06 மே 2019

யார் தமிழர்?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவீத முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட்டு - தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்ற நிலையை உருவாக்குவோம்!

- மு.க.ஸ்டாலின்.

வரவேற்கிறோம். ஆனால், யார் தமிழர்? என்பதை எதை வைத்து முடிவு செய்வீர்கள். , யார் தமிழர்? தமிழரை எப்படி இனம் காண்பீர்கள்? டிஎன்ஏ பரிசோதனை நிலையம் வைத்திருக்கின்றீர்களா? இதெல்லாம் ஒருகாலத்தில் சீமானிடம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள். தமிழ்த்தேசிய அரசியலை கேலிசெய்கிறோமென்ற மனப்பான்மையில், திராவிடவாதிகள் கேட்ட இது மாதிரியான கேள்விகளுக்கு திராவிடத்தலைவரான ஸ்டாலினே இனி பதில் சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கலாம். ஏனெனில், அதற்கான காலம் இப்போது கனிந்திருக்கிறது.

யார் தமிழர்?


அ. தாய்மொழியை தமிழாக கொண்டவர்.

ஆ. குலதெய்வ (நாட்டார்) வழிபாடுகளை பின்பற்றுபவர்.

இ. பட்டத்தாலோ, வேறுவகையிலோ இனக்குழு (சாதி) அடையாளமுடையவர்.

இந்த மூன்றையும் வைத்து யார் தமிழரென்பதை எளிதாக அடையாளம் காண முடியும். குறிப்பாக, சாதியை மறைத்து தமிழரை அடையாளம் காணவே முடியாது. ஏனெனில் இம்மண்ணின் மைந்தர்களான தாய்த்தமிழ் உறவுகளை விட வேற்றுமொழிக் காரர்களும், வேற்றினத்தவர்களும் தான், தங்கள் அடையாளங்களை மறைத்து நம் தாய்மொழியை வாய்மொழியாக நன்றாக பேசுகின்றனர். தமிழ் இனத்தை அடையாளம் காண சாதியும், தாய்மொழியும், குலசாமி வழிபாடுகளுமே முதன்மையானது. இந்த மூன்றில் எதை விட்டுக்கொடுத்தாலும் யார் தமிழர் என்பதை கணக்கிடவே முடியாது.

தமிழருக்கான வரையறையில், குலதெய்வ வழிபாடு தேவையற்றது; அதைச் சேர்த்தால் நிறைய குழப்பம் வருமென பலர் சொல்வதை கேட்கலாம். ஆனால், பல தமிழ்ச்சாதியிலும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. விஸ்வகர்மா அடையாளம் தமிழ்ச்சாதி அடையாளத்தை சிதைக்கிறது தானே? அதுபோல யாதவர், தலித் அடையாளங்களும்...
இங்கே பலருக்கும் பழனி எட்டுக்குடி முருகனும், திருப்பதி வேங்கடமுடையாரும் தான் குலசாமி ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவர்களும், நாட்டார் வழிபாடுகளே செய்திருக்க வேண்டுமென்பது என் பார்வை. உருது இசுலாமியர், ஆங்கிலோ இண்டியன் கிருஸ்துவர்களும் தமிழராக கணக்கிட முடியாதென்பதால், பெற்றோரின் தாய்மொழி தமிழாக இருக்க வேண்டுமென்பதே இதற்கெல்லாம் பொருத்தமாக இருக்கும்.

- இரா.ச. இமலாதித்தன்


05 மே 2019

மதவெறி அரசியல் இம்மண்ணுக்கு தேவையற்றதே!


இசுலாமிய பகுதிகளில் மாற்று மதத்தினர் உள்ளே நுழையவே கூடாதென்ற சட்டம் ஏதும் இருக்கின்றதா என்ன? இசுலாமிய பெண்கள் டிக்டாக் விடியோவை வெளியிடுவதற்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்? தனிப்பட்ட விருப்பத்தில் டிக்டாக் செய்த பெண்களை மதத்தின் அடிப்படையில் கண்டிக்கிறேனெ நினைத்து, மாற்று மதத்தினரை வம்பிழுப்பது சரியே அல்ல. இசுலாமியர்களுக்கு ஜமாத் என்ற கட்டமைப்பு இருப்பதும், பொருளாதார பின்புலம் இருப்பதும், சிறுபான்மை என்ற பெயரில் ஓட்டு வங்கி இருப்பதும் அவர்களது பாதுகாப்புக்கு அரணாக இருக்க வேண்டுமே ஒழிய மாற்று மதத்தினரை இழிவாக நினைப்பதற்காக இருக்க கூடாது.

இந்த நாட்டில் பெரும்பான்மை மதத்தை சேர்ந்த பெரும்பான்மையானவர்களின் சகிப்புத்தன்மையால் தான் சிறுபான்மையினரென சொல்லப்படும் இசுலாமியர்கள் நட்புறவாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கின்றார்கள். அதை அடிப்படைவாத மதவெறியால் சீரழிக்க முற்பட வேண்டாம். அதன் விளைவால் பாதிப்படைய போவது, அப்பாவி இசுலாமியர்களே என்பதை இந்த அடிப்படைவாத மதவெறியர்கள் புரிதல் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் போன்ற ஹிந்து அமைப்புகளை எதிர்க்கும் இசுலாமியர்களின் எண்ணிக்கையை விட ஹிந்துக்களின் எண்ணிக்கையே அதிகம். காரணம், அடிப்படைவாத மதவெறியை யார் செய்தாலும் எதிர்ப்பதே இம்மண்ணின் பண்பாட்டு கூறுகளில் ஒன்று. ஏனெனில் வெறுப்புணர்வை தூண்டும், தான் சார்ந்த மத அமைப்புகளே எதிர்க்கும் நேர்மை ஹிந்துக்களிடம் உண்டு. அந்த நேர்மையையே இசுலாமியர்களிடம் எதிர்பார்க்கிறோம். 'இசுலாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் சிரியா' என்ற ISIS அமைப்பை போல இம்மண்ணிலும் தனித்தனி இசுலாமிக் பஞ்சாயத்துகளை ஒவ்வொரு ஊரிலும் கட்டமைக்கலாமென நினைப்பதை கைவிடுவதே இன்றைய காலத்திற்கு நல்லது.

- இரா.ச. இமலாதித்தன்

04 மே 2019

டெல்டா பகுதியை சேர்ந்தோர் கவனத்திற்கு,







குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற எச்சை ஊடகங்களால் தான் ஒட்டுமொத்த குழப்பங்களும் தொடர்கின்றன. 'அதர்ம யுத்தம்' என்ற தலைப்பில் ருத்ரன் என்ற பெயரில் இரண்டு தொடர்கள் வந்திருக்கின்றன. 26.04.2019, 30.04.2019 என்ற இரு மின்னிதழிலும் யாரைப்பற்றி சொல்கிறேனென சொல்லாமலேயே தரம்தாழ்ந்த வார்த்தைகளால் நாலாந்தர கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

"தமிழகத்தில் கிரிமினல் தனத்திற்காக நேர்ந்து விடப்பட்ட மண்டலம் டெல்டா மண்டலமாம். டெல்டா பகுதிகளில் கொத்து கொத்தாக கூலிப்படைகள் திரிகின்றார்களாம். ஒருமையில் அவன் இவனென சொல்லப்பட்டிருக்கிறது. எவனுக்கும் அப்பன், ஆத்தா வைத்த பெயர் மட்டும் வழக்கத்தில் இருக்காதாம்." இப்படியாக பல அவதூறுகளை நிரப்பிருக்கிறது அந்த தொடர் கட்டுரை. (ரிப்போர்டர் கட்டுரை லிங் கீழே கமெண்டில் உள்ளது)

மானங்கெட்ட தனமான எழுத்து நடை; காசுக்கு மாரடிக்கும் வன்மம் நிறைந்த வசவுகள்; கூலிப்படையை விட ஊடகத்தை வைத்து வேசித்தனம் செய்யும் வார்த்தை ஜாலங்கள். நீங்களெல்லாம் திருந்தவே வாய்ப்பில்லையா? ரிப்போர்ட்டர், ஜூவி, நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகைகளை தடை செய்ய வாய்ப்பே இல்லையா? எதிரணியிடம் பணம் வாங்கி அவதூறாக மற்றொரு அணியை எழுதுவது. இன்னொரு பக்கம், மிரட்டி பேரம் பேசி பணம் சம்பாரிப்பது. இவைதான் இம்மாதிரியான ஊடகங்களின் முழுநேர தொழிலாக இருக்கிறது. வலுவான கண்டனக்குரல் எழுப்பி, இம்மாதிரியான கடும்போக்கை தடை செய்வோம்.

- இரா.ச. இமலாதித்தன்

03 மே 2019

’சுயமரியாதை சுடரொளி’ எஸ்.இராமச்சந்திரனார்!



வாங்காத விருதுக்கு 250 பக்கத்தில் ஒரு புத்தகம் ஒரு கேடா? ஒருபக்கம், ஈ.வெ.ரா. தான், சாதியை ஒழித்தாரென திராவிடவாதிகளெல்லாம் தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால், ஈ.வெ.ரா பற்றிய படத்திற்கு தலைப்பே நாயக்கர் என்ற அவரின் சாதிப்பெயரிலேயே வெளியிட்டனர். வைகோ கூட முன்பொருமுறை, ஈ.வெ.ரா.வின் நாயக்கர் என்ற அவரது சாதிப்பட்டத்தை சேர்த்தே கடிதம் எழுதி கேரள முதல்வருக்கு அனுப்பிருந்தார். இதுபோல பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

எதற்கெடுத்தாலும் ஈ.வெ.ரா. புராணம் பாடும், திராவிட வாதிகளுக்கு, தன் இறுதி மூச்சு வரை,தனிமனித ஒழுக்கம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, மதுஒழிப்பு, பெண்விடுதலை போன்ற தளங்களை தென்மாவட்டங்களில் உருவாக்கி, தன் வாரிசுகளும் அதைக்கடைப்பிடிக்கும் வகையில் செய்த எஸ்.இராமச்சந்திரனாரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1929ம் ஆண்டு பிப்ரவரி 17,18ம் தேதிகளில் செங்கற்பட்டில் நடைபெற்ற 'தமிழ் மாகாண சுயமரியாதை' மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னாலுள்ள “சேர்வை”எனும் அகமுடையாருக்கான சாதிப்பட்டத்தைத் துறந்த 'சுயமரியாதை சுடரொளி' வழக்குரைஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் போன்றோரின் புகழை மறைத்தது தான் திராவிடத்தின் வெற்றி.

யார் அந்த எஸ்.இராமச்சந்திரனார்?


1925ம் ஆண்டில் பனகல் அரசர் தலைமையில் அம்ரோட்டில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டில் பங்கேற்ற தமிழக பிரதிநிதி இவர்தான்.

1926ஆம் ஆண்டு முதல் அரசியல் அதிகாரப்பணியான ஜில்லா போர்டு தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்ட கல்விக்கழகம்,மதுவிலக்கு கமிட்டி,தேவஸ்தான கமிட்டிகளில் பொறுப்பு வகித்து,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிந்தார்.

1927ம் ஆண்டு சூலை 20,21ம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட மாநாடு, ஈரோட்டில் நடைபெற்ற மதுவிலக்கு மாநாடுகளில்.தலைமை தாங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களின் குறைகளை உடனுக்குடன் போக்கிட பாடுபட்டார்.

நீதிமன்றங்களில் தன் வாதத்திறமையால் சமஸ்தானத்துக்கும் தான் சார்ந்த இயக்கத்துக்கும் நற்பெயர் பெற்றுக்கொடுத்தார்.

சிவகங்கை நீதிமன்றத்தில் பிராமணர்களுக்கு தனியாக குடிநீர் பானை இருந்ததை நீதிபதி முன்பாக போட்டு உடைத்து சமூகநீதி பற்றி அவர் செய்த வாதம் இன்றும் அங்கு முத்தாய்ப்பாக பேசப்படுகிறது.

”இந்தக்கையால் எந்த பிராமணருக்கும் ஆதரவாக கையெழுத்திட மாட்டேன்”என்று சபதம் செய்தவர்.

நீதிகட்சி ஆட்சியில் சட்ட அமைச்சராக ஆகிட இவருக்கு வாய்ப்பு வந்தபோது, சமூகப்பணியாற்றிட அமைச்சர் பதவி தடையாக இருக்கும் என்பதால் அந்த வாய்ப்பை உதறியவர்.

இவர் போன்ற திறமை வாய்ந்த வழக்கறிஞர் காங்கிரசுக்கு வரவேண்டும் என மதுரை வைத்தியநாத ஐயர் இவரை அணுகிய போது,”மனிதரில் ஏற்ற தாழ்வைக்குறிக்கும் பூணூலை நீங்கள் கழற்றினால் அது பற்றி ஆலோசிக்கலாம்”என்று சொன்னவர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர் நடத்திய ஆதிதிராவிடர்கள் மாநாடு தான், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச்சென்ற நிகழ்வுக்கு முன்னோடி சம்பவமாகவும் அமைந்தது.

- இரா.ச. இமலாதித்தன்


(தகவல்: திரு.அரப்பா)

01 மே 2019

தேவராட்டம் - ஓர் அலசல்!


தேவராட்டம் என்பது ராஜகம்பளத்தார் என்ற நாயக்க சாதியினரின் ஒருவகை பாரம்பரிய ஆட்டம்; மன்னரின் போர் வெற்றியை கொண்டாடும் ராஜகம்பளத்து நாயக்கர்களின் நாட்டாரியல் ஆடற்கலை தான் தேவராட்டம். இது அந்த ராஜகம்பளத்து நாயக்கர்களின் அனைத்து விழாக்களின் இயல்பாக நடைபெறும் நாட்டிய கலை. இதற்கும் மற்ற எந்த சாதிகளுக்கும் தொடர்பில்லையென்று சொல்லிக்கொண்டே இப்பதிவை தொடர விரும்புகிறேன்.

தலித்தியம் என்கிற பெயரில் பறையர் பெருமை பேசும் ரஞ்சித்தும், முக்குலத்தோர் என்கிற பெயரில் மறவர் பெருமை பேசும் முத்தையாவும் ஏறத்தாழ ஒன்று தான். இதில் நுட்பமாக கவனித்தால், முத்தையா படங்களில் வில்லன்கள் அனைவருமே கதைநாயகனின் சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ரஞ்சித் படங்களிலோ, வில்லன்கள் 'சோ கால்டு' உயர்சாதியினராகவே சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். நடுநிலை என்பதே ஏமாற்றுவேலை. அதிலேயும் நடுநிலைவாதிகளென தங்களைத் தாங்களே காட்டிக்கொள்ளும் இணையவாசிகள், ரஞ்சித்தை சமூக போராளியென்றும், முத்தையாவை சமூக விரோதியென்றும் சமீப காலமாக கட்டமைக்க முனைகின்றனர்.

முத்தையாவின் திரைப்பட கதைக்களங்கள் யாவும் நாம் காண்கின்ற, அனுபவிக்கின்ற குடும்பச்சூழலையே பிரதிபலிக்கின்றன. ஆனால் ரஞ்சித்தின் படங்களோ, அகமுடையார் வழித்தோன்றல்களான (கபாலி) மலேயா கணபதி தேவர், (காலா) மும்பை வரதராஜ முதலியார் போன்ற நிஜப்போராளிகளின் கதைகளின் மூலத்தை திருடியோ, கோபி நயினார் போன்ற இயக்குனர்களின் (கருப்பர் நகரம்) படைப்பாக்கத்தை திருடியோ தான், தலித்திய காவியங்களாக பிரதிபலிக்கின்றன.

தயாரிப்பாளர் முதலீடு செய்த பணத்தை, பெரிய நட்சத்திர நடிகரல்லாதவர்களை வைத்தே முத்தையா இலாபமாக்கி தருகிறார். தமிழ்ராக்கர்ஸ்க்கு பிறகு திரையரங்க வருகை குறைந்த போதும், அதை தன்னளவில் பி மற்றும் சி செண்டர் ரசிகர்களையும் திரையரங்கிற்கு வரவழைத்து வசூலில் சரி செய்து வருகிறார். என்னளவில், ரஞ்சித்தை விட முத்தையா எவ்வளவோ மேல். இதை சொல்வதால், நான் முத்தையாவின் சாதியும் இல்லை; முக்குலத்தோரும் இல்லை.

- இரா.ச. இமலாதித்தன்