அவமதிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவமதிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 நவம்பர் 2015

மருதுபாண்டியர்களை அவமதிக்கும் அரசாங்கம்!







அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசியத்தின் முன்னோடி அமைப்பின் மூலமாக கி.பி.1800 களிலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த, மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவொரு தமிழனும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழனின் வீரத்தையும், கொரில்லா போர்முறையும் அன்றைக்கே வெளிக்காட்டி, 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட, முதல் சுதந்திர போராட்ட வீரர்களான 'வெள்ளை மருது - சின்ன மருது' என்ற மருது சகோதர்களின் வெண்கல சிலைகளின் அவலத்தை பாருங்கள். சிவகங்கை அருங்காட்சியகத்தின் வெளியே புல் மண்டி கிடக்கும் இடத்தில் வெண்கல சிலைகளின் இழிநிலையை பார்த்தும் சலனம் ஏதுமின்றி நகர்ந்து சென்றால் நீங்களும், உணர்வுள்ள அக்மார்க் பச்சை தமிழனே!

இதை இத்தனை நாட்களாக கண்டும் காணாமல் ஒன்றுமே செயல்படுத்தாத சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா? வருடந்தோறும் அக்டோபர் 24ம் தேதி மருது சகோதரர்களுக்கு அரசு விழா மட்டும் எடுக்கிறது இந்த அரசாங்கம். ஆனால், அவர்களின் முழு உருவ வெண்கல சிலைகளை இப்படி கேட்பாரின்றி அவமானப்படுத்திருக்கும் இச்செயலை கண்டிக்க கூட ஆளில்லை என்பது தான் வருத்தமான விசயம்.

மேலும், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி அருகிலுள்ள முக்குளம் கிராமத்தில் அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டை சீர்படுத்தி அங்கேவொரு மணிமண்டபம் கட்டவும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யுமா இந்த அரசாங்கம்?


- இரா.ச.இமலாதித்தன்

20 செப்டம்பர் 2015

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு செய்யப்பட்டதற்காக, சென்னை, திருவண்ணாமலை-ஆரணி, திருப்பத்தூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை விளாங்குடி, இராமநாதபுரம், சிவகாசி, விருதுநகரென தமிழகமெங்கும் கண்டன போஸ்டர்களும், தன்னெழுச்சியாக நடைப்பெற்ற களப்போரட்டங்களும், அமைப்பு வேறுபாடின்றி பல்வேறு வகையில் எதிர்ப்புகளை பதிவு செய்து களத்தில் நின்ற அகமுடையார் அரண், வீரகுல அமரன் இயக்கம், அகில இந்திய அகமுடையார் மஹா சபை, தமிழக தலைமை அகமுடையார் சங்கம், அகமுடையார் மக்கள் மகாசபை, அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் சங்கங்கள் என அனைத்து அகமுடையார் இயக்கங்களுக்கும், புதிய நீதிக்கட்சிக்கும், முகநூலில் உடனுக்குடன் கள நிலவரங்களை பகிர்ந்து மிகப்பெரிய போராட்ட களத்தை ஏற்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி!