12 ஏப்ரல் 2014

அரசியலில் மதம்!

நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

Photo: நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல....

- இரா.ச.இமலாதித்தன்

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல...

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக