20 மே 2015

ட்வீட் எடு கொண்டாடு! -1

இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை.
- ஜெயலலிதா

ஆமா ஆமா, பா.ஜ.க.வுக்கும் கிடைத்த வெற்றி

 -o0o-

பொய் சொல்லியே வாதடுற வக்கிலுங்க தானே, பின்னாடி ஜட்ஜ் ஆகுறாங்க. ஜட்ஜ் ஆன உடனே ஞானோதயமா கிடைச்சிட போகுது?

 -o0o-

பொய்யாக எதையாவது கிறுக்கி கவிதையென நம்ப வைத்து விட முடியும் உலகில், பொய்யாக நடிப்பது தான் சிரமமாய் இருக்கிறது.
- இமலாதித்தவியல்


 -o0o-


இந்த தீர்ப்பை நினைக்கும் போது, பிரபு பாரதி குமார் போன்றோர்களும் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

 -o0o-

உங்க அம்மா விடுதலை ஆயாச்சு. தற்கொலை செய்து கொண்ட (பா)ஆவிகளே உங்களது ஆன்மா இனியாவது சாந்தியடையட்டும்!

 -o0o-

நீதியரசர் குமாரசாமியும் ஒருநாள் தன் சுயசரிதையை எழுதாமலா போய் விடுவார்? அப்போது தெரியும் மிச்ச கதை.

 -o0o-

குற்றம் சாட்டப்பட்டவர்களிலேயே சாந்தன் முருகன் பேரறிவாளன் மட்டும் தான் குற்றவாளிகள் போல.

  -o0o-

இனிமே சட்டம் படிக்கும் போதே, கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் தெரியுதான்னு செக் பண்ணிட்டு வக்கில் ஆக்குங்கய்யா!

 -o0o-
 
 +2ல நாலு சப்ஜெக்ட்டுக்கு வாத்தியாரே இல்ல. ட்யூசன்ல குலாம் சார்கிட்ட படிச்சு தான் கணக்குல 120 மார்க் வாங்கினேன். ஜட்ஜ் ஆகிருக்கலாமோ?

  -o0o-

ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான். ஆனால் கடைசியில ‪#‎கணக்கு‬ பண்ணி கை விட்ருவான்!

 -o0o-

ஒருங்கிணைந்த தஞ்சை தரணி பெற்றெடுத்த ஆன்மீக தலைமகனுக்கு நாகப்பட்டினத்து காரனாய் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ‪#‎HappyBirthdaySriSri‬

 -o0o-

அக்னிநட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, இயற்கையென்ற கடவுளுக்கு தான் என்னவொரு கருணை? இந்த வாரம் முழுக்க மழை!

 -o0o-

வாழ்க்கை என்னவென்று உணரும் தருவாயில் உறவெல்லாம் ஒவ்வொரு மூலைக்கு சென்றுவிட, தனித்து நிற்கிறோம் நம் தாய் தந்தையை இளமையில் உணராததை போலவே!

 -o0o-

ஊர் ஊராக சுற்றி திரிபவர்களை நாடோடின்னும் சொல்லலாம், நரேந்திரமோடின்னும் சொல்லலாம்!

 -o0o-

ஈழத்தை வைச்சு ஒருபக்கம் அரசியல் ப்ரோக்கர்கள் புகழ் தேடிக்கிறாங்க. மறுபக்கம் மீடியாக்கள் டீஆர்பியை கூட்டிக்கிறாங்க. நல்ல பொழப்பு.

 -o0o-

நாயாக தெருவோரம் கூட நிம்மதியாக படுக்க முடியாது சல்மான்கான்கள் நிறைந்த ஊர் இது. நீதி கூட நேர்மையாக கிடைக்காது குமாரசாமிக்கள் நிறைந்த உலகமிது!

 -o0o-

ஆட்சியில இருந்தாலும், இல்லாவிட்டாலும் இத்தனை வருசங்களா தொடர்ச்சியா மீடியாவுக்கு தீனி போடுற அந்த திறமைக்காகவே பிடிக்கும் ‪#‎WhyILikeMK‬

 -o0o-

சமகிருதம், ஹீப்ரு, அரபி மொழிகள் மட்டுமே தெரிந்த கடவுள்கள், இன்றுவரையுமா தன் மொழியறிவை வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றன? ஓ மை காட்! சோ சேட் 

 -o0o-

மழையில் நனைந்து வருகையில் உரிமையோட தலை துவட்ட, தாய் பாசமின்றி இன்னொரு கை கிடைக்குமென்றால் அதுவும் சொர்க்கம் தான்! ‪#‎IamWaiting‬

 -o0o-

டிவியை ஆஃப் பண்ணினாலும் கூட கல்யாண் ஜூவலர்ஸ் பிரபுவும், அமிர்தா காலேஜ் ராதிகாவும் வந்துவிட்டு போகிறார்கள். டிவி பக்கம் போகவே பயமாயிருக்கு!

 -o0o-

இன்று எகிப்து நாட்டின் முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனையென தீர்ப்பு. இங்கே மாநில முதல்வருக்கு கூட நேர்மையான தீர்ப்பை வழங்க முடியல.

 -o0o-

உன் துக்கத்தை இன்னொருவராலும் உணர முடியுமானால் அதுதான் நிகரற்ற அன்பு! இது காதல் - நட்பு - உறவு என அனைத்துக்கும் பொருந்தும்.

 -o0o-

இறைவனின் திருப்பெயரால் தமிழ்தேசியம் பேசும் போராளி இயக்கங்களை ஆதரிக்கின்ற அனைத்து தோழர்களுக்கும், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை பிடிக்கும்.

  -o0o-

எல்லாம் தெரிஞ்சி வச்சுக்கணும். ஆனால், எதுவுமே தெரியாத மாதிரி கேட்டுக்கணும். அப்போதான் லவ்வும் / லைஃப்பும் நல்லாருக்கும்!

  -o0o-

இனப்படுகொலை மே 18 மட்டுமல்ல. அது காலங்காலமாய் திட்டமிட்டே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் தன் சுயத்தை இழக்கவில்லை எம் தமிழினம்!

  -o0o-

அழகாய் உள்ள பெண்களை விட, நொடிப்பொழுதில் அழத்தெரிந்த பெண்களே அதிர்ஷ்டசாலிகள்! பாவப்பட்ட ஜென்மங்களான சக ஆண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  -o0o-

ஓர் உயரிய நோக்கோடு முத்துகுமரனும், செங்கொடியும் உயிர்தியாகம் செய்ய கையாண்ட தீக்குளிப்பை கூட ரத்தத்தின் ரத்தங்கள் களங்கப்படுத்தி விட்டனர்.

  -o0o-

'என்ன பண்ற'ங்கிற வார்த்தை மட்டும் தெரியலைன்னா, சாட்ல எப்படி ஆரம்பிக்கிறதுன்னே தெரியாம முழிக்க வேண்டியது தான்!

  -o0o-

சாயுங்காலமானால் கையெல்லாம் நடுங்கும் குடிகாரன் போல எனக்கும் ஆகிவிடுகிறது, ஆன்லைனில் நீயில்லையென்றால்!
காலம்போன கடைசில கன்றாவியான ஃபீலிங்?!

 -o0o-

Money is Always Ultimate தான். ஆனால் அது நிலையான நிம்மதியையோ, உண்மையான அன்பையோ, எதிர்பார்ப்பில்லா உறவையோ தருவதில்லை. பயத்தை தான் கொடுக்கிறது

  -o0o-

”காசு அதிகமா கொடுத்து வாங்குற போன்ல, பட்டன் கூட வைக்க மாட்டாறாய்ங்களே தம்பி!”ன்னு தெரிஞ்ச ஒருத்தரு ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டுட்டு போறாரு.
 
 -o0o-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக