விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 நவம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்

விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கான அறிவுபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் இன்றைய பகுதியில், பெரும்பாலான வார்த்தைகளில் தமிழில்லை; சமக்கிருதம் தான்!

#



விகடன் மீது அ.தி.மு.க.விற்கும், தந்தி மீது தி.மு.க.விற்கும், ஆமீர்கானின் மனைவி சொன்ன 'அது' இல்லை போல!


#

பல லட்ச மக்களை தங்களது பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கட்டிப்போட்டு ஆட்சியை பிடித்த தி.மு.க., இன்று தந்தி டி.வி.போன்ற ஊடக விவாதக்களங்களில் ஒருசிலர் மத்தியில் கூட தனது ஆளுமையை நிரூபணம் செய்ய முடியாமல் ஒதுங்கி செல்வது ஆச்சர்யம் தான்.
களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட, தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் அந்த களத்தையே இழப்பது தான் பலவீனம் என்பது போலவே தி.மு.க.வின் இந்த முடிவும் அமைந்திருக்கிறது.

#

திரு. நெப்போலியன் ரெட்டியாரும், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரானார்!

வாழ்க தமிழக பா.ஜ.க.!

#

கருணாநிதியை சந்தித்த கோவன் மீதான புரட்சி - புடலங்காய் - நம்பிக்கையெல்லாம், இனி சந்தேகத்திற்கு உள்ளானாலும் துளியும் தவறில்லை.

#
கூகிள் போன்ற இணைய தேடுபொறிகளில், Tiger என தேடினால் புலி வருமா என தெரியாது. கண்டிப்பாக எம் அண்ணன் பிரபாகரன் வருவார்.
‪#‎Hbd_TamilTiger‬
#

கோமள விலாஸ் உணவகம்
தமிழ் முரசு பத்திரிகை
தமிழ்

சிங்கப்பூர்!

இந்தியா
நரேந்திர மோடி
ஹிந்தி

#

27 மார்ச் 2014

ஊடக சாதிவெறி!


தந்தி டிவி முழுக்க முழுக்க தனது நாடார் சாதி பாசத்தை மட்டுமே அடிக்கடி வெளிக்காட்டி கொண்டே இருக்கின்றது. விகடன், தி ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தன்னுடைய பார்பனீய சாதி பாசத்தையே காட்டுகின்றது. ஊடகங்கள் சாதிய நீரோட்டத்தில் கலக்க ஆரம்பித்தால், சமுதாயம் தனித்தனியாக பிரித்தாளப்படும்.

அப்போது மிகப்பெரிய சமூகங்கள் பிரிவை வாஞ்சையோடு உபசரித்து, தமிழர் யென்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற எதார்த்தம புரிந்துகொள்ளப்படாத வரை இங்கே சமத்துவம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். பெயரளவில் சமத்துவ மக்கள் கட்சி யென்று வைத்துக்கொண்டு நாடார் சாதிக்கான அடையாள கட்சியாக காட்சிப்படுத்தப்படும் சரத்குமாரின் நிலைமையே அனைத்து தலைவர்களும் கையாளாக்கூடும். அப்போது சாதீயம் அனைத்தையும் தீர்மானிக்கும். திராவிடத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதபோதே, சாதீயம் தலைதூக்கிவிட்டது. இனி திராவிடம் போலவே சாதீயமும் இன்னும் சிலபல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்டுவிக்கும். அதுவரை ஏற்ற தாழ்வுகளும் தொடரும்.

ஏனெனில், கல்வி முதற்கொண்டு வேலைவாய்ப்பு வரை எல்லாமும் சாதிபடிநிலைகளில் அளவீடு கொள்ளும் பழையமுறை இன்றைக்கும் கூட மாற்றமடையாதவரை எல்லாமும் இங்கே இனி தலைகீழ் தான்!
- இரா.ச.இமலாதித்தன்