பல
தமிழ் இலக்கியங்கள் உருவாக காரணமாக அமைந்த கி.பி. 300 - கி.பி. 600 வரை
தமிழகத்தை அரசாட்சி செய்த "களப்பிரர்" காலத்தை, இருண்டகாலம் என்று
சொல்வதுதான் வரலாற்று அறிஞர்களின் தந்திரமே அடங்கியுள்ளது. 300 வருடங்கள்
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையே ஆண்டிருக்கும் ஒரு பேரரசு பற்றிய கல்வெட்டு
ஆதாரம் உள்பட எந்தவித ஆதார தரவுகளுமே இல்லையென சொல்லி மிகப்பெரிய உண்மையை
மூடிமறைப்பதன் நோக்கம் மட்டும் புரியவேயில்லை. இன்னைக்கு
வரைக்கும் வரலாற்று ஆய்வாளர்களால் "களப்பிரர்" யாரென்று தெளிவான ஒரு
முடிவுக்கு வரமுடியவில்லை என்பதும் ஏமாற்றம் அளிக்க கூடியதாகவே
இருக்கின்றது. ஆய்வாளர்கள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து,
அனுமானத்தின் அடிப்படையிலேயே "களப்பிரர்" பற்றிய தங்களது கருத்துகளை சொல்லி
வருகிறார்களே தவிர, தீர்க்கமாக, #களப்பிரர்
யாரென்று இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. அவர்கள் யாராக
வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், முன்னூறு வருடங்கள்
சேர-சோழ-பாண்டிய-பல்லவ நாட்டை ஆண்ட களப்பிரர்களின் வீரத்தை போற்றுகிறேன்.
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக