தமிழகத்தையே பல வாரங்களாக உலுக்கி கொண்டிருந்த காரைக்கால் காதல் சம்பவம் முடிவுக்கே வந்துவிட்டது. பிப்ரவரி 13 அன்று மாலை 5 மணி அளவில் காரைக்காலில் உடல் அடக்கமும் இறுதி சடங்குகளும் நடைப்பெற்றது.
பிப்ரவரி 13 அன்று 5 மணிக்கு நானும் காரைக்காலில் தான் இருந்தேன். அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் தகவல்களை சேகரித்தேன். வினோதினியின் வீடருகே வசித்திருந்த சர்பத் உரிமையாளரிடம் வினோதினி பற்றி விவாதிக்க ஆரம்பித்த பிறகு பல தகவல்கள் முற்றிலுமாக வேறொரு கோணத்தில் இருந்தது.
வினோதினியின் குடும்பம் ஏழ்மையான எளிய குடும்பமே. அமிலம் வீசிய சுரேஷின் குடும்பம் நடுத்தர குடும்பம். இருவரும் வன்னியர் இனத்தையே சார்ந்தவர்கள் என்பதால் ஏறக்குறைய வினோதினியின் பள்ளி பருவம் தொட்டே சுரேஷ் அறிமுகமான நபரே. அப்போதிலிருந்தே வினோதினியின் மேல் சுரேஷுக்கு காதல் மலர்ந்தது.
பனிரெண்டாம் வகுப்பை முடித்தும், நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றும் வினோதினியின் மேல்நிலை படிப்புக்கு பொருளாதார வசதி இல்லாததால் வினோதினியின் குடும்பம் தடுமாறிகொண்டிருந்தது.
தான் படிக்கவில்லை
வினோதினி நன்றாக படிக்கவேண்டும் என்று கம்பி பிட்டர் வேலைக்கு சென்று கிடைத்த
வருமானத்தை வைத்து விநோதினியை படிக்க வைத்திருக்கிறார் சுரேஷ். பொறியியல் படிப்புக்கு செலவான தொகையில் பெரும்பாலான வீதத்தை சுரேஷ் தான் செலவழித்திருக்கிறார். சுமார் 5 லட்சம் வரை செலவு செய்து உள்ளதாக தெரிய வருகிறது. தன் குடும்பத்திற்கு கூட தனது சம்பாத்தியத்தை தராமல் தான் காதலிக்கும் வினோதினிக்காக செலவு செய்த்துள்ளார் சுரேஷ்.
வினோதினியின் வீட்டிற்கு குடும்ப உறுப்பினர் போலவே காலப்போக்கில் சுரேஷ் மாறியிருந்தார். வினோதினியின் பெற்றோர்களும் எந்தவித எதிர்ப்புமின்றி இருவரது நட்பை தாண்டிய பழக்கவழக்கத்தை தடை செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்க ஒன்று. வினோதினியும் சுரேஷோடு நல்ல விதமாகவே பழகி வந்திருக்கிறார். கல்லூரி காலமும் முடிவுற்று வினோதினி படித்து மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றுக்கு வேலைக்கு சேர்ந்த பிறகே ஒரு மாறுதல் ஏற்படுகிறது. இத்தனை வருடகாலங்கள் தனக்காக செலவழித்த சுரேஷை மாதம் 17,000 /- சம்பளம் வாங்க துவங்கியவுடன் புறக்கணிக்க தொடங்கி இருக்கிறார் வினோதினி. வருங்கால மனைவி என்று யாரை சுரேஷ் நினைத்து இத்தனை வருடங்களாக வினோதினியிடம் பழகி வந்த்தாரோ அவரே, தன்னை வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான வழிகாட்டுதலால் அமிலம் வீசுவதெனெ முடிவெடுத்துள்ளார்.
வினோதினி எனக்கு இல்லையென்றால் நானும் இங்கே உயிரோடு இருக்க மாட்டேன் என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்ட சுரேஷின் உடல் மட்டுமே உயிரோடு இருந்திருக்கிறது. புறக்கணிப்பில் தினம்தினம் சாவதை தடுக்க தானும், வினோதினியும் இறந்தேவிடலாமென்று முடிவெடுத்த பின்புதான் இந்த விபரீதம் நடந்தேறிருக்கிறது. வினோதினி மீதான அந்த அமிலவீச்சின் போது தனது முகம் உள்பட உடலின் பல பாகங்களிலும் தெளித்து அதே ரணவலியை சுரேசும் அனுபவித்துள்ளார்.
இவையெல்லாம் காரைக்காலில் உள்ள பலரிடம் சேகரிக்கப்பட்ட செய்திகளே. பெரும்பாலானோர் தொலைக்காட்சி / இதழ்கள் உள்பட ஊடகங்களையே குறை கூறினர். ஒருபக்க சார்பாகவே ஊடகங்கள் ஒருவிசயத்தை அனுகுகிறார்கள் என்றும் குறை கூறினர். என்னையும் சிலர் "நீங்க ரிப்போர்ட்டரா?" எனவும் விசாரித்தனர். இல்லையென்று சொன்ன பிறகும் அவர்கள என்னை நம்பியதாக தெரியவில்லை.
அதிலும் குறிப்பாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சொன்னதுதான் எனக்கு இன்னமும் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. "நான் சுரேஷ் இடத்தில் இருந்திருந்தா, வேண்டாம்ன்னு சொல்லி ஏமாத்தின அன்னைக்கே கத்தியாலேயே குத்தி கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன்" ன்னு! பொதுவாகவே ஊடகங்கள் ஒரு விசயத்தை ரேட்டிங்க்காக பூதாகரமாக விளம்பரப்படுத்துவது சரியான வழிமுறையா என்பதை அவர்கள்தான் சுயபரிசோதனை செய்து தீர்மானிக்க வேண்டும். பெரும்பாலான உள்ளூர்வாசிகள், அமிலவீச்சினால் வினோதினியின் இறப்பை எதிர்க்கும் அதேவேளையில் சுரேஷ் பக்கமிருக்கும் நியாயத்தையும் விளக்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இணையத்தில் சிலர் வாதத்திற்காக, "ஒரு பெண்ணுக்கு ஒருவன் செலவு செய்தால் அவனையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயமில்லையே?" என்று கேட்கிறார்கள்.
எவனோ ஒருவன், தன் வீட்டுக்குள் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று வந்து போய்கொண்டு, தன்னையும் படிக்க வைக்க செலவு செய்து, வீட்டுக்கும் செலவு செய்ய அவன் யார்? அவனை அப்போதே அவ்வீட்டினரும், அந்த பெண்ணும் விலக்கி இருக்கலாமே. "தன்னை அவள் காதலிக்கிறாள்; நாளை அவள்தான் என் மனைவியாக வரப்போகிறாள்" என்ற எண்ணத்தை அன்றே உடைத்தெறிந்திருக்கலாமே. தன் சுயதேவைக்காக ஏணியாக ஒருவன் தேவையென்று பயன்படுத்திவிட்டு, ஏறியபின் எட்டி உதைப்பது போன்ற செயல்கள் மீண்டுமொரு காரைக்கால் சம்பவத்தையே நினைவுபடுத்தும் என்பது மட்டும் திண்ணம். ஒரு தூண்டில் முள்ளில் மண்புழுவை வைத்தாலும் ஒரு மீனைத்தானே குறிவைக்கிறது தூண்டில். அதைப்போன்றதொரு காலக்கட்டத்தில் ஆரம்பத்திலேயே புறக்கணித்திருந்தால் இழப்புகள் ஏதும் இருந்திருக்காது.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிறாகவது, காதல் என்ற பெயரில் துரோகமும் வேண்டாம். இழப்பும் வேண்டாமே. திருமணத்திற்கு பிறகு உருவாகும் மனைவி / கணவன் என்ற உறவுகளுக்குள் வைத்து கொள்ளலாமே இந்த தெய்வீக காதலை!
18 பிப்ரவரி 2013
11 பிப்ரவரி 2013
விஸ்வரூபம்
பல பிரளயங்களை தாண்டி ஒருவழியாக விஸ்வரூபம் திரையரங்குகளுக்கு வந்துவிட்டது. அனைத்து திரையரங்கங்களுமே பெரும்பாலும் அரங்குநிறைந்த காட்சிகளாகவே திரையிடப்பட்டு கொண்டிருந்தது. திரையரங்கினுள் இசுலாமியர்களும் அதிகமாகவே கண்களில் தென்பட்டபோது சந்தோசமாக இருந்தது.
படம் ஆரம்பிக்கிறப்பவே, இந்த படம் முழுவதும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு இரண்டுவிதமான முன் அறிவிப்பு கார்டு போட்டுறாங்க.விஸ்வநாதனாக வரும் கமல் ஒரு டான்ஸ் டீச்சர். என்னவொரு நலினம். ஓப்பனிங்க்ல இண்ட்ரோ சாங் தான் வைப்பாங்க. ஆனால், கமல் கிளாசிக்கல் டச்ல கலக்கினாரு.
பெண்களுக்கே உண்டான நலினத்தோடு கமல் செய்யும் ஒவ்வொரு அசைவுகளுமே அவ்ளோ அழகு. தொலைபேசி அழைப்பு வரும்போது, இடது கையை மேல்நோக்கி பக்கவாட்டில் தூக்கிக்கொண்டு கமல் ஓடிவரும்போது உடலியல் மொழிகள் பலகதைகளை பேசுகின்றன. கமல் உள்பட கதாநாயகி கேரக்டரில் உள்ள இருவருமே பார்பன பாஷையே பேசுறாளே. ஏன்? ஆம்படையாள் - ஆம்படையான்ன்னு வசனம் வரும்போதெல்லாம் அகமுடையான்னே காதுல விழுந்துச்சி ;)
தான்பணிபுரியும் கம்பெனி ஓனர் மீது ஏற்ப்பட்ட ஈர்ப்பாலும், பெண்ணிய உடல்மொழி கொண்ட கணவன் கமலிடமிருந்து பிரிய வேண்டும் என்பதாலும், அவரது மனைவியான பூஜாகுமார், ஒரு டிடெக்டீவ் ஏஜென்சியை நாடுகிறார். அப்போதுதான் கமல் முஸ்லீம் என தெரிய வருகிறது. அப்போது அந்த டிடெக்டீவ் ஏஜென்சியின் ஆள் சுட்டுக்கொல்லப்படுவதால், கதையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. கமல் - பூஜாகுமார் இருவரையும் கைகளை கட்டி இன்னொரு கும்பல் கடத்தி வந்து அடைத்து வைக்கின்றனர். கமலை கொன்றுவிடலாம் என்று நினைக்கும்போது, நான் முஸ்லீம் என்பதை சொல்கிறார். ப்ரே பண்ணிக்கிறேன்ன்னு சொன்னவுடனே, கட்டிவச்ச கையை அவிழ்த்துவிடுவாய்ங்க; அப்போது கண்ணிமைக்கிற நேரத்துல கமல் போடுற சண்டைக்கே அசந்துட்டேன். தியேட்டரில் எல்லோரும் கை தட்டினாங்க. நான் மறந்துட்டேன். ஃபைட் சீக்குவன்ஸ் எல்லாமே ரியால்டியா இருக்கு.
விஸ்வரூபம் படத்துல ஆன்ட்ரியாவை, "என்ன ஊரு?" ன்னு அமெரிக்க எஃப்.பி.ஐ. காரங்க விசாரிக்கும்போது, 'மாயவரம்' ன்னு சொல்ற அந்த ஒத்தவார்த்தைக்கு ஒட்டுமொத்த தியேட்டரே கைத்தட்டி விசிலடிச்சிச்சு. நாங்களும் நாகப்பட்டினம் காரய்ங்கதான் ;)
தாலிபான்களை காட்டுற போதும், ஆப்கானிஸ்தான் மலைகளையும், பாலைவன பகுதிகளையும் பார்க்கும்போது அங்கேயே இருப்பதாக ஒரு ஃபீல். எடிட்டிங் - கேமரா - ஆர்ட் என எல்லா அம்சங்களும் விஸ்வரூபத்துல ஆச்சரியமூட்டின. அமெரிக்க எஃப் பி ஐ காரங்ககிட்ட மன்மோகன்சிங் போன்ல பேசுறது ஆச்சரியமா இருந்துச்சு. மன்மோகன் நிறையா / நல்லாத்தான் பேசுவாரு போல. ஒருசீன்ல எனக்கு பிடிச்ச ஒசாமா பின்லேடன் கூட வராரு ஏழடி உயரத்துல.
படம் செம கிளாஸ். விஸ்வரூபம் II வை சீக்கிரமா எடுங்க கமல்.
படம் ஆரம்பிக்கிறப்பவே, இந்த படம் முழுவதும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு இரண்டுவிதமான முன் அறிவிப்பு கார்டு போட்டுறாங்க.விஸ்வநாதனாக வரும் கமல் ஒரு டான்ஸ் டீச்சர். என்னவொரு நலினம். ஓப்பனிங்க்ல இண்ட்ரோ சாங் தான் வைப்பாங்க. ஆனால், கமல் கிளாசிக்கல் டச்ல கலக்கினாரு.
பெண்களுக்கே உண்டான நலினத்தோடு கமல் செய்யும் ஒவ்வொரு அசைவுகளுமே அவ்ளோ அழகு. தொலைபேசி அழைப்பு வரும்போது, இடது கையை மேல்நோக்கி பக்கவாட்டில் தூக்கிக்கொண்டு கமல் ஓடிவரும்போது உடலியல் மொழிகள் பலகதைகளை பேசுகின்றன. கமல் உள்பட கதாநாயகி கேரக்டரில் உள்ள இருவருமே பார்பன பாஷையே பேசுறாளே. ஏன்? ஆம்படையாள் - ஆம்படையான்ன்னு வசனம் வரும்போதெல்லாம் அகமுடையான்னே காதுல விழுந்துச்சி ;)
தான்பணிபுரியும் கம்பெனி ஓனர் மீது ஏற்ப்பட்ட ஈர்ப்பாலும், பெண்ணிய உடல்மொழி கொண்ட கணவன் கமலிடமிருந்து பிரிய வேண்டும் என்பதாலும், அவரது மனைவியான பூஜாகுமார், ஒரு டிடெக்டீவ் ஏஜென்சியை நாடுகிறார். அப்போதுதான் கமல் முஸ்லீம் என தெரிய வருகிறது. அப்போது அந்த டிடெக்டீவ் ஏஜென்சியின் ஆள் சுட்டுக்கொல்லப்படுவதால், கதையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. கமல் - பூஜாகுமார் இருவரையும் கைகளை கட்டி இன்னொரு கும்பல் கடத்தி வந்து அடைத்து வைக்கின்றனர். கமலை கொன்றுவிடலாம் என்று நினைக்கும்போது, நான் முஸ்லீம் என்பதை சொல்கிறார். ப்ரே பண்ணிக்கிறேன்ன்னு சொன்னவுடனே, கட்டிவச்ச கையை அவிழ்த்துவிடுவாய்ங்க; அப்போது கண்ணிமைக்கிற நேரத்துல கமல் போடுற சண்டைக்கே அசந்துட்டேன். தியேட்டரில் எல்லோரும் கை தட்டினாங்க. நான் மறந்துட்டேன். ஃபைட் சீக்குவன்ஸ் எல்லாமே ரியால்டியா இருக்கு.
விஸ்வரூபம் படத்துல ஆன்ட்ரியாவை, "என்ன ஊரு?" ன்னு அமெரிக்க எஃப்.பி.ஐ. காரங்க விசாரிக்கும்போது, 'மாயவரம்' ன்னு சொல்ற அந்த ஒத்தவார்த்தைக்கு ஒட்டுமொத்த தியேட்டரே கைத்தட்டி விசிலடிச்சிச்சு. நாங்களும் நாகப்பட்டினம் காரய்ங்கதான் ;)
தாலிபான்களை காட்டுற போதும், ஆப்கானிஸ்தான் மலைகளையும், பாலைவன பகுதிகளையும் பார்க்கும்போது அங்கேயே இருப்பதாக ஒரு ஃபீல். எடிட்டிங் - கேமரா - ஆர்ட் என எல்லா அம்சங்களும் விஸ்வரூபத்துல ஆச்சரியமூட்டின. அமெரிக்க எஃப் பி ஐ காரங்ககிட்ட மன்மோகன்சிங் போன்ல பேசுறது ஆச்சரியமா இருந்துச்சு. மன்மோகன் நிறையா / நல்லாத்தான் பேசுவாரு போல. ஒருசீன்ல எனக்கு பிடிச்ச ஒசாமா பின்லேடன் கூட வராரு ஏழடி உயரத்துல.
படம் செம கிளாஸ். விஸ்வரூபம் II வை சீக்கிரமா எடுங்க கமல்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)