண்டு, தன் படங்களில் வைணவனாகவே கதாப்பாத்திரத்தை உருவாக்கி, ஹேராம், பஞ்ச தந்திரம், ஆளவந்தான், தசாவதாரம், விஸ்வரூபம் என படங்களின் பெயர்களில் கூட தன் மார்க்கமான வைணவத்தை மறவாத, அன்பே பாபநாசம் சிவமென சொன்ன "illuminati"கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! எம்பெருமான் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்...

கூடவே, ஸ்ருதிஹாசன் பற்றி கருத்து தெரிவித்தன் விளைவாக, கமல் ரசிகர்களால் தாக்குதலுக்கு உள்ளான சிவகார்த்திகேயனுக்கு இன்றைய நாளில் வீரவணக்கம்!

வாழ்த்துகளும், வஞ்சங்களும்!

தமிழகத்தின் முதல் (திருநங்கை) காவல்துறை துணை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள ப்ரீத்திகா யாஷினிக்கு, இங்கே சிலர் வாழ்த்துகள் சொல்வது போல, குத்திக்காட்டிக்கிட்டே இருக்காங்களோன்னு தோணுது.

06 நவம்பர் 2015

காங்கிரஸ் தலைவர்!?

காங்கிரஸ் கட்சி தமிழர் விரோத கட்சியாகவே இருந்து விட்டு போகிறது. ஆனால் அந்த கட்சியின் அடிமட்ட தொண்டன் அப்பாவி தமிழன் தானே? அந்த கட்சியின் கடைசி உறுப்பினர் இருக்கும் வரையிலும், அதன் அரசியல் அதிகாரமும் தமிழ் மண்ணில் இருக்கவே செய்யும். அதனால், அந்த அரசியல் அதிகாரத்தை முற்றிலும் அழித்தொழிக்கலாம். அது அவ்வளவு எளிதாக செய்ய முடியாத செயல். ஆனால் அந்த கட்சியின் தமிழக தலைமையை ஒரு தமிழனே கைப்பற்ற மறைமுக ஆதரவு தெரிவிக்கலாம். அதனாலேயே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ற தெலுங்கு நாயக்கரை விட, கே.வி.தங்கபாலு என்ற தமிழ் அகமுடையாரை ஆதாரிப்பதில் தவறில்லை.

‪#‎ISupportKVThangabaluAgamudayar‬

வைகோ - சீமானின் அரசியல் நகர்வு!

திரு. வைகோ தாயாரின் மறைவுக்காக திரு. சீமானின் இரங்கல் அறிக்கையும், கலிங்கப்பட்டிக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தியதையும், அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்கின்றேன். ஒருமுறை ஈழ ஆதரவு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஒரே திரையரங்கினுள் அருகருகே திரு.வைகோவும் - திரு. சீமானும் அமர்ந்திருந்து பார்த்திருந்தும், இருவரும் முகம் பார்த்து கூட பேசிக்கொள்ளவில்லை. அதே போல எங்கள் நாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த பொது கூட்டத்தில் திரு. சீமான் அவர்களின் பேச்சில் கூட முழுக்க முழுக்க திரு. வைகோவின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் விளக்கமாக சாடி விமர்சித்து பேசினார்.

அப்படி இருந்தும் இப்போதைய அரசியல் சூழலில் தெய்வத்திருமதி வை.மாரியம்மாளின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டது, தன் மீதான தெலுங்கு அமைப்புகளுடைய எதிர்ப்பின் வீரியத்தை திசை திருப்பவே என எண்ணுகிறேன். மேலும், திரு. வைகோவோடு இணக்கமாக இருந்த விடுதலைகளத்தை சேர்ந்த திரு. நாகராஜன் போன்றோரெல்லாம் திரு. சீமானின் இந்த அரசியல் காய் நகரத்தலை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

விவேகமுள்ள வீரம் கண்டிப்பாக வெற்றிக்கு வித்தாகும். வாழ்த்துகள், திரு. சீமான்!

- இரா.ச.இமலாதித்தன்.

04 நவம்பர் 2015

துரோகிக்கான செருப்படி!

விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தோல்வியிலும், ஈழத்தமிழர்களின் ஒவ்வோர் இழப்பிலும், 'இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்' என்ற பெயரை கேட்கும்போதெல்லாம் ஆத்திரமடைந்திருக்கிறேன். அதை இத்தனை வருடங்கள் கழித்து தமிழ்நாட்டின் தலைநகரில் வீரமிகு. புதுக்கோட்டை பிரபாகரனின் செருப்படி ஓரளவுக்கு தீர்த்து வைத்திருக்கிறது.

சில தொண்டு நிறுவனங்களின் நோக்கம்!?

"கல்யாண் ஜூவல்லர்ஸ்"க்கு நிகராக டிவி சேனல்களுக்கு விளம்பரம் தர ஒரே நிறுவனம், இப்போதைக்கு "சிவானந்தா குருகுலம்" மட்டும் தான்னு நினைக்கிறேன். இந்த மாதிரியான தொண்டு நிறுவனங்களின் பண பரிவர்த்தனையும், அதன் செயல்பாடுகளும் கூட கவனிக்கப்பட வேண்டிய விசயம் தான்!

02 நவம்பர் 2015

ஆயிரம் கோடி ஊழலையும் ஆதரிக்கும் சாதி பாசம்!

"சாதி என்பது பச்சை அநாகரிகம். சாதியையும், நிறத்தையும் பார்ப்பவன்
அரசியலுக்கு லாயக்கில்லை. சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன், அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை; ஆன்மீகத்துக்குமி்ல்லை."

- பசும்பொன் தேவர்.

சசிகலா கும்பல் ஆயிரம் கோடிகளுக்கு தியேட்டரை வாங்கி இருக்கிறார்களென ஊடகங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தும், அதை தி.மு.க. என்ற கட்சியின் ஊழலோடு ஒப்பிட்டு திசை திருப்பி விடுவதை போன்றதொரு கேவலமான செயல் வேறொன்றுமில்லை. பி.ஆர்.பி கிரானைட் ஊழலையும், சசிகலா ஊழலையும் சாதி பாசத்தோடு அணுகும் ஒவ்வொருவரும், பசும்பொன் தேவரின் கொள்கையை தங்களது செருப்பால் மிதித்து, அவரின் உடலின் நெஞ்சத்து குருதியை உறிஞ்சி குடிப்பதற்கு சமம். நேர்மையாக இருக்க தெரியாதவனுக்கு எதற்கு மீசை மயிர்? அதையெல்லாம் மழித்து விட்டு மானம் ரோசமில்லாமல் ஊர் பணத்தை ஊழல் செய்து சுகபோகமாய் வாழும் யாருடைய காலையாவது கழுவி வயிற்றை கழுவலாம். அடத்தூ!

- இரா.ச.இமலாதித்தன்