ஹிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 டிசம்பர் 2017

புத்தனும் சித்தனும்!



பத்து லட்சம் பேரை அம்பேத்கர் பெளத்தர்களாக மதமாற்றம் செய்ததை மிகப்பெரும் சாதனையாக இசுலாமிய தலைவர்களுக்கிடையே மேடையில் சொல்லும் திருமாவளவன், ஏன் அதே அம்பேத்கர் அந்த பத்து லட்சம் பேரையும் இசுலாம் மதத்திற்கு மாற்றவில்லை என்பதை பற்றியும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாம்.
ஹிந்து மத கோட்பாட்டின் படி வகுக்கப்பட்டுள்ள பத்து அவதாரங்களில் ஒருவராக புத்தரை சேர்த்து பலகாலம் ஆகிவிட்டதை கூட கவனிக்காமல் பெளத்தத்திற்காக திருமாவளவன் மார்கெட்டிங் செய்திருந்த அவருடைய பேச்சு அர்த்தமற்றதாகவே தெரிந்தது. அதைத்தவிர திருப்பதி - காஞ்சிபுரம் - திருவரங்கம் கோவில்களை இடித்துவிட்டு பெளத்த விகாரங்களாக மாற்ற வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் அந்த கண்டன உரையில் தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் 'உருவ வழிபாட்டையும் - கோவில்களையும் - வேதங்களையும்' கடுமையாக எதிர்த்த சித்தர்கள் ஜீவசமாதியான இடங்கள் தான் இவை என்பதையும் திருமாவளவன் இனி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
தகவலுக்காக,
(புத்தரை விட காலத்தால் முற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களில் திருமாவளவன் சுட்டிக்காட்டிய பகுதிகள்... திருப்பதி - கொங்கண சித்தர், காஞ்சிபுரம் - கடுவெளி சித்தர், திருவரங்கம் - சட்டைமுனி சித்தர்)
புத்தர் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காமல் புத்தரையே கடைபிடித்த இலங்கையால், தமிழின அழிப்பையே செய்ய முடிந்ததென்பதை புத்தரின் ஆன்மாவும் கூட அறிந்திருக்கும். உலகுக்கே தெரிந்த இந்த உண்மை திருமாவளவனுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த நன்றி!

02 டிசம்பர் 2017

மதமென்பது...

ஆதித்தமிழனுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை. ஆதிசங்கரர் தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கினார். சக்தி வழிபாட்டை சாக்தம் என்றும், முருக வழிபாட்டை கெளமாரம் என்றும், கணபதி வழிபாட்டை கணபத்யம் என்றும், சூரிய வழிபாட்டை செளரம் என்றும், பெருமாள் வழிபாட்டை வைஷ்ணம் என்றும், சிவ வழிபாட்டை சைவம் என்றும் ஆறு வழிபாட்டு குழுக்களை ஒரே வட்டத்திற்குள் அடைத்தார். அதற்கு முன் வரை எல்லாம் வேறு வேறு தான். ஐவகை நில தெய்வங்களான குறிஞ்சி -
(சேயோன்) முருகன் , முல்லை - (மாயோன்) திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை வழிபாட்டை தான், சமகிருதத்திற்கு முன்னோடியான தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
ஆதித்தமிழனுக்கு இயற்கை வழிபாடு தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு நெருப்பு, பிறகு ஐம்பெரும்பூத வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு என்ற நாட்டார் வழிபாடு தான் இருந்தது; இருக்கிறது. இதில் எங்கேயும் ஹிந்து மதம் வராது. பிற்காலங்களில் சமண-பெளத்த ஆதிக்கத்திலிருந்து, காரைக்கால் அம்மையார் மற்றும் சைவ குரவர்கள் நால்வராலும், நாயன்மார்களாலும் தான், இன்றைய சைவ வழிபாடு கூட மீளெடுக்கப்பட்டது. ஆழ்வார்களால் வைணவம் என்ற மாயோன் வழிபாடு கூட மீட்கப்பட்டது. சுடலை மாடன் என்ற நீத்தார் வழிபாடும், கருப்பசாமி என்ற திருமால் வழிபாடும், முனீஸ்வரன் என்ற சிவ வழிபாடும் தான் தமிழர்களுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சிவன் என்பதே ஒரு மன்னன் தான். தென் பாண்டியநாட்டை ஆண்டவன். அதனால் தான் தென்னாடுடைய சிவனானான் அவன். மற்றபடி ஹிந்து என்பது பல மொழி பேசிய, பல இனங்களை கொண்ட பல நூறு சிற்றரசு நாடுகளை ஒன்றிணைத்து ஹிந்தியா என்ற ஒற்றை நாடாக்கிய வல்லபாய் படேலின் யுக்திகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே இது.

09 ஜனவரி 2017

ஹிந்திய நாட்டிற்குள் அழித்தொழிக்கப்படும் தமிழ் பண்பாடு!

தமிழர்களின் தேசியத்திருவிழாவான பொங்கல் திருநாளை, கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து ஹிந்திய அரசு நீக்கியுள்ளது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி நாட்டில், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் மோடி சர்க்காருக்கு நன்றி. இதற்கு மேலுமா அவமானப்படுத்த வேண்டும்? ஏற்கனவே பல அடிகளை கொடுத்தீங்க. நாங்க என்ன திருப்பி அடித்தாமோ என்ன? எங்களையே ஏன் ஜி அடிக்கிறீங்க? நாங்க ஜெயலலிதா செருப்புக்கு மாற்றாக, தீபாவின் செருப்பா? சசிகலாவின் செருப்பா? என பரபரப்பாக தேடிக்கிட்டு இருக்கும் போது, நீங்க வேற ஏன் ஜி இப்படி பண்றீங்க?

மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகள்; அதில் பி.ஜே.பி.தான் பி.ஹெச்.டி முடித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு வேண்டுமென்று ஒருமித்து குரல்கொடுக்கும் போது, பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்குவதாக அறிவித்து இம்முறையும் மக்களை மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள், 100 பேருக்கும் மேலான தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சி காரணமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். வர்தா புயலால் தமிழக தலைநகரமே பாதிக்கப்பட்டு வறட்சி/புயல் நிவாரணம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பல கோடிகளை ஒதுக்கி இருக்கிறது மோடி சர்க்கார்.

கன்னடத்திற்கு ஆதரவாக காவிரி ஆணையம் தேவையில்லையென சொல்லிவிட்டு, கெளதமியை சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடியால், தமிழ்நாட்டு விவசாயிகளையோ, எம்.பி.க்களையோ சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமல் போனதுதான் ஆச்சர்யம். கடைசியாக காவிரி பிரச்சனையின் போது, தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தி, தமிழ் இளைஞனை கட்டி உதைத்து, பலரது உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய கன்னட வெறியர்களை பற்றி வாய் திறக்காமல், தமிழர்கள் அத்துமீறி வன்முறை செய்கிறார்கள் என்று சொல்லி, தொடர்ச்சியாக தமிழர் விரோத இனவெறி அரசியலை செய்யும் மோடி சர்க்கார், கனவிலும் கூட ஆட்சி அதிகாரத்திற்கு இனியொரு போதும் வந்துவிட கூடாது என இறைவனை வேண்டுகிறேன். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்கு கேட்டு, பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஹோலி, ராம நவமி, தசரா, மகாசிவராத்திரி, மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, குருநானக் ஜெயந்தி, ஹனுமந்த் ஜெயந்தி... இதெல்லாம் ஹிந்திய சட்ட விதிகளின் படி ஒருவகையில் ஹிந்து பண்டிகைகள் தான். எனக்கு ஐயனார் குல தெய்வம்; நானும் ஹிந்து. நீ கடவுள் மறுப்பாளர்; ஆனாலும் நீ ஹிந்து. வாழ்க ஹிந்துத்துவா! வல்லபாய் படேலாலும், இராணுவத்தாலும் கட்டாயப்படுத்தி ஹிந்தியா எனும் கூட்டாட்சி நாட்டில் எங்கள் தமிழ்நாட்டை இணைத்ததையும் ரத்து செய்ய முன்வாருங்கள் வட ஹிந்தியர்களே!

பிஜேபியையோ, நரேந்திர மோடியையோ, போலி ஹிந்துத்வாவையோ பற்றி விமர்சிப்பவரெல்லாம் ஈ.வெ.ரா. ஆட்களென்றோ, இசுலாமிய ஆட்களென்றோ நினைக்கும் பக்தாள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. ஆன்மீகத்தை பற்றியோ, ஆண்டவன் பற்றியோ ஏதுமறியாமல் அரைகுறை அறிவோடு, நாங்கள் ஹிந்து, நாங்கள் காவியென பெருமை பேசி குருட்டுத்தனமாக ஹிந்திய சர்க்காரின் கொள்கை முடிவுகளை ஆதரிப்பதால் யாருக்கு என்ன பயன்?

இங்கே தன்னை ஹிந்துயென வெளிக்காட்டிக்கொண்டு பெருமை பேசும் அனைத்து முட்டாள்தனமான வெறியர்களை விடவும், அதிகமான ஆன்மீக ஈடுபாடு எனக்குண்டு. அதை பற்றிய ஓரளவிற்கான தெளிவும் எனக்குண்டு. பிஜேபி என்ற கட்சி ஹிந்துத்வ கட்சி என்பதால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டுமா என்ன? போகிற போக்கை பார்த்தால், பிஜேபி மீது விமர்சனம் வைப்பவர்களெல்லாம் ஹிந்துவே இல்லையென சொல்லி விடுவார்கள் போல. நீங்கள் மட்டுமல்ல, யார் சொன்னாலும் சோ கால்டு ஹிந்து என அடையாளப்படுபவர்களில் 90% பேர் ஹிந்துக்களே இல்லை என்பதே உண்மை.

ஈரான் - மத்திய ஆசியாயென பல்வேறு பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மதம் ஹிந்துவாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதன் ஏகபோக உரிமையாளராக, கோவில் கருவறையின் முதலாளிகளான பார்பனர்களே உள்ளனர் என்பது தெரிந்த பின்னாலும், சிந்து நதிக்கரையில் வந்தேறிய கூட்டத்தால் உருவாக்கப்பட்ட மதத்தை தூக்கி பிடிப்பது ஏன்?

”சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.”

- சிவ வாக்கியர் (14)

“கோயிலாவது ஏதடா குளங்கலாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே”

- சிவ வாக்கியர் (35)

”இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!”

- சிவ வாக்கியர் (38)

”காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே”

- சிவ வாக்கியர் (132)

”மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா”

- சிவ வாக்கியர் (136)

வள்ளலார் உள்பட சித்தர்கள் அனைவரும் கண்டுணர்ந்த மெய்ஞானத்தை விட இங்குள்ள ஹிந்துத்வா பேசும் அறிவுஜீவிகள் நிறையவே உணர்ந்து தெளிந்தவர்களென நினைக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

25 ஆகஸ்ட் 2016

ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோகம் தான், தர்ம புண்ணியமாக கணக்கிடப்படுகிறது. தமிழனெல்லாம் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த ஆரிய அட்டூழியங்களை ஒழிக்க வந்த 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறப்பை தீபாவளி ஆக்கியதோடு மட்டுமில்லாமல், அவரையே நரகாசுரனாக்கி நயவஞ்சக தீயை மூட்டி குளிர் காய்வதும் இதே ஆரியம் தான். இன்னும் எவ்வளவோ இருக்கு ஆரிய சூழ்ச்சி. வேற வழியில்லை. சிக்குண்டோம், ஹிந்து, ஹிந்தியா, ஹிந்தியென... உலக மொழிக்களுக்கெல்லாம் தகப்பன் மொழியான எம் தாய்மொழி தமிழை நீஷபாஷையென சொல்லி அழிக்க காலம்காலமாய் போராடும் தேவபாஷை சமஸ்கிருதமும் இம்மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும், துரோகத்தின் எச்சமாய்!

- இரா.ச. இமலாதித்தன்

02 ஆகஸ்ட் 2016

திருவள்ளுவர் சமணரா? திருக்குறள் சமண நூலா?!

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” - முதுமொழி

பல்லுக்கு உறுதி தரக்கூடியவைகளில், ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலவே நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதியென சொல்லிருக்கிறார்கள். இங்கே ”நாலும் இரண்டும்” என்பதில், நாலும் என்பது நான்கு அடிகளை கொண்ட நாலாடியாரும், இரண்டும் என்பது இரண்டு அடிகளை கொண்ட திருக்குறளும் குறிப்பிடப்படுகிறது. மேலும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை என்னால் முடிந்தளவுக்கு சிறிய ஒப்பீடு செய்திருக்கிறேன். அவை;

01. இந்த இரண்டுமே பதினென் கீழ் கணக்கு நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன.

02. இந்த இரண்டிலுமே, பாடல்களெல்லாம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

03. இந்த இரண்டு அறநூல்களுமே, அறத்துப்பால் - பொருட்பால் - இன்பத்து பால் என்ற மூன்று பெரும்பிரிவுகளை கொண்டுள்ளன.

04. நாலடியாரில், அறத்துப்பால் - 13 அதிகாரங்களும், பொருட்பால் - 24 அதிகாரங்களும், இன்பத்துப்பால் - 3 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.

05. திருக்குறளில், அறத்துப்பால் - 38 அதிகாரங்களும், பொருட்பால் - 70 அதிகாரங்களும், இன்பத்து பால் - 25 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது.

06. நாலடியார், மொத்தமாக 40 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 400 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. திருக்குறள், 133 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 1330 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

07. இந்த இரண்டிலுமே, பொருளுக்கு அதிகமான பாடல்களும், அதற்கடுத்து அறத்திற்கு ஓரளவு மிதமான பாடல்களும், மூன்றாவதாக இன்பத்திற்கு குறைவான பாடல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

08. இதிலுள்ள, நாலடியார் என்ற நூலை இயற்றியது சமண முனிவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. அதுபோலவே திருக்குறளை இயற்றியதும் சமண மதத்தை சார்ந்த திருவள்ளுவர் என்று அழைக்கப்படும் ஒரு சமணத்துறவி தான் என்பது என் அனுமானம்.

- இரா.ச.இமலாதித்தன்

22 ஏப்ரல் 2016

கோவில்களுக்கு பின்னுள்ள அரசியல்!



-01-

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் 'சடாயு குண்டம்' என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இது தவிர, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரையின் முனையின் 'ராமர் பாதம்' என்ற உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை இராமாயணத்தில் இராமர் இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும், அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
திருமறைக்காடு என்ற எங்கள் ஊரையெல்லாம் இந்த வடக்கத்திய மேப்பில் காணவில்லையே?! இதுல எது உண்மை? எது பொய்?

-02-

முகாலயர்களின் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ சிவன் கோவில்களை ஆக்கிரமித்து தான் மசூதிகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்பதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ, அதற்கு நிகரான மற்றுமோர் உண்மை என்னவெனில், முகலாயர் காலத்திற்கு முன்பாக வே கணக்கிலடங்கா சமண கோவில்களை ஆக்கிரமித்து தான் பல சிவன் கோவில்களும் கட்டியெழுப்பப்பட்டன என்பது தான்!

- இரா.ச.இமலாதித்தன்

15 ஜனவரி 2016

பொங்கல் வாழ்த்துகள் 2016!

தன்னோட மனைவியோடு உறவு வைத்து கொள்வதா? வேண்டாமா? என்பதை பக்கத்து வீட்டுக்காரன் சொல்வது போன்ற ஒரு சூழல், தமிழரின் நிலை ஆகிபோனது. இன்னும் கொஞ்ச நாளில் பொங்கலுக்கு கூட தடை சொல்லலாம், சல்லிக்கட்டை போல...

இதற்கெல்லாம் ஒரே காரணம், ஹிந்து என்ற மதத்திற்காக ஆதித்தமிழர்களின் ஆன்மீகத்தை மறந்தது தான். நூறு வருட ஹிந்தியன் என்பதற்காக, பல்லாயிர வருட தமிழன் என்ற அடையாளத்தை இழந்தது தான். தமிழருக்கென தனி இன அடையாளங்களை மீட்டெடுக்க இனியும் தவறினால், ஆரிய விழாக்களை மட்டுமே தமிழன் கொண்டாட முடியும்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள், தீபாவளி வாழ்த்துகள், ஹோலி பண்டிகை வாழ்த்துகள் என சொல்லப்பழகி ஏற்கனவே பாதி அடையாளங்களை ஹிந்தியன் - ஹிந்து என இழந்தாகி விட்ட தமிழனுக்கு இந்த பொங்கலும் ஒரு கேடா? என்று காறி துப்பிக்கொண்டிருக்கும் ஆரிய - வடுகர்களுக்கு மத்தியில் தான், இது மாதிரியான தமிழர் விழாக்களை நாம் கொண்டாடி வருகிறோம்.
பிரபஞ்சமும் இயற்கையும் கூடிய முன்னோர்களை நினைத்து சூரியனுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டு திருநாளான தைப்பொங்கல் வாழ்த்துகள்!
ஒரு பக்கம் ஆடு மாடுகளை குளிக்க வைத்து, அலங்கரித்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கறிக்கடை வாசல்களில் ஆட்டுக்கறி, கோழிக்கறி வாங்க வரிசை கட்டி நிற்கிறார்கள்.

இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

09 நவம்பர் 2015

நரகாசுரன் யார்? தீபாவளி, தமிழர் பண்டிகையா? - ஓர் ஆய்வு.


நராகசுரனை கொன்றொழித்த நாள் தான் தீபாவளியென வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த புராண வரலாறெல்லாம் முற்று முழுதாக உண்மையில்லை. புராணங்களெல்லாம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஏதாவதொரு கதாபாத்திரத்தை கடவுளோடு ஒப்பிட்டு நம்பும்படியாக செய்வதுதான் ஆன்மீக நூலோரின் கடமையாக இருந்தது.

வள்ளுவன் சொன்ன அந்த ஆதிபகவனான சிவஜோதியை முதலாம் தீர்த்தங்கர் ரிஷபதேவரான நந்திதேவர் முதற்கொண்டு 24ம் தீர்த்தங்கராக அவதரித்த மகாவீரர் வரையிலும் சமணம் என்ற மார்க்க பெயரில் பாரத தேசமெங்கம் சாதி வேறுபாடின்றி உண்மையான ஆன்மீகத்தை அவரவர் தாய் மொழிகளின் வாயிலாகவே பரவ செய்தனர்.

இன்றைய நாட்களில் ஹிந்து பண்டிகைகளில் முதன்மையானதாக தீபாவளியே அறியப்படுகிறது என்பதற்கு, கத்தோலிக்க வாடிகனின் வாழ்த்து செய்திகளில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற நாளை நினைவு படுத்தவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்றும், இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பியது நாள்தான் தீபாவளி என்பதே பலரின் நம்பிக்கை.

ஹிந்து என்பது ஒரு மதமென அறியப்படும் முன், பாரதம் உள்ளிட்ட பழம்பெரும் நாடுகளில் ஆதிமதமாக சமணமே விளங்கியது. உலகில் மூத்தக்குடியென அறியப்படும் நம் தமிழர்களின் ஆதிமதத்தின் பெயரே ஆசீவகம் தான். அந்த ஆசீவகமும், சமணமும் ஒன்றே. அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என, தமிழின் பழைய அகராதிகளான, திவாகர நிகண்டும் - பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது.

"சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீவகரும் அத்தவத் தோரே"
- திவாகர நிகண்டு

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குக் கற்பித்த மகாவீரரை, 'வென்றவர்' என்ற பொருளில் 'ஜெயனா' என்று மக்கள் அழைத்தனர். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.சம்மணம் போட்டு தியானத்தில் இருப்பதால் ச(ம்)மணர் என்றும், அம்மணமாய் இருந்ததால் அ(ம்)மணர் என்றும், அன்றைய சமகாலத்தில் இவர்கள் அறியபட்டதாகவும் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்தில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்க, விடியற்காலையில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே இறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவர் முக்தியடைந்த நாளில், மக்கள் அனைவரும் வீட்டினுள் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர்.

தீப+ஆவளி =தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்று பொருள். மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்ததாலேயே தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது.

"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!"

- ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, (புத்தகம்: சமணமும் தமிழும்)

வர்ணாசிரமங்களை கொண்டு சாதிய அடிப்படையில் கடவுளை வணங்க மனிதனால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட போலி கொள்கைகளை உடைத்தெறிந்து, உண்மையான ஆதி மார்க்கத்தை வழிகாட்டிய 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் இறப்பானது, ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. அதனாலேயே, மகாவீரரை அசுரனாக்கி, பெருமாள் வதம் செய்ததாக பொய் பரப்புரையை புராணக்கதைகள் மூலமாக பரப்பிட காரணமாகவும் அமைந்தது. இது போன்ற பொய் புராண கதையை திருவோணம் பண்டிகையிலும் காணலாம். தமிழ் அகம்படி குலத்தில் உதித்த மாவலி சக்கரவர்த்தியின் இறப்பின் பின்னாலேயே கேரளத்தில் சமகிருதம் கோலோச்சியது. கேரள தமிழ் மன்னனை கொன்றொழித்த நாளே ஓணம் பண்டிகையென அம்மக்களையே நம்ப வைத்தது கூட பொய் புராணக்கதைகள் தான் என்பதும் சிந்திக்க வேண்டிய விசயமாகும். எது எப்படியோ, தமிழர்களின் ஆதி மதமான ஆசிகவத்தின் இறைத்தூதரான மகாவீரரின் நினைவுநாளை தீபமேற்றி மனதில் ஏற்றுவோம் அவரது நினைவேந்தலை!

கொல்லாமை வேண்டாமென்று சொன்ன மகாவீரரின் நினைவுநாளிலேயே அசைவம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்; இதுதான் கால மாற்றம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழின உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

- இரா.ச.இமலாதித்தன்

25 மார்ச் 2015

உலகில் மதம் எனும் அரக்கன்!

கொள்ளையடிப்பதற்காக நாடு கடந்து போர் புரியும் இடத்தில், தங்களது மார்க்கத்தை ஏற்காதவர்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து தன் கருவை வளர செய்தது ஒரு கூட்டம். ஒருபடி மேலாக, இன்னொரு மதவெறி கூட்டம், நாடு விட்டு நாடு வந்து வியாபாரம் செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அங்குள்ள மக்களிடம் தன் மதத்தையும், மொழியையும் அன்பெனும் ஆயுதம் கொண்டு நாகரீகம் என்ற பெயரில் திணித்தது. அந்த மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், அறிவையும் கண்டஞ்சி பூர்வகுடிகளின் வம்சாவழிகளையே கொத்து கொத்தாக நயவஞ்சகத்துடன் இனவழிப்பு செய்தது. இன்றைக்கு உலகளாவிய பிரச்சனைக்கு இந்த இரண்டு மதங்களும் காரணமாக இருந்த போதும், இரண்டாவதாக சொல்லப்பட்ட மதமே எல்லாவற்றுக்கும் ஊன்றுகோலாக இருந்து உலகையே ஆட்டிவிக்கிறது. இந்த மாதிரி அடிக்கிற ஆடி காத்தில், சாதியற்ற ஆதிகுடியான அனைத்து தமிழனும் பாவம் தான்.

19 மார்ச் 2015

திராவிடமெனும் தீரா விடம்!



உயிர்பலி கூடாது!ன்னு சொன்ன வள்ளலார் இராமலிங்க சுவாமிகளும் ஹிந்து மதம் தான். ஆனால், ஹிந்து மதத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பின்னோக்கி சொல்லும் திராவிட கழக கொழுந்துகள், மாட்டை அறுக்கும் போராட்டத்தை தமிழ் புத்தாண்டான்று அரங்கேற்ற ஆயத்தமாகியுள்ளது. பகுத்தறிவு என்பது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற குறளின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். ”நான் சொல்றதையும் அப்படியே நம்பாத. அது உன் அறிவுக்கும் சரின்னு பட்டால் மட்டும் ஏற்றுக்கொள்!”ன்னு திராவிடர் கழகத்தை உருவாக்கிய ஈ.வெ.ரா.வே சொல்லியிருக்கிறார். ஆனால் வீரமணி போன்றோர் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது மாதிரியான புரட்சி(?)களையெல்லாம் ஓட்டாக்கி, எந்த கட்சிக்காவது தந்துவிட கணக்கு போடுகிறார். தப்பு கணக்கு என்றைக்கும் பலிக்க போவதில்லை.

திராவிட கழகத்திற்கு உண்மையாகவே ஹிந்துத்துவ ஆதிக்க பொது புத்தியை எதிர்க்க வேண்டுமென்ற கொள்கை இருந்தால், நேருக்கு நேராக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளுக்கு சவால் விடுத்து பாரிய அளவில் போராட்டம் நடத்தலாம். ஆனால், ’தமிழ் பெண்களின் கழுத்திலுள்ள தாலியை அறுப்பேன்’ என போராட்டம் செய்வதை விட கேவலமான செயல் வேறேதுமில்லை. உண்மையாகவே கி.வீரமணிக்கு பகுத்தறிவு இருந்தால், பெண்களின் மாராப்புக்குள் ஒளிந்து கிடக்கும் தாலியை அறுப்பதை விட, பெண்களின் கண்களை தவிர மற்ற அனைத்தையும் மறைத்து அடிமை போல ஆணாதிக்க மனோபாவத்தில் நடத்தும் இசுலாமியர்களின் பர்தாவை அகற்றும் போராட்டத்தை அல்லவா நடத்திருக்க வேண்டும்? திராணி இருந்தால் இது போன்ற பெண்ணடிமை தனத்தை எதிர்த்த ஈ.வெ.ரா.வின் கொள்கையை செயலில் காட்டலாம். மாறாக, காலம் காலமாக பண்பாட்டு காலச்சாரத்தின் அடையாளமாக இருக்கும், பசுக்களையும், தாலிகளையும் அறுத்துதான் பகுத்தறிவை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை திராவிடர் கழகமும் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. எல்லாவற்றும் எதிர்வினை உண்டு. அதிலும் குறிப்பாக அரசியலாக்கப்படும் எல்லா வினைகளுக்கும், கண்டிப்பாக எதிர்வினைகளும் மோசமாகவே இருக்கும் என்பது வரலாறு. பார்க்கலாம், திராவிட கழகத்தின் எதிர்காலத்தை???

- இரா.ச.இமலாதித்தன்

12 மார்ச் 2015

ஹிந்து!

-01-

ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இராவணன் புஷ்பரக விமானத்தை வைத்திருந்த பெருமைகளை பற்றி பேசிக்கிட்டு இருக்கிற இந்நேரத்துல, இராவணன் ஒரு பார்பனர்ன்னு இன்னொரு குரூப் சொல்லிக்கிட்டு கிடக்கு.

-02-

தகுதிக்கேற்ப கடவுள் பெயர் மட்டுமல்ல, கடவுளே மாறி விடுகிறது. பல புதுப்பணக்காரர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தான் குலசாமி!

-03-

தமிழ்நாட்டிலுள்ள வாகனங்களில் முன்னும் பின்னும் விநாயகருக்கு அடுத்தப்படியாக அதிகமாக இடம்பிடித்திருப்பது சமீபகாலமாய் சாய்பாபா தான்!

-04-

ரெண்டு பேருக்குள்ள ஏற்கனவே சண்டை இருக்குன்னு வச்சிப்போம். இந்த ரெண்டு பேருல ஒருத்தனை வேற எவனோ ஒருத்தன் அடிச்சாலும், மிச்சமிருக்க ஒருத்தன் மேல தான் அந்த பழிச்சொல் விழும். இது அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் தமிழ் சாதி மோதல்களுக்கு பின்னாலுள்ள திராவிட சூழ்ச்சிக்கும் பொருந்தும். அடுத்து, தற்போது "புதிய தலைமுறை தொலைக்காட்சி" அலுவலகத்தின் மீது வீசப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டுக்கும் பொருந்தும். இனி எவன் தாக்குதல் நடத்தினாலும், அதற்கு ஹிந்து அமைப்புகள் தான் பலியாடு.

-05-

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பாக, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு சென்று காரில் திரும்பியவர்களை மதுரை அருகே வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசி அப்பாவி இளைஞர்களை கொலை செய்த சாதிவெறி கும்பலை பற்றி வாயையே திறக்காமல், அதை ஆதரித்து எதிர்வினையென உசுப்பேற்றி விவாதம் நடத்தி கொண்டிருந்த சன் நியூஸ், புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நியூட்டனின் மூன்றாம் விதி இனியாவது நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி.

-06-

கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத கூட்டம் தான், கோயிலுக்குள் நுழைய விட மறுக்கிறது இன்னொரு கூட்டத்தை! கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது மாற்றம் வர தொடங்கியுள்ளது. மாற்றம் தான் உலகில் நிரந்தரமானது என்பதால், காத்திருப்பும் அவசியமாகிறது.

இந்த ஆறு விசயங்களும் தனித்தனியானவை. ஆனால், அனைத்தும் ஒருவித தொடர்புண்டு

30 ஜனவரி 2015

தமிழன் ஹிந்துவா?

தைப்பூசம் அன்னைக்கு இந்தியாவெங்கும் சேயோன் திருமுருகனின் ஊர்வலம் நடைபெற இந்துத்துவா அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா? குறைந்த பட்சம் ஊர்வலம் எடுக்கச்சொல்லி குரலாவது கொடுக்குமா? நம்ம தாய்மொழி தமிழை பேசின முப்பாட்டான் முருகனுக்கு ஊர்வலம் எடுக்க வக்கில்ல. ஆனால், உடலிலுள்ள நாபிக்கமலத்தை உருவகப்படுத்திய கதாப்பாத்திரமான விநாயகருக்கு இந்தியா முழுக்க ஊர்வலம் எடுக்குறாய்ங்க. அந்த ஊர்வலத்துல ஏற்படும் கலவரத்துல அடிச்சிக்கிட்டு போலிஸ்கிட்ட மாட்டி கேஸ் ஃபைல் ஆவுறதெல்லாம் பார்பனர் அல்லாதவன் தான் என்பதையும், இங்கே எந்த தமிழனும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல.

தமிழுக்கு சமமான மொழியென்று சமகிரத மொழியை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொண்ட பிறகும், உலகின் மூத்த செம்மொழியான தமிழை விட சமகிருத மொழிதான் உலகின் மூத்த மொழியென்று எப்படியாவது நிறுவினால் தான் ஹிந்துத்துவா ஆட்களின் வெறி அடங்குமென நினைக்கிறேன். மேலும், சமகிருதத்தை ஹிந்தியாவின் ஆட்சி மொழியாக்கினால் தான் ஆரிய தாகம் அடங்கும் போலிருக்கிறது.

10 பிப்ரவரி 2014

என் பார்வையில் ஹிந்து மதம்!




இளையராஜாவின் மகனே இசுலாமுக்கு மாறிவிட்டாரே! என்பது போன்ற பெருமைவாத பேச்சுகளிலோ, இளையராஜாவின் மகன் இசுலாமுக்கு மாறலாமா? என்பது போன்ற சிறுமைபடுத்தும் பேச்சுகளிலோ எனக்கு உடன்பாடில்லை. இளையராஜாவோ - யுவன்சங்கர் ராஜாவோ, எந்தவொரு தனிமனிதனை நம்பியும் எந்த மதமும் இல்லை. குறிப்பாக உலகிலேயே அதிகமான மதமாற்றங்கள் நடைப்பெற்று இருக்கும் ஒரே மதம், ஹிந்து மதமாகத்தான் இருக்கக்கூடும்.

மதம் எனது இறைவனை வழிபட வேண்டிய ஒரு வழிமுறை அல்லது மார்க்கம். எல்லா மதங்களிலும், சாமனியனுக்கும் இறைவனை அடையாளப்படுத்துவதே முதற் நோக்கமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட உயரிய நோக்கத்தை அடைய, ஆசை வார்த்தை காட்டியோ - பயத்தை ஏற்படுத்தியோ மதமாற்றத்தால் செய்ய வேண்டிய அவசியம் உண்மையான ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு தேவையில்லை. ஆனால், இங்கே பெரும்பாலான மதமாற்றங்கள், இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த யுக்திகளை கையாண்டே நடைப்பெற்று கொண்டிருக்கின்றன என்பது வேதனையான விசயம்.

இங்கே, நடைப்பெற்று கொண்டிருக்கும் அநேக மதமாற்றங்கள் ஹிந்து மதத்தை குறிவைத்தே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அறிவியலும் - கலச்சாரமும் - பழமைவாதமும் - விஞ்ஞானமும் - மெய்ஞானமும் ஒருசேர கலந்திருப்பது ஹிந்து மார்க்கத்தில் மட்டும் என்பதுதான் குறிப்பிடதக்க விசயமாகும். மேலும், ஹிந்து மார்க்கத்தை குறை சொல்லும் பலர் வைக்கும் குற்றச்சாட்டு உருவ வழிபாடு என்பதைத்தான்.


ஹிந்து மார்க்கத்தில், இயற்கையை கடவுளாக வணங்கிய பாமரனுக்கும் உணர்த்தும் வகையில் தான், உருவ வழிபாட்டு முறை கொண்டு வரப்பட்டது. இலக்கு என்பதை நிர்ணயிக்கும் போதுதான் அதை அடைய முடியும். அதுபோலவே, இறைவன் என்ற ஆன்ம இலக்கை அடைய சிலை வழிபாடும் தேவைப்பட்டது. உதாரணமாக கல்வியை எடுத்து கொண்டால், இங்கே யாரும் எடுத்த உடனேயே பி.ஹச்.டி என்ற முனைவர் பட்டம் வாங்கிவிடுவதில்லை. பால்ய கல்வியில் தொடங்கி பள்ளி/ கல்லூரிக்கல்வியென பலதரப்பட்ட நிலையை கடந்த பின்னால்தான் முனைவர் ஆக முடிகிறது. இந்த ஏட்டு கல்விக்கே இத்தனை படிநிலைகள் தேவைப்படும் போது, இறைநிலை என்ற மாபெரும் உச்சத்தை அடைய, அதன் அறிவை பெற இலகுவான படிநிலை யுக்திகளும் தேவைப்படுகின்றன. அதனால் தான் இந்த உருவ வழிபாடும் உருவானது.

சனி கிரகம் கருமை நிறமாக இருக்கும்; செவ்வாய் கிரகம் சிவந்த நிறத்தில் இருக்கும்; வெள்ளி கிரகம் வெண்மை நிறத்தில் இருக்கும் என்பதெல்லாம் இப்போதுள்ள விஞ்ஞானம் சமீப காலங்களில் கண்டறிந்திருக்கலாம். ஆனால், அன்றைக்கே ஹிந்து மார்க்கம், நவகிரக சிலைவழிபாட்டை ஒவ்வொரு கோவில்களிலும் உருவாக்கி, அங்கே ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நிறத்தையே அந்த சிலைகளின் உடையலங்காரமாக்கி, எளியவனுக்கும் புரியும் வண்ணம் பரம்பொருள் அறிவையும் - பிரபஞ்ச அறிவையும் உணர வைத்தது என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.


கோவில் கருவறையில் சிலையை வணங்கினாலும், சூடம் காண்பிக்கும் போதுதான் உச்சக்கட்ட வேண்டுதல் நடைபெறும். ஏனெனில், அப்போதுதான் மூலவர் சிலைக்கு தீபம் காண்பிக்கப்படும். அந்த சில நொடிகள் இருகரம் கூப்பி வணங்கும்போது, சிலை மட்டும் தெரிவதில்லை. அந்த சிலைக்கு முன்னால் காண்பிக்கப்படும் அந்த தீப ஒளியையும் சேர்த்துதான் வணங்குகிறோம். ந - ம - சி - வ - ய என்ற இந்த ஐந்தெழுத்து ரகசியத்தை, நிலம் - நீர் - நெருப்பு - காற்று - ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களையும், கண் - காது - மூக்கு - வாய் - மெய் என்ற ஐந்துறுப்புகளையும் ஒருசேர இணைத்து அறிய முற்படும் போதுதான், உண்மையான உச்சக்கட்ட இறைநிலையை உணரமுடியும். ஏனெனில் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் என்று அன்றைக்கே ஒரே வரியில் எளிய முறையில் ஹிந்துமதம் விளக்கம் சொல்லிவிட்டது.

சிதம்பர நடராசனின் நடன தத்துவம்தான், புரோட்டான் - நியூட்ரான் - எலக்ட்ரான் என்ற அணுக்களின் அசைவு என்பதை, போஸான் என்ற விஞ்ஞான தத்துவமே ஒத்து கொண்டு விட்டது. மேலும், கோவில்களில் நடைபெறும் அபிஷேகம் என்பதில் கூட பலதரபட்ட அறிவியல் இருக்கிறது. பால், தயிர், எலும்பிச்சையென எல்லா முறையிலான அபிஷேகத்தின் மூலமும், லாக்டிக் - சிட்ரிக் என்று ஒரு வேதியியல் மாற்றமும் நடைபெறுகிறது. திருநீரை நெற்றியில் வைப்பதின் உள்நோக்கமே, புருவமத்தியில் சக்தி இருப்பதையும், அழியக்கூடிய இந்த பூதஉடல்தான் 'நான்' என்று நம்பிக்கொண்டு போலியான மாயையில் வாழ்வதையும் தான், நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இந்த சீவன்தான் ஒருநாள் சிவனாகவும் மாறும் என்ற உயரிய தத்துவத்தை பலவித படிநிலைகளோடு எம் ஹிந்துமதம் சொல்லிக்கொண்டாலும், அதை புரியாத பலர் ஹிந்து என்பதை வெறும் மதமாக மட்டுமே பார்த்து கொண்டிருக்கின்றனர் வேதனையான ஒன்று. எனவே, இறைவனை உணர, ஹிந்துவாகவோ - இசுலாமாகவோ - கிருஸ்துவனாகவோ இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், கடவுள் - மதத்திலோ, வெளியிலோ இல்லை. இந்த பிரபஞ்ச வெளியில் ஒட்டுமொத்தமாகவும் கடவுள் கலந்திருக்கிறார். அதை உணர, முதலில் நீ உன்னுள் கடந்து வா, (கட+வுள் கடவுள் இருக்கிறார் என்பதை அறிவாய்! என்பதுதான் ஹிந்துமதத்தின் எளிய கோட்பாடு.


திலீப்குமார், ஏ.ஆர்.ரஹ்மான ஆனார்; பெரியார்தாசன், அப்துல்லா ஆனார்; யுவன்சங்கர்ராஜா என்னவாக போகிறார் என்பது, எம்பெருமான் முருகனுக்கே வெளிச்சம்!
- இரா.ச.இமலாதித்தன்