10 ஜூன் 2014

எம்மோடு இருக்கின்றார் பிரபாகரன்!

அண்ணன் பிரபாகரன் இருக்கிறா? இல்லையா? என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. மருதுபாண்டியரோ, நேதாஜியோ, பசும்பொன்தேவரோ இன்றைக்கும் எம்மோடு இருக்கும்போது ஏன் அண்ணன் பிரபாகரன் எம்மோடு இருக்க மாட்டார்? என்றைக்குமே நவீன காலத்து தமிழனின் ஒட்டுமொத்த அடையாளம் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. ஆதிகால சேவற்கொடிக்கு அடுத்து, இனிவருங்கால தமிழனுக்கு சிவப்பு மஞ்சள் நிற புலிக்கொடி மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும்.

தமிழ்தேசியத்திற்கு திராவிடம், பார்பனியமென எது இடையூறாக வந்தாலும் அதை அழித்தொழிக்க வேண்டிய கடமை, பள்ளர் - பறையர் - வன்னியர் - கவுண்டர் - தேவர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு தான் முழு உரிமை உண்டு. நமக்குள்ளாகவே இருபிரிவாக மோதிக்கொள்ளும் வரை, தமிழ்தேசியமும் மலராது. தமிழும் வளராது. தமிழ் சார்ந்த ஒவ்வொரு அடையாளமும் அழித்தொழிக்கப்படும். சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்படுவோம். உயிர்பலி சோதனைக்கூடங்களாக தாய்த்தமிழ்நாடு மாற்றியமைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உருவாகும். எனவே அங்கு ஈழம் மலர, இங்குள்ள நமக்குள் ஈகோ மறையட்டும்.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக