07 மே 2015

பாஸ் ஆய்டலாம் பாஸ்!

முதல் மார்க் வாங்கினவங்க மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிச்சிருக்காங்க என்பது போன்ற விளம்பரங்கள் இன்னும் ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களால் வந்து கொண்டிருக்கும். அதையெல்லாம் கவலைப்படாம, புடிச்சதையோ, கிடைச்சதையோ படிச்சாலே வாழ்க்கையில ஜெயிக்கலாம். ஆனால், இங்கே வெற்றிங்கிறது ஊருல உள்ள எல்லாரையும் தோற்கடிப்பது தான் என்பது போன்ற மாயை சூழ்ந்திருக்கு. 2002ல என் கூட ப்ளஸ்டூ படிச்சு ஸ்கூல்ல முதல் மார்க் வாங்கின பொண்ணுக்கு இன்னைக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அவ்ளோ தான். மாநில அளவில் முதல் மார்க் வருசா வருசம் பல பேரு வாங்குறாங்க. இதுவரைக்கும் அவங்க யாரும் பெருசா வாழ்க்கையை புரட்டி போடல. ஆர்வ கோளறுல மீடியாவுக்கு பேட்டிக்கொடுக்கிறப்போ, கலெக்டராகி-டாக்டராகி சேவை செய்வேன்’னு சொல்றதெல்லாம் சுத்த பொய். கடைசியில எல்லாம் காசு பணம் சம்பாரிக்க தான் பார்ப்பாய்ங்க.

ஃபெயில் ஆயிடுவோம்ன்னு நினைச்சு, எதிர்பார்க்காம பார்டர்ல பாஸ் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகள்!


-o-o-o-o-o-o-o-o-


ஆன்மீகத்துக்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தமே இல்லை. ஆன்மீகத்தில் இருப்பவனெல்லாம் ஆண்டவனோடு ஐக்கியமாகிவிடுவதில்லை. ஆண்டவனை அடைந்தவரோல்லாம் அப்படியே ஆன்மீகமாதி அல்ல. அதில் பெரும்பான்மையானோர் சுயநலவாதியே. இன்னொரு பக்கம் ஆண்டவனை பற்றிய விழிப்பே இல்லாதோரெல்லாம் அயோக்கியனும் இல்லை. பகுத்தறிவாதியும் இல்லை. ஆன்மீக நாட்டமே இல்லாமல் ஆண்டவனை அடைந்தோர் இங்கே அனேகம் உண்டு. ஆண்டவன் எப்போதும் விளம்பரபடுத்தி, அழைப்பிதழ் கொடுத்து யாரிடமும் அடையாளப்படுத்தி கொள்வதில்லை. சக உயிர்களை தன் உயிரென நினைக்கும் அனைவருமே ஆண்டவனுக்கு அருகே தான் பயணிக்கிறார்கள். இங்கே மந்திர தந்திர உடல் வருத்தி ஏதுமில்லை.

- ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக