சாதி வெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி வெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 மார்ச் 2016

சாதி மறுப்பு காதல்!


சாகடிக்கும் வரை காத்திருந்து அவன் சாதி எதுவென ஆராய்ந்த பின்பே புரட்சியாளர்களாக உருவெடுக்கலாமா? வேண்டாமா? என்பதையே முடிவு செய்கிறார்கள், ஈனபுத்தி கொண்ட நடுநிலை முகமூடிகள்.

இன்றைக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுபவர்களில் எத்தனை பேர், சாதிவெறி பிடித்த அரசியல் பொறுப்பாளர்களின் பொதுமேடை பேச்சுக்களை கவனித்தது இருக்கிறீர்கள்? "கவுண்டனை வெட்டு; கவுண்டச்சியை கட்டு. தேவனை வெட்டு, படையாட்சியை வெட்டு, அவனுங்க வீட்டு பொண்ணை கட்டு." இப்படியாக ஊரூராக பேசி இளைஞர்களின் எண்ணத்தை சீர்குலைப்பதை பற்றி எந்த நடுநிலை பேசும் நபர்களாவது எதிர்ப்பு தெரிவித்து பேசியதுண்டா? இந்த மூன்று சாதி பெண்களை கட்டுவதால் இந்த மூன்று சாதிகளும் முற்றிலுமாக ஒழிந்துவிட போகிறதா என்ன? என்பது எனக்கு புரியவில்லை.

காதல் என்ற புனிதத்தை சீர்குலைக்கும் நோக்கில் சாதிவெறி பிடித்த நயவஞ்சகர்கள் பொதுமேடை அமைத்தும், வாராந்திர கூட்டம் ஒருங்கிணைத்தும் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். காதல் என்பது இயல்பாக ஆண் - பெண் இருவருக்குள் வரும் ஆழ்நிலை மனவோட்டத்தை சார்ந்தது. அதை குறிப்பிட்ட இந்த மூன்று சாதிகள் மீது மட்டும்தான் வர வைக்க சிலர் சாதி அமைப்புகள் நடத்துவதை ஆண்மையுள்ள எந்த நடுநிலைவாதியாவது வாயை திறந்தது உண்டா?

இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு எத்தனையோ 'சாதி மாற்று காதல் திருமணங்கள்' இங்கே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இருபது வருடங்கள் ஆசையாசையாய் வளர்த்தெடுத்த பெண்ணை தன் குடும்ப சூழலுக்கு ஒத்துவராத யாரோவொரு பெயர் தெரியாத ஒருவனுக்கு மணம் முடிக்க எந்த தாய்தகப்பனும் விரும்புவதில்லை என்பதே உண்மை. மாறாக, பெற்றோரின் சம்மதம் வாங்காமல் காதல் திருமணம் செய்ய துடிக்கும் ஆர்வமும் அதன் பின்னாலுள்ள மர்மமும் என்ன?

காதல் கொண்ட ஆண் பெண் இருவருக்குள்ளும் ஒத்த மனநிலை வந்த பின்னால், அந்த பெண் வீட்டாரோடு நேரடியாக சென்று பெண் கேட்டு முறைப்படி திருமண செய்யாமலேயே, ஆசை வார்த்தை சொல்லி வீட்டை விட்டு அழைத்து வருவதால் யாருக்கு லாபம்? ஒரே சாதியில் காதல் செய்யும் ஏழை ஆணுக்கு பெண் தர, அதே சாதியை சேர்ந்த பெண் வீட்டார் மறுக்கும் பல சம்பவங்களை ஊரெங்கும் பார்த்துதானே வருகிறோம். எதார்த்தம் இப்படி இருக்கையில், ஒரு குறிப்பிட்ட மூன்று சாதி பெண்களின் கற்பை, காதல் என்ற பெயரில் சூறையாட சொல்லும் குறிப்பிட்ட சாதிவெறி அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் பொறுக்கிகளை வெட்டி இருந்தால் மகிழ்ச்சியடைந்து இருக்கலாம். ஆனால், சாதிவெறியை ஏவிய 'வில்' பத்திரமாக நடுநிலை புரட்சி என்ற பெயரில் பிணத்தில் மீண்டுமொரு சாதி வன்மத்தை விதைத்து கொண்டிருக்க, அப்பாவி 'அம்புகள்' வீழ்த்தப்படுவது தான் வேதனையான விசயம்.

சாதிவெறியன் என்றும் காட்டுமிராண்டி என அறியப்படும் சாதிகளை சேர்ந்த தமிழ் சாதி உறவுகளே, தயவு செய்து அம்புகளை நோவாதீர்கள். முதலில் வில்லை உடைத்தெறியுங்கள். அதன்பிறகு எல்லாமும் சரியாகும்.
என்னதான் தமிழ் சாதிகளின் ஒற்றுமையையும், தமிழ் தேசியத்தையும் பேசினாலும், 'சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டி சாதி' என்று ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட சாதிசார் மக்களை அடையாளப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியை செய்யும் போலி தமிழ்தேசிய முகமூடிகள் இருக்கும் வரை எதுவும் இங்கே சாத்தியமில்லை.

”இயற்கையாக
மனதில் எழாத அன்பை
திட்டமிட்டு உருவாக்கி
சாதி மறுப்பு என்ற பெயரில்
செய்யப்படும் காதல் திருமணங்கள்
நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!”


- இரா.ச.இமலாதித்தன்

18 அக்டோபர் 2014

தேவனும் தொட்டி மீனும்!

தேவர் சாதியினரை பழமைவாதி எனவும், தொட்டி மீன்கள் என்றும் சிலர் இங்கே சொல்வதை அறிய முடிகின்றது. எனக்கு இந்த தொட்டி மீன்களை பற்றியும் தெரியும். கூடவே விலாங்கு மீன்களை பற்றியும் தெரியும். ஏனெனில் தொட்டி மீனாவது பழமைவாதி போல கிணற்று தவளையாக இருந்துவிடும். ஆனால் இந்த விலாங்கு மீன் என்பது, மீனுக்கு முகத்தையும் – பாம்புக்கு வாலையும் காட்டி உயிர்பிழைக்கும். அது போலத்தான் இங்கே பல சாதி ஒழிப்பு போராளிகள் இருக்கின்றனர். வெளியில் தலித்/ சிறுபான்மை/ சாதி ஒழிப்பு/ ஆதிக்க சாதிவெறி யென பேசி விட்டு, சாதிய அடிப்படையில் கிடைக்கும் சலுகைக்கு பின்வாசலை ஏறுவர்.

தேவன் என்பதில் என்ன போலி பெருமை இருக்கின்றது. இதில் என்ன போலியை கண்டு பிடிக்கின்றனர் என்பதே தெரியவில்லை. வழி வழியாக என் பாட்டன் அடைக்கலத்தேவன், தாத்தன் இராமமிர்த தேவர், என தந்தை வழியாக உபயோகப்படுத்தி வந்த தேவன் என்ற பட்டத்தை நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? இதை பெருமையாகவோ – சிறுமையாகவோ – போலியாகவோ நான் நினைத்ததில்லை. இது எனக்கான அடையாளம் அதில் பெருமை என்று மற்றவர்கள் நினைத்தால் நான் செய்ய முடியும்? அதிலும் போலி பெருமையென அவர்கள் சொல்வதில் எனக்கு எந்தவித கவலையுமில்லை. இந்த அடையாளம் தேவையா என்று அவர்களும் பதிலுக்கு கேள்வி கேட்கக்கூடும். அடையாளமில்லாமல் இங்கே எதுவுமில்லை. அது உயிருள்ள அனைத்துக்கும் ஓர் அடையாளமுண்டு. அதுபோலத்தான் இந்த தேவன் என்பதும். இங்கே தேவன் என்பதால் எந்த போலியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

 
இங்கே பெரும்பாலானோரின் எண்ணமாக ஆட்சிபீடத்தில் இருக்கும் தேவரின அரசியல் வாதிகளை பற்றியே பேசுகின்றனர். எதார்த்தமாக யோசித்து பார்த்தால், பணம் பதவி புகழ் என்பதெல்லாம் கிடைக்கும் என்று தோன்றினால் சாதி/மத வேறுபாடின்றி எவன் காலிலும் விழ எந்த மத/சாதிக்காரனும் காத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதுபோலத்தான் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தேவரின தலைவர்களும் தங்களது இடத்தை தக்க வைத்து பணம் பதவி புகழை சம்பாரிக்க ஜெயலலிதா/கருணாநிதி என பலரது காலிலும் விழுந்து கிடக்கின்றனர்.

இதில் இங்கே அடிமையாக இருக்கும் அடிமை அடையாளமான ஓபிஎஸ் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. வேண்டுமென்றால், தேவர் சாதியை சார்ந்த ஒரு ஆள், தமிழக முதலமைச்சராக இருந்தார் என பின்னாட்களில் சொல்லிக்கொள்ள மட்டுமே உதவும். மத்தப்படி எவன் ஆட்சியில் இருந்தாலும் எவனுக்கும் லாபமில்லை. அவன் என்ன சாதியாக இருந்தாலும்… இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஓபிஎஸ் போன்றோர் தான் ஒட்டுமொத்த தேவரினத்தின் அடையாளமென நினைப்பதும், இந்த சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் என்றும் செம்மறி ஆட்டு மந்தை போன்ற எண்ணத்தை மனதில் இருந்து தகர்த்தெறிய முனையுங்கள். அதை விட்டுவிட்டு, சாதிவெறியன் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், சாதி பாகுபாடற்ற மனநிலையில் உள்ள பல தேவர் சாதி தமிழனை, இன்னும் சாதி வெறியனாக மாற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே நிதர்சனம்.


- இரா.ச.இமலாதித்தன்