28 ஆகஸ்ட் 2015

அகமுடையார் இன உறவுகளுக்கும், திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

மகாபலி சக்கரவர்த்தி வழி வந்த அனைத்து அகமுடையார் இன உறவுகளுக்கும், திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!



கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்குலத்தோரை எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் மிகப் பழமையான போர்க்குடிகளில் இவர்களும் அடங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறத்தன்மை என்பது மிகவும் உயர்வான ஒன்றாக வரலாற்றில் போற்றப்பட்டுள்ளது. இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் அசுர குல வேந்தன் மகாபலி ஆவான். சோபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு மகாபலி மன்னன் ஆண்டதாகக் கருதப்படுகிறான். தக்காண பீடபூமி பகுதியில் இவ்வூர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும், வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் கேரளத்தில் வாழும் அகம்படியர் சமூகத்தவராகிய நாயர்கள் தங்கள் குல முதல்வனாகிய மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை 'வாமன ஜெயந்தி' என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

அகம்படியர் என்றால் சங்க கால இலக்கியங்களில் எயினர்-கள்வர் என்ற பெயரிலும், வட இந்தியப் புராணங்களில் சபரர் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகின்ற பாலை நிலக் குடிகளின் வம்சத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அரச வம்சத்தவ ஆணிடம் பிறந்ததவர்கள் என்று பொருள். ஆனாலும் இவர்கள் தாய்வழி அடையாளத்தையே முதன்மையான அடையாளமாகக் கொண்டிருந்ததால் பாலை நில குடிகளாகிய எயினர்-கள்வர் சமூகத்தவருடன் இணைந்து முக்குலத்தோராக தமிழ்நாட்டைப் பொருத்தவரை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 15-16ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பகுதிகளில் 'மகாபலி வாணாதிராயர்கள்' என்ற சிற்றரச வம்சத்தவர் ஆண்டுள்ளனர். இவர்கள் தம்மை மறவர் என்றும், வெட்டுமாவலி அகம்படியர் என்றும் கூறிக்கொண்டுள்ளனர் (ஆதாரம்: கணக்கன் கூட்டத்தார் பட்டயம், பக்கம் 233-243, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், பதிப்பாசிரியர்: செ. இராசு, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991). இந்திய வரலாற்றில் மகாபலி சக்கரவர்த்தி மறைக்கமுடியாத ஒரு வரலாற்றுப் பாத்திரமாவார். பாரத நாடு என்ற பெயரையே 'மகாபலி தேசம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகூட ஒரு காலகட்டத்தில் எழுந்ததுண்டு. மகாபலியிடமிருந்து, வாமன அவதாரமெடுத்து விஷ்ணு நாட்டைப் பற்றிக் கொண்டார் என்ற கதையின் பின்னணி சுவையானது. மகாபலி 99 அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்து விட்டான். 100ஆவது அஸ்வமேதம் செய்து முடித்துவிட்டால் இந்திர பதவியை அடைந்து விடுவான். எனவே, மகாபலியின் இந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்கத் திட்டமிட்ட இந்திரன் விஷ்ணுவைத் தூண்டிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டான் என்பதே புராணம். இந்திர பதவியை மயிரிழையில் தப்ப விட்டுவிட்டாலும்கூட மகாபலி வம்சத்தவர்கள் பலீந்திரன் வம்சத்தவர்கள் என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் (அயோத்தியை ஆண்ட ராமன் வம்சத்தவரும், குருக்ஷத்திரத்தை ஆண்ட பாண்டவ கெளரவ வம்சத்தவர் உள்ளிட்ட மன்னர்களும்) சூரிய, சந்திர குலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சோழர்கள் சூரிய குலத்தவர்கள். பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள். சேரர்களும் சந்திர குலத்தின் கிளைக் குலத்தவரே. சேரர்களில் உதியன் சேரலாதன் மகாபாரதப் போரில் இறந்த சந்திர குல வீரர்களைத் தனது முன்னோராகக் கருதினான் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இவர்களைத் தவிர வரலாற்றில் பரமார மன்னர்கள் போன்றவர்களும், செளகான் போன்ற ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அக்கினி குல க்ஷத்திரியர்களாகத் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

- மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)


“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே”

- பெரியாழ்வார் திருமொழி 6


“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2

இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள்மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

தமிழ்க் கல்வெட்டுகளில் வர்ம சிகிச்சை முறை, ‘அங்க வைத்தியம்' அல்லது ‘அங்க வைஜ்யம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நடைமுறைப்படி அங்க வைத்யக் கல்வியும் பயிற்சியும் அரச குலத்தார்க்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே உரியவையாகப் பராமரிக்கப்பட்டு இரகசியம் காக்கப்பட்டு வந்திருக்க வேண்டு மென்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அகம்படியர் மரபினரும், சத்திரிய - பிராம்மண வர்ணக் கலப்பில் தோன்றிய உயர்குடி மருத்துவர்களுமே அங்க வைத்யர்களாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் ’வெட்டுமாவலி அகம்படியர்’ சமூகத்தவர் கள்ளர் - மறவர் சமூகத்தவருடனான தமது பூர்வபந்தங்களைத் தொடர்ந்து வந்ததால் ‘குடி படை'களாக நீடித்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் சாமந்தச் சிற்றரசர்களின் மரபைப் பின்பற்றி நம்பிதிருப்பாதம் (நம்பூதிரிபாத்) பிராம்மணர்களுடன் சம்பந்த உறவு கொண்டு முதன்மையான அதிகார வர்க்கமாக உருவெடுத்த அகம்படிய நாயர் சமூகத்தவர், தன்வந்திரியை மூலவராகக் கருதும் ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஒரு பிரிவாக வர்ம சிகிச்சை முறையை மாற்றினர்.

இப்படியான அகமுடையார்களுக்கு சம்பந்தப்பட்ட திருவோணத்திருநாளை வெறும் கேரள பண்டிகையாக மட்டும் சிறுமைப்படுத்தி வைத்திருப்பது வேறுயாருமல்ல, அகமுடையார் சமூகத்தினரும் தான் என்பதை இனியாவது புரிந்து கொள்வோம். வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

அனைவருக்கும் திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நன்றி & ஆதார தரவுகள்:  தமிழினி இதழ், திண்ணை, தமிழ் விக்கிபீடியா, கணக்கன் கூட்டத்தார் பட்டயம், கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்.

20 ஆகஸ்ட் 2015

பெட்டர் லக் நெஃஸ்ட் டைம் மிஸ்டர் திருமாவளவன்!

"கலப்பை புடிச்சாலும் பகை அழிப்போம் நாங்க; கத்தி புடிச்சாலும் பயிர் வளர்ப்போம் நாங்க!" யென்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்து டெல்டா தேவர்களுக்கு பொருந்தும்.

வடக்கில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதோடு நிறுத்திருக்கலாம். விவசாய பூமியின் நெற்களஞ்சியமான டெல்டாவிலும், தேவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாழும் வடசேரியில் கொடியேத்துறேன் என்று சொல்லிக்கொண்டு சாதிய மோதலை உருவாக்க நினைத்து, கடைசியில மன்னார்குடி எல்லைக்கே வரமால் அறந்தாங்கியோடு அலறியடித்து ஓடி ஓளிந்தது ஏன்? ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பாக பரவாக்கோட்டையில் தமக்கு நடந்த மரணபயம் திரும்பவும் ஞாபகம் வந்துடுச்சா? என்ன சதி திட்டம் தீட்டினாலும், அன்று முதல் இன்று வரை இனி எப்போதுமே டெல்டாவில் சாதிய மோதல் வர வாய்ப்பேயில்லை. இங்கு மண்ணும் மக்களும் மனதார பாசத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். தேர்தலுக்காக சாதியை சொல்லி ஏற்றத்தாழ்வை விதைக்க வேண்டாம். பெட்டர் லக் நெஃஸ்ட் டைம் மிஸ்டர் திருமாவளவன்!

- இரா.ச.இமலாதித்தன்

19 ஆகஸ்ட் 2015

இளங்கோவனும் - ஜெயலலிதாவும்!

ஜெயலலிதாவையும், மோடியையும் தவறாக பேசிவிட்டதாக, குஷ்பூவையும் இளங்கோவனையும் தவறாக பேசி கண்டனங்களை தெரிவிப்பதெல்லாம் என்ன மானங்கெட்ட லாஜிக்கோ?

~~~~

ஜெயலலிதா பற்றி பேச கூட குருட்டுத்தனமான தைரியம் வேணும். அது ஈவிகேஎஸ் இளங்கோவன் கிட்ட இருக்கு.
இனி சோபன்பாபு வெர்சன்!

நீ கலக்கு சித்தப்பு.

அனுமன் வழிபட்ட திருக்குரக்காவலிலிருந்து...




18 ஆகஸ்ட் 2015

மருது பாண்டியர்களை நினைவு படுத்தும் மருத மரம்!



சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம், ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர், ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மருத மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்துவ் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.
ஆந்திராவில் ஸ்ரீசைலம் ’தலைமருது' தலமாகக் கருதப்படுகிறது. இதற்குத் தெற்கே தமிழகத்தில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ’இடைமருது’ தலமாகவும், நெல்லை மாவட்டத்தில் திருப்புடைமருதூர் ’கடைமருது’ தலமாகவும் உள்ளன. இந்த மூன்று முக்கிய திருத்தலங்களிலும் தல மரமாக மருத மரமுமே போற்றப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த மருதமரத்தை மாமன்னர் மருதுபாண்டியர்களாகவும், ஈஸ்வரனாகவும் வழிபட்டு வருவது காலம் காலமாய் நடந்துவரும் நிகழ்வு. அந்த புனிதம் பொருந்திய மருதமரத்தை நெடுஞ்சாலைத்துறை அகற்ற முயற்சிப்பது வேதனையான விசயம். வெளிநாடுகளில் வெறும் சிறுதிடலை கூட நினைவு சின்னமாக போற்றி பாதுகாத்து கொண்டிருக்கும் வேளையில், இங்கே பல நூறு வருட பாரம்பரியமிக்க நினைவு சின்னங்களை கூட அழிக்க துடிப்பது எவ்வகையில் நியாயம்? அன்று மன்னர் அசோகர் நம் மனதில் விதைத்து விட்டு போன மரம் வளர்க்கும் எண்ணத்தை நம்மாழ்வார், கலாம் யென பல புனிதர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். ஆனால் இங்கே நடப்பது எல்லாமே தலைகீழ் தான். பண்பாடு கலச்சாரமென ஊறிப்போன இந்த மண்ணில் பலரது நம்பிக்கை சார்ந்த விசயங்களிலாவது அரசு தலையிடாமல் இருக்கலாம். ஒவ்வொரு விசயத்திற்கும் இன்னொரு மாற்று இருக்கத்தான் செய்கின்றன. அப்படி மாற்று திட்டம் இருக்கும் போதிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு அந்த மருதமரம் தான் ஒரேகுறியாக இருப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

- இரா.ச.இமலாதித்தன்

லிங்கா முதல் கபாலி வரை!

கபாலிக்கும் லிங்காவுக்கும் ஒரேயெழுத்து தான் வித்தியாசம். லிங்கா மாதிரியே கபாலியும் ஆகலாம் என்பதற்கான சாத்திய கூறுகள் இப்போதே தென்படுகின்றன. ஏற்கனவே பாடல் வெளியீடு வரை முடிவடைந்த தன்னுடைய ’கபாலி’ பட டைட்டிலுக்காக கன்னட தயாரிப்பாளரான சிவா தரப்பினர் முதல் நாளே மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கனவே ’லிங்கா’ படத்தோட கதைக்கு தான் உரிமை கொண்டாடுனாங்க. ஆனால் இப்போது ’கபாலி’ படத்தின் பெயருக்கே உரிமை கொண்டாடுறாங்க. இதுல என்னவொரு ஒற்றுமைன்னா, ஒரிஜினல் கபாலியின் தயாரிப்பாளரான சிவா, லிங்கா தயாரிப்பாளரான வெங்கடேஷ் மற்றும் தமிழ்த்திரையின் சூப்பர்ஸ்டாராக இருந்த ரஜினி உள்பட மூவருமே ”கன்னடர்” என்பது தான்! இந்த கூத்தையெல்லாம் தமிழர்கள், திரையரங்குகளுக்கு வெளியே வேடிக்கை பார்க்க வேண்டிய நேரமிது.

16 ஆகஸ்ட் 2015

தாய் மாமன்!

தாய் மாமன் உறவு பற்றி நீயா நானாவில் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனக்கும் ரெண்டு தாய்மாமங்க, இருக்காங்களா? இல்லையா?ன்னு தெரியாத அளவுக்கு இருக்காய்ங்க. பெரியவரு பரவாக்கோட்டையோட பறந்துட்டாரு. சின்னவரு புத்தூரோட போய்ட்டாரு. மாமன் என்ற உறவு அம்மாவுக்கு அடுத்து படியான உரிமையுள்ள உயரியது என்பதால் தான், ஆதியில் மாமன் என்ற உறவுப்பெயரே 'அம்மான்' என்றே அழைக்கப்பட்டது. இப்போதெல்லாம் உறவு என்ற உயிரே பலரது குடும்பங்களில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பது தான் எதார்த்தமான உண்மை.

14 ஆகஸ்ட் 2015

வெள்ளித்திரையில் மருது!




திரு. முத்தையா இயக்கும் 'மருது', திரு. வெற்றி மகாலிங்கம் இயக்கும் 'மருதாண்ட சீமை', திரு. வி.பி.செந்தில்குமார் இயக்கும் 'மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட்' உள்ளிட்ட இம்மூன்று திரைப்படங்களும் ஏதோவொரு வகையில், உலகிலேயே முதன்முறையாக வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 'வீர சங்கம்' என்ற தமிழ் இனக்குழுக்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பை உருவாக்கி 'ஜம்புதீவு பிரகடன'த்தை அமல் படுத்தி, 1780 முதல் 1801 வரை 'சிவகெங்கை சீமை'யை திறம்பட ஆண்ட 'மாமன்னர் மருதுபாண்டியர்'களின் புகழை அறியாத இளந்தலைமுறையினருக்கும் மீண்டுமொருமுறை உலகறிய செய்யுமென நம்புகிறேன்.

இம்மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற எம் வாழ்த்துகள்!

ஆகஸ்ட் மாத ட்விட்!



நீயா நானாவின் இயக்குனரான ஆண்டனி நாடாரின் தயவால் காமராஜர் பற்றிய அரிய நிகழ்ச்சி, தற்போது! (ஆகஸ்ட் 09)


-)(-


கஜினி படத்துல ஏர்வாய்ஸ் ஓனரை லவ் பண்ற மாதிரி நடிச்ச அசினுக்கு உண்மையாகவே கணவராக போறவர் மைக்ரோமேக்ஸ் ஓனர். வாழ்க்கையில எதுவும் நடக்கலாம்! (ஆகஸ்ட் 10)


-)(-


மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கியதால் அந்த கம்பெனி காரனை விட, சமையல் தெரியுமென பில்டப் கொடுத்துக்கொண்டிருந்த பொண்ணுங்க தான் சந்தோச படுதுங்க! (ஆகஸ்ட் 13)


-)(-


சுதந்திர தினத்தில் குண்டுவெடிப்பு நிகழாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் போதே, 'சுதந்திரம்' என்ற வார்த்தை அர்த்தமற்றதாகிறது! (ஆகஸ்ட் 14)


-)(-


எங்க நாகப்பட்டினம் அருகேயுள்ள தலைஞாயிறில் மது அருந்தியவர் மரணம். மேலும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி. ஜெய் டாஸ்மாக்! (ஆகஸ்ட் 15)

11 ஆகஸ்ட் 2015

ஆடி ஆதிரை திருநாள் வாழ்த்துகள்!




சோழநாட்டில் பிறப்பெடுத்து தெற்காசிய நாடுகளையே ஆட்சி செலுத்திய விமலாதித்தனின் மைத்துனனான ராஜேந்திரசோழனின் ஆடி ஆதிரை திருநாள் வாழ்த்துகள்!

06 ஆகஸ்ட் 2015

அஜித் - சிம்பு - விஜய்

அஜித்தின் ரசிகராகவே சிம்பு இருக்கட்டுமே. அதனால் சிம்புவை தவிர வேற யாருக்கும் நஷ்டமும், லாபமும் கிடைத்துவிட போவதில்லை. மூன்று வருடம் இழுபறியாக இருந்த வாலு படம் வெளிவருவதற்கு விஜய் உதவியது மனிதபிமான அடிப்படையில் சக நடிகனாக இருப்பதால் மட்டும் தானென நினைக்கிறேன். இதையே மையபடுத்தி அஜித்-விஜயைகலாய்ப்பதும், சிம்புவிடம் இதைப்பற்றி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு தர்மசங்கடம் படுத்துவதும் என இணையத்தில் சுற்றித்திரியும் மனம்பிறழ்ந்த வெறியர்களால் ஒரு மயிரும் ஆகப்போவதில்லை. இவய்ங்க இங்க தான் தலடா, தளபதிடான்னு கத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் கோடிகணக்கில் சம்பாரிச்சுக்கிட்டு சந்தோசமா இருக்காய்ங்க. அந்த நடிகர்களை அவர்களது தொழிலை செய்ய விட்டுவிட்டு, இவிய்ங்க தன்னொட வயித்து பொழப்பை பார்தாலாவது, பெத்தவங்களுக்கு புரோஜனமாபோகும்!

05 ஆகஸ்ட் 2015

மதுவுக்கு பின்னாலுள்ள அரசியல்!

தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சிகளும் மதுவை கையில் எடுத்து மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராடுவது ஒருவகையில் அரசியல் என்றாலும் கூட பாராட்டுக்குரிய விசயம் தான். ஏற்கனவே பா.ம.க போன்ற கட்சிகள் மட்டுமே தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த வேளையில், திரு. சசிபெருமாளின் இறப்பிற்கு பிறகு இன்றைக்கு பெண்கள் உட்பட மாணவர்களும் தன்னெழுச்சியுடன் தீவிரமாக மதுக்கடைகளுக்கு எதிராக களமாடி வருகிறார்கள்.

மதுவுக்கு பின்னாலும், மதுக்கடைக்களுக்கு பின்னாலும், மதுபான ஆலைகளுக்கு பின்னாலும், முழுக்க முழுக்க அரசியல் தான் ஆட்சி செலுத்துக்கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இங்கே அரசாங்கமே மதுவை நம்பித்தான் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது என்பது தான் எதார்த்தம். தேர்தலில் ஏற்கனவே மும்முனை போட்டி நிலவுவதால், மதுவை மையப்படுத்தியே இந்த தேர்தலும் அமையப்போகிறது என்பதை இப்போதே கண்கூடாக காண முடிகிறது.

மதுவை முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதில் எந்தளவுக்கு உண்மை உள்ளதோ, அதேமாதிரி மதுக்கடைகளை எண்ணிக்கை அளவில் குறைக்க முடியும் என்பதிலும் உண்மை உள்ளது. எனவே இனி ஆட்சியமைக்க போகும் கட்சிகள் யாராகினும், அரசியலுக்காக தேர்தல் வாக்குறுதி போல பேசிவிட்டு, மக்களின் வாக்குகள் கிடைத்தவுடன் தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போய்விட கூடாது. தற்போதைய நிலையில், மது ஒழிப்பை முன்னிறுத்தும் அனைவருமே கட்சி வேறுபாடின்றி ஒரே அணியில் இணைந்து போராடினால் தான் இனிவரும் இளைய தமிழ்சமுதாயம் விழிப்போடும், வீரியத்தோடும், சுய அறிவோடும் இருக்க வழிவகுக்கும். இல்லையெனில் மதுவுக்கு அடிமையாகி, மூளை மழுங்கி இலவசங்களுக்கு கையேந்தி அடிமையாகி போகும் அடுத்த தலைமுறை!

- இரா.ச.இமலாதித்தன்

03 ஆகஸ்ட் 2015

கருப்பு சேர்வைக்கு வீர வணக்கம்!


மாமன்னர் மருதுபாண்டியர்கள் போலவே போரில் 'தீரன் சின்னமலை'யை வெல்ல முடியாது என்பதை அறிந்திருந்த ஆங்கிலேய வல்லாதிக்க சக்திகள், சூழ்ச்சி மூலம் தீரன் சின்னமலையையும், கருப்ப சேர்வையையும் சங்ககிரி் கோட்டையில் தூக்கிலிட்டனர். ஆடி பதினெட்டாம் நாள், ஆடிபெருக்கான இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எம் வீர வணக்கம்!

மேலும். முனைவர் திரு மருது மோகன் அவர்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அரியதகவல்களும் கீழே இணைத்துள்ளேன்.

எனக்கு கிடைத்த தகவல் நெப்போலியனுக்கு திப்புவின் கடித்த்தை எடுத்துச் சென்று 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து பதில் வாங்கி வந்து திப்புவிடத்தில் சேர்த்து விட்டு பயணத்தில் நோய் தாக்கி ஸ்ரீரங்கபட்டணத்தில் இறந்து போய்விட்டார். அவரின் செயல்திறனைப் பார்த்து நெகிழ்நத திப்பு அவருக்கு அங்கேயே சமாதி கட்ட ஏற்பாடு செய்தார் என்று கேள்விப்பட்டேன். அதனால் 30 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கப்பட்டணம் சென்று அவரது சமாதியை தேடினேன். இல்லை என்று கூறினார்கள். ஆனால் அங்கு தொல்லியல் துறையில் பணி புரியும் ஒருவர் எனக்கு தெரிந்து ஒரு தமிழனின் சமாதி நீண்ட வருடங்கள் இருந்தது . பின்பு இதன் அடையாளத்தை அழித்து விட்டனர். என்று கூறினார். கருப்பு சேர்வை தமிழ் தவிர பிரெஞ்சு மொழியியலும் வல்லவர்.