தமிழ் தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மே 2017

பொதுவெளியில் நாம் தமிழராக இருப்போம்!


தமிழ், தமிழரென பேசும் திரு.சீமானை அந்த தமிழர்களே ஏற்கவில்லையென தமிழரல்லாத கே.டி.ராகவன் சொல்லிருக்கிறார். சினிமா இயக்குனர் என்பதுதான் திரு.சீமானின் அடையாளமென்றும் சொல்லிருக்கிறார்; பூநூல் மட்டுமே அரசியல் அடையாளமாக இருக்க வேண்டுமென நினைக்கும் பொதுபுத்தியில் செருப்பால் அடித்து, களம் காணும் திரு.சீமான் எத்தனையோ இளந்தமிழர்களை நாம்தமிழராக இயக்கி கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர் தான் என்பதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே. வா, போ என பேசுவதுதான் தமிழ் கலாச்சராமாயெனவும் கே.டி.ராகவன் கேட்டிருக்கிறார். அன்பு அதிகமுள்ள உறவுமுறைகளுக்குள் வா, போ மட்டும் தான் இருக்கும். இந்த ஆண்டான் அடிமை தன்மையை உருவாக்கிய ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிரமம் இங்கே இல்லாமல் இருந்திருந்தால், இதே வா,போ என்ற ஒருமைதான் இம்மண்ணில் இன்றும் உயிர்ப்போடு அன்பின் அடையாளமாய் மாறியிருக்கும்.

தென் தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்குட்பட்ட தொகுதியை விட்டுவிட்டு, வட தமிழகத்திலுள்ள மேனாள் அமைச்சர் தொகுதியில் ஒரு வோட்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்ட சூழலில், தன் மக்களிடமே பணம் வசூலித்து களம் கண்ட திரு.சீமான் தோற்றதில், அவருக்கு எந்த இழப்புமில்லை. தமிழனுக்காக போராடிய திரு.சீமானை, அந்த தமிழர்களே ஏற்றுக்கொள்ளாமல் தோற்கடித்து விட்டனர் என தொலைக்காட்சி விவாதங்களில் கண்டவனெல்லாம் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டோமேயென நினைத்து அத்தொகுதியின் வாக்களர்கள் தான் வருத்தப்பட வேண்டும்; ஏனெனில் இது அவர்களுக்கான தோல்வி. திரு.சீமான் பேச்சுக்காகவே கூட்டம் கூட ஆயிரக்கணக்கான பேர் இங்குண்டு. ஆனால் ராகவன் போன்றோர்களின் பேச்சைக்கேட்க கூட இம்மண்ணில் ஆளில்லை என்பதே எதார்த்த களநிலவரம். மாற்றுக்கருத்துகளும், விமர்சனங்களும் கூட திரு.சீமான் மீது சிலருக்கு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழர் போலவே இயங்கி கொண்டிருக்கும் தமிழரல்லாதவர்களிடம் எப்போதுமே அண்ணன் சீமானை விட்டுக்கொடுக்க கூடாது; நாம் தமிழர்!

- இரா.ச. இமலாதித்தன்

26 ஜனவரி 2016

தமிழ் தேசியவாதிகள் பின்னுள்ள சில குழப்பங்கள்!

நான் தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை உள்ளவன். நான் தமிழனென அடையாளப்பட, என் சாதியான அகமுடையார் என்பது தான் முதன்மையாகிறது; ஆனாலும் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருவதால் ஓ.பி.சி. என்ற பிரிவாலும் ஹிந்திய அரசியலால் அடையாளப்படுகிறேன். ஆனால், நான் ஒருபோதும் தமிழல்லாத மற்ற மொழி பேசும் ஓ.பி.சி.யினருக்கு ஆதரவாக பொங்குவதில்லை. ஆனால் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே ஹிந்திய அரசியலால் எஸ்.சி/எஸ்.டி என அடையாளப்படும் தமிழ் சாதிகளான பள்ளர்களும் - பறையர்களும் பல இடங்களில் தமிழ் தேசியத்தை விட்டு விலகி தடம் மாறுவதாக உணர்கிறேன்.

தமிழ் தேசியம் என மூச்சு தம் கட்டி பேசுன பெரும்பாலான ஆட்கள், தெலுங்கு மாணவனின் தற்கொலைக்காக பக்கம் பக்கமாக பல நாட்கள் இங்கே கண்ணீர் வடித்தார்கள். காரணம் "குறிப்பட்ட ஒரு சாதியை சார்ந்தவர் என்பதால் தான், அந்த தெலுங்கு மாணவனுக்காக தமிழ் தேசிய வாதிகளான இவர்கள் பொங்குகிறார்கள்" என மாற்று கருத்துடையோர் அனைவரும் சொன்னார்கள்; அது உண்மையெனவே இப்போது தோன்றுகிறது. ஏனெனில், விழுப்புரத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல் அனைத்து துவாரங்களையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கும் போது தான் தோன்றுகிறது; இங்குள்ள தமிழ் தேசியவாதிகளுக்கு, தன் சுயசாதிப்பற்றுக்காக தமிழ் சாதிகளின் ஒற்றுமையை கடந்தும் ஹிந்திய தேசிய அடையாளத்துடனும் தான் பயணிக்க விரும்புகிறார்கள் என...
தங்களை தலித் என சொல்லக்கூடாது என சொல்லிக்கொண்டே தமிழ் தேசியம் பேசும் தமிழ்சாதியினரின் கொள்கை என்பது ஹிந்திய எஸ்சி/எஸ்டி பாசத்தால் குழம்பி போவதாக உணர்கிறேன். ஒரே சமயத்தில் ஹிந்திய தேசியத்திலும் + தமிழ்தேசியத்திலும் பயணித்து மற்ற தமிழ் சாதிகளை குழப்பாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

06 நவம்பர் 2015

வைகோ - சீமானின் அரசியல் நகர்வு!

திரு. வைகோ தாயாரின் மறைவுக்காக திரு. சீமானின் இரங்கல் அறிக்கையும், கலிங்கப்பட்டிக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தியதையும், அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்கின்றேன். ஒருமுறை ஈழ ஆதரவு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஒரே திரையரங்கினுள் அருகருகே திரு.வைகோவும் - திரு. சீமானும் அமர்ந்திருந்து பார்த்திருந்தும், இருவரும் முகம் பார்த்து கூட பேசிக்கொள்ளவில்லை. அதே போல எங்கள் நாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த பொது கூட்டத்தில் திரு. சீமான் அவர்களின் பேச்சில் கூட முழுக்க முழுக்க திரு. வைகோவின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் விளக்கமாக சாடி விமர்சித்து பேசினார்.

அப்படி இருந்தும் இப்போதைய அரசியல் சூழலில் தெய்வத்திருமதி வை.மாரியம்மாளின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டது, தன் மீதான தெலுங்கு அமைப்புகளுடைய எதிர்ப்பின் வீரியத்தை திசை திருப்பவே என எண்ணுகிறேன். மேலும், திரு. வைகோவோடு இணக்கமாக இருந்த விடுதலைகளத்தை சேர்ந்த திரு. நாகராஜன் போன்றோரெல்லாம் திரு. சீமானின் இந்த அரசியல் காய் நகரத்தலை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

விவேகமுள்ள வீரம் கண்டிப்பாக வெற்றிக்கு வித்தாகும். வாழ்த்துகள், திரு. சீமான்!

- இரா.ச.இமலாதித்தன்.

13 ஜூன் 2014

சீமானின் தமிழ்தேசியமும் சாதி ஒழிப்பும்!

திரு.சீமான் ஏன் ஈழத்து அகதி பெண்ணை திருமணம் செய்யப்போறேன்னு சொல்லிட்டு வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்? இது அவரது தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லுவீங்க. சரி, திரு. சீமான் ஏன் ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கின்றார்? தன் சாதி சார்ந்த தந்தி டிவிக்காக பகுதிநேர ஊழியர் போல செயல்படுகிறாரே, காரணம் என்ன? தனது சாதிக்காரரான ஆதித்தனார் உருவாக்கிய நாம்தமிழர் கட்சியின் பெயரை அப்படியே இவரும் எடுத்துகொண்டாரே ஏன்? தமிழில் சொல்லுக்கா பஞ்சம்? ஜெயலலிதாவை திரு.சீமான் எப்படி பார்க்கிறார்? தமிழராகவா? தமிழரல்லதவராகவா? இல்லை தன்னுடைய தலைவராகவா?

இந்த அதிமுக ஆட்சியில் திரு.சீமானின் எந்த வித தமிழர் சார்ந்த நடவடிக்கையும் சொல்லும்படியாகவே இல்லையே? ஏன்? இதையெல்லாம் கேட்கும் நான் தெலுங்கனோ கன்னடனோ மலையாளியோ அல்ல. இனத்தால் தமிழன் - சாதியால் தேவன் - பிரிவால் அகமுடையான். சாதி பிரிவை ஏன் சொன்னேன் என்றால், சட்டுன்னு வழக்கமா எல்லாரையும் சொல்ற மாதிரி என்னையும் தெலுங்கன்னு சொல்லுவீங்க. சீமானே சொல்லிருக்காரு, ஒருவனை தமிழன் என்பதை அறிந்து கொள்ள, முதலில் அவனுடைய சாதி பெயரை கேள் என்று! ஏனென்றால், சீமானும் சாதித்தமிழனே...

இதே சீமான், அரசியல் சார்ந்த அமைப்பு தொடங்கும் முன் உ.பி கிறிஸ்துவ தேவலாய பிரச்சனையின் போது, தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து பெண்களின் தாவணியை உருவ சொன்ன்னவர் தானே? அப்படிப்பட்ட சீமான் அடிப்படையில் மதவாதி, பிறகு சாதிய சார்பு வாதி. அதையெல்லாம் மறந்துவிட்டு சீமானை ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தின் அடையாளமாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் சீமான் வருங்கால முதல்வர் என்ற கனவோடு, வருங்காலபிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவோடு மறைமுக கூட்டணியில் இருக்கின்றார். தேர்தலில் பார்பனாரான ஜெயலலிதாவுக்கு களமாடுவதுதான் சீமானைன் தமிழ்தேசியத்தின் ஆரம்பநிலை கொள்கையென்றால், அதை கண்ட மொழிக்காரனும் விமர்சிக்கத்தான் செய்வான்.

முதலில், சீமான் தன்னுடைய (நாடார்)சாதி, (கிருஸ்துவ)மத அடையாள சார்புகளை விட்டு முழுமையாக வெளியாகட்டும். அதன்பிறகு கழுத்து நரம்பு தெறிக்க மேடையில் முழங்கட்டும். அண்ணன் பிரபாகரனோடு படம் எடுத்து கொண்டதை தவிர சீமான் சாதித்தது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் போல இணையத்தில் உளறிக் கொட்டுபவர்கள் இனியாவது திருந்துவார்களென நம்புவோம்.

- இரா.ச.இமலாதித்தன்

10 ஜூன் 2014

எம்மோடு இருக்கின்றார் பிரபாகரன்!

அண்ணன் பிரபாகரன் இருக்கிறா? இல்லையா? என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. மருதுபாண்டியரோ, நேதாஜியோ, பசும்பொன்தேவரோ இன்றைக்கும் எம்மோடு இருக்கும்போது ஏன் அண்ணன் பிரபாகரன் எம்மோடு இருக்க மாட்டார்? என்றைக்குமே நவீன காலத்து தமிழனின் ஒட்டுமொத்த அடையாளம் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. ஆதிகால சேவற்கொடிக்கு அடுத்து, இனிவருங்கால தமிழனுக்கு சிவப்பு மஞ்சள் நிற புலிக்கொடி மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும்.

தமிழ்தேசியத்திற்கு திராவிடம், பார்பனியமென எது இடையூறாக வந்தாலும் அதை அழித்தொழிக்க வேண்டிய கடமை, பள்ளர் - பறையர் - வன்னியர் - கவுண்டர் - தேவர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு தான் முழு உரிமை உண்டு. நமக்குள்ளாகவே இருபிரிவாக மோதிக்கொள்ளும் வரை, தமிழ்தேசியமும் மலராது. தமிழும் வளராது. தமிழ் சார்ந்த ஒவ்வொரு அடையாளமும் அழித்தொழிக்கப்படும். சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்படுவோம். உயிர்பலி சோதனைக்கூடங்களாக தாய்த்தமிழ்நாடு மாற்றியமைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உருவாகும். எனவே அங்கு ஈழம் மலர, இங்குள்ள நமக்குள் ஈகோ மறையட்டும்.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

07 பிப்ரவரி 2014

தமிழ் தேசியத்தை மறக்க பசும்பொன் கவசம்!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருடா வருடம் அக்டோபர் மாதம் கடைசி வாரம் முழுமைக்கும் கோவில் திருவிழா போல நடைபெறும் ஓர் ஆன்மீக நிகழ்வை, ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் தலையீட்டால் கடமைக்கு பசும்பொன் வந்து தலை காட்டி செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். 

பெரும்பான்மை சமூகம் சார்ந்த விழா என்பதால், தமிழகத்தில் செயல்படும் லெட்டர்பேடு கட்சி முதற்கொண்டு மாநிலத்தை ஆளும் திராவிட கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசிய கட்சிகள் உள்பட அனைவரும் அக்டோபர் 30ம் தேதியென்று பசும்பொன்னை ஆக்கிரமித்து கொள்வது தான் கடந்தகால வரலாறு. அப்படிப்பட்ட ஆன்மீக விழாவான தேவர் ஜெயந்திக்கு தடை போட்ட ஜெயலலிதா, முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முக்குலத்து ஓட்டு வங்கியை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

 
அதன் முதல் முயற்சியாக, ஓட்டுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் போல, வருகின்ற பிப்ரவரி 09ம் தேதி பசும்பொன்னில் தங்க கவசம் அணிவிக்கிறேன் என்ற பெயரில், இழந்த தேவரின ஓட்டு வங்கியை கவர மலிவான அரசியல் யுக்தியை பயன்படுத்துகிறார். இதில் வெட்க கேடான விசயம் என்னவெனில், 32 1/2 கிராமங்களை சொந்தமாக கொண்டு பெரிய ஜமீன்தாராக வாழ்ந்திருக்க வேண்டிய பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர், தேசியவாதியாகவும் - துறவி போல பிரம்மச்சாரியத்தை கடைபிடித்தும், பொன், பெண், மண் ஆசையற்ற ஆன்மீகவாதியாகவும், இறுதிவரை எளியவராகவே வாழ்ந்த மாமனிதரான ஆன்மீக சித்தருக்கு, தங்க கவசம் சூட்டுவதென்பது கேடுக்கெட்ட திராவிட அரசியலின் சூழ்ச்சி என்பதை ஓட்டளிக்கும் எம் மக்கள் புரிந்து கொள்ளாதவரை, தமிழ்நாட்டை தமிழர் ஆள்வதற்கான 'தமிழ் தேசிய அரசியல்' என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

- இரா.ச.இமலாதித்தன்