சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 டிசம்பர் 2017

நாம் தமிழரின் - ஆர்.கே.நகர் தேர்தல்!




ஹிந்திய தேசிய கட்சியையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, 3860 வாக்குகள் பெற்று தமிழ் தேசிய கட்சியாக வளர்ந்து நின்று, இத்தேர்தல் மூலமாக தமிழக கட்சி பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்! அதிலும் குறிப்பாக மத்திய மாநில ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல், வாக்கு வங்கியுள்ள மற்ற அரசியல் கட்சிகளோடு கூட்டணியும் இல்லாமல் தனித்து பெற்றிருக்கும் இவ்வெற்றி போற்றுதலுக்குரியது.

08 நவம்பர் 2017

செந்தமிழனுக்கு அகவை வாழ்த்துகள்!





யார் தமிழன்? என்ற மாற்றோரின் ஏளனப்பேச்சையே தன் வசமாக்கி 'நாம் தமிழர்' என்ற கம்பீர அடையாளத்தோடு, சமகால தமிழ்தேசிய அரசியலில் தலைவனாய் திகழும் 'மருது சீமை'யில் பிறப்பெடுத்த எம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, 48வது அகவை திருநாள் வாழ்த்துகள்!

09 அக்டோபர் 2017

09 ஆகஸ்ட் 2017

ஆளப்போறான் தமிழன்!



"ஆளப்போறான் தமிழன்"
எழுத்தில் பிழை இருக்கலாம்; கருத்தில் பிழையே இல்லை! இனி இம்மண்ணை தமிழன் ஆள்வான்.
சீமானுக்கு நன்றி.

24 மே 2017

பொதுவெளியில் நாம் தமிழராக இருப்போம்!


தமிழ், தமிழரென பேசும் திரு.சீமானை அந்த தமிழர்களே ஏற்கவில்லையென தமிழரல்லாத கே.டி.ராகவன் சொல்லிருக்கிறார். சினிமா இயக்குனர் என்பதுதான் திரு.சீமானின் அடையாளமென்றும் சொல்லிருக்கிறார்; பூநூல் மட்டுமே அரசியல் அடையாளமாக இருக்க வேண்டுமென நினைக்கும் பொதுபுத்தியில் செருப்பால் அடித்து, களம் காணும் திரு.சீமான் எத்தனையோ இளந்தமிழர்களை நாம்தமிழராக இயக்கி கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர் தான் என்பதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே. வா, போ என பேசுவதுதான் தமிழ் கலாச்சராமாயெனவும் கே.டி.ராகவன் கேட்டிருக்கிறார். அன்பு அதிகமுள்ள உறவுமுறைகளுக்குள் வா, போ மட்டும் தான் இருக்கும். இந்த ஆண்டான் அடிமை தன்மையை உருவாக்கிய ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிரமம் இங்கே இல்லாமல் இருந்திருந்தால், இதே வா,போ என்ற ஒருமைதான் இம்மண்ணில் இன்றும் உயிர்ப்போடு அன்பின் அடையாளமாய் மாறியிருக்கும்.

தென் தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்குட்பட்ட தொகுதியை விட்டுவிட்டு, வட தமிழகத்திலுள்ள மேனாள் அமைச்சர் தொகுதியில் ஒரு வோட்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்ட சூழலில், தன் மக்களிடமே பணம் வசூலித்து களம் கண்ட திரு.சீமான் தோற்றதில், அவருக்கு எந்த இழப்புமில்லை. தமிழனுக்காக போராடிய திரு.சீமானை, அந்த தமிழர்களே ஏற்றுக்கொள்ளாமல் தோற்கடித்து விட்டனர் என தொலைக்காட்சி விவாதங்களில் கண்டவனெல்லாம் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டோமேயென நினைத்து அத்தொகுதியின் வாக்களர்கள் தான் வருத்தப்பட வேண்டும்; ஏனெனில் இது அவர்களுக்கான தோல்வி. திரு.சீமான் பேச்சுக்காகவே கூட்டம் கூட ஆயிரக்கணக்கான பேர் இங்குண்டு. ஆனால் ராகவன் போன்றோர்களின் பேச்சைக்கேட்க கூட இம்மண்ணில் ஆளில்லை என்பதே எதார்த்த களநிலவரம். மாற்றுக்கருத்துகளும், விமர்சனங்களும் கூட திரு.சீமான் மீது சிலருக்கு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழர் போலவே இயங்கி கொண்டிருக்கும் தமிழரல்லாதவர்களிடம் எப்போதுமே அண்ணன் சீமானை விட்டுக்கொடுக்க கூடாது; நாம் தமிழர்!

- இரா.ச. இமலாதித்தன்

10 செப்டம்பர் 2016

காவிரியும் தமிழனும்!

காவிரிக்காக, கன்னடமே தீப்பற்றி எரிகிறது; இங்கே, ஜெயலலிதா காலில் விழுந்து கிடப்பதை தவிர வேறவொன்றுமே சாதிக்காத, சாதி தலைவனெல்லாம் இப்போதே அக்டோபர் மாத அலப்பறைகளுக்காக அடி போட்டு கொண்டிருக்கின்றான். கல்லணையை கட்டிய கரிகாலன் பிறப்பெடுத்த இரும்புத்தலை மண்ணோ, இன்று துருபிடித்து கிடக்கிறது; பசும்பொன்னை தவிர வேறெந்த அரசியலும் தெரியாத செம்மறியாட்டு கூட்டத்தில், சாதி தலைவர்கள் ஊருக்கு ஒருத்தர் உண்டு; ஆனால், சாதிக்கத்தான் சங்கம் வளர்த்த இந்த தமிழ் நானிலத்தில் ஓர் ஆளில்லை.

கன்னட வெறியர்களிடம் அடிவாங்கியது அந்தவோர் அப்பாவி தமிழ் இளைஞன் மட்டுமல்ல; ஜெயலலிதா போன்ற தமிழரல்லாதவர்களை, வெறும் 200 ரூபாய்க்காக ஆட்சியில் அமர வைத்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டு காரனுக்குமான அடிதான் அது... இந்த மாதிரியான விசயத்துக்கெல்லாம் காந்திய வழியை விட, நேதாஜிய வழி தான் சரியாக இருக்கும். ஆனால், இங்கே நேதாஜியை ஆதரிக்கிற ஆட்கள் கூட, சீமானை எதிர்க்கிறார்கள்; அப்பறம் எப்படி மாற்றம் நிகழும்? யாராலும் விமர்சிக்கப்படாத ஓர் அரசியல்வாதி இதுவரையிலும் உண்டா? சீமானும் அரசியல்வாதிதான்; ஆனால் சீமான் கையிலெடுத்த அரசியல் தமிழனுக்கானது. அதை நாம் ஆதரிக்க வேண்டும்.

சீமானை குறை சொல்லும் எந்தவொரு யோக்கிய சிகாமணிகளும் தமிழ் தேசிய அரசியலை பேச மாட்டார்கள்; ஆனால், தமிழ் தேசிய ஆட்சிக்கு விதை போடும் சீமான் போன்றவர்களையும், 'விமர்சனம்' என்ற பெயரில், 'தமிழர்' என்ற பதத்தை 'டம்ளர்' என்று இழிவுபடுத்தி மல்லாக்க படுத்துக்கொண்டு மார்பில் துப்பில் கொள்வார்கள். இதுதான் தமிழர்களின் இன எழுச்சி அரசியல் தோல்விக்கான அடிப்படை. காவிரி, பெரியாறு, கிருஷ்ணா போன்ற நதிநீர் பிரச்சனைகளுக்கெல்லாம் நிரந்தர தீர்வு காண, தமிழ்நாட்டில் தமிழுணர்வுள்ள தமிழர் ஆட்சி நிறுவினால மட்டுமே சாத்தியம். இப்போது இருப்பது போல தமிழ்நாடு என்பது பெயரளவில் மட்டுமில்லாமல், தமிழர்களுக்காக தமிழர்களே ஆளும் நாடாக மாறும் போதுதான், இதுபோன்ற இனவாத பிரச்சனைகள் முற்றிலுமாக களையப்படும். அதுவரையிலும் 'பாரத் மாதாகி ஜே!' என சொல்லிக்கொண்டு இன உணர்வற்ற ஹிந்தியனாய் வாழ்வதென்பது, நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் தற்கொலைக்கு சமமானது.

- இரா.ச. இமலாதித்தன்

06 நவம்பர் 2015

வைகோ - சீமானின் அரசியல் நகர்வு!

திரு. வைகோ தாயாரின் மறைவுக்காக திரு. சீமானின் இரங்கல் அறிக்கையும், கலிங்கப்பட்டிக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தியதையும், அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்கின்றேன். ஒருமுறை ஈழ ஆதரவு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஒரே திரையரங்கினுள் அருகருகே திரு.வைகோவும் - திரு. சீமானும் அமர்ந்திருந்து பார்த்திருந்தும், இருவரும் முகம் பார்த்து கூட பேசிக்கொள்ளவில்லை. அதே போல எங்கள் நாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த பொது கூட்டத்தில் திரு. சீமான் அவர்களின் பேச்சில் கூட முழுக்க முழுக்க திரு. வைகோவின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் விளக்கமாக சாடி விமர்சித்து பேசினார்.

அப்படி இருந்தும் இப்போதைய அரசியல் சூழலில் தெய்வத்திருமதி வை.மாரியம்மாளின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டது, தன் மீதான தெலுங்கு அமைப்புகளுடைய எதிர்ப்பின் வீரியத்தை திசை திருப்பவே என எண்ணுகிறேன். மேலும், திரு. வைகோவோடு இணக்கமாக இருந்த விடுதலைகளத்தை சேர்ந்த திரு. நாகராஜன் போன்றோரெல்லாம் திரு. சீமானின் இந்த அரசியல் காய் நகரத்தலை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

விவேகமுள்ள வீரம் கண்டிப்பாக வெற்றிக்கு வித்தாகும். வாழ்த்துகள், திரு. சீமான்!

- இரா.ச.இமலாதித்தன்.

27 மே 2015

அரசியல் வியாபாரிகளின் கையில் அரசு இயந்திரம்!

அரசியல் வியாபாரம்:

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து இறுதிவரை நான் விடுதலைப்புலிகள் மீதும், அண்ணன் பிரபாகரன் மீதும் அதீத பற்றுள்ளவன் தான். என்ன மாதிரியோ அல்லது என்னை விடவோ அதிக பற்றுள்ள எத்தனையோ பேரை என் சமகாலத்தில் நான் பார்த்து பழகிருக்கிறேன். ஆனால், திரு.சீமான் ஒரேவொரு தடவை ஈழத்தில் அண்ணன் பிரபாகரனோடு பேசி வந்த ஒரே காரணத்திற்காக, தன் வாய்க்கு வந்ததையெல்லாம் பொது மேடையில் உளறி தள்ளுவதை ஓர் ஈழ ஆதரவாளனாக என்னால் துளி கூட ஏற்க முடியவில்லை. அண்ணன் பிரபாகரன் படத்தை வைகோவுக்கு அடுத்த படியாக பாரிய அளவில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமை திரு.சீமானுக்கு உண்டு. அதற்காக, அவர் சொல்லும் கதையையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பது, அண்ணன் பிரபாகரனுக்கு செய்யும் துரோகமாகும். தமிழக அரசியலில் நல்ல அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள திரு.சீமானுக்கு வாழ்த்துகள். மேலும், திராவிடத்தின் நீட்சியான தமிழ் தேசியத்தை சொல்லி ஆட்சி அமையுங்கள், கெஜ்ரிவால் போல முதலமைச்சர் ஆகுங்கள். என் ஓட்டும், என் வாழ்த்தும் உங்களுக்கு உண்டு. ஆனால் பா.ம.க.வை வன்னியர் சாதி கட்சியென்று சொல்லிக்கொண்டு, நாடர் சாதியை சார்ந்த ஆதித்தனார் அன்று ஆரம்பித்த நாம் தமிழர் கட்சியை இன்றும் வைத்து கொண்டு, வைகுண்டராஜனோடு சேர்ந்து கொண்டு நாடார் சாதி அரசியலை தமிழ்தேசியம் என, அப்பாவி இன உணர்வாளர்களான என் சக இளந்தமிழர்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்


அரசு இயந்திரம்:


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதிக்கும் ஆர்கேநகர் இடைத்தேர்தல் தேதிக்கும் உள்ள காலஇடைவெளியை கணக்கிடுகையிலேயே தேர்தல் ஆணையத்தின் நடுநிலை புரிகிறது. யார் சொன்னது? நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் சுயாட்சி அதிகாரம் கொண்டதென்று...? எல்லாமும் அரசியலாகி விட்டது. பணம் தான் அதை ஆட்டி வைக்கிறது. வாழ்க அரசியல்வாதிகளின் வியூகம்!

25 பிப்ரவரி 2015

சீமானுக்கு வாழ்த்துகள்!

சீமானின் செயல்பாடுகளோடு பலவற்றில் வேறுபட்டிருந்தாலும், வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பை ஆதரிப்பது அவசியமாகிறது. நாடு முழுவதும் விநாயக சதுர்த்தியன்று ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு விநாயகரை தலையில் வைத்து கொண்டாட மட்டும் தானே நேரம் இருக்கு. ஆனால், முருகனுக்காக எந்த ஹிந்துத்துவா அமைப்பும் நாடு முழுவதும் தைபூசத்தை கொண்டாவில்லையே. தைபூசத்தன்று முருகனை கொண்டாடி வீரத்தமிழர் முன்னணியை தொடங்கி வைத்த கிருஸ்துவ மதத்தை சார்ந்த சீமானை, சோ கால்டு ஹிந்து மதத்தை சார்ந்தவனாக மனதார பாராட்டுகிறேன்.

07 பிப்ரவரி 2015

தமிழர் முன்னணி!?

பா.ஜ.கவுக்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத இந்து முன்னணியோ, தி.மு.க.விற்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத திராவிட கழகமோ, அதுபோல நாம் தமிழர் கட்சியின் தோழமை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணியை சீமான் இன்று தொடங்கி வைக்கிறார். நாம் தமிழர் கட்சியானது அரசியல் தளத்தில் தொடர்ந்து செயல்படும். வீரத்தமிழர் முன்னணியானது இனிவரும் காலங்களில் அரசியல் சார்பற்ற அமைப்பாக செயல்படும். அதுக்குள்ள பலபேரு பலவிதமா புரளியை கிளப்பி விடுறாய்ங்க. ஒருத்தரை பிடிக்கவில்லை என்பது வேறு. அதற்காக வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவது சரியா? ஒரு விசயத்தை பற்றி ஆழமாக தெரியாவிட்டால் ஏன் அவசரகுடுக்கை போல முந்திக்கொண்டு தவறான தகவலை பரப்ப வேண்டும்? பொய்யான பரபரப்பால் சில லைக்குகள் அதிகம் கிடைக்குமே தவிர, மற்றபடி ஒன்றும் நடந்து விடாது.

04 டிசம்பர் 2014

நாம் தமிழரின் சாதி ஒழிப்பு!



நீதியரசரான கிருஷ்ணய்யரை பெயருக்கு பின்னால் அய்யர்ன்னு சேர்த்து சொல்றதை தப்புன்னு சொல்லல. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்கி முத்துராமலிங்கனார்ன்னு சொல்லும்போது தான் உங்க சாதி ஒழிப்பு கொள்கையில் காறி துப்ப தோணுது. அட த்தூ!

30 அக்டோபர் 2014

செபஸ்டியன் சைமனின் தேவர் சாதி ஒழிப்பு!

தான் பிறந்த நாளிலிருந்து தனது இறுதி நாள் வரை உ.முத்துராமலிங்கத்தேவர் என்றே சமகால மக்களால் அறியப்பட்டவரின் கையெழுத்து கூட, 'மு.உ.தேவர்' தான். இந்திய அரசியலை தாண்டி, உலகத்தமிழர்களுக்காக ஹிந்து அல்லாத பெளத்தம் உள்ளிட்ட  பல ஆன்மீக சொற்பொழிவாற்ற பல நாடுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். உள்ளூர் பள்ளி முதல் உலக நாடுகளுக்கு பயணிக்க தேவைப்படும் கடவு சீட்டு வரை பயன்படுத்திய அவரது பெயரும் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். அந்த திருப்பெயரை 107 ஆண்டுகள் கழித்தும் இன்றும் உலகெங்கும் பல அரசியல்வாதிகளால் அழைக்கப்படுவதும் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று தான்!

ஆனால் நேற்றைய மழையில் முளைத்த காளான் போல தமிழக அரசியலில் உருவெடுத்திருக்கும் ’நாம் தமிழர் கட்சி’ மட்டும், தெய்வத்திருமனாரை முத்துராமலிங்கனார் என சுருக்கி தமிழகமெங்கும் போஸ்டர் அடித்திருப்பது கண்டனத்துக்குரியது. பெருந்தமிழனரான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை. பெற்றோர் வைத்த ’செபஸ்டியன் சைமன்’ என்ற பெயரை சுருக்கி, தனக்கு தானே ’சீமான்’ என வைத்து கொண்டவரின் தலைமையில் கீழ் இயங்கும் கட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

திரு செபஸ்டியன் சைமன் அவர்களே, நீங்க வழக்கம் போல, உங்க சாதிக்கார முதலாளி திரு வைகுண்டராஜனோடும், உங்க சாதிக்கார தொலைக்காட்சி தந்திடிவியோடும், உங்க சாதிக்காரர் திரு. ஆதித்தனார் அன்று உருவாக்கிய நாம் தமிழர் கட்சி என்ற பெயரை காப்பாற்றி கொள்ளுங்கள். எங்களுக்கு ஏற்கனவே தெருவுக்கொரு கட்சி - அமைப்பு -  சங்கம் - பாசறை - கழகம்- இயக்கம்ன்னு எக்கசக்கமா இருக்கு. ஆனாலும் எங்க சாதி கட்சி தேர்தலில் வெற்றி பெறாது. ஏனென்றால் அதிமுகவுக்கு போட்ட முக்குலத்தோரின் ஓட்டு அக்ரிமெண்டே இன்னும் முடியிற மாதிரி தெரியல. அதுனால எங்க ஓட்டு உங்க மாற்று அரசியலுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


எனவே, உங்கள் வீட்டு சமையலறையில் மட்டும் இனி களமாடுங்கள். தயவு செய்து, எங்கள் தெய்வத்தின் பெயரோடு விளையாட வேண்டாம். மேலும், நரகாசூரனுக்கும். -, சூரபத்மனுக்கும் வீர வணக்கம் வைப்பதோடு உங்களது தமிழ்தேசியப்பற்றை நிறுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு உங்களோட உங்க பொங்கச்சோறும் வேண்டாம்; உங்க சங்காதமும் வேண்டாம்!

- இரா.ச.இமலாதித்தன்

28 அக்டோபர் 2014

மருதுபாண்டியர்களை புறக்கணிக்கும் சீமான்!



இந்த நாம் தமிழர் கட்சி காரய்ங்க, நரகாசுரனுக்கெல்லாம் வீரவணக்கம் ஃப்ளக்ஸ் அடிச்சு சொன்னாய்ங்க. ஆனால், தமிழ் தேசியத்தின் முன்னோடியான மாமன்னர் மருதுபாண்டியருக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட நடத்துன மாதிரியே தெரியல. இதுதான் தமிழ் தேசிய மாற்று அரசியலா? தீபாவளியே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டே நிரூபணம் செய்ய முடியாத நரகாசுரனுக்கு வீரவணக்கம் சொல்வீங்க. ஆனால், 500க்கும் மேற்பட்ட அனைத்து சாதி/மத மக்களும் மன்னர்களுக்காக தங்களுயிரையே தந்த அக்டோபர் 24ம் தேதியை வசதியாக மறந்து விடுவீர்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க, 200 வருடங்களுக்கு முன்பான காலத்திலேயே ’வீரசங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியரை மறந்து விட்டதா நாம் தமிழர் கட்சி? தமிழீழ விடுதலைப்புலிகளின் கொரில்லா போர்முறையை, 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்தி காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை புறக்கணித்ததன் உள்நோக்கம் தான் என்ன?

22 அக்டோபர் 2014

தீபஒளி வாழ்த்துகள்!

தீபாவளியை கொண்டாட வேண்டாம் ! - சீமான்.

அண்ணன் சீமான் அவர்களே,

தீபாவளி வேண்டாம்ன்னு சொன்னீங்க மகிழ்ச்சி. அப்படியே உங்க மதப் பண்டிகையான கிருஸ்துமஸ் உள்ளிட்ட ரம்ஜான் - மெஹரம், பக்ரீத் பண்டிகைகளையும் கொண்டாட வேண்டாம்ன்னு சொல்றதுக்கு உங்களுக்கு வக்கு இருக்கா? அது இல்லைன்னா மூடிக்கிட்டு உங்க வீட்டு கிச்சன்லேயே களமாட வேண்டியது தானே? அப்பறம் என்ன மசிருக்குண்ணே எங்க காலுல வந்து விழுறீங்க?

தீயத்தன்மை யாருக்குள் இருந்தாலும் அது அசுரகுணம்; அவன் அசுரன் தான். அதில் தமிழன் - ஆரியன் என்ற வேறுபாடில்லை என்பது என் யூகம். ஆகையால் ஆரிய அசுரர்களின் இருள் நிறைந்த எண்ணமெல்லாம் இந்த தீப ஒளியால் ஒழியட்டும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தமிழனின் தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

13 ஜூன் 2014

சீமானின் தமிழ்தேசியமும் சாதி ஒழிப்பும்!

திரு.சீமான் ஏன் ஈழத்து அகதி பெண்ணை திருமணம் செய்யப்போறேன்னு சொல்லிட்டு வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்? இது அவரது தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லுவீங்க. சரி, திரு. சீமான் ஏன் ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கின்றார்? தன் சாதி சார்ந்த தந்தி டிவிக்காக பகுதிநேர ஊழியர் போல செயல்படுகிறாரே, காரணம் என்ன? தனது சாதிக்காரரான ஆதித்தனார் உருவாக்கிய நாம்தமிழர் கட்சியின் பெயரை அப்படியே இவரும் எடுத்துகொண்டாரே ஏன்? தமிழில் சொல்லுக்கா பஞ்சம்? ஜெயலலிதாவை திரு.சீமான் எப்படி பார்க்கிறார்? தமிழராகவா? தமிழரல்லதவராகவா? இல்லை தன்னுடைய தலைவராகவா?

இந்த அதிமுக ஆட்சியில் திரு.சீமானின் எந்த வித தமிழர் சார்ந்த நடவடிக்கையும் சொல்லும்படியாகவே இல்லையே? ஏன்? இதையெல்லாம் கேட்கும் நான் தெலுங்கனோ கன்னடனோ மலையாளியோ அல்ல. இனத்தால் தமிழன் - சாதியால் தேவன் - பிரிவால் அகமுடையான். சாதி பிரிவை ஏன் சொன்னேன் என்றால், சட்டுன்னு வழக்கமா எல்லாரையும் சொல்ற மாதிரி என்னையும் தெலுங்கன்னு சொல்லுவீங்க. சீமானே சொல்லிருக்காரு, ஒருவனை தமிழன் என்பதை அறிந்து கொள்ள, முதலில் அவனுடைய சாதி பெயரை கேள் என்று! ஏனென்றால், சீமானும் சாதித்தமிழனே...

இதே சீமான், அரசியல் சார்ந்த அமைப்பு தொடங்கும் முன் உ.பி கிறிஸ்துவ தேவலாய பிரச்சனையின் போது, தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து பெண்களின் தாவணியை உருவ சொன்ன்னவர் தானே? அப்படிப்பட்ட சீமான் அடிப்படையில் மதவாதி, பிறகு சாதிய சார்பு வாதி. அதையெல்லாம் மறந்துவிட்டு சீமானை ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தின் அடையாளமாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் சீமான் வருங்கால முதல்வர் என்ற கனவோடு, வருங்காலபிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவோடு மறைமுக கூட்டணியில் இருக்கின்றார். தேர்தலில் பார்பனாரான ஜெயலலிதாவுக்கு களமாடுவதுதான் சீமானைன் தமிழ்தேசியத்தின் ஆரம்பநிலை கொள்கையென்றால், அதை கண்ட மொழிக்காரனும் விமர்சிக்கத்தான் செய்வான்.

முதலில், சீமான் தன்னுடைய (நாடார்)சாதி, (கிருஸ்துவ)மத அடையாள சார்புகளை விட்டு முழுமையாக வெளியாகட்டும். அதன்பிறகு கழுத்து நரம்பு தெறிக்க மேடையில் முழங்கட்டும். அண்ணன் பிரபாகரனோடு படம் எடுத்து கொண்டதை தவிர சீமான் சாதித்தது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் போல இணையத்தில் உளறிக் கொட்டுபவர்கள் இனியாவது திருந்துவார்களென நம்புவோம்.

- இரா.ச.இமலாதித்தன்