27 மே 2015

அரசியலுக்குள் ஊழல்!

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த, முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் மூலம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அந்த ரகசிய குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

- விகடன்


இரண்டு துறைகளிலும் வெறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் ஊழல் நடத்து இருக்கா? ச்சே, ஊழலுக்கு இருக்கிற கெளரவத்தையே குறைச்சிட்டாய்ங்களே. எங்க ஊரு காரர் ஜெயபால்கிட்ட இருக்கிற மீன்வளத்துறை உள்பட மிச்சம் இருக்கிற அமைச்சகங்களை விசாரணை பண்னி பாருங்கய்யா. அப்போதான் ஊழல் பண்னின தொகைக்கு ஒரு மரியாதையே கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக