31 டிசம்பர் 2012

பொய் பரப்புரைகள் - 1

 மறுப்புகளம் என்ற வலைப்பக்கத்தில் கடுங்கோன்பாண்டியன் எழுதிய  கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க இந்த “பொய் பரப்புரைகள்” பகுதி.




/பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு./

உங்களுக்கு நீங்களே, பொய்யாக திரித்து, அடுத்தவன் வரலாறை உங்களோடது என்று எழுதுவதற்கு பெயர், வரலாறா? ;)

/கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே!/

செம காமெடிங்க உங்களோட...
வடக்கிலிருந்தா? எந்த ஊரு, எந்த மாநிலம்/ எந்த இடம்ன்னு தெரியுமா? தெரிந்தால் அதற்கும் ஆதாரத்தை தரலாமே.

வடக்கிலிருந்து வந்தால், அவர்களது மீதமுள்ள கூட்டம் அங்கே இருக்கனுமே... அப்படி பார்த்தால், வடக்கில் தான் தலித் அதிகமா இருக்காங்க. ஒருவேளை பள்ளர், பறையர் எல்லாம் வடக்கிலிருந்து வந்தவர்கள் தானா? சக்கிலியர் என்ற சாதியினர் வடக்கிலிருந்து வந்ததுபோல பள்ளரும் வந்திருக்கணும் அப்படித்தானே?

/தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது./

அதை உறுதி படுத்தினது உங்களை மாதிரியான பொய் வரலாறை எழுதும் கூட்டம் தானே?

/அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்?/

அந்த கூட்டத்தை இல்லை, எந்த கூட்டத்தையுமே ஒடுக்கலையே நீங்கள். ஊருக்கு ஒதுக்கு புறமாக பள்ள பகுதிகளில் குடிசை கட்டி வாழ்ந்துட்டு, ஒடுக்குனீங்களா? காமெடிக்கு அளவே இல்லையா? ;)

19 டிசம்பர் 2012

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!


இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், உள்ளத்து வன்மங்களும் தான் இதன்மூலம் வெளிப்படுகிறது. எப்போதும் இல்லாது, இனி வரும் காலங்களில் அவர்களது சூழ்ச்சியை உடைத்தெறிய தேவரின மக்கள் அனைவரும் தனது ஒற்றுமையை வலுபடுத்த வேண்டும்.
இருக்க இடம் கொடுத்து, உழைக்க நிலம் கொடுத்து, பல நூற்றாண்டுகளாக தேவரினைத்தை சார்ந்த முன்னோர், ‘பள்ளர்’ இனத்தின் மக்கள் மீது வைத்துள்ள பாசமும், பரிவும் அன்று போல என்றும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்,  சாதியின் அடிப்படையிலான ஒதிக்கீட்டால் அரசு வேலை,  நல்ல வருமானம், பணம் கிடைத்த உடன், அவர்களுக்கு புகழ் யென்ற போதையும், மனனர் பரம்பரை யென்ற வரலாறும் தேவைப்படுகிறது. புகழுக்காக பொய்யாக திரித்து எழுதி தினம் தினம் ஒரு புதுப்புது வரலாறை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள்.
இப்போது உண்மையான வரலாற்றுக்கு சொந்தமானவர்களை சாதிவெறியர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். மேலும், அதை தாண்டி சாதீய மோதலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். முக்குலத்தை சார்ந்த முன்னோர்கள், ‘பள்ளர்’ இன மக்கள் மீது வைத்திருந்த அந்த பரிவும், பாசமும், இன்னுமும் தேவரினத்தவர்களால் கிடைத்த போதும், தேவரின தலைவரைகளையும், தேவரின மக்களையும் அவர்கள் இழிவுபடுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக ‘பள்ளர்’ இனத்து இளைஞர்களை தவறாக வழிகாட்டி,  சில சுயநல அரசியல்வாதிகளால் இந்த கூற்று இப்போது இணையத்தின் வாயிலாக அரங்கேறி கொண்டிருக்கிறது.
வாழ்க அவர்களது எண்ணம்!
பல்லாயிர கணக்கான மக்களின் மனதில் தெய்வமாக, தேவர் திருமகனார் வீற்றிருக்க, இந்த மாதிரியான செய்கைகள் அந்த மக்களின் மீதான அருவெறுப்பையே ஏற்ப்பட வைக்கிறது. இந்த மாதிரியான  இழிவான செயல்களை எல்லாம், தெய்வமாகி போன தேவர் கண்டுக் கொண்டிருக்கிறார். அவர்களது அழிவை அவர்களாகவே தீர்மானித்து கொள்கிறார்கள். அணைய போகிற விளக்கு பிரகசாமாய் எரியும். அதுபோலவே இதுவும்!
இந்த மாதிரியான ‘தலித்’ என்ற முகமூடியில் திரியும், “தேவேந்திரர் குல” ‘பள்ளர்’ இனத்து சாதிவெறியர்களை தட்டிக்கேட்க தைரியமில்லாதவர்கள் எல்லாம், ‘தலித் அரசியல்’ பற்றி வாய்க்கிழிய பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் இப்போதைக்கு தேவரின மக்களின் முதல் எதிரி. இவர்கள் தான் ‘களை’ எடுக்கப்பட வேண்டிய ஆட்கள்! இவர்களின் தூண்டுதலால்தான் அந்த ‘தலித்’ முகமூடி கொண்ட சாதிவெறியர்கள் விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொடுத்த கடனை கேட்டால் கூட  வன்கொடுமை சட்டம் போடும் காலமிது.
அந்த வன்கொடுமை சட்டம் என்ற ஒன்றை வைத்து கேவலமான தொரு பிழைப்பு நடத்துகிறார்கள். வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்ட இன மக்களும் ஒன்றாக களம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம். வீழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை தலை நிமிர்த்த ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும். இது தான் இப்போதைய காத்தின் கட்டாயம். இதை புரிந்து கொள்ளாதவரை ஏற்றம் யாருக்கும் இருக்க போவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம். புரிந்து கொள்வோம்; புரிய வைப்போம்.
 
# தேவர்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை.
சுட்டி: http://www.thevarthalam.com/thevar/?p=1894
 

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும்  நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்கான உதாரணங்கள் கீழே:
மதி – நிலவு, அறிவு;

மாலை - மாலைப் பொழுது, பூமாலை.
கல் – கல்வி கற்பது , செங்கல் உட்பட பலவித கல் வகைகள்; கள் – மதுபானம்.
வெள்ளம் – நீர் பெருக்கு; வெல்லம் – இனிப்பு சுவையுடையது.
தால் – வார்த்தை முடிவுறா சொல் (செய்தால், வந்தால்) ; தாழ் – பூட்டு; தாள் – காகிதம்.
ஒலி – சப்தம்; ஒளி – வெளிச்சம்; ஒழி – அழிப்பது.
அலி – ஆண் பெண் நிலையற்ற தன்மை; அழி – நிர்மூலம் செய்தல்; அளி – கொடுப்பது.
இது போல, (பால், பாள், பாழ்) ; (ஆல், ஆழ், ஆள்) – இவையெல்லாமே தனித்தனி வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. இப்படி நிறைய தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல ‘மல்லர்’ என்பது மல்லுயுத்தம் புரியும் வீரர்; மன்னர் யென்று பொருள். ஆனால் ‘மள்ளர்’ என்பது விவசயம் செய்யும் ஒரு பிரிவினர்.
‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு எதிரெதிர் துருவங்களை கொண்டது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசமானது, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே ஒலி கொண்ட மாற்பட்ட பொருள் கொண்டவை.
“ல் – ள்” இந்த இரண்டு (ள், ல்) எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு, போலியான வரலாற்றை உருவாக்கும் ஈனர்களின் போலி முகங்களை கிழித்தெறிய வேண்டும். தமிழே தெரியாதவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது? தமிழில் ஒரு வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் கிடைக்கும்போது, இரு வேறு எழுத்துகளுக்கு எப்படி ஒரு பொருளை திணிக்க முற்படுகின்றனர் இந்த அறிவிலிகள்?
இலக்கியங்களிலும், வரலாற்றிலும் சொல்லப்படும் ‘மல்லர்’ என்பது வீரதீர போர்க்குணம் உடையவர்களை பற்றியது. வரலாறை பொறுத்தவரை ‘மல்லர்’ என்பது தேவர் இனத்தை சார்ந்ததே. முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல; ஆனால், ‘தேவந்திரர்’ யென்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘பள்ளர்’ இனத்து நபர்கள் சொல்கின்ற ‘மள்ளர்’ என்பது, மருத நிலத்து விவசாய மக்களை மட்டுமே.
இந்த மள்ளர்கள் (பள்ளர்கள்) யாரும், வால், வில்லோடு களத்தில் நின்று போர் செய்யவில்லை.மள்ளர்களான இவர்கள் நின்ற களம், நெல்சாகுபடி சார்ந்த விவசாயக்களம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை.அறுவடை காலங்களிலும், அதை தொடர்ந்த சிலமாத காலங்களிலும், அந்த விவசாயக்களங்களில் வைக்கோல் போரைத்தான் அவர்கள் நேரிடையாக அறிந்திருந்தனர். பல நெடுங்காலமாய் வயலோரங்களிலும், பண்ணை வீட்டின் மாட்டு தொழுவத்தின் பின்புறமும், பல வைக்கோல் போர்களை மிக நேர்த்தியாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதை தவிர, மல்யுத்த போர் எதுவும் அவர்களுக்கு செய்ய தெரியாது; அந்த மள்ளர்களுக்கு தெரிந்த ஆயுதமும், பயன்படுத்திய ஆயுதமும், கதிர் அரிவாள் மட்டுமே. அந்த மக்கள் வேற ஒன்றுமே தெரியாத அப்பாவிகள்!
முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி!

 
# தேவர்தளத்திற்காக எழத்ப்பட்டட்டுர,
 சுட்டி: http://www.thevarthalam.com/thevar/?p=1907

08 நவம்பர் 2012

இன்னுமா இருக்கிறது காதல்?



இப்போதெல்லாம் காதல் என்பதற்கான விளக்கம் வெறும் ஆண்-பெண் சார்ந்த பாலியல் ரீதியானதாக வரையறுக்கப்பட்டுள்ளது போன்றதொரு மாயையே இங்கே நிலவுகிறது. காதல் என்ற மூன்றெழுத்திற்குள்ளாக, வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சாதனை சரித்திரமும், சல்லாப சாபக்கேடும் உள்ளடங்கி நிற்கிறது. காதல் யென்ற வசீகரத்தை, அன்பு யென்ற 'மை'தான் மையப்புள்ளியாக இருந்து நம்மை இங்கே ஆக்கிரமிக்க காரணமாய் இருக்கிறது.

அன்பு எல்லோரிடம் காட்டப்பட வேண்டிய ஒன்று தான். ஆனாலும், இந்த அன்பானது பாசத்தையும், பரிவையும், இரக்கத்தையும், நட்பையும் பல பரிமாணங்களில் கொடுத்தாலும் அது முழுமையடைந்ததாக தெரியவில்லை. அன்பின் பரிமாணத்தில் அதிமுக்கியமானதாக காதல் யென்ற ஒன்றே கருதப்படுகிறது. இந்த காதல்தான் பெரும்பாலான உறவுகளை மறக்கடிக்கும் வல்லமை பெற்றது. முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரால் கூட நாம்  பரவசப்பட இந்த காதல் முதன்மை காரணமாய் அமைகிறது.


சமீப காலமாக இந்த காதலுக்கு இணையமென்ற களம் இளைஞர்களுக்கான ஒரு பாலமாக அதிவேகமாய் உருவெடுத்து வருகிறது. இணைய பங்காளிப்பாளர்களில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தெரியாதவர் வெகுசிலரே இருக்கக் கூடும். முன்பெல்லாம் ஈ-மெயில் கணக்கை தொடங்கவும், அதன் மூலம் மடல் அனுப்பி கருத்துகளை பகிர்ந்து கொள்ளவுமே அதிகம் இணையம் பயன்பட்டது. சில நேரங்களில் உலக - உள்ளூர் நடப்புகளை அறியவும் இணையம் பேருதவியாக அமைந்தது. இப்போதெல்லாம் இணையம் என்பது காதலை பரிமாறிக்கொள்ள மட்டுமே பெரும்பாலானோருக்கு பயன்படுகிறது.


கணினி வாயிலான இணைய இணைப்பு இல்லாதவர்கள், செல்லிடபேசியின் வாயிலாக இணையத்தில் இணைந்து தங்களுக்கான நட்பு வட்டங்களை இணைத்து கொள்கிறார்கள். இந்த நட்பு வட்டங்களானது நாளடைவில் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது. குறிப்பாக மாற்று பாலினம் சார்ந்த நாட்பானது பெரும்பாலும் காதலென்று அவர்களே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.


சென்னையில் மெரீனா கடற்கரையோரம் இந்த காதல்படும் பாடு இருக்கே, அந்த புனிதத்தை வெறும் எழுத்தில் சொல்லி மாளாது. எழுத்தில் மட்டுமே அதை எளிதாக பொதுவில் சொல்லவும் முடியாது. திருச்சி போன்ற மற்ற பெருநகரங்களுக்கு முக்கொம்பு போன்ற சுற்றுலா தளங்களும், தஞ்சை போன்ற சிறு நகரங்களுக்கு பெருவுடையார் கோவில் சுற்று சுவர்களும் தான், இன்றைய காதலை வெகு விமர்சியாக வளர முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதுபோல ஒவ்வொரு நகரங்களுக்கும் இந்த மாதிரியான ஏதாவதொன்று பின்புலமாக இருந்து இன்றுவரை காதலை வளர்த்துக்கொண்டு தான் இருக்கின்றன.


இப்போதெல்லாம் நாளிதழ்களை, இந்த காதல் சம்பந்தமான பல செய்திகளையே அநேக பக்கங்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. பயனுள்ள செய்திகளுக்கு பக்கத்தின் ஏதாவதொரு மூலையில் சிறியதாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த காதல் சார்ந்த வழக்குகள், கொலைகள், இதுபோன்ற குற்றங்களுக்கு முதல் பக்கத்திலும் இடம் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 'கள்ளக்காதல்' யென்ற தலைப்பிடப்பட்ட செய்திகள்தான் அதிகம் பிரசுரமாகின்றன. அதற்குத்தான் வாசகர்கள் மத்தியில் மவுசும் அதிகம் என்பதை புரிந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், மற்றவர்களது காதலை வைத்து தங்களுடைய காரியத்தையும் வியாபார ரீதியாக பெருக்கி சாதித்து கொள்கிறார்கள்.


ஒருதலை பட்சமான காதல் என்பதெல்லாம் வெகுவாக குறைந்தே விட்டது எனலாம். அந்த மாதிரியான ஒருதலை பட்ச காதலால் இப்போது தற்கொலைகளும் குறைந்து விட்டன. ஏன், இந்த காலத்தில் எல்லோருமே காதலிக்கவே இல்லையா? தோல்வியே அவர்களுக்கு இல்லையா? என்பதெல்லாம் நீங்கள் கேட்க கூடிய ஒன்றுதான். ஆனாலும். இன்றைய காதல் வெறும் கண்ணாமூச்சி ஆட்டம் போலதான். யாரும் யாரையும் தோற்கடிக்கலாம். அதற்காக இங்கே யாரும் துவண்டு போவதில்லை. இப்போதைய பெரும்பாலான காதல்கள், தோல்வியையே சந்திப்பதில்லை. இங்கே தோற்பது, ஓர் ஆணின் தேவை அல்லது ஒரு பெண்ணின் திருப்தி அல்லது இருவரின் கனவு, ஆசை போன்ற இத்தியாதிகள் மட்டுமே. கண்டிப்பாக காதல் தோற்பதில்லை. ஏனெனில் இதெல்லாம் காதலே இல்லை. இதுவொரு சபலம்; அது சல்லாபமாய் மாறி கடைசியில் வேறொரு மாற்றை இருவருமே தேடி கடந்து செல்ல வழி வகுக்கிறது.


இந்த காதல் என்பது இதயத்தில் அம்பு துளைக்கும் மனதியல் சார்ந்ததாக இப்போது இல்லை. இதயம் என்பது இரத்தம் சுத்திகரிப்பு செய்வதை போல, இன்றைய நவீன காதல்களும் மனதில் படிந்திருக்கும் சபலத்தை சுத்திகரிப்பு செய்துக்கொண்டிருக்கிறது. இதுவொரு இளைய தலைமுறையின் உடலியல் சார்ந்த ஒத்திகை நிகழ்வாகி விட்டது. போர் ஒத்திகையில் அநேகமாக யாரும் இறப்பதில்லை. அது போன்றே திருமண ஒத்திக்கையாகிவிட்ட இந்த காதலும், இன்னுமா இருக்கிறது என்ற கேள்வியே என் மனதில் மேலோங்கி எழ செய்கிறது. விதிவிலக்குகள் எல்லாவற்றுக்கும் உண்டு. காதலும் விதிவிலக்கே!

16 செப்டம்பர் 2012

சுந்தர பாண்டியன் - பட விமர்சனம்


தேவர் சமுதாயத்தை சார்ந்த பதிவு:

படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி - மதுரை மாவட்ட பகுதியை உள்ளடக்கிய ஊர்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

டைட்டில் முடிந்த அடுத்த காட்சியே, சுந்தரபாண்டிய தேவர் யென்ற சீயான் (பாட்டனார்) போட்டோவை காண்பிக்கிறார்கள். அதை வணங்கிய படியே சசிகுமாரின் அப்பா. தத்தாவின் பெயரான சுந்தரபாண்டியன் தான் சசிகுமாருக்கும்.

அடுத்து ரஜினி பாணியை பின்பற்றும் விஜய் - சிம்பு மாதிரி ஒப்பனிங் சாங். சசிகுமார் படம் முழுவதும்  ரஜினி மாதிரியே இமிடேட் செய்து நடித்துள்ளார். ரஜினியின் ரசிகராகவே இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இடைவேளை வரை, பேருந்தை சுற்றியே படம் நகர்கிறது. கதாநாயகியை, சசிகுமார்  நண்பனும், வேறு ஒருவனும் காதலிக்க பல மாதங்கள் முயற்சி செய்து, சசிகுமாரையே நாயகி காதலிக்கிறாள்.  இடைவேளை வரை, பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் -  சைட் - காதல் யென பேருந்தில் செம கலாட்டா தான்.

சூரியின் டைமிங் காமெடி செம! முதல் பாதியில் சிரிக்காமல் யாருமே இருக்க முடியாதபடி, சசிகுமாரும் - சூரியும் கலக்கலான கலாட்டா பண்ணி இருக்காங்க.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில், காலண்டர் - சுவர் போட்டோ - சிலை - சாமியறை யென பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படம் தென்படுவதை காணமுடிகிறது.

நண்பர்கள் வடிவில் கூடவே இருந்து துரோகம் செய்யும் நபர்களின் முகத்திரையை கிழித்து இருக்கிறார் இயக்குனர். க்ளைமேக்ஸ் காட்சியை பத்து நிமிடம் முன்னாடியே முடித்திருந்தால், படம் வேற மாதிரி இருந்திருக்கும். ஆனாலும், துரோகம் செய்த நண்பர்களையும் நல்லவர்களாக்க கூட ஒரு பத்து நிமிடம் எடுத்திருக்கிறார் போல.

வம்சம் படத்துல வர கதாநாயகியின் பாத்திரம் போலவே, சுந்தர பாண்டியன் நாயகியின் பாத்திரமும் வடிவமைக்க பட்டுள்ளது வீரமாக.

"நீ நினச்சத முடிச்சி 'கள்ளச்சி' ன்னு நிருபிச்சிட்ட" ன்னு, நாயகியின் அப்பா சொல்வது போல வசனம், க்ளைமேக்ஸ் காட்சிக்கும் முன்பாக வரும். நான் அனுமானித்த வரை, இந்த சுந்தர பாண்டியன் - முழுக்க முழுக்க தேவர் (நாயகன் - மறவர், நாயகி - கள்ளர்) சமுதாயம் சார்ந்த படம்.

மண்ணின் மைந்தர்களான கள்ளர் - மறவர் - அகமுடையார் யென்ற பெரும்பான்மையான தேவர் சமுதாய மக்களை பற்றி சொல்லாமல், தமிழில் திரைப்படமே எடுக்க முடியாது, என்பதற்கு சுந்தர பாண்டியன் மற்றும் ஓர் உதாரணம்.

# சாதிவெறி யென்ற கமெண்ட், என்னை நோக்கி வரும்ன்னு தெரிந்தே  இந்த ஸ்டேட்ஸ் போடுறேன். :)

- இரா.ச.இமலாதித்தன்

27 ஜூலை 2012

விமர்சனம் என்பது யாதெனில்...

இணையத்தில் சமூக வலைதளங்களில் எல்லா வயதினரும் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும், பெரும்பாலனவர்கள் இளைஞர்களே. ஒருவரை விமர்சிக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம், கார்ட்டூன் போன்ற இவர்களே கணினியின் மென்பொருள் உதவியோடு உருவாக்கும் ஒளிப்படங்களே.

இங்கே விமர்சிக்கபடுவபர்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தான். சமீப காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் பெரும்பாலும், காங்கிரஸ்காரர்களே. தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களில் யாரும் விதிவிலக்கு அல்ல. பாரபட்சமில்லாமல் அனைவருமே பந்தாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். 

அனைவருமே விமர்சிக்க படுகிறார்கள் என்பது ஒரே ஆறுதலென்றாலும், உடலியலியல் மற்றும் நிறத்தின் அடிப்படையிலான விமர்சனங்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன என்பது வருத்தமளிக்கின்றனகுறிப்பாக, நாராயணசுவாமியை உடலியல் தோற்றத்தை வைத்து மிக கேவலமாக விமர்சிக்கும் யாருமே, மன்மதன் அல்ல. கண்ணாடியில் முகத்தை பார்த்து தங்களுக்கு தாங்களாகவே 'இதுக்கு மேலேயுமா அழகு வேணும்?' யென்று முணுமுணுத்துக்கொண்டு, கணினி தொழிநுட்ப உதவியுடன் தங்களை மிக அழகாக செதுக்கி கொள்கிறார்கள். அவர்களைப்போல போலியான அழகை வெளிக்காட்டிக்கொள்ள தெரியாத நாராயணசுவாமி போன்றவர்கள், அவர்களுக்கு விலங்கின் தோற்றமாகத்தான் தெரியும். விஞ்ஞான அறிவியலின் கூற்றுபடி, விமர்சிக்கும் அனைவரும் அதே விலங்கினத்தில் இருந்துதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்  என்பதை மறந்துவிட்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள் போல.  

ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க காராணமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் இல்லாதொழிக்க வேண்டியது நம் கடமைதான்; ஆனால், தன்னுடைய தலைமைக்கு உண்மையான விசுவாசியாய் இருக்கிற ஒரு சக தமிழனை, மற்றொரு தமிழனே இழிவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மாதிரியான வண்ணத்தையும், உருவத்தையும் யாரும் பிறப்பதற்கு முன்பாக தீர்மானித்து உயிராய் உருவெடுக்க வில்லை. அது ஒருவகையில் இயற்கையான ஒரு நிகழ்வு. 

உடலியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்யும் நீங்களும், ஒருநாள் இழமையான/ அழகான உங்களது உடலை இழக்கத்தான் போகிறீர்கள். முதுமையான காலத்தில், நீங்கள் விமர்சித்த அதே விலங்கினத்தின் தோற்றம் உங்கள் மீதும் ஏற்படக்கூடும். 

உங்களுக்கு ஒருவரை பிடிக்காத போது, அதை விமர்சனம் என்ற போர்வைக்குள் மிகவும் கீழ்த்தரமான முறையில் தாக்குவது, உங்களது கீழ்த்தரமான புத்தியையே அது காட்டும். 

சமீப காலமாக, இந்த கணினியின் துணையோடு, குறிப்பிட்ட ஒருசில நடிகர்களை அவர்களின் முகத்தோற்றத்தையும், உடலியல் கூறுகளையும் மிகவும் அருவருக்க தகுந்த வகையில் சித்தரித்து அதை ஒளிப்படமாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது குரூர புத்தியை வெளிக்காட்டி வருகிறார்கள் ரசிகர் என்ற முகமூடியில். பதிலுக்கு, இன்னொரு நடிகரின் ரசிகர் பட்டாளங்களும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்த, வேறொரு ஒழிப்படத்தை உருவாக்கி தங்களை மேதாவிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதற்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் குழுமம் அதை ஆதரிப்போது போன்றே தெரிகிறது. குறிப்பாக விஜய், அஜித், சூர்யா தான் இப்போதைக்கு இவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார்கள். 

இது போன்ற கீழ்த்தரமான, முகம் சுழிக்கும் வகையில் செயல்படும் நபர்களை யார் தட்டிக்கேட்பது யென்ற போட்டியில், யாருமே கண்டுகொள்வதில்லை. மாறாக அதை ஆதரிப்பது போல அமைதி காப்பதும் ஒருவகையில் ஆபத்தில்தான் முடிய போகிறது என்பது மட்டுமே நிதர்சனம். ஆனால், அதை யாருமே புரிந்து கொண்டது போல தெரியவில்லை. 'இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்?' யென்று நானும் மற்றவர்களை  போலவே அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்