நடிகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 மார்ச் 2017

ஓர் அரசியல்வாதி உருவாகின்றான்!






கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம் இதெல்லாம் இருக்காதா? தன்னெழுச்சியாக இளையோர் கையிலெடுத்து வெற்றிக்கண்ட ஜல்லிக்கட்டு போரட்டத்தை, தன்னுடைய சுயலாபத்திற்காகவும், புகழ் போதைக்காகவும் சுய இன்பம் செய்து கொள்வது போல கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கும்மியடித்து விட்டால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ஆகிவிட முடியுமா? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல, 'ஒரு கோடி ரூபாய் தரேன்!' என வாயாலேயே வடை சுட்டுவிட்டால் மக்கள் எல்லாரும் நம்பி விடுவார்களா என்ன? சூப்பர் ஸ்டாரென அடையாளப்படும் ரஜினியையே மக்கள் அனைவரும் தற்போதைய சூழலில் ஏற்று கொண்டுள்ளனரா என்பதே கேள்விக்குறி தான். தமிழ்நாட்டை பொறுத்த வரை மக்கள் ஏற்று கொண்டுவிட்டால், மாட்டு சாணம் கூட (பிடி பிள்ளையார்) கடவுள் தான். வக்கிருந்தால், சென்னைக்காரன் என பில்டப் கொடுக்கும் லாரன்ஸ், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மக்கள் சூப்பர் ஸ்டாரென தன்னை நிரூபிக்கட்டும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மானங்கெட்ட பொழப்பு எதற்கு? த்தூ...

03 மார்ச் 2015

அஜீத்தின் இரண்டாவது குழந்தை!

நடிகனோட படுக்கையறை வரைக்கும் போற புத்தி தமிழனுக்கு மாறாவே மாறாது. அஜீத் கல்யாணம் பண்ணின உடனேயே குழந்தை பெத்துக்கலன்னு ஒருமாதிரியா பேசுனாய்ங்க. இப்போ ரெண்டாவது குழந்தையை பெத்தக்கிட்ட உடனே குட்டித்தல, சின்னத்தலன்னு வேறமாதிரி பேசுறாய்ங்க. ஒரு தனிமனிதனின் குடும்பத்திற்கு சம்பந்தபட்ட குழந்தை பெத்ததையெல்லாமா ட்விட்டர் ட்ரெண்ட்ல கொண்டுவரணும்ன்னு துடிப்பாய்ங்க? குழந்தை பெத்துக்கிறதெல்லாம் அவ்ளோ பெரிய சாதனையா என்ன? மன்னராட்சி காலத்திற்கெல்லாம் கூட இளவரசன் பொறந்ததா ஊர் முச்சந்திக்கு வந்து ஒருமுறை தண்டோரா தான் போடுவாய்ங்க. ஆனால் இவிய்ங்க, மூச்சு முன்னூறு தடவ அந்த தாம்பத்ய சாதனையையே பேசிக்கிட்டு கிடக்குறாய்ங்க. ஓர் ஆணும், பெண்ணும் இணைந்தால் குழந்தை பிறக்கத்தான் செய்யும். அதுதான் உடலியல் சார்ந்த மரபு. அந்த காலத்துல நம்ம தாத்தா பாட்டிகயெல்லாம் பத்து பதினைஞ்சு புள்ளக்குட்டிகள பெத்து போடலயா? 

இதை சாதனை மாதிரி பேசுற பொதுபுத்தியை திணிப்பது ஒரு காலத்தில் ஊடகங்களின் பங்கு இருந்தது. ஆனால், இன்னைக்கு நிலைமையே வேற. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் விவாதிக்கப்படும் விசயங்களை தான், தொலைக்காட்சி / எழுத்து ஊடகங்களே முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், அதை புரிஞ்சிக்காத இவிய்ங்களுக்கெல்லாம் எதை பெருசா பேசணும்? எதை விவாதப்பொருளாக மாத்தணும் என்பதை பற்றியெல்லாம் தெளிவே கிடையாது. யோசிக்காமலேயே இன்னொரு மாநிலத்து காரனை, இன்னொரு மொழி பேசுறவனையெல்லாம் தலையில் வைத்து கொண்டாட மட்டும் தான் இவிய்ங்களுக்கு நேரம் இருக்கு. நடிப்பு என்பது ஒரு கலை சார்ந்த தொழில்; அந்த தொழிலை செய்றவனையெல்லாம் காலம் காலமா தலைவனாக்கித்தானே, இன்னைக்கு தமிழ்நாட்டோட நிலைமையே தலைகீழா கிடக்கு. இனியும் அப்படி நடத்தத்தான் துடிக்கிறாய்ங்க போல.

என்னமோ போய்ங்கய்யா!