05 ஜூலை 2011

இமலாதித்தவியல்





















► பெண்களிடம் ரகசியம் என்பது என்ன யென்ற கேள்வியை கேட்டால், அதற்கான பதிலையே ரகசியமாக்கி விடுவார்கள்.

► பெண்கள், தான் செய்யும் ஒவ்வொரு தவறையும் மறைக்கவும், ஆண்கள் மறு பேச்சே பேசாமல் இருக்கவும், அப்பாவி போலவே நடிக்க பழகிக் கொள்கின்றனர்.

► தேவை என்பது ஆணுக்கு மட்டும் தான் என்பது மாயையே. உண்மை என்னவெனில், ஆணை விட, பெண்ணுக்கு தான் தேவை அதிகமாக இருக்கிறது.

► ஆண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று நினைப்பது கூட பெண்களின் அறிவுக்கு(?) ஒரு சான்று.
 
► எல்லாம் தெரிந்த ஆணாக இருந்தாலும், தன்னிடம் தெரியாதவன் போலவே இருக்க வேண்டுமென்று, பெண் ஆசைப்படுகிறாள்.

► பட்டினி என்பது உடல்,உயிர்,உறவு மற்றும் உணர்வை சார்ந்தது என்பதை தெளிவாக தெரிந்தவள் பெண்.

► எனக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம், உங்களுக்கோ, மற்ற யாருக்கோ தவறாகக்கூட படலாம். அதுபோலவே உங்களுக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம் எனக்கோ, மற்ற யாருக்கோ தவறாக படக்கூடும் என்பதே இயல்பு.

► களம் என்பது பொதுவான போது,போட்டி நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்; காலம் மாறலாம்; அப்போது ஒருவேளை, களமும் மாறலாம்.

► பார்க்க முடியாத எல்லாமும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்பது மாயையே.

► மனதிற்பட்ட சிலவற்றை சொல்லாமல், சும்மா இருப்பதுதான் சுகமென அறிந்தேன் சிவனே.

► முகங்கள் மழிக்கபட்டால் அழகு சேருமே; இங்கே மரங்கள் அழிக்கபட்டால் அழிவு நேருமே.


 - இரா.ச.இமலாதித்தன்