30 நவம்பர் 2014

அரச கொலை 30.11.2012


பிரபு - பாரதி என்கவுன்டர் :(
ஜெயலலிதா பதவி பறிப்பு  :)
ஆண்டு இரண்டானாலும் அகம்படியனாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.

எம் குல மாவீரர்களுக்கு வீர வணக்கம்

28 நவம்பர் 2014

வாசனுக்கு வாழ்த்துகள்!

ஏற்கனவே உள்ள பழைய பெயரை கட்சிக்கு வைத்தாலும் கூட சோழ நாட்டிலிருந்து ஒருவர், மாநில கட்சிக்கு தலைமை வகிப்பது சோழநாட்டானாக எனக்கு பெருமையே. மாநில கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவராக பொறுப்பேற்கும் திரு. ஜி.கே.வாசனுக்கும், மேலும் சோழ நாட்டிலிருந்து தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு மாநிலத்துணை தலைவராக பதவி வகிக்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கும் தமிழக வாக்களனாக என் வாழ்த்துகள்!

ஃபேஸ்புக் போன்ற சமூக இணைய பக்கங்களில் பின்னி பெடலெடுக்க பதினோறு பேர் கொண்ட ஒரு குழுவை ஜி.கே.வாசன் ஏற்கனவே நியமிச்சிட்டாருன்னு நினைக்கிறேன். முகநூல் உள்ளிட்ட இணையபக்க நண்பர்களுக்கும் நன்றின்னு மாநாட்டு மேடையிலேயே சொல்கிறார். டெல்டா காரய்ங்களான்னா வெவரம் தான்!

G.K.Vasan GK Vasan Tamil Maanila Congress

தி.மு.க. தலைவரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையின் திரு மு.கருணாநிதி, த.மா.க. முன்னாள் தலைவரான தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தின் திரு ஜி.கே.மூப்பனார், பா.ஜ.க. மாநில துணைத்தலைவரான திருவாரூர் மாவட்டம் ஜாம்பனோடையின் திரு கருப்பு மு.முருகானந்தம் உள்ளிட்ட இம்மூன்று தலைவர்களுக்கு பிறகு டெல்டாவிலிருந்து உருவெடுத்திருக்கும் அடுத்த மாநில தலைவரான திரு ஜி.கே.வாசனுக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

மிகப்பெரும் தமிழர் அடையாளம்!



சிங்களத் தீவோ, ஈழ மண்டலமோ, இலங்கையோ அல்லது சேது நாடோ, சின்ன மறவர் நாடோ, சிவகெங்கையோ இந்த பெயரிலுள்ள வேறுபாட்டை விட, பகுதி சிறியது என்றாலும் உயிர்கொடை கொடுக்கும் படை வீரர்கள் - சாதி மத வேறுபாடில்லா மக்களின் பலம் - அம்மக்களுக்கான உயரிய கொள்கையுடன் கூடிய நேர்மையான ஆட்சி - எதிரிகளுக்கு எதிரான அதிகார பகிர்மானம் - தொலைநோக்கு பார்வை என மேம்பட்ட ஆட்சி செய்த ’தமிழீழ விடுதலைப்புலிகள்’ இயக்கத்தின் ’தமிழ் தேசிய தலைவர்’ பிரபாகரனும், ’மாமன்னர்’ மருதுபாண்டியர்களும், எதிரிகளும் - துரோகிகளும் கூட மறுக்க முடியாத மாட்சிமை பொருந்திய மிகப்பெரும் தமிழர் அடையாளமாய் திகழும் வரலாற்று பொக்கிசம்.

- இரா.ச.இமலாதித்தன்

26 நவம்பர் 2014

முக்குலத்து அரசியல்வாதிகளின் கவனத்திற்கு

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் இருந்தாவது முக்குலத்து அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ளட்டும். ஆண்ட பரம்பரை, தேவன்டா, எக்குலமும் வாழனும் முக்குலமே ஆளனும் - இப்படியான வார்த்தை ஜாலங்களால் மட்டும் அரசியலில் நிலையான ஓரிடத்தை பிடிக்க முடியாது. மாறிக்கொண்டிருக்கும் காலத்திற்கு தகுந்த தெளிவான அரசியல் பாதை வேண்டும். எல்லாரையும் பகைத்து கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும்? அனைத்து தமிழ்சாதிகளையும் அரவணைத்து புதிய அரசியலை கட்டியெழுப்புவதை பற்றியெல்லாம் இனியாவது யோசிக்கட்டும்.

புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் இப்பயிலரங்கதில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான அரசியல் சூழ்நிலைகள், புதிய தமிழகம் கட்சியை மாநில அளவில் முதன்மை அரசியல் கட்சியாக முன் எடுத்து செல்வது, தமிழகத்தில் தற்பொழுது நிலவக்கூடிய சமூக சிக்கல்கள், சட்டங்கள், ஆட்சி மாற்றங்கள், சுகாதாரம், சுயஒழுக்கம், கட்சியை விரிவாக்கம் செய்தல், ஊடகங்கள் தோற்றுவித்தல் என பல தரப்பட்ட விசயங்களும் இப்பயிலரங்கதில் விவாதிக்கப்பட போகிறார்கள்.

”வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்”

இப்படி சொன்ன பசும்பொன் தேவரின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி அரசியல் செய்யும் முக்குலத்து அமைப்புகளே, இனியாவது இப்படியான முன்னெடுப்புகளை எடுங்கள். "நீ யாரு எங்களுக்கு சொல்றது? நாங்க அக்டோபர் மாசம் வாடகைக்கு பத்து பதினைஞ்சு வண்டி எடுத்து பசும்பொன் பக்கம் போனாலே எங்க அரசியல் முழுமையாகி விடும்!" என நினைக்கும் உங்களை போன்றோர்களால் என்றைக்கும் ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாது. வழக்கம்போல சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கில் காட்டி(கொடுத்து) திமுக - அதிமுகன்னு மாறி மாறி ஒரிரு சீட்டுக்காக கையேந்தி நிற்கத்தான் முடியும். தமிழக அரசியலில் கால் பதித்திருக்கும் எல்லா சாதி அமைப்புக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் இருக்கு. ஆனால் முக்குலத்தோருக்குன்னு ஒரு பத்திரிகை, தொலைக்காட்சின்னு ஏதாவது ஓர் ஊடகம் இருக்கா? இனியாவது உருப்புடியா ஏதாவது பண்ணுங்கய்யா. மீசையை மட்டும் வச்சிக்கிட்டு ஒரு மயிரும் புடுங்க முடியாது. மூளையும் வேணும்.

- இரா.ச.இமலாதித்தன்

சுட்டி:
https://www.facebook.com/DrKrishnasamy/photos/a.322228447945154.1073741827.322218957946103/393972464104085

அண்ணன் வே.பிரபாகரனுக்கு அகவை 60!



அண்ணன் வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம் இது. அண்ணனை போலவே இந்த தம்பிக்கும் அதே விருச்சிக ராசி, அதே கேட்டை நட்சத்திரம். கேட்டை நிச்சயம் ஒருநாள் கோட்டையை ஆளும்! என்ற எதிர்பார்ப்போடும் - நம்பிக்கையோடும் அகவை 60ல் அடியெடுத்து வைக்கும் என் அண்ணனுக்கு இனிய வாழ்த்துகள்! சேவற்கொடி ஏந்திய தமிழின போர்க்கடவுளான எம்பெருமான் திருமுருகனை இதுவரை நேரில் பார்த்ததில்லை. பார்த்தேன், சம காலத்தில் முருகவதாரமாக புலிக்கொடி ஏந்திய என் அண்ணனான வே.பிரபகரனை...

இனிய அகவை 60 வாழ்த்துகள் அண்ணா!

25 நவம்பர் 2014

பசும்பொன் தேவரின் குருவான சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி!


தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. நீதிபதி அனந்த நாராயணன், சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவீர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். பிறகு, சுவாமிகள் முன்னரே தான் குறிப்பிட்ட தேதியில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைக்கு மேற்கே ஓரிடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை தன் பக்தரான செட்டியார் ஒருவரிடம் சொல்லி அதை வாங்க சொன்னார். பிறகு சொன்னது போலவே குறிப்பிட்ட தேதியில் அங்கே சுவாமிகள் ஜீவசமாதி ஆனார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர்.

ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் இந்த ஜீவசமாதிக்கு செல்வதற்காக மூன்று முறை முயற்சித்தும் தரிசிக்க முடியாமல் போனதால், நான்காவது முறையாக நேற்று (24.11.2014) மாலை இந்த ஜீவசமாதிக்கு சென்று வந்தேன். தேவர் மீது பற்றுள்ள அனைவரும், நேரமிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

செல்லும் வழி:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில் செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் காவிரியாற்றின் மேம்பாலம் ஒன்றுள்ளது. அதற்கு முன்பாகவே இடபக்கமுள்ள அம்மன் கோவிலின் பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலிலுள்ள விநாயகர் சிலைக்கு கீழாகவே ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி உயிர்துடிப்புடன் இருந்து வருகின்றது.

- இரா.ச.இமலாதித்தன்

24 நவம்பர் 2014

என் பெற்றோர்களின் தமிழ்முறை திருமண பத்திரிகை!




இது என் பெற்றோர்களின் (1984ம் ஆண்டில் நடைபெற்ற) தமிழ்முறை திருமண பத்திரிகை! உறவினரல்லாத நண்பர்களுக்காக அச்சடிக்கப்பட்டது...

‪#‎பொக்கிசம்‬

என் தாத்தாவின் கடிதம்




'வண்டலூர் கிராம முன்னேற்ற சங்கம்' கூட்டத்தை கூட்ட சொல்லி, 04-04-1966 ம் ஆண்டு என் தாத்தா உயர்திரு அ.இராமாமிர்ததேவர் எழுதிய கடிதம். மேலும், என் பெரிய தாத்தாவான உயர்திரு அ.பக்கிரிசாமித்தேவர் அவர்கள் நேதாஜி படையில் இருந்தவர். அவர் என் தந்தைக்கு எழுதிய கடிதத்தை அடுத்த வாரம் பதிகின்றேன்.

‪#‎பொக்கிசம்‬

கீழ வெண்மணியும் - வரலாறும்!

விவசாய அறுவடை கூலியாக தரும் ஒரு படி நெல்லிலிருந்து இரு படி நெல் தரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இருந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் துயர சம்பத்திற்கு பிறகு 'கீழ வெண்மணி' என்ற கிராமம் தமிழக கம்யூனிசத்தின் ஆணிவேராக மாறிபோனது. 36க்கு 12 என்ற நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீட்டுக்குள் வைத்து 44 பேரும் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 20 பெண்கள்; 13 வயதிற்கும் குறைவான 19 சிறுவர்கள்; 70 வயது பெரியவர் உள்பட 5 ஆண்களென மொத்தம் 44 அப்பாவிகள் கொல்லப்பட்ட பிறகும், தன் சாதியை சார்ந்த ஒருவரால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதை அறிந்திருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கடைசி வரையிலும் எந்தவித பெரிய எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதும் துரோக வராலாற்றுக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட கீழ வெண்மணிக்கு மூன்று மைல் தொலைவில் தான் வண்டலூர் எனும் கிராமமும் உள்ளது.

டெல்டாவில் பெரும்பாலான விவசாயம் சார்ந்த கிராமங்களிலெல்லாம் கம்யூனிசம் மிக வலுவாக கால் பதித்திருந்த நிலையில், கீழவெண்மணிக்கு மிக அருகிலுள்ள வண்டலூரில் கிளை செயலாளர் என்ற மிகச்சிறிய பதவியில் இருந்த என் தந்தை இரா.சம்பந்தம் அவர்களின் தீவிர முயற்சியால், தீவிர கம்யூனிசத்தொண்டர்களை திராவிட கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்தார் என்பது கடந்த கால வரலாறு. இங்கே திராவிடம் - கம்யூனிசம் என்று ஒப்பிட்டு பேசி எது சரி? எது தவறு? என்பதையெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், எளியவனுக்கும் நேர்மையான மனத்திடத்துடன் கூடிய ஆளுமை திறனிருந்தால், எந்தமாதிரியான களத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை சொல்லவே இந்த பதிவு. மேலும், கம்யூனிசம் பரவியிருந்த மண்ணில் திராவிடத்தை திணித்திருக்கும் போது, திராவிடம் பரவியிருக்கும் இக்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாதா என்ன? முடியும்.

வரலாறு என்பது மன்னர் என்று நிறுவுவதில் மட்டுமல்ல; மண் சார்ந்த புது மாற்றத்திலும் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்

19 நவம்பர் 2014

சின்ன கலைவாணருக்கு வாழ்த்துகள்!


கலவரத்துக்கு பெயர் போன தென்தமிழகம் தான் இவரது பூர்வீகமென்றாலும் கலகலப்புக்கு சொந்தக்காரர்.

வேலையிலிருந்த பட்டதாரிகள் நிறைந்த அந்த காலத்திலேயே இவர் எம்.காம் முதுகலைப் பட்ட தாரி.

தமிழ்நாடு தலைமை செயலகத்தின் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்த முன்னாள் அரசு ஊழியர்.

சிவ கார்த்திக்கேயன், மதுரை முத்துக்கு முன்பாகவே ஸ்டேன்ட்-அப் காமெடியை முதன்முதலில் பிரபல படுத்திவர்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், ரஜினி காந்த, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களை பேட்டியெடுத்தவர்.

ரஜினி, கமலை போலவே இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான் இவரை அறிமுக படுத்தினார்.

1987ல் ”மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் திரைத்துறையில் முத்திரை பதித்தார்.

1990களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குகிறார்.

சினிமாவில் சமூக மூடநம்பிக்கைக்கு எதிரான பல சீர்திருத்த கருத்துகளை மிக ஆழமாக பதிவு செய்து வரும் இவரின் மனதுக்கு மிகவும் நெருங்கியவர் ஷீரடி சாய்பாபா.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றவர்.

'உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் நான்கு மாநில விருது அரசு விருகளை பெற்றவர்.

மேலும், ‘எடிசன் விருது’, ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’, ‘ஐ.டி.எஃப்.ஏ விருது', ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றவர்.

குறிப்பாக இந்திய அரசால் ’பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றவர்.

”நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்” எனக்கூறி ’க்ரீன் கலாம்’ திட்டத்தினால் பல லட்சம் மரக்கன்றுகள் ஊன்றி பசுமை புரட்சி செய்து வருபவர்.

இயற்பெயரான விவேகனாந்தனிலிருந்து, சினிமாவால் விவேக் ஆனவர்.

அகவை 54ல் அடியெடுத்து வைக்கும் ”சின்ன கலைவாணர்”, ”ஜனங்களின் கலைஞன்” அண்ணன் திரு. விவேக் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எம்பெருமான் திருமுருகன் அருளோடு வாழ்க வளமுடன்!

- இரா.ச.இமலாதித்தன்

18 நவம்பர் 2014

வீரமும் வீரம் சார்ந்த இடமும்!



”வீரமும் வீரம் சார்ந்த இடமும்!” - தைத்திங்கள் ஆயத்த ஆடை பட்டறை மூலமாக இந்த டீசர்ட் (வாசகம்) உருவாக அடியேனும் ஒரு காரணம்.

இதை #சுயபெருமை ன்னு கூட வச்சிக்கலாம்.

17 நவம்பர் 2014

ரஜினியெனும் மாபெரும் நடிகன்!


ஓரளவுக்கு பெரிய எதிர்பார்ப்பு அதிகமில்லாத தன்னுடைய படங்கள் வெளிவரும் போதெல்லாம், ”அரசியலுக்கு வருவேன்!” யென கீழ்த்தரமான விளம்பர யுக்திகளை பயன்படுத்தி, படத்தை பாமர ரசிகனுக்கு கொண்டு செல்லும் ஈனத்தனமான புத்தியை இந்த ரஜினி என்னைக்கு தான் விட்டு தொலைக்கப்போறாரோ தெரியவில்லை. கோடி கோடியாய் சம்பாரித்த பிறகும் ”வசூல் நாயகன்” என்ற புகழ் போதைக்காக ஆண்டவனை ஊறுகாய் போல தொட்டுக்கொள்ளும் ரஜினி, திராணி இருந்தால் அரசியலுக்குள் வந்து பார்க்கட்டுமே. இந்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை எத்தனை நாள் தான் தன்னந்தனி ஆளாக சுமந்து கொண்டிருப்பார்? பாவம்.

“எதுவாக இருந்தாலும் சரி அதை கடவுள் தான் முடிவு செய்வார். அது என்னவென்று எனக்கு தெரியாது. எதுவாக இருப்பினும் மக்களுக்கு நல்லதையே செய்வேன்!” இப்படி பேசியுள்ள ரஜினி, தன்னுடைய கதைகளில் உருவான வள்ளி - பாபா போன்ற படங்கள் ஓடாதென்று அவருக்கு கடவுள் சொல்லவில்லையா? ஏற்கனவே வெளிவந்த மாற்று மொழி திரைப்படத்தை ரிமேக் செய்து வடிவேலுவையும் - ஜோதிகாவையும் நம்பி சந்திரமுகியால் ரீ எண்ட்ரி கொடுத்த போதும் கூட, ”இனி படம் நடிப்பதை நீ நிறுத்திக்கொள்” என கடவுள் ஏதும் சொல்லவில்லையா? சரி அது போகட்டும். ஏதோ மக்களுக்கு நல்லது செய்வாதாக கூறியுள்ள ரஜினி, இது வரையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்ன செய்தார் என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இதுவரையில் அப்படி எந்தவொரு ஆணியையும் அவர் பிடுங்கவில்லை, இனியும் பிடுங்கி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஒருவேளை தன்னுடைய இரு மகளுக்காக நல்லது செய்திருக்கலாமே ஒழிய, மக்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை என்பது தான் நிதர்சனம்.

”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது” யென்று சொன்ன ரஜினியை, அந்த ஆண்டவன் எப்படி காப்பாத்துவார்? ஏனென்றால் அவர் இப்படி ஆண்டவனை அடிக்கடி சொல்லும் போதெல்லாம் அது தோல்வியில் தானே முடிந்திருக்கிறது என்று அந்த ஆண்டவனுக்கு தெரியாதா? தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாதுன்னு ரஜினி சொன்ன பிறகும் ஜெயலலிதா இரு முறை முதலமைச்சர் ஆனார் என்பதும், அதே ஜெயலலிதா சமீபத்தில் ஆட்சியிலிருக்கும் போது கைதாகி ஜாமீனில் வந்த போது, இதே ரஜினி வாழ்த்துகள் சொல்லி கடிதம் எழுதிய போதும், அந்த கடவுளுக்கே ரஜினியின் கோமாளித்தனங்கள் கோபத்தை ஏற்படுத்திருக்காதா?

அறம் - பொருள் - இன்பம் - வீடுபேறு என்பது ஒரு மனிதனின் வாழ்வியல் படிநிலை. அப்படி பார்த்தால், சராசரி மனிதனின் கடைநிலை என்பதுஆன்மீகமே. அந்த கடைநிலையில் இருக்கும் ரஜினி, ஆண்டுக்கொரு முறை இமயமலை பக்கம் போனால் மட்டும் இறைவனாகவா ஆகிவிட போகிறார்? எந்த இறை அவதாரம், தன் படம் வரும் போதெல்லாம் புகழ் போதைக்காக அரசியலுக்கு வருவேனென ஊரை ஏமாற்றி இருக்கிறது? ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் தான் நிற்க்கும் ஒரு எம்.எல்.ஏ தொகுதியை வெற்றி பெறுவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிருக்கும் என்பது தான் எதார்த்தம்.

தன்னுடைய படங்கள் வரும்போதெல்லாம் தன் ரசிகர்களை உசுப்பேற்றி கேவலமானதொரு அரசியலை அரங்கேற்றும் இந்த ரஜினிக்கு, திரையில் நடிக்க வருகிறதோ இல்லையோ நிச்சயமாக திரைக்கு வெளியே நன்றாகவே நடிக்க வருகின்றது. அரசியலுக்கும் இந்த நடிப்பு தான் தேவையென்பதால் கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வரலாம், ஏனென்றால் தமிழர்கள் ஏமாற காத்து கொண்டிருக்கின்றார்கள். எது எப்படியோ, எம்பெருமான் திருமுருகா! இந்த லிங்கா படம் ப்ளாப் ஆக வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

14 நவம்பர் 2014

பதவியேற்பு வாழ்த்துகள்!

தமிழக பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் பணி சிறக்க எம்பெருமான் திருமுருகன் அருள் புரியட்டும்! டெல்டாவிலிருந்து தேசியக்கட்சியின் மாநிலத்துணை தலைவரென்ற பெரிய பதவியை அலங்கரிக்கும் உங்களுக்கு உறவுக்காரனாக என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேரு மாமாவும் மவுண்ட் பேட்டனும்!

ஆங்கில ஆட்சியின் போது ஆங்கிலேயர்களுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள் நேதாஜியும் தேவரும். அதன் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றவுடன், அவரை ’ஆசிய ஜோதி’ என்று புகழ்ந்து உலகில் மாமனிதர்கள் பலரும் நேருவை சந்திக்க விரும்பினர். ஆனால் நேருவோ "நான் ஃபார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்தித்து, அவருடன் கை குலுக்க விரும்புகிறேன்" என்றார்.

ஆனால் பசும்பொன் தேவரோ, "என் தலைவர் நேதாஜியைக் காட்டிக் கொடுத்தக் கையோடு நான் குலுக்க மாட்டேன்” என்று கூறி நேருவின் கையைத் தட்டி விட்டு சென்றார். என்பது கடந்தகால அரசியல் வரலாறு!

”இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி!” என அண்ணன் வே. பிரபாகரன் சொல்லியது போல, வரலாறு தான் நமக்கு வழிகாட்டியே. அப்படிப்பட்ட துரோக வரலாறுகளுக்கு சொந்தக்காரர் நம்ம நேரு மாமா.


மேலும், மவுண்ட்பேட்டன் மனைவியின் மனம் கவர்ந்த நம்ம நேரு மாமா தின வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேருவும் - தேவரும்!


1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை, நேரு தேவரிடம் தூது அனுப்பினார். பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக தேவர் விரும்பும் எந்த பதவியையும் மத்தியிலோ - மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும், சீலபத்ரயாஜி தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .

சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை. மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார். உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார்.அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார்.

கேப்டன் மோகன் சிங் அறிக்கைக்கு உடனே மறுப்பு அறிக்கை தேவர் கொடுத்தார். அதில், பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரசில் இணையவில்லை என்றும், எப்போதும் போல் பார்வர்ட் பிளாக் தனித்து இயங்குகிறது என்றும், கேப்டன் மோகன்சிங் அவரோடு சேர்ந்த சில விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் காங்கிரசில் சேர்ந்தார்களே தவிர, பார்வர்ட் பிளாக் கட்சியானது காங்கிரசோடு இணையவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருந்தார்.

டில்லிக்கு சென்று மத்தியக் கமிட்டியைக் கூட்டி, அன்றைக்கு அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஹேமந்தகுமார் பாசுவே தலைவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தி, தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்று கூறி, துணைத்தலைவர் ஆனார் தேவர். தேவரின் விருப்பத்திற்கு இணங்க ஹேமந்தகுமார்பாசு தலைவர் ஆனார்.

காங்கிரசோடு பார்வர்ட் பிளாக் கட்சியை இணைத்து விடவேண்டுமென்று நேரு செய்த முயற்சியை முறியடித்து, அன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தனித்தன்மையை காப்பாற்றி, நேதாஜியால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அழியவிடாமல் பாதுகாத்தார் தேவர்.

- இரா.ச.இமலாதித்தன்

(இன்னைக்கு தான் அந்த மாமாவோட பிறந்தநாள்!)

13 நவம்பர் 2014

சுய பெருமைக்கு பின்னாலுள்ள கோபம்!

தொலைக்காட்சி பிரபலம் ஒருவரின் கவிதை புத்தகத்தை படித்த போது தான் தெரிஞ்சது, அவரை விட என் எழுத்துகள் பன்மடங்கு மேம்பட்டதென்று. நானும் 2009 லிருந்து கவிதைங்கிற பேருலயும், கட்டுரைங்கிற பேருலயும் கண்டதையும் கிறுக்கி வச்சிருக்கேன். புகழ் போதைக்கு இங்கே பலரும் அடிமை என்றாலும் புகழுக்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஓர் அங்கீகாரத்திற்காகவாது என்னுடைய நூறுக்கும் மேற்பட்ட கிறுக்கல்களை தொகுத்து ஒரு கவிதை நூலை வெளியிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. அதற்கான வாய்ப்பு தான் இதுவரையிலும் உருவாகவில்லை. அடுத்து பாரபட்சமில்லாத ஒரு நேர்மையான வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பதும் இன்றைய நாள் வரை வெறும் கனவாகவே இருந்து வருகின்றது. இறைருள் இனியாவது கிடைக்குமென நம்பிக்கையோடும், ஆறுமுகனின் அருளோடும் ஆறாவது ஆண்டில் நுழைகின்றேன். வாண்ட்டடா வண்டியில ஏறுற என்னைய நம்புங்கய்யா, சத்தியமா நானும் கவிஞன் தான், எழுத்தாளன் தான்!


இன்னைக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் வந்ததும் நெட் கார்டு ரீசார்ஜ் செய்து கொண்டு வீரவசனம் பேசும் பலருக்கும், ஆறெழு வருடங்களுக்கு முன்பு நடந்த பல ப்ளாஸ்பேக் தெரிய வாய்ப்பில்லை. அன்றைக்கு ஆக்டிவா இருந்த பல பேரு இன்னைக்கு பொண்டாட்டி பிள்ளைன்னு தடம் மாறி விட்டார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து இதே நிலைதான், இன்றைக்குள்ள வீரவசனங்களுக்கும் உருவாகும். அது தெரியாமல் ஒட்டு மொத்த இனத்தையே தன் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாய் பிரம்மை பிடித்து நிற்பதை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. நிலையில்லா இவ்வுலகில் நிலைத்து நிற்பார் யாருமில்லை!

இன்னைக்கு தேவர் தளம் என்ற இணையதளம் இருக்கிறதென்றால் அதில் என்பங்கும் கணிசமாக உண்டு. www.thevarthalam.blogspot.com என்ற வலைப்பதிவிலுள்ள பதிவுகளைத்தான் thevarthalam@mail.com என்ற மெயில் ஐடி உருவாக்கி பிறகு காப்பியெடுத்து அதை பின்னாட்களில் www.thevarthalam.com க்கு அப்லோட் செய்தோம். பண உதவி ஒரு பைசா கூட என்னுடையது இல்லையென்றாலும் லோகோ, இணையதள பெயர், டெம்ப்ளேட் டிசைன், பேஜ்/டேப் தலைப்புகளென அனைத்திலும் அடியேனுக்கும் பங்குண்டு என்பதை சொல்வது காலத்தின் தேவையாகிறது.

#‎
சுய_பெருமை‬
!ன்னு கூட வச்சிக்கலாம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் முக்குலத்தோரான கள்ளருக்கும், மறவருக்கும் தனித்தனி பக்கங்கள் இருந்தாலும், அகமுடையாருக்கு என்ற தனிப்பக்கம் ஏதுமில்லாமல் இருந்த போது, 25 டிசம்பர் 2010ம் ஆண்டு அந்த குறையை போக்கி, அகமுடையாருக்கென தனி பக்கத்தை அடியேன் தான் உருவாக்கினேன்.

இதை ‪#‎சுய_பெருமை‬!ன்னு கூட வச்சிக்கலாம்.

http://ta.wikipedia.org/w/index.php…



நாளைக்கே ஒரு லெட்டர் பேடு கட்சி உருவாக்கி மாநில தலைவராக கூட வரலாம். குறைந்த பட்சம் ஆளில்லா டீக்கடை போன்றதொரு அமைப்பில் வட்ட செயலாளராக கூட வரலாம். ஆனால், ஒருநாளும் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது. அது தான் டிசைன்.

 - இரா.ச.இமலாதித்தன்

12 நவம்பர் 2014

இந்த வார தமிழக அரசியல்!

-001-

அரசியலில் நுழைவதை வெளிக்காட்டி கொள்ளாத கமலஹாசனுக்கு க்ளீன் இந்தியாவில் பொறுப்பும், தன் படம் வரும்போதெல்லாம் அரசியலில் நுழைவதை பற்றி ஊடகங்களை பேசவைக்கும் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரமுகர் விருதும் கொடுக்கும், ஆளும் பா.ஜ.க. சர்க்காரின் நகர்வை பார்க்கும் போது தமிழ்நாடு தான் அடுத்த இலக்கு போல. தமிழகத்திலும் தாமரை மலரட்டும்!

-002-

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவும் புதுப்புது தடுப்பணைகளை கட்ட போகிறார்களாம். அன்று, சோழநாட்டின் விவசாயம் பாதிக்கப்படுவதை எண்ணி கர்நாடகத்தில் போர் தொடுத்து, அங்குள்ள அணையை தரைமட்டமாக்கி விட்டு திருச்சியிலே கல்லணையை கட்டியெழுப்பிய முற்கால சோழமன்னன் இளஞ்செட்சென்னியின் மகனான கரிகாலசோழ பெருவளத்தான் போலொருவன் மீண்டுமிங்கே பிறப்பெடுத்தால் ஒழிய, விவசாயிகளுக்கு அதிசயம் ஒன்றும் நடந்துவிட போவதில்லை.

- இரா.ச.இமலாதித்தன்

11 நவம்பர் 2014

இணைய பிரபலம் என்ற அற்பத்தனம்!

மனசுல உள்ளதை மறைக்காமல் நேர்மையான பதிவை தரும் பதிவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் மிக குறைவு. தனிப்பட்ட செயல்பாட்டுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் சம்பந்தமே இல்லாமல் பதிவிடும் நபர்களின் போலி பிம்பம் அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். மனசுல ஒன்னு; செயல்ல ஒன்னு; பேச்சுல ஒன்னு; எழுத்துல ஒன்னு; இப்படி பல முகங்களில் முகமூடியிட்டு போலியாக பதிவிடும் நபர்களே இங்கே அதிகம். இதுல ஏன் பிரபலம் என்ற பிதற்றல்? இங்கே வழங்கப்படும் லைக்குகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கடன் கூட வாங்க முடியாது. இது தான் எதார்த்தம். அதை விட்டுவிட்டு பிரபலம் - லைக் போன்ற அற்பதனத்துக்காக அக்கப்போர் தேவையில்லாதது. பிரபலமான பதிவர்கள், அந்த பிரபலத்தை பயன்படுத்தி திரைத்துறையிலோ - எழுத்துத்துறையிலோ, டிவி/பத்திரிகை போன்றதோர் ஊடகத்திலோ தனக்கானதொரு முத்திரையை பதித்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த லைக்குகளெல்லாம் வெறும் போலி பெருமை பட்டியலில் தான் சேரும். ஒரு பிரபலமான பதிவர் ஓரிரு மாதம் பதிவிடாமல் இருந்துவிட்டால், அதன் பிறகு அந்த பிரபல பதிவரை சீண்ட கூட ஆளிருக்காது. இதை சொல்வதனால், ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற இயலாநிலையில் நானில்லை. எதார்த்தம் இது தான்.

- இரா.ச.இமலாதித்தன்

08 நவம்பர் 2014

வண்ணங்களும் வணக்கத்துக்குரியவையே!

அனைத்து வண்ணங்களிலும் ஓர் அழகு ஒளிந்திருந்தாலும், பசுமைக்கு நிகரான அழகு வேறேதுமில்லை. என் சிறு வயது முதலே மிகவும் பிடித்து போன நீலம், பச்சைக்கு பிறகு சிவப்பும் பிடித்துப்போய் விட்டது. RGB என்ற இந்த மூவண்ணங்கள் தான் மற்ற அனைத்து விதமான வண்ணங்களுக்கும் மூலாதாரமாக இருக்கின்றதென்றாலும், இந்த மூன்று வண்ணங்களுக்கு பின்னால் பல அறிவியலும் ஆன்மீகமும் கூட நிறைந்திருக்கின்றன. உதாரணமாக பச்சையை பெருமாளுக்கும், கருநீலத்தை இராமனுக்கும், சிவப்பை சிவன் மற்றும் எம்பெருமான் திருமுருகனுக்கும் உரிய நிறமாக சொல்வார்கள். மேலும், நவக்கிரங்களான புதனுக்கு பச்சையையும், சனிக்கு - நீலத்தையும், செவ்வாய்க்கு - சிவப்பையும் வஸ்திரங்களாக அணுவித்தும் வணங்குவார்கள். இது ஆன்மீகம். அதன் தொடர்ச்சியாக, குளோரினுக்கு - பச்சை, நைட்ரஜனுக்கு - நீலம், ஆக்சிஜனுக்கு - சிவப்பு என்றும், மேலும் எலக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான் போன்ற அணுக்களுக்குள்ளும் இந்த பச்சை - நீலம் - சிவப்பு வண்ணக்குறியீடுகள் மூலமும் அறிவியலிலும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். நிச்சயம் ஒருநாள், விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒற்றைப்புள்ளியில் சங்கமித்து, அறிவியலும் ஆன்மீகத்தோடு இணையும். அதன் பெயர் தான் இறைவன் என்று அப்போது புரியும்.

- இரா.ச.இமலாதித்தன்

கொசுறு:

சேனைக்கிழங்கு - நாக்கை அறிக்கும்; வள்ளிக்கிழங்கு - நாக்கில் இனிக்கும். இதுல இருந்து என்ன புரியுது? முதல்ல இருக்கிறத விட இரண்டாவதா வரதுதான் இனிக்கும். அதுனால தான் தெய்வசேனை இருக்கும்போதே வள்ளி மீதும் எம்பெருமான் திருமுருகன் காதல் வசப்பட்டுட்டாரு போல.

07 நவம்பர் 2014

06 நவம்பர் 2014

குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை!

பெரும்பான்மை சாதியை சார்ந்தவன் என்ற முறையில் தானே தைரியமாக ஒரு சாதிக்கட்சியை உருவாக்கின்றனர். அந்த பெரும்பான்மை சாதியின் ஓட்டுகளுக்காக தானே திராவிட கட்சிகளும் ஒட்டுமொத்த 234 தொகுதிகளில் யாசகம் போல ஓரிரு தொகுதிகளை ஒதுக்குகின்றன. அந்த சாதிக்கட்சியை யாரை நம்பி, யார் பெயரை சொல்லி, யாருடைய படத்தை போட்டு, எந்த கொள்கைக்காக உருவாக்கினார்களோ, அதையெல்லாம் வெகு எளிதாக மறந்துவிட்டு தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைக்காக எதிரியிடம் சரணாகதி அடையும் சுயநலவாதிகளின் கீழ்த்தரமான போக்கை, அந்த சாதியை சார்ந்தவன் என்ற முறையில் சுட்டிக்காட்டுவது சரியான முறையே. அதற்காக நீ அந்த அமைப்பில் இருக்கிறாயா? இல்லை நீ எந்த சாதிக்கட்சியில் இருக்கின்றாய்? நீ ஏதாவது கட்சியை நடத்தி பார்த்திருக்கியா? என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாத ஒன்று. அப்படி பார்த்தாலும், ஒரு சாதி அமைப்பில் உள்ளவன், அடுத்த அமைப்பை விமர்சிப்பதும் தவறு தானே? தன் சுயநலத்திற்காகவும் - புகழுக்காகவும் - பணத்திற்காகவும் ஒட்டுமொத்த சாதியையும் அடகு வைக்கும் நபர்களை, அந்த சாதியை சார்ந்தவனே சுட்டிக்காட்ட கடமைப்பட்டவனாகிறான். மாறணும்!

- இரா.ச.இமலாதித்தன்

05 நவம்பர் 2014

மூழ்கும் கப்பலில் கார்த்திக்!

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவே நேதாஜி தலைமையில் ’அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி’ உருவாக்கப்பட்டது. அந்த கட்சியின் மூலமாகவே தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் மு.கார்த்திக், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அதிலிருந்து விலகி ’அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை உருவாக்கினார். அதுவும் காலப்போக்கில் நாடாளும் மக்கள் கட்சியாக, பெயரளவிலும் - செல்வாக்கிலும் தேய்ந்து போனது.

இனிவரும் காலங்களில் சாதிக்கட்சியை நடத்த யார் விரும்பினாலும், அவர்கள் மருத்துவர் ச.ராமதாசிடமும் - தொல்.திருமாவளவனிடமும் தான் படிப்பினையை கற்க வேண்டும். ஒரு நடிகர் தனிக்கட்சியை தொடங்க விஜயகாந்தையும், அதே நடிகர் சாதிக்கட்சியை உருவாக்க சரத்குமாரிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மு.கார்த்திக்குடைய சாதி அரசியலானது, காங்கிரசில் சரணடைந்தது தான் வேதனையின்ம் உச்சம். 

அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேனென நேதாஜி சொல்லக் காரணமாக இருந்த, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழ் மாநில தலைமை பதவியை வழங்கிய கெளரவித்தனர். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் எட்டி உதைத்து உதாசினப்படுத்திருக்கும் மு.கார்த்திக் உடைய நிலைப்பாட்டை, நேதாஜி-தேவர் கொள்கைகளை கடைபிடிக்கும் யாராலும் ஏற்க முடியாது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

02 நவம்பர் 2014

ராஜராஜசோழனின் சதயவிழா!



அருண்மொழித்தேவன் என்கிற உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவரின் 1029வது சதயவிழா வாழ்த்துகள்!

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களை ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான
ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு!


- இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி.

01 நவம்பர் 2014

யுவனுக்கு தாய் மதத்தானின் வாழ்த்துகள்!



மதம் மாறினால் பேரும் மாத்திருப்பாய்ங்க. புதுப்பேரு என்னன்னு தெரியல. அதுவரையில் யுவன் சங்கர் ராஜா என்ற பெயரில் அறியப்பட்ட யுவனுக்கு மூன்றாம் திருமணநாள் வாழ்த்துகள்! சீனா - மலேசியா - இலங்கை ன்னு உலகம் முழுவதும் சுற்றும் போது அங்குள்ள பெண்ணின் மீது காதல் கொண்டு, பெளத்தனாக மதம் மாறாமல் இருந்தால் மகிழ்ச்சி. தாய் மதத்திலிருந்து என் வாழ்த்துகளும், எம்பெருமான் முருகனின் அருளும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

நாகை மைந்தர் தான் தென்னிந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார்!



எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1944ம் ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் தொடர்ச்சியாக மூன்று வருடஙகள் ஓடியது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை. மேலும், திரையுலகில் 1934ம் ஆண்டு நுழைந்ததிலிருந்து மொத்தமாகவே 14 படங்களில் மட்டுமே நடித்த எம்.கே.பாகவதரின் பெரும்பாலான படங்கள் வருடகணக்கில் ஓடி தொடர் சாதனைகளை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரும் - எங்க நாகப்பட்டின மாவட்டத்து காரருமான எம்.கே. தியாகராஜ பாகவதர் (Mayavaram Krishnamurthy Thyagaraja Bhagavathar) நினைவு நாளான (01 நவம்பர் 1959) இன்று, நாகப்பட்டினத்து காரனாய் பெருமையோடு அவரை நினைவுகூறுகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் பொறுக்கீஸ்!

எனக்கென்னமோ, இந்த ஐந்து மீனவர்கள் மீதான சிங்களவாத இலங்கை நீதிமன்றம் கொடுத்த மரணதண்டனை தீர்ப்பிற்கு பின்னால், சுப்ரமணிய சுவாமிதான் இருப்பாரென தோணுது. ”பாத்தீங்களா, டமில் டமின்னு பேசினவா யாராலயும் இந்த தூக்குதண்டனையை தடுக்க முடியல. நான் தான் அந்த டெத் பெனாலிட்டிய ஸ்டாப் பண்னேன். நான் ராஜபக்சா கிட்ட சொல்லலைன்னா, இந்நேரம் இவா அஞ்சு பேரும் செத்து போயிருப்பா... ” நாளடைவில் இப்படி ஒரு கெத்தான பேட்டியை கொடுக்கவே சு.சுவாமி இதை செய்திருக்க கூடும். ராஜபக்சேவுக்கு ’பாரதரத்னா’ விருது கொடுக்க சொன்னதும் கூட, இது மாதிரியான ஓர் அரசியலுக்காகத்தான் இருக்கும்.

இப்படிக்கு,
தமிழ் பொறுக்கி
இரா.ச.இமலாதித்தன்