27 மே 2015

அரசியல் வியாபாரிகளின் கையில் அரசு இயந்திரம்!

அரசியல் வியாபாரம்:

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து இறுதிவரை நான் விடுதலைப்புலிகள் மீதும், அண்ணன் பிரபாகரன் மீதும் அதீத பற்றுள்ளவன் தான். என்ன மாதிரியோ அல்லது என்னை விடவோ அதிக பற்றுள்ள எத்தனையோ பேரை என் சமகாலத்தில் நான் பார்த்து பழகிருக்கிறேன். ஆனால், திரு.சீமான் ஒரேவொரு தடவை ஈழத்தில் அண்ணன் பிரபாகரனோடு பேசி வந்த ஒரே காரணத்திற்காக, தன் வாய்க்கு வந்ததையெல்லாம் பொது மேடையில் உளறி தள்ளுவதை ஓர் ஈழ ஆதரவாளனாக என்னால் துளி கூட ஏற்க முடியவில்லை. அண்ணன் பிரபாகரன் படத்தை வைகோவுக்கு அடுத்த படியாக பாரிய அளவில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமை திரு.சீமானுக்கு உண்டு. அதற்காக, அவர் சொல்லும் கதையையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பது, அண்ணன் பிரபாகரனுக்கு செய்யும் துரோகமாகும். தமிழக அரசியலில் நல்ல அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள திரு.சீமானுக்கு வாழ்த்துகள். மேலும், திராவிடத்தின் நீட்சியான தமிழ் தேசியத்தை சொல்லி ஆட்சி அமையுங்கள், கெஜ்ரிவால் போல முதலமைச்சர் ஆகுங்கள். என் ஓட்டும், என் வாழ்த்தும் உங்களுக்கு உண்டு. ஆனால் பா.ம.க.வை வன்னியர் சாதி கட்சியென்று சொல்லிக்கொண்டு, நாடர் சாதியை சார்ந்த ஆதித்தனார் அன்று ஆரம்பித்த நாம் தமிழர் கட்சியை இன்றும் வைத்து கொண்டு, வைகுண்டராஜனோடு சேர்ந்து கொண்டு நாடார் சாதி அரசியலை தமிழ்தேசியம் என, அப்பாவி இன உணர்வாளர்களான என் சக இளந்தமிழர்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்


அரசு இயந்திரம்:


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதிக்கும் ஆர்கேநகர் இடைத்தேர்தல் தேதிக்கும் உள்ள காலஇடைவெளியை கணக்கிடுகையிலேயே தேர்தல் ஆணையத்தின் நடுநிலை புரிகிறது. யார் சொன்னது? நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் சுயாட்சி அதிகாரம் கொண்டதென்று...? எல்லாமும் அரசியலாகி விட்டது. பணம் தான் அதை ஆட்டி வைக்கிறது. வாழ்க அரசியல்வாதிகளின் வியூகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக