25 ஆகஸ்ட் 2016

ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோகம் தான், தர்ம புண்ணியமாக கணக்கிடப்படுகிறது. தமிழனெல்லாம் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த ஆரிய அட்டூழியங்களை ஒழிக்க வந்த 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறப்பை தீபாவளி ஆக்கியதோடு மட்டுமில்லாமல், அவரையே நரகாசுரனாக்கி நயவஞ்சக தீயை மூட்டி குளிர் காய்வதும் இதே ஆரியம் தான். இன்னும் எவ்வளவோ இருக்கு ஆரிய சூழ்ச்சி. வேற வழியில்லை. சிக்குண்டோம், ஹிந்து, ஹிந்தியா, ஹிந்தியென... உலக மொழிக்களுக்கெல்லாம் தகப்பன் மொழியான எம் தாய்மொழி தமிழை நீஷபாஷையென சொல்லி அழிக்க காலம்காலமாய் போராடும் தேவபாஷை சமஸ்கிருதமும் இம்மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும், துரோகத்தின் எச்சமாய்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக