வீர வணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீர வணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மார்ச் 2016

தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்!





'தனித் தமிழர் சேனை'யின் நிறுவனத்தலைவரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், ஐயா அரப்பா தமிழன் அவர்களின் உடன்பிறந்தவரும், 'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை இராமசந்திரன் சேர்வை அவர்களின் பெயரனுமான ஐயா நகைமுகன் அவர்களின் இழப்பானது அகமுடையார் சமுதாயம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனக்குழுக்கே மிகப்பெரிய பின்னடைவு.

'தமிழக தலைமை அகமுடையார் சங்கம்' ஒருங்கிணைத்த அனைத்து பொது மேடைகளில் அவர் உடல்நிலையை கூட கவனத்தில் கொள்ளாமல் உணர்ச்சிமிகு பேச்சுகளால் அலங்கரித்தார். அவரது பேச்சை கேட்பதற்காகவே பல மணிநேரம் காத்திருந்திருக்கிறோம் என்பதே பெருமையான விசயம். அவரது கண்ணியமும், சொல்வன்மையும், அறிவார்ந்த சிந்தனைகளும், அடுத்தக்கட்ட இளம்தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவையாக இருந்தது.

85 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் ஒருங்கிணைத்த அகமுடையார் மாநாட்டுக்கு பலவித எதிர்ப்பு வந்து, மாநாட்டு பந்தலுக்கு அனுமதிக்காத காவல்துறையின் அடக்குமுறையை தனி ஒருவனாக நின்று அனுமதி பெற்றுத்தந்த அப்படிப்பட்ட செயல்தலைவரை, இன்று இழந்து நிற்கிறோம்.
திருவண்ணாமலை மாநாடு முடிந்த பின்னால், மாநாட்டு பந்தலுக்கு அருகேயுள்ள பிரதான சாலையோரம் ஐயா அரப்பா அவர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அரைமணி நேரத்திற்கும் மேலாக அன்றிரவு அவரோடு உரையாடிய நிகழ்வை என்றைக்கும் மறக்கவே முடியாது.

அன்னாரது இறுதி நிகழ்வு நாளை 15.03.2016 செவ்வாய் திருப்பத்தூர் தெக்கூரில் நடைபெறும்.

தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

03 ஆகஸ்ட் 2015

கருப்பு சேர்வைக்கு வீர வணக்கம்!


மாமன்னர் மருதுபாண்டியர்கள் போலவே போரில் 'தீரன் சின்னமலை'யை வெல்ல முடியாது என்பதை அறிந்திருந்த ஆங்கிலேய வல்லாதிக்க சக்திகள், சூழ்ச்சி மூலம் தீரன் சின்னமலையையும், கருப்ப சேர்வையையும் சங்ககிரி் கோட்டையில் தூக்கிலிட்டனர். ஆடி பதினெட்டாம் நாள், ஆடிபெருக்கான இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எம் வீர வணக்கம்!

மேலும். முனைவர் திரு மருது மோகன் அவர்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அரியதகவல்களும் கீழே இணைத்துள்ளேன்.

எனக்கு கிடைத்த தகவல் நெப்போலியனுக்கு திப்புவின் கடித்த்தை எடுத்துச் சென்று 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து பதில் வாங்கி வந்து திப்புவிடத்தில் சேர்த்து விட்டு பயணத்தில் நோய் தாக்கி ஸ்ரீரங்கபட்டணத்தில் இறந்து போய்விட்டார். அவரின் செயல்திறனைப் பார்த்து நெகிழ்நத திப்பு அவருக்கு அங்கேயே சமாதி கட்ட ஏற்பாடு செய்தார் என்று கேள்விப்பட்டேன். அதனால் 30 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கப்பட்டணம் சென்று அவரது சமாதியை தேடினேன். இல்லை என்று கூறினார்கள். ஆனால் அங்கு தொல்லியல் துறையில் பணி புரியும் ஒருவர் எனக்கு தெரிந்து ஒரு தமிழனின் சமாதி நீண்ட வருடங்கள் இருந்தது . பின்பு இதன் அடையாளத்தை அழித்து விட்டனர். என்று கூறினார். கருப்பு சேர்வை தமிழ் தவிர பிரெஞ்சு மொழியியலும் வல்லவர்.

30 நவம்பர் 2014

அரச கொலை 30.11.2012


பிரபு - பாரதி என்கவுன்டர் :(
ஜெயலலிதா பதவி பறிப்பு  :)
ஆண்டு இரண்டானாலும் அகம்படியனாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.

எம் குல மாவீரர்களுக்கு வீர வணக்கம்