மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 டிசம்பர் 2017

மதமென்பது...

ஆதித்தமிழனுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை. ஆதிசங்கரர் தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கினார். சக்தி வழிபாட்டை சாக்தம் என்றும், முருக வழிபாட்டை கெளமாரம் என்றும், கணபதி வழிபாட்டை கணபத்யம் என்றும், சூரிய வழிபாட்டை செளரம் என்றும், பெருமாள் வழிபாட்டை வைஷ்ணம் என்றும், சிவ வழிபாட்டை சைவம் என்றும் ஆறு வழிபாட்டு குழுக்களை ஒரே வட்டத்திற்குள் அடைத்தார். அதற்கு முன் வரை எல்லாம் வேறு வேறு தான். ஐவகை நில தெய்வங்களான குறிஞ்சி -
(சேயோன்) முருகன் , முல்லை - (மாயோன்) திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை வழிபாட்டை தான், சமகிருதத்திற்கு முன்னோடியான தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
ஆதித்தமிழனுக்கு இயற்கை வழிபாடு தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு நெருப்பு, பிறகு ஐம்பெரும்பூத வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு என்ற நாட்டார் வழிபாடு தான் இருந்தது; இருக்கிறது. இதில் எங்கேயும் ஹிந்து மதம் வராது. பிற்காலங்களில் சமண-பெளத்த ஆதிக்கத்திலிருந்து, காரைக்கால் அம்மையார் மற்றும் சைவ குரவர்கள் நால்வராலும், நாயன்மார்களாலும் தான், இன்றைய சைவ வழிபாடு கூட மீளெடுக்கப்பட்டது. ஆழ்வார்களால் வைணவம் என்ற மாயோன் வழிபாடு கூட மீட்கப்பட்டது. சுடலை மாடன் என்ற நீத்தார் வழிபாடும், கருப்பசாமி என்ற திருமால் வழிபாடும், முனீஸ்வரன் என்ற சிவ வழிபாடும் தான் தமிழர்களுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சிவன் என்பதே ஒரு மன்னன் தான். தென் பாண்டியநாட்டை ஆண்டவன். அதனால் தான் தென்னாடுடைய சிவனானான் அவன். மற்றபடி ஹிந்து என்பது பல மொழி பேசிய, பல இனங்களை கொண்ட பல நூறு சிற்றரசு நாடுகளை ஒன்றிணைத்து ஹிந்தியா என்ற ஒற்றை நாடாக்கிய வல்லபாய் படேலின் யுக்திகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே இது.

29 நவம்பர் 2017

இமலாதித்தவியல்: மதம்!

ஒரு மதத்தை ஏற்பதும், துறப்பதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. மதம் மாறினால் தான் தன்னுடைய காதலையோ - அன்பையோ நிரூபணம் செய்ய முடியுமென்றால், அப்படியொரு மானங்கெட்ட தனத்தை, எந்தவொரு அயோக்கியத்தனமான கடவுள் சொல்லிருந்தாலும் அந்த கடவுளை செருப்பாலேயே அடிக்கலாம். நிச்சயமாக கடவுள் அப்படி சொல்லிருக்க முடியாது; ஏனெனில் கடவுளின் தூதுவனாக காட்டிக்கொண்டவனும், நானே கடவுளென்று சொல்லிக்கொண்டவனும் செய்த திருட்டுத்தனம் தான் இது. மற்றபடி பிறப்பிலேயே அறியப்படும் மதத்திலேயே இருப்பதா? அந்த மதத்தை விட்டு வெளியேறி வேறொரு மதத்தில் இணைவதா? மதமே எனக்கு தேவையில்லையென முற்றிலும் மதமற்றவராக வாழ்வதா? என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது தனிப்பட்ட நபர் தானே ஒழிய, எந்தவொரு மத அமைப்புகளும் இதை கட்டுப்படுத்த கூடாது; கட்டுப்படுத்தவும் முடியாது.

27 மே 2017

சைவம்? அசைவம்!


எந்த கடவுளும் நேரடியாக வந்து, இதை சாப்பிடு; அதை சாப்பிடாதே என யாரிடமும் சொல்லவில்லை. தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தெந்த பகுதிகளுக்கேற்ப கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட்டு பரிணாம வளர்ச்சியடைந்தவன் மனிதன் தான். அதன் பிறகு பகுத்தறிந்து இதை சாப்பிடலாம்; அதை சாப்பிட வேண்டமென்று பட்டியலிட்டதும் இந்த மனிதன் தான்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார்.

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என சொன்ன இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கீரையை கூட சாப்பிடுவதில்லை; காரணம் கீரையை வேர் வரை பிடிங்கி ஓர் உயிரை சாகடித்து உண்பதால் அம்மார்க்கத்தினர் அதை உணவில் சேர்ப்பதில்லை. மாடு மட்டுமல்ல; மாடு சாப்பிடும் புல் கூட ஓர் உயிர் தான். அந்த மாட்டின் ரத்தத்தின் ஒருபகுதியான பால் கூட அசைவம் தான்.

எனவே கடவுளின் பெயரைச்சொல்லியோ, மதவாதிகளின் ஆதரவிற்காகவோ, எதையும் அதிரடியாக தடை செய்வதில் உடன்பாடில்லை. இவ்வுலகில் 'உணவுச் சங்கிலி' என்பது சரியான விகிதத்திலேயே தான் இயற்கையால் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றின் தேவை அதிகமானால், அந்த தேவைக்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, அந்த தேவையையே முடக்க கூடாது. உலகளாவிய அளவில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஹிந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதை கவனித்தாலே, தடை செய்ய வேண்டியது எதுவென புரியும். வணிக சூழ்ச்சிகளால் சூழப்பட்ட உலகமயமாக்கலில் இனப்பெருக்கம் என்பதை கூட மேற்கத்திய நாட்டவன் கொடுக்கும் ஊசியை நம்பி வாழ பழகி விட்டோம். எனவே, நாம் இப்படித்தான் கருத்தடை, பலித்தடையென தடை போட்டு நம் வீரியத்தை தொலைத்து, கண்டவனிடமும் ஜெர்சி மாடுகளை போல இனி வருங்கால சந்ததி உள்பட எல்லாவற்றையும் யாசகம் தான் பெறுவோம்.

மாட்டின் கொம்புகளுக்கு கூட வண்ணம் தீட்ட கூடாதென்று தடை போடும் காரணத்தை கூட ஏனென யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஒருவேளை கொம்புகளுக்கு வண்ணம் பூசினால் மாடு இறந்துவிடுமா? ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொம்புக்கு வண்ணமடித்தால் தானே தனி மிடுக்கே வரும்? இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இன்னைக்கு மாட்டுக்கு தடை போட்டதும் மனமகிழ்கிறோம். ஒருவேளை ஜெயலலிதாவின் அறிவிப்பு போல, நாளை நம் குலசாமி கோவில்களில் பலியிடும் ஆட்டையும், சேவலையும் தடை போடும் சூழல் வரும் போது தான், அதன் தேவை புரியும். மாட்டுக்கறிக்காக எதையும் இங்கு சொல்லவில்லை; மாட்டுக்கறியெல்லாம் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

25 மார்ச் 2015

உலகில் மதம் எனும் அரக்கன்!

கொள்ளையடிப்பதற்காக நாடு கடந்து போர் புரியும் இடத்தில், தங்களது மார்க்கத்தை ஏற்காதவர்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து தன் கருவை வளர செய்தது ஒரு கூட்டம். ஒருபடி மேலாக, இன்னொரு மதவெறி கூட்டம், நாடு விட்டு நாடு வந்து வியாபாரம் செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அங்குள்ள மக்களிடம் தன் மதத்தையும், மொழியையும் அன்பெனும் ஆயுதம் கொண்டு நாகரீகம் என்ற பெயரில் திணித்தது. அந்த மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், அறிவையும் கண்டஞ்சி பூர்வகுடிகளின் வம்சாவழிகளையே கொத்து கொத்தாக நயவஞ்சகத்துடன் இனவழிப்பு செய்தது. இன்றைக்கு உலகளாவிய பிரச்சனைக்கு இந்த இரண்டு மதங்களும் காரணமாக இருந்த போதும், இரண்டாவதாக சொல்லப்பட்ட மதமே எல்லாவற்றுக்கும் ஊன்றுகோலாக இருந்து உலகையே ஆட்டிவிக்கிறது. இந்த மாதிரி அடிக்கிற ஆடி காத்தில், சாதியற்ற ஆதிகுடியான அனைத்து தமிழனும் பாவம் தான்.

14 ஜூன் 2014

சாதி மதம் நான்!

போலியா வாழ்றதை விட உண்மையா வாழ்றதுதான் அழகுன்னு நினைக்கிறேன். அது சாதியோ, மதமோ எதுவா இருந்தாலும், வெளிப்படையா இருந்தால் நல்லாருக்கும். சிலபேரு மனசுக்குள்ள ஒன்னு, வெளியில ஒன்னுன்னு நடிக்கிறாங்க. ஆனால் எதார்த்தத்தில், சாதி இல்லாம எல்.கே.ஜி கூட சேரமுடியாது. அரசாங்க வேலையும் சரி, அரசு சம்பந்தமான எல்லாவித பயன்பாடுகளுக்கும் சரி, சாதியும், சாதி சான்றிதழும் கட்டாயம் தேவைப்படுகின்றது. மேலும் சாதீய இடஒதுக்கீடும் இன்றும் நடைமுறையில் தானே இருக்கு. சாதி ரீதியான ஒதுக்கீடுகள் போன்ற ஏற்ற தாழ்வுகள் களையப்படும் வரை சாதி, மதம் பற்றி பேசாமல் இருக்கவும் முடியாது. மேலும், சாதி என்பது ஒருவரின் பாரம்பரிய அடையாளம். அந்த சாதியையே வைத்து பிரிவினை பார்ப்பதுதான் தவறு.

சாதியோ - மதமோ இதுபோன்ற பலவித அடையாளங்களை இழந்து எதையுமே பெற போவதில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமே பாரம்பரியமும், கலாச்சாரமும் தான். இந்த மாதிரியான பழமை காக்க சாதியும் அவசியம். எதையுமே பேசி தெளிவடைதல் தான் நல்லது. பேசாமலே இருப்பதால் மட்டும் எல்லாம் சரியாகிவிட போவதில்லை. நான் எந்தவிதத்திலும் சாதியை வைத்து யாரையும் பிரிவினையாக பார்த்தது இல்லை. அதுக்காக எந்த இடத்திலும் என் சாதி, மத அடையாளத்தை மறைத்ததும் இல்லை. இதை சாதிவெறி - மதவெறி என்று சுருக்கிவிட முடியாது. இதுபோன்ற சாதி-மத கலாச்சார வேர்களை பலவீனப்படுத்தி விட்டு சமுதாய மரத்தை ஒருபோதும் பலப்படுத்தி விட முடியாது.

நமது தாத்தாக்களின் காலங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு பின்னாலும் சாதி இருந்தது. யாரிடமும் சாதிவெறி இருந்தது இல்லை. ஆனால் இன்று, பெயருக்கு பின்னால் சாதி இல்லை; அளவுக்கு அதிகமான சாதி அமைப்புகளும், சாதி சங்கங்களும், சாதி கட்சிக்களும் உருவாகி விட்டன. முன்பை விட இன்று சாதி ஒரு மாபெரும் நிர்ணயசக்தியாக உருவெடுத்துள்ளது. ஆன்மீக விழாவிற்கு சென்றாலே, சாதிவெறியின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியும், கற்களால் அடித்தும் அப்பாவிகளை கொலை செய்யும் காலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் எது/யார் காரணம்? சாதியை வைத்து பதவி சுகத்திற்காக மக்களை அந்நியப்படுத்திய திராவிட அரசியல்தானே. எனவே, முதலில் திராவிடம் ஒழிப்போம். பிறகு சாதீய ஏற்றதாழ்வுகளை ஒழிப்போம்!

- இரா.ச.இமலாதித்தன்

15 ஏப்ரல் 2014

மதவெறி தீவிரவாதம்!

இசுலாமியர்கள் பெரும்பான்மையாகை இருக்கும் ஊருக்குள் வாக்கு சேகரிக்க போனாலே தீவிரவாதிகள் போல கொலைவெறி தாக்குதல் நடத்தும் இசுலாமிய அமைப்புகள், மதவெறி பற்றி பேச அருகதையே இல்லாதவர்கள். நேற்று மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் திரு கருப்பு முருகானந்தம் அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்திய இசுலாமிய அமைப்புகள் மீது வழக்கு பதியவே தமிழ்நாடு காவல்துறை மறுக்கின்றது; நேற்று முன்தினம்தான் செல்வி ஜெயலலிதா பாஜகவை விமர்சித்து மேடையில் பேசினார். அதனை தொடர்ந்துதான் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது. அப்படியானால் இந்த தாக்குதலுக்கு ஆளுங்கட்சியின் தலையீடும் இருக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



ஏற்கனவே திரு கருணாநிதி தனது மேடை பேச்சுகளில் இசுலாமிய வாக்குகளை குறிவைத்தே பேசி வருகிறார் என்பது நாடறிந்த விசயம். இப்போது செல்வி ஜெயலலிதாவும் தமிழ்நாடு ஜவ்ஹீத் அமைப்பின் வெளியேற்றத்தால் பாஜகவை விமர்சிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றார். இதை தெளிவாக அறிந்துள்ள இசுலாமிய அமைப்புகள் திரு கருப்பு முருகானந்தம் மீது நடத்தப்பட்ட இம்மாதிரியான கொலைவெறி தாக்குதல்களை அச்சமின்றி தொடர்வாகளென தோன்றுகிறது. சிறுபான்மையினர் என்ற ஒற்றை சொல்லை வைத்தே கேவலமானதொரு அரசியலை நிகழ்த்திவரும் கேடுக்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கும் இதுபோன்ற சம்பவங்களால் வெளிப்படையாகவே தெரிகின்றது.

தேசிய கட்சியின் வேட்பாளரையே மதவெறியால் தீவிரவாத தாக்குதலை நடத்தும் இசுலாமிய அமைப்புகள் இன்றைக்கும் சிறுபான்மையினர் தான் என்பதனை மனதில் கொண்டால் நலம். இப்படிப்பட்ட தாக்குதலை சக குடிமகனாக வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒருவேளை இதே பாணியில் பெரும்பான்மை சமூகத்தினர் களமிறங்கினால், சொந்த நாட்டிற்குள்ளாகவே இசுலாமிய மத வெறியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என புறக்கணிக்கப்படுவார்கள் என்பதுதான் எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்.

12 ஏப்ரல் 2014

அரசியலில் மதம்!

நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

Photo: நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல....

- இரா.ச.இமலாதித்தன்

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல...

- இரா.ச.இமலாதித்தன்

10 பிப்ரவரி 2014

என் பார்வையில் ஹிந்து மதம்!




இளையராஜாவின் மகனே இசுலாமுக்கு மாறிவிட்டாரே! என்பது போன்ற பெருமைவாத பேச்சுகளிலோ, இளையராஜாவின் மகன் இசுலாமுக்கு மாறலாமா? என்பது போன்ற சிறுமைபடுத்தும் பேச்சுகளிலோ எனக்கு உடன்பாடில்லை. இளையராஜாவோ - யுவன்சங்கர் ராஜாவோ, எந்தவொரு தனிமனிதனை நம்பியும் எந்த மதமும் இல்லை. குறிப்பாக உலகிலேயே அதிகமான மதமாற்றங்கள் நடைப்பெற்று இருக்கும் ஒரே மதம், ஹிந்து மதமாகத்தான் இருக்கக்கூடும்.

மதம் எனது இறைவனை வழிபட வேண்டிய ஒரு வழிமுறை அல்லது மார்க்கம். எல்லா மதங்களிலும், சாமனியனுக்கும் இறைவனை அடையாளப்படுத்துவதே முதற் நோக்கமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட உயரிய நோக்கத்தை அடைய, ஆசை வார்த்தை காட்டியோ - பயத்தை ஏற்படுத்தியோ மதமாற்றத்தால் செய்ய வேண்டிய அவசியம் உண்மையான ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு தேவையில்லை. ஆனால், இங்கே பெரும்பாலான மதமாற்றங்கள், இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த யுக்திகளை கையாண்டே நடைப்பெற்று கொண்டிருக்கின்றன என்பது வேதனையான விசயம்.

இங்கே, நடைப்பெற்று கொண்டிருக்கும் அநேக மதமாற்றங்கள் ஹிந்து மதத்தை குறிவைத்தே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அறிவியலும் - கலச்சாரமும் - பழமைவாதமும் - விஞ்ஞானமும் - மெய்ஞானமும் ஒருசேர கலந்திருப்பது ஹிந்து மார்க்கத்தில் மட்டும் என்பதுதான் குறிப்பிடதக்க விசயமாகும். மேலும், ஹிந்து மார்க்கத்தை குறை சொல்லும் பலர் வைக்கும் குற்றச்சாட்டு உருவ வழிபாடு என்பதைத்தான்.


ஹிந்து மார்க்கத்தில், இயற்கையை கடவுளாக வணங்கிய பாமரனுக்கும் உணர்த்தும் வகையில் தான், உருவ வழிபாட்டு முறை கொண்டு வரப்பட்டது. இலக்கு என்பதை நிர்ணயிக்கும் போதுதான் அதை அடைய முடியும். அதுபோலவே, இறைவன் என்ற ஆன்ம இலக்கை அடைய சிலை வழிபாடும் தேவைப்பட்டது. உதாரணமாக கல்வியை எடுத்து கொண்டால், இங்கே யாரும் எடுத்த உடனேயே பி.ஹச்.டி என்ற முனைவர் பட்டம் வாங்கிவிடுவதில்லை. பால்ய கல்வியில் தொடங்கி பள்ளி/ கல்லூரிக்கல்வியென பலதரப்பட்ட நிலையை கடந்த பின்னால்தான் முனைவர் ஆக முடிகிறது. இந்த ஏட்டு கல்விக்கே இத்தனை படிநிலைகள் தேவைப்படும் போது, இறைநிலை என்ற மாபெரும் உச்சத்தை அடைய, அதன் அறிவை பெற இலகுவான படிநிலை யுக்திகளும் தேவைப்படுகின்றன. அதனால் தான் இந்த உருவ வழிபாடும் உருவானது.

சனி கிரகம் கருமை நிறமாக இருக்கும்; செவ்வாய் கிரகம் சிவந்த நிறத்தில் இருக்கும்; வெள்ளி கிரகம் வெண்மை நிறத்தில் இருக்கும் என்பதெல்லாம் இப்போதுள்ள விஞ்ஞானம் சமீப காலங்களில் கண்டறிந்திருக்கலாம். ஆனால், அன்றைக்கே ஹிந்து மார்க்கம், நவகிரக சிலைவழிபாட்டை ஒவ்வொரு கோவில்களிலும் உருவாக்கி, அங்கே ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நிறத்தையே அந்த சிலைகளின் உடையலங்காரமாக்கி, எளியவனுக்கும் புரியும் வண்ணம் பரம்பொருள் அறிவையும் - பிரபஞ்ச அறிவையும் உணர வைத்தது என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.


கோவில் கருவறையில் சிலையை வணங்கினாலும், சூடம் காண்பிக்கும் போதுதான் உச்சக்கட்ட வேண்டுதல் நடைபெறும். ஏனெனில், அப்போதுதான் மூலவர் சிலைக்கு தீபம் காண்பிக்கப்படும். அந்த சில நொடிகள் இருகரம் கூப்பி வணங்கும்போது, சிலை மட்டும் தெரிவதில்லை. அந்த சிலைக்கு முன்னால் காண்பிக்கப்படும் அந்த தீப ஒளியையும் சேர்த்துதான் வணங்குகிறோம். ந - ம - சி - வ - ய என்ற இந்த ஐந்தெழுத்து ரகசியத்தை, நிலம் - நீர் - நெருப்பு - காற்று - ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களையும், கண் - காது - மூக்கு - வாய் - மெய் என்ற ஐந்துறுப்புகளையும் ஒருசேர இணைத்து அறிய முற்படும் போதுதான், உண்மையான உச்சக்கட்ட இறைநிலையை உணரமுடியும். ஏனெனில் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் என்று அன்றைக்கே ஒரே வரியில் எளிய முறையில் ஹிந்துமதம் விளக்கம் சொல்லிவிட்டது.

சிதம்பர நடராசனின் நடன தத்துவம்தான், புரோட்டான் - நியூட்ரான் - எலக்ட்ரான் என்ற அணுக்களின் அசைவு என்பதை, போஸான் என்ற விஞ்ஞான தத்துவமே ஒத்து கொண்டு விட்டது. மேலும், கோவில்களில் நடைபெறும் அபிஷேகம் என்பதில் கூட பலதரபட்ட அறிவியல் இருக்கிறது. பால், தயிர், எலும்பிச்சையென எல்லா முறையிலான அபிஷேகத்தின் மூலமும், லாக்டிக் - சிட்ரிக் என்று ஒரு வேதியியல் மாற்றமும் நடைபெறுகிறது. திருநீரை நெற்றியில் வைப்பதின் உள்நோக்கமே, புருவமத்தியில் சக்தி இருப்பதையும், அழியக்கூடிய இந்த பூதஉடல்தான் 'நான்' என்று நம்பிக்கொண்டு போலியான மாயையில் வாழ்வதையும் தான், நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இந்த சீவன்தான் ஒருநாள் சிவனாகவும் மாறும் என்ற உயரிய தத்துவத்தை பலவித படிநிலைகளோடு எம் ஹிந்துமதம் சொல்லிக்கொண்டாலும், அதை புரியாத பலர் ஹிந்து என்பதை வெறும் மதமாக மட்டுமே பார்த்து கொண்டிருக்கின்றனர் வேதனையான ஒன்று. எனவே, இறைவனை உணர, ஹிந்துவாகவோ - இசுலாமாகவோ - கிருஸ்துவனாகவோ இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், கடவுள் - மதத்திலோ, வெளியிலோ இல்லை. இந்த பிரபஞ்ச வெளியில் ஒட்டுமொத்தமாகவும் கடவுள் கலந்திருக்கிறார். அதை உணர, முதலில் நீ உன்னுள் கடந்து வா, (கட+வுள் கடவுள் இருக்கிறார் என்பதை அறிவாய்! என்பதுதான் ஹிந்துமதத்தின் எளிய கோட்பாடு.


திலீப்குமார், ஏ.ஆர்.ரஹ்மான ஆனார்; பெரியார்தாசன், அப்துல்லா ஆனார்; யுவன்சங்கர்ராஜா என்னவாக போகிறார் என்பது, எம்பெருமான் முருகனுக்கே வெளிச்சம்!
- இரா.ச.இமலாதித்தன்

30 ஜனவரி 2013

மதம் என்ன ஊறுகாயா?



"நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சிகள் சில நினைப்பதில்லை. என் தந்தை, தேச விடுதலைக்காக பாடுபட்டவர். எனினும், என்னை இந்தியாவிலிருந்து விரட்டி, பாகிஸ்தானுக்கு அனுப்பி விட சிலர் துடிக்கின்றனர்'
-
ஷாருக் கான்


இப்படி அறிக்கை விடுறதுனால, பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பா தலைவன், ஹபீஸ் சயீது, "இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என, ஷாருக் உணர்ந்தால், பாகிஸ்தான் வந்து விடட்டும்; தேவையான, பாதுகாப்பு வழங்கப்படும்' என அவன் பதிலுக்கு அறிக்கை விடுறான்.

போதாகுறைக்கு,
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக்கும் "ஷாருக் கான் இந்திய குடிமகன்; அவருக்கு சக இந்தியர்கள் போலவே மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும். அதில் எந்த குறைவும் இல்லாத வகையில், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும், ஷாருக்கை தங்கள் நாட்டினர் போலவே கருத வேண்டும்" ன்னு அறிவுரை சொல்றாப்ள.

தேவைப்படுறப்ப மட்டும், சாதி - மதத்தை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிற விசயத்துல
கருணாநிதி மாதிரியே ஷாருக்கானும் இருக்காப்ள. நல்லா வருவீங்க. எங்களுக்கு, சாருக்கான் - சல்மான்கான் - சயித் அலிகான் - ஆர்யா - மும்தாஜ் - அமீர் - ஷாம் ன்னு எல்லாருமே ஒன்னுதான். நாங்க படத்தை படமா மட்டும்தான் பார்க்கிறோம். அதுலேயும் உங்க மத வெறியை சேர்க்க வச்சிடாதீங்க. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் சில விசயத்துல வேறுபட்டிருந்தாலும் எங்களுக்கு கமல்ஹாசனும் - வைரமுத்துவும் - இளையராஜாவும் ஒன்னுதேன்! கலைத்துறையில் பார்ப்பன - ஷத்ரிய - சூத்திர வர்ணாசிரமம் எல்லாம் கிடையாது.

16 ஆகஸ்ட் 2011

மனம் குரங்கு! மதம் சேவல்! நான் இனி...?



என்னன்னமோ சிந்தனைகள் மனதுக்கும்,மூளைக்கும் இடையே பயணித்துக்கொண்டிருக்கும் இந்த மாலைநேர வேளையில் எதையாவது ஒன்றை எழுதி பதிவேற்றி விடவேண்டுமென்ற எண்ணத்தோடு எழுத ஆரம்பிக்கின்றேன்.ஆனாலும் இன்னும் என்னவென்பது முடிவு செய்யப்படவில்லை.

காலம் என்ற இயந்திர குதிரை எவ்வளவு வேகமாக நம்மை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை யோசிக்கும் வினாடிகளில் கூட அது பல மைல்களுக்கு அப்பால் கடந்து மறைகிறது.இதையேன் இப்போது சொல்கிறேனென்றால், என்னைப்பற்றிய ஒரு பின்னோக்கிய பயணத்தைதான் இங்கே தொடரப்போகிறேன் என்பதாலேயே.

நாகப்பட்டினம் சோழர்களுக்கு மட்டுமில்லாமல் சாமானியனான எனக்கும்கூட பட்டினமாகவே திகழ்ந்து வருகிறது.வேளாங்கண்ணியில் கிருத்துவமும், நாகூரில் இசுலாமும் இங்கே அரவணைக்க படுவதோடு, ஒரு மாதம் மேலாக திருவிழாக் காணும் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் போல, பல கோயில்களோடு இந்துக்களுக்கும் உறைவிடமாய் இருந்து வருகிறது. இது நான் பிறந்த ஊரு என்பதால் மட்டுமே தூக்கி பிடிக்கவேண்டிய அவசியமில்லை.ஆனாலும் மும்மதத்தையும் முழுதாய் ஏற்கும் நாகப்பட்டினத்திலே பிறந்தேனென்று சொல்லிக் கொள்வதுகூட, என்னை சார்ந்த ஓர் உள்ளார்ந்த செய்திக்கான ஒரு முடிச்சே என்பதையும் அடுத்தடுத்த வரிகளில் நீங்களே புரிந்துகொள்ள நேரிடும்.

நாகை அரசு மருத்துவமனையில் நான் பிறப்பெடுத்த அந்நாளின், என் தாயின் கட்டிலுக்கு இருபுறமும் குழந்தை பெற்றெடுத்தது இசுலாம்,கிருத்துவம் மதத்தை சார்ந்த நாகைப்புறவாசிகளே.

நான் பிறந்த தேதியில் அதே மருத்துவமனையில் பத்து பதினைந்து பேரு பிறந்திருக்கலாம்.ஆனாலும் இன்றைக்கும் எனக்கு நினைவுக்கு வருவது, இந்த இரண்டு குடும்பங்களை தான். இங்கே குடும்பம் என்பதை குறிப்பிடுவதை விட, இரண்டு மதத்தினர் யென்று சொல்வதுதான் எனக்கு சரியாக இருக்கும்.

என்னுடைய எண்ணவோட்டங்களால் நான் ஒரு மதவாதியாய் இருப்பது போல உங்களது பார்வைக்கு தெரியக்கூடும். ஆனால் அது அப்படியானதல்ல. பிறர் மதங்களை மதிக்கவும், தன் மதத்தை நேசிக்கவும் பழகிக்கொண்டிருக்கிறேன்.இது சமீபத்தில் வந்த சிந்தனையாகக்கூட இருக்கலாம்; ஆனாலும் முன்கூட்டியே வந்திருந்தால், ஒருசில நிகழ்வுகளில் வெகுசிலரை எழுத்துகளால் காயப்படுதிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.பட்டறிந்த பின்பு வரும் ஞானமெல்லாம், இந்த பட்டறிவு தருவதில்லை.

அரட்டை,வம்பு,விடாப்பிடியான பேச்சு என்றெல்லாம் இன்றைய பொழுதுகளில், நான் தீவிரமாய் இயங்கினாலும்  நான் பிறந்த அரைமணி நேரம் வரையிலும் நான் எந்த வித அழுகையோ,முனகல்கலையோ, கத்தலுமின்றி அப்படியே கிடந்தேனாம். அப்போது அழுது துடித்த என் பாட்டியும், அம்மாவும் இருக்கின்ற கடவுளுக்கெல்லாம் விண்ணப்பம் வைத்துக்கொண்டிருந்த வேளையில், அருகிலுள்ள இரு மதத்தினரும் ஏசுவையும், அல்லாஹ் வையும்  வேண்டி சேவல் வேண்டிவிட சொன்னார்களாம்.அதுபோலவே, நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சென்று மூன்று ஆன்மீகத்தலங்களுக்கும் வேண்டுதலை வைக்க, அரைமணி நேரத்திற்கு பின்பாக நான் அழத்தொடங்கினேனாம்.நல்லோரை வாழ வைக்கவும், தீயோரை வீழ வைக்கவும் மட்டுமே தேவைப்பட்ட இறைவன் என்னை அழ வைக்கவும் கூட தேவைப்பட்டிருகிறான்.அந்த இறைவன் அருளால் நான் சந்தோசமாகவே இருக்கிறேன் இப்போதும் கூட.

மதம் என்ற வழியில் பயணிக்கும்போது, பாதை மாறுமே  தவிர  இறைவனென்ற ஊர் ஒன்றாகவே இருக்கும்.