18 பிப்ரவரி 2013

வினோதினி - அமிலவீச்சு - காதல்

தமிழகத்தையே பல வாரங்களாக உலுக்கி கொண்டிருந்த காரைக்கால் காதல் சம்பவம் முடிவுக்கே வந்துவிட்டது. பிப்ரவரி 13 அன்று மாலை 5 மணி அளவில் காரைக்காலில் உடல் அடக்கமும் இறுதி சடங்குகளும் நடைப்பெற்றது.

பிப்ரவரி 13 அன்று 5 மணிக்கு நானும் காரைக்காலில் தான் இருந்தேன். அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் தகவல்களை சேகரித்தேன். வினோதினியின் வீடருகே வசித்திருந்த சர்பத் உரிமையாளரிடம் வினோதினி பற்றி விவாதிக்க ஆரம்பித்த பிறகு பல தகவல்கள் முற்றிலுமாக வேறொரு கோணத்தில் இருந்தது.

வினோதினியின் குடும்பம் ஏழ்மையான எளிய குடும்பமே. அமிலம் வீசிய சுரேஷின் குடும்பம்  நடுத்தர குடும்பம். இருவரும் வன்னியர் இனத்தையே சார்ந்தவர்கள் என்பதால் ஏறக்குறைய வினோதினியின் பள்ளி பருவம் தொட்டே சுரேஷ் அறிமுகமான நபரே. அப்போதிலிருந்தே வினோதினியின் மேல் சுரேஷுக்கு காதல் மலர்ந்தது.


பனிரெண்டாம் வகுப்பை முடித்தும், நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றும் வினோதினியின் மேல்நிலை படிப்புக்கு பொருளாதார வசதி இல்லாததால் வினோதினியின் குடும்பம் தடுமாறிகொண்டிருந்தது. தான் படிக்கவில்லை வினோதினி நன்றாக படிக்கவேண்டும் என்று கம்பி பிட்டர் வேலைக்கு சென்று கிடைத்த வருமானத்தை வைத்து விநோதினியை படிக்க வைத்திருக்கிறார் சுரேஷ். பொறியியல் படிப்புக்கு செலவான தொகையில் பெரும்பாலான வீதத்தை சுரேஷ் தான் செலவழித்திருக்கிறார். சுமார் 5 லட்சம் வரை செலவு செய்து உள்ளதாக தெரிய வருகிறது. தன் குடும்பத்திற்கு கூட தனது சம்பாத்தியத்தை தராமல் தான் காதலிக்கும் வினோதினிக்காக செலவு செய்த்துள்ளார் சுரேஷ்.

வினோதினியின் வீட்டிற்கு குடும்ப உறுப்பினர் போலவே காலப்போக்கில் சுரேஷ் மாறியிருந்தார். வினோதினியின் பெற்றோர்களும் எந்தவித எதிர்ப்புமின்றி இருவரது நட்பை தாண்டிய பழக்கவழக்கத்தை தடை செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்க ஒன்று. வினோதினியும் சுரேஷோடு நல்ல விதமாகவே பழகி வந்திருக்கிறார். கல்லூரி காலமும் முடிவுற்று வினோதினி படித்து மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றுக்கு வேலைக்கு சேர்ந்த பிறகே ஒரு மாறுதல் ஏற்படுகிறது. இத்தனை வருடகாலங்கள் தனக்காக செலவழித்த சுரேஷை மாதம் 17,000 /- சம்பளம் வாங்க துவங்கியவுடன் புறக்கணிக்க தொடங்கி இருக்கிறார் வினோதினி. வருங்கால மனைவி என்று யாரை சுரேஷ் நினைத்து இத்தனை வருடங்களாக வினோதினியிடம் பழகி வந்த்தாரோ அவரே, தன்னை வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான வழிகாட்டுதலால் அமிலம் வீசுவதெனெ முடிவெடுத்துள்ளார்.

வினோதினி எனக்கு இல்லையென்றால் நானும் இங்கே உயிரோடு இருக்க மாட்டேன் என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்ட சுரேஷின் உடல் மட்டுமே உயிரோடு இருந்திருக்கிறது. புறக்கணிப்பில் தினம்தினம் சாவதை தடுக்க தானும், வினோதினியும் இறந்தேவிடலாமென்று முடிவெடுத்த பின்புதான் இந்த விபரீதம் நடந்தேறிருக்கிறது. வினோதினி மீதான அந்த அமிலவீச்சின் போது தனது முகம் உள்பட உடலின் பல பாகங்களிலும் தெளித்து அதே ரணவலியை சுரேசும் அனுபவித்துள்ளார்.

இவையெல்லாம் காரைக்காலில் உள்ள பலரிடம் சேகரிக்கப்பட்ட செய்திகளே. பெரும்பாலானோர் தொலைக்காட்சி / இதழ்கள் உள்பட ஊடகங்களையே குறை கூறினர். ஒருபக்க சார்பாகவே ஊடகங்கள் ஒருவிசயத்தை அனுகுகிறார்கள் என்றும் குறை கூறினர். என்னையும் சிலர் "நீங்க ரிப்போர்ட்டரா?" எனவும் விசாரித்தனர். இல்லையென்று சொன்ன பிறகும் அவர்கள என்னை நம்பியதாக தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சொன்னதுதான் எனக்கு இன்னமும் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. "நான் சுரேஷ் இடத்தில் இருந்திருந்தா, வேண்டாம்ன்னு சொல்லி ஏமாத்தின அன்னைக்கே கத்தியாலேயே குத்தி கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன்" ன்னு! பொதுவாகவே ஊடகங்கள் ஒரு விசயத்தை ரேட்டிங்க்காக பூதாகரமாக விளம்பரப்படுத்துவது சரியான வழிமுறையா என்பதை அவர்கள்தான் சுயபரிசோதனை செய்து தீர்மானிக்க வேண்டும்.ெரும்பான உள்ளூர்விகள், அமிலீச்சிால் ினினியின் இறப்பை எிர்க்கம் அேவேளையில் சுரஷ் பக்கிருக்கும் நியாயத்ையும் விளக்கினார்கள் என்பு கிப்பிடக்கு.

இணையத்ில் சிலர் வாதத்திற்காக, "ஒரு பெண்ணுக்கு ஒருவன் செலவு செய்தால் அவையகல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றட்டாயில்லைய?" என்று கேட்கிறார்கள்.

எவனோ ஒருவன், தன் வீட்டுக்குள் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று வந்து போய்கொண்டு, தன்னையும் படிக்க வைக்க செலவு செய்து, வீட்டுக்கும் செலவு செய்ய அவன் யார்? அவனை அப்போதே அவ்வீட்டினரும், அந்த பெண்ணும் விலக்கி இருக்கலாமே. "ன்னை அவள் கிக்கிறாள்; நாளை அவள்ான் என் மைவியாகப்போகிள்" என்ற எண்த்அன்றே உடத்ிந்திருக்காமே. ன் சுயேவைக்காக ஏணியாக ஒருவன் ேவையென்றன்பத்ிவிட்ட, ஏறியின் எட்டி ைப்பு போன்ற ெயல்கள் மீண்டுமொராரைக்கால் சம்பத்ையே நினைவுபத்ும் என்பு மட்டும் ிண்ணம். ஒரு தூண்டில் முள்ளில் மண்புழுவை வைத்தாலும் ஒரு மீனைத்தானே குறிவைக்கிறது தூண்டில். அதைப்போன்றதொரு காலக்கட்டத்தில் ஆரம்பத்திலேயே புறக்கணித்திருந்தால் இழப்புகள் ும் இரந்திருக்கு.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிறாகவது, காதல் என்ற பெயரில் துரோகமும் வேண்டாம். இழப்பும் வேண்டாமே. திருமணத்திற்கு பிறகு உராகும்  ைவி / கன் என்ுகுக்குள் த்ு கொள்ளாமே இந்த ெய்வீக காதை!

3 கருத்துகள்:

  1. Correct pangali..! i got the same infromation from the various sources..!! But, Irantha oruvarai vimarsikka vendamenu vittuten..!!!

    பதிலளிநீக்கு
  2. இது மாதிரி உண்மையை எழுதுரதுகேல்லாம் ஒரு தனி துணிவு இருக்கணும் பத்திரிக்கை மீடியாக்கள் சொல்வது பொய்மை என்று தெரிந்து விட்டது மக்களுக்கு ..... வெகு தூரம் இல்லை மக்கள் இவர்களை தூக்கி எரிய உங்களையும் சேத்துதான் எரியும் கவனமா இருங்க ...

    பதிலளிநீக்கு
  3. 4 வருஷம் உதவி செய்த காதலனை ஏமாற்றியது விநோதினி செய்த தவறு. பொத்தி பொத்தி பார்த்த பெத்தவங்கள விட்டுட்டு ஏதோ ஒரு பொண்ணுக்கு காசு செலவு செய்த சுரேஷ் செய்தது மிகப் பெரும் தவறு.
    இருவரும் தங்கள் பாவத்திற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டனர்.

    பதிலளிநீக்கு