ஜெயபால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயபால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மே 2015

அரசியலுக்குள் ஊழல்!

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த, முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் மூலம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அந்த ரகசிய குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

- விகடன்


இரண்டு துறைகளிலும் வெறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் ஊழல் நடத்து இருக்கா? ச்சே, ஊழலுக்கு இருக்கிற கெளரவத்தையே குறைச்சிட்டாய்ங்களே. எங்க ஊரு காரர் ஜெயபால்கிட்ட இருக்கிற மீன்வளத்துறை உள்பட மிச்சம் இருக்கிற அமைச்சகங்களை விசாரணை பண்னி பாருங்கய்யா. அப்போதான் ஊழல் பண்னின தொகைக்கு ஒரு மரியாதையே கிடைக்கும்.

16 செப்டம்பர் 2014

அமைச்சருக்கும் அடி சறுக்கும்!

         நாகப்பட்டினத்தை சேர்ந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சரான மாண்புமிகு திரு. கே.ஏ.ஜெயபால் அவர்கள் மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விசயம். அதனால் தான் மீன்வளத்துறைக்கு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார். சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் என்பது ஒரு கடலோர மாவட்டம் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், மீனவ சமுதாயத்தினர் மட்டுமே நாகப்பட்டினத்தில் இல்லை. நாகூரும் - வேளாங்கன்னியும் - சிக்கலும் மதச்சின்னங்களுக்கு அடையாளமாக திகழ்ந்து வருவது நாகப்பட்டினத்திற்கு கிடைத்த பெருமைகளில் ஒன்று. ஏனெனில், இசுலாம் - கிருத்துவம் - ஹிந்து உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட சாதி-மத மக்களும் நாகை மாவட்டத்தை பூர்வகுடியாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மாண்புமிகு அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் அவர்கள், தனது பதவியை பயன்படுத்தி தன்னுடைய சாதி மக்களுக்கு மட்டுமே அனைத்து தரப்பட்ட உதவிகளையும் செய்து வருவது, மாற்று இன-சாதி மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால், தேர்தலின் போது அவரது சாதி மக்களின் ஓட்டு கூட முழுமையாக அவருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் தொகுதி மறுசீரமைப்பினால், பெரும்பாலான மீனவ கிராமங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியின் வரம்புக்குள் இல்லை. ஆனால், 51.20% வாக்குகளோடு மிகப்பெரிய வெற்றியை திரு.கே.ஏ.ஜெயபால் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தது, மாற்று மத-சாதிகளை சார்ந்த வாக்களர்களே. ஆனால், தான் வெற்றி பெற்று அமைச்சரானதும், தன்னுடைய சாதி மக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து விட்டு, மற்ற மத-சாதி மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமலே இருப்பது எந்த விதத்தில் நியாயம்? :(

இதையெல்லாம் ஏன் கேட்கிறேனென்றால், நான் உள்பட என் குடும்பத்தினர் அனைவரும் திரு.கே.ஏ.ஜெயபால் அவர்களுக்கு வாக்களித்தோம் என்ற தார்மீக உரிமையில் தான். அன்றைய சோழர்காலத்தில் பெரும்புகழோடு  திகழ்ந்த துறைமுக நகரமான நாகப்பட்டினம் இன்னமும் பழமை மாறாமலேயே இருக்கின்றது. அதுவும், இத்தனை ஆட்சியாளர்கள் வந்தபிறகும் புதுமையென்ற பொலிவே இல்லாமல் பழமையாகியே கிடக்கின்றது என்பதே வருத்தமான யதார்த்தம். மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் தானே உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், இன்னமும் பாதாளச்சாக்கடை பணிகளால், மாவட்ட தலைநகரின் பிரதான சாலைகள் கூட புதுபிக்கப்படவில்லையே. மேலும், பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட ஏராளமான நலத்திட்ட அறிவிப்புகள் வெறும் அறிப்புகளாக மட்டுமே கிடப்பில் கிடக்கின்றன. இதற்காகவா வாக்களித்தோம்? :(

வழக்கம் போல அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போதுதானே இந்த சாமானியர்களை தேடி வருவீர்கள். அப்போது, நான் உங்களுக்கு எதிராக வாக்களிப்பேன். இங்கே நான் என்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்ற பல சாமானியர்களும் தான். ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்