27 மார்ச் 2014

ஊடக சாதிவெறி!


தந்தி டிவி முழுக்க முழுக்க தனது நாடார் சாதி பாசத்தை மட்டுமே அடிக்கடி வெளிக்காட்டி கொண்டே இருக்கின்றது. விகடன், தி ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தன்னுடைய பார்பனீய சாதி பாசத்தையே காட்டுகின்றது. ஊடகங்கள் சாதிய நீரோட்டத்தில் கலக்க ஆரம்பித்தால், சமுதாயம் தனித்தனியாக பிரித்தாளப்படும்.

அப்போது மிகப்பெரிய சமூகங்கள் பிரிவை வாஞ்சையோடு உபசரித்து, தமிழர் யென்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற எதார்த்தம புரிந்துகொள்ளப்படாத வரை இங்கே சமத்துவம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். பெயரளவில் சமத்துவ மக்கள் கட்சி யென்று வைத்துக்கொண்டு நாடார் சாதிக்கான அடையாள கட்சியாக காட்சிப்படுத்தப்படும் சரத்குமாரின் நிலைமையே அனைத்து தலைவர்களும் கையாளாக்கூடும். அப்போது சாதீயம் அனைத்தையும் தீர்மானிக்கும். திராவிடத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதபோதே, சாதீயம் தலைதூக்கிவிட்டது. இனி திராவிடம் போலவே சாதீயமும் இன்னும் சிலபல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்டுவிக்கும். அதுவரை ஏற்ற தாழ்வுகளும் தொடரும்.

ஏனெனில், கல்வி முதற்கொண்டு வேலைவாய்ப்பு வரை எல்லாமும் சாதிபடிநிலைகளில் அளவீடு கொள்ளும் பழையமுறை இன்றைக்கும் கூட மாற்றமடையாதவரை எல்லாமும் இங்கே இனி தலைகீழ் தான்!
- இரா.ச.இமலாதித்தன்

1 கருத்து: