ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 ஏப்ரல் 2017

கருப்பு இம்மண்ணின் பெருமைமிகு அடையாளம்!



நிறத்தால் கருப்பானவன் என்பதில் எனக்கு பெருமையே. இம்மண்ணின் பூர்வகுடிகளின் இயல்பான நிறமே கருப்பு தான். அதனால் பிறப்பால் இம்மண்ணின் மைந்தனென அடையாளப்படுவதும் கூட இந்த கருப்பு தான். ஆரியர்கள் போன்ற அந்நியர்கள் தான் கருப்பில்லாத நிறத்தில் மனம் முழுக்க கருத்த எண்ணங்களோடு எம்மண்ணை சூழ்ச்சியால் ஆக்கிரமித்தனர். அரப்பா நாகரீகத்தை அழித்தொழித்த வரலாற்று பெருமையை தன்னகத்தே கொண்டவர்களின் வழிவந்த தருண்விஜய் போன்றோர்கள், எம்மைப்போன்ற கருப்பர்களோடு சகித்துக்கொண்டு எம் மண்ணில் ஏன் வாழ/ஆள வேண்டும்? கைபர் போலான் கணவாய் வழியே கால்நடையாக நாடோடியாய் கடந்து வந்தது போலவே, இப்போதும் மீண்டும் தங்களது சொந்த பகுதிக்கே கிளம்பிச்செல்லலாமே?

ராமனும், கண்ணனும் என்ன நிறமென்பதை சகிப்புத்தன்மையுடைய வந்தேறிகள் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். கலப்பில்லாத நிறம் கருப்பு என்பதையும் இனிமேலாவது அந்த அந்நியர்கள் உணர வேண்டும். "இன்றைய ஹிந்தியா முழுமைக்குமுள்ள நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இம்மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி தமிழர்கள் தான்!" என்பதை 'வந்தேறி' பற்றிய கேள்விக்கு, நிறத்தால் சிவப்பாய் இருந்த பீமராவ் அம்பேத்கர் அன்றைக்கே இவ்வுண்மையை ஊரறிய சொல்லிருப்பதே தமிழர்களின் பாரம்பரியத்திற்கான சாட்சி. வந்தேறிகளே எங்களையும், எம் மண்ணையும், எம் பண்பாட்டையும், எம் ஆன்மீகத்தையும், சுரண்டியது போதும்; எங்களைப்போன்ற கருப்பர்களை விட்டு வெளியே கிளம்புங்கள்!

சிவப்பாய் இருக்கும் இவர்கள் செய்யும் கூத்துகளுக்கெல்லாம் முட்டுக்கொடுக்கின்ற தமிழக பாஜக தலைமையாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், தற்பொழுது தலைமையாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இல்லாத சகிப்புத்தன்மையா தருண் விஜய்க்கு இருக்கிறது? வேண்டுமென்றால், சிவப்பாய் இருக்கின்ற சு.சுவாமியையோ, ஹெச்.ராஜாவையோ இங்கே தலைமையாக்குங்கள் பார்ப்போம். 'கருப்பு' தான் இம்மண்ணின் அடையாளம். அதை நாளைவொருநாள் தமிழக தலைமை பதவிக்கான சரியான தலைவராக (ஒருவர்) வரும்போது 'கருப்பை' பற்றி தருண் விஜய் புரிந்து கொள்வார்.

25 ஆகஸ்ட் 2016

ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோகம் தான், தர்ம புண்ணியமாக கணக்கிடப்படுகிறது. தமிழனெல்லாம் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த ஆரிய அட்டூழியங்களை ஒழிக்க வந்த 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறப்பை தீபாவளி ஆக்கியதோடு மட்டுமில்லாமல், அவரையே நரகாசுரனாக்கி நயவஞ்சக தீயை மூட்டி குளிர் காய்வதும் இதே ஆரியம் தான். இன்னும் எவ்வளவோ இருக்கு ஆரிய சூழ்ச்சி. வேற வழியில்லை. சிக்குண்டோம், ஹிந்து, ஹிந்தியா, ஹிந்தியென... உலக மொழிக்களுக்கெல்லாம் தகப்பன் மொழியான எம் தாய்மொழி தமிழை நீஷபாஷையென சொல்லி அழிக்க காலம்காலமாய் போராடும் தேவபாஷை சமஸ்கிருதமும் இம்மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும், துரோகத்தின் எச்சமாய்!

- இரா.ச. இமலாதித்தன்