அரப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மார்ச் 2016

தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்!





'தனித் தமிழர் சேனை'யின் நிறுவனத்தலைவரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், ஐயா அரப்பா தமிழன் அவர்களின் உடன்பிறந்தவரும், 'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை இராமசந்திரன் சேர்வை அவர்களின் பெயரனுமான ஐயா நகைமுகன் அவர்களின் இழப்பானது அகமுடையார் சமுதாயம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனக்குழுக்கே மிகப்பெரிய பின்னடைவு.

'தமிழக தலைமை அகமுடையார் சங்கம்' ஒருங்கிணைத்த அனைத்து பொது மேடைகளில் அவர் உடல்நிலையை கூட கவனத்தில் கொள்ளாமல் உணர்ச்சிமிகு பேச்சுகளால் அலங்கரித்தார். அவரது பேச்சை கேட்பதற்காகவே பல மணிநேரம் காத்திருந்திருக்கிறோம் என்பதே பெருமையான விசயம். அவரது கண்ணியமும், சொல்வன்மையும், அறிவார்ந்த சிந்தனைகளும், அடுத்தக்கட்ட இளம்தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவையாக இருந்தது.

85 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் ஒருங்கிணைத்த அகமுடையார் மாநாட்டுக்கு பலவித எதிர்ப்பு வந்து, மாநாட்டு பந்தலுக்கு அனுமதிக்காத காவல்துறையின் அடக்குமுறையை தனி ஒருவனாக நின்று அனுமதி பெற்றுத்தந்த அப்படிப்பட்ட செயல்தலைவரை, இன்று இழந்து நிற்கிறோம்.
திருவண்ணாமலை மாநாடு முடிந்த பின்னால், மாநாட்டு பந்தலுக்கு அருகேயுள்ள பிரதான சாலையோரம் ஐயா அரப்பா அவர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அரைமணி நேரத்திற்கும் மேலாக அன்றிரவு அவரோடு உரையாடிய நிகழ்வை என்றைக்கும் மறக்கவே முடியாது.

அன்னாரது இறுதி நிகழ்வு நாளை 15.03.2016 செவ்வாய் திருப்பத்தூர் தெக்கூரில் நடைபெறும்.

தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

27 டிசம்பர் 2015

திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டு துளிகள்!

01. அதிக பெரும்பான்மையாக உள்ள 62 தொகுதிகளில் அகமுடையாரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம்.

02. முக்குலம் தேவையில்லை; (அகமுடையார் என்ற) இக்குலம் போதும்!


03. அகமுடையார்கள் மற்ற தமிழ் சாதிகளிடம் நட்பு பாராட்டுவது போலவே, இனி கள்ளர் - மறவர்களிடம் நண்பர்களாகவே இருக்க விரும்புகிறோம். அகமுடையார்களுக்கு மாமன் - மச்சான் - மாப்பிள்ளைகளாக கள்ளரும், மறவரும் இருக்கட்டும்; ஆனால், பங்காளிகளாக அகமுடையார்களுக்குள் மட்டும் இருந்து விடுகிறோம். எங்களுக்கு முக்குலம் தேவையில்லை.

04. இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்!" விரைவில் தொடங்கப்படும்.

- ஸ்ரீபதி செந்தில்குமார், நிறுவனத்தலைவர்,
தமிழக தலைமை அகமுடையார் சங்கம்.




திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டில் கொடுக்கப்பட்ட நாட்காட்டி!


வேட்டவலம் அகமுடையாரின் ப்ளக்ஸ்!

திருக்கோவிலூர் தொழிலதிபர் திரு. டி.கே.டி.முரளி அவர்களால் அகமுடையார் மாநாட்டு கொடியேற்றம்!

அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டின் நிறுவனர் திருச்சி திரு. எம்.எல்.சதீஸ்குமார் அகமுடையார் அவர்களால் அகமுடையார் சங்கப்பாடல்களின் இரண்டாம் பாகம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

அனைத்துலக அருணகிரிநாதர் அறங்காவலர் குழுத்தலைவரான ஐயா. தனுசு அகமுடையாரின் எழுச்சி உரை!

அகமுடையார் சங்க பாடல்கள் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது!

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அகமுடையார் மடத்தை மீட்ட, ஆதமங்கலம் லட்சுமணன் அகமுடையாருக்கு ரூ.10,000/- நன்கொடை அருணாச்சால முதலியாரால் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அகமுடையார் சங்க பொதுசெயலாளர் முனைவர் தி.அரப்பா அவர்களின் அரசியலுரை!

வருங்கால சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செந்தில் அகமுடையாரின் எழுச்சி உரை!

நிறுவனத்தலைவர் திரு. ஸ்ரீபதி செந்தில்குமார் அவர்களின் சிறப்புரை!

அகமுடையார் மாநாட்டு மலர், தம்பிக்கோட்டை எம்.கே.செந்தில் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அகமுடையார் மாநாட்டு விழா மேடையை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும், மருது பாண்டியர்கள் படம் பதித்த காலண்டர் வழங்கப்பட்டது.

கமுதி நாராயணமூர்த்தி அவர்களால் அகமுடையார் மாநாட்டு தீர்மான உரை!



தென் மண்டலத்தை பொறுத்தவரை 90%க்கும் மேற்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் முறையான மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும், மதுரை - திண்டுக்கல் - தேனி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்ளிட்ட அனைத்து அகமுடையார் சங்கங்களின் பிரதிநிதிகளும் திருவண்ணாமலை மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்து சிறப்பித்தார்கள். குறிப்பாக மதுரை திருமங்கலம் கீழமண்டு - மேலமண்டு அகமுடையார் சங்கங்கள் சார்பாக அச்சங்கங்களின் பொறுப்பாளர்களான திரு.மருதுபாண்டியன் மற்றும் துர்கா தேவனுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்த மாநாட்டு அழைப்பிதழானது இம்முறை அனைத்து அகமுடையார் சங்கங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டதே தவிர சங்க உறுப்பினர்களுக்கு என தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் அளிக்கவில்லை. அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தலைவர்களும் மேடையில் அமர இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வரமுடியாத சங்க பிரதிநிதிகள் தொலைபேசியிலும் கடிதம் மூலமாகவும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். 90%க்கும் மேற்பட்ட அனைத்து அகமுடையார் சங்க தலைவர்களின் பெயர்கள், மாநாட்டு விழா அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடதக்க விசயம்.
இதில் இன்னும் சந்தேகம் இருந்தால் தெளிவு பெற அழைக்கவும்.

திரு. தி.அரப்பா (9943713797)



19 டிசம்பர் 2015



தமிழர்களின் பாரம்பரிய கலச்சார பண்பாட்டு கூறுகளை அழித்தொழிப்பது தான் இல்லுமினாட்டிகளின் நோக்கமாக இருக்க கூடும். ஏனெனில் இல்லுமினாட்டிகளின் அடிப்படை தத்துவங்களே தமிழர்களிடமிருந்து திருடப்பட்டது தான்.

ஏற்கனவே என்னுடைய பதிவில் ஷங்கர் எடுத்த 'ஐ' படம் இல்லுமினாட்டிகள் சார்ந்த படம் என்பதை சொல்லிருந்தேன். அதன்படி பார்த்தால், ஐ படத்திற்காக மேற்கத்திய அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எமி ஜாக்சன் என்ற பெண் இல்லுமினாட்டி வகையறாவாக இருக்கலாமென்ற சந்தேகம் வலுக்கிறது.

காரணம் என்னவெனில், அரப்பா நாகரீகத்திலிருந்து தொடர்ந்து வரும் போர்க்குடிகளான தமிழர்களின் 'ஏறு தழுவதல்' என்ற ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் எமி ஜாக்சன் என்ற அந்நிய நாட்டு கூத்தாடி.

- இரா.ச.இமலாதித்தன்.