ஆங்கில புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கில புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜனவரி 2018

ஆங்கில புத்தாண்டு 2018!

முப்பது ஆண்டுகள் பிழைப்பிற்காக இங்கே வாழ்ந்தவனெல்லாம் 'பச்சை தமிழன்' என்றால், முந்நூறு ஆண்டுகள் ஆள்வதற்காக இங்கே வாழ்ந்தவனும் 'ப்ரோ ஹிந்தியன்' தானே? அப்போ அவனோட புத்தாண்டான ஜனவரி 1ம் தேதியை கொண்டாட மட்டும் ஏன் எதிர்க்கிறீங்க? முதலாவது சரியென்றால், இரண்டாவதும் சரி தானே? உலகத்தாருக்கு உண்மையான புத்தாண்டெனில் பூமியின் நகர்வான அது 'வடவோட்டம் - தென்னோட்டம்' தான். அப்படியெல்லாம் கணக்கீடு செய்து யாருமிங்கே கொண்டாடவில்லை; ஏனெனில் நாளும் தேதியும் நாமளாக வைத்து கொண்டதுதான்; கொண்டாடக்கூடிய எல்லாவற்றையும் ரிஷிமூலமெல்லாம் பார்க்காமல் மகிழ்வோடு கொண்டாடுங்கள். வாழ்க்கைல ஷந்தோஷம்தாங்க முக்யம்; ஜெய்ஹிந்த்!

ஆங்கில புத்தாண்டை எதிர்ப்பவர்களெல்லாம், ஏன் புதுக்காலண்டர் வாங்க துடியாய் துடிக்கிறீர்கள்? மாத சம்பளம் போன்ற பொருளாதார வருமானம் முதல் அனைத்து கணக்கு வழக்குகளும் ஆங்கிலத்தேதியோடு தான் பின்னிக்கிடக்கிறது என்பதை உணருங்கள். இங்குள்ளவர்களில், உங்களுடைய பிறந்த தேதி எதுவென கேட்டால், 99.9% பேர் ஆங்கிலத்தேதியை தான் சொல்கிறார்கள்; அதோடு அவர்களின் பிறந்த வருடம் எதுமென கேட்டால், 100% பேர் இதே ஆங்கில ஆண்டை மட்டும் தான் சொல்கிறார்கள். இப்படியான எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மதம் சார்ந்தே எல்லாவற்றையும் பார்க்கும் அணுகுமுறையை இந்த ஆண்டாவது மாற்ற முயலுங்கள்.

Image may contain: 3 people, people smiling, text


ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டாமென இங்குள்ள எல்லாருக்கும் பாடமெடுக்கும் பாஜகவினர், நரேந்திர மோடிக்கும் பாடமெடுப்பார்களென நம்புகிறோம்.

01 ஜனவரி 2017

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை இருந்தாலும், ஆன்மீக ஜோதிடத்தின் நம்பிக்கையாளனாக சித்திரை ஒன்றாம் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட தோன்றுகிறது. தையோ, சித்திரையோ, அதுவொரு தேசிய இனத்தின் புத்தாண்டாக மட்டுமே அமைகிறது. ஆனால் உலகமயமாக்கப்பட்ட சமகால சூழலில், இயேசுவின் பிறப்பை மையப்படுத்திய ஆங்கில நாட்காட்டியின் ஜனவரி ஒன்றாம் தேதியையும் இங்கு யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை என்பதே எதார்த்தம். மேலும், உலகின் அனைத்துதரப்பட்ட மக்களின் தொடர்புமொழியாகவும், இரண்டாம் அலுவல் மொழியாகவும் மாறிப்போன ஆங்கில புத்தாண்டை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

பச்சையப்பா கல்லூரியில் 1921ம் ஆண்டு எங்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த மறைமலை அடிகளாரின் தலைமையிலான திரு.வி.க. உள்ளிட்ட குழுவினரின் ஆய்வுமுடிவின் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டை உறுதி செய்தனர். அவர்களது ஆய்வின் படி, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாகவே வள்ளுவர் பிறந்தார் என்பதை வைத்து தனித்துவ நாட்காட்டியும் உருவாக்கப்பட்டது. அதன் தொட்ர்ச்சியாக தமிழக அரசு கி.பி.1972ம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று, அரசிதழிலும் வெளியிட்டு தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு என்ற தமிழர்களுக்கான பொது ஆண்டுமுறையை கடைபிடித்தும் வருகிறது.

இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே பல்லாயிரம் ஆண்டுகள் பண்பாட்டு கூறுகளோடு வாழ்ந்த தமிழ் பேரினத்தின் நீட்சியான சமகால தமிழனாக, கி.பி. 2017ம் ஆண்டை மனமகிழ்வோடு வரவேற்கிறேன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முன்னோரின் வாக்குப்படி அனைத்து உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்